வகை  |  odb

வெண்பனியின் அற்புதம்

பதினேழாம் நூற்றாண்டில் சர். ஐசக் நியூட்டன் ஒரு முக்கோணப்பட்டகத்தை பயன் படுத்தி, வெள்ளை ஒளியில் அடங்கியுள்ள வெவ்வேறு வண்ணங்களைப் பார்க்கும்படி உதவினார். வெள்ளை ஒளி ஒரு பொருளின் வழியாகச் செல்லும் போது, அப்பொருள் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார். ஒரு சிறிய பனிக்கட்டி, பார்ப்பதற்கு ஒளி புகக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த பனிக்கட்டி அநேக சிறிய படிகங்களால் இணக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவையனைத்து படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது பனிக்கட்டி வெண்மையாகவே தெரிகிறது.

வேதாகமம் மற்றொரு நிறமுடைய ஒன்றினைக் குறிப்பிடுகிறது. அது பாவம். யூதா ஜனங்களின் பாவங்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் வெளிப்படுத்துகின்றார். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும்,”  “இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்,” என்று குறிப்பிடுகிறார். தேவன் அவற்றை “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” என்கின்றார் (ஏசா.1:18) அது எப்படியாகும்? யூதா ஜனங்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனம் திரும்பி, தேவனுடைய மன்னிப்பைத் தேட வேண்டும்.                                                           தேவனுடைய மன்னிப்பைப் பெற ஒரு நிரந்தர வழியை ஏற்படுத்திக்கொடுத்த இயேசுவே உமக்கு நன்றி. இயேசு கிறிஸ்து “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” என்றார் (யோவா. 8:12). நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் நம் பாவங்களை மன்னிக்கிறார். சிலுவையில் கிறிஸ்து நிறைவேற்றின தியாகத்தின் ஒளி நமக்குள்ளாக ஊடுருவிச் செல்கின்றது. அந்த ஒளியில் தேவன் நம்மைக் காண்கின்றார், இயேசுவைப் போல குற்றமற்றவராக நம்மையும் காண்கின்றார்.

நாம் செய்த தவறுகளின் குற்ற உணர்வினாலும், அவமானத்தாலும் நாம் உழல அவசியமில்லை, மாறாக தேவன் அருளும் மன்னிப்பைப் பற்றிக் கொள்வோம், அது நம்மை  “உறைந்த மழையைப் போல வெண்மையாக்கும்.”

அண்டைவீட்டார்

அநேக வசிப்பிடங்களைப்போன்று, நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலுள்ளவர்களும் ஒரு வலைதளத்தை உருவாக்கி, அண்டைவீட்டார் அனைவரையும் இணைத்து பயன் படுத்திவருகின்றனர். எங்கள் சமுதாயத்தினர், எங்கள் பகுதியில் தென்படும் காட்டுச் சிங்கங்களைக் குறித்தும், காட்டுத் தீ காரணமாக இடத்தைக் காலி செய்யும்படியான கட்டளை போன்றவற்றை ஒருவருக்கொருவர் தெரிவித்தனர். குழந்தை பராமரிப்பு தேவைபட்டபோது, ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளவும் பயன் படுத்தினர். காணாமல் போன செல்லப் பிராணிகளை கண்டுபிடிப்பதற்கும், இது முக்கியமான மூலமாகச் செயல்படுகிறது. வலைதளத்தின் ஆற்றலால் எங்கள் பகுதியிலுள்ள அனைவரும் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்சமயம், உலகக் காரியங்களில் வேகமாக ஈடுபட்டு வரும் காரணத்தினால், இந்த பயன்பாடும் வெகுவாகக் குறைந்து வருகிறது. 

அநேக ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாலமோன் அரசன் காலத்திலும் அருகிலுள்ள ஜனங்களோடு நல்ல உறவு வைத்துக்கொள்வதை முக்கியமாகக் கருதினர். குடும்பங்களோடு நல் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒருவரையொருவர் தாங்கிப் கொள்ளும் முக்கிய மூலமாகக் கருதப்பட்டது. “ஆபத்துக்காலத்தில்” ஒரு நண்பனின் முக்கியமான பங்கினைக் குறித்து சாலமோன் ராஜா விளக்குகிறார் (நீதி. 27:10). உறவினர்கள் தங்கள் குடும்ப நபர்களின் மீது மிகுந்த கரிசனை கொண்டு, அப்படிப்பட்ட சூழல்களில் உண்மையாய் உதவும்படி எண்ணுவர். ஆனால் அவர்கள் தூரத்தில் இருந்தால், ஆபத்து நேரிடும் காலத்தில் அவர்களால் உதவ முடியாது. சமீபத்திலிருக்கும் அயலானே, அந்நேரத்தின் தேவை என்ன என்பதை வேகமாக உணர்ந்து, உடனடியாக உதவ முடியும்.

உலகெங்கும் பரம்பியிருக்கும் நம்முடைய நேச உறவினர்களோடு தொடர்பு கொள்வதை, நவீன தொழில் நுட்பம் இலகுவாக்கிவிட்ட காரணத்தால் அருகிலிருப்பவர்களோடுள்ள தொடர்பை நாம் தவிர்க்கும்படி தோன்றலாம். இயேசுவே, எங்களுக்கு அருகிலிருக்கும் படி நீர் தந்துள்ள மக்களோடு நாங்கள் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள எங்களுக்கு உதவியருளும்.

அதில் அவர்களுடனே

1994 ஆம் ஆண்டு, ருவாண்டா தேசத்தில், இரண்டு மாதங்களாக நடைபெற்ற இனப்படுகொலையின் போது, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் துட்சி இன மக்கள் கொல்லப்பட்டனர். அதே நாட்டிலுள்ள பழங்குடி மக்களான ஹூடுக்கள், இந்த படுகொலையைச் செய்தனர். இந்த படுகொலை நடந்து முடிந்த போது, பேராயர் ஜியோஃப்ரே ருவுபுஸிஸி தன்னுடைய மனைவியை அணுகி, தங்களுக்கு அருமையானவர்களை இழந்து தவிக்கும் பெண்களைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு மேரியின் பதில், “நான் விரும்புவதெல்லாம் அழுவதொன்றைத்தான்”  என்றாள். அவளும் தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருக்கிறாள். அந்த ஞானமுள்ள வழிகாட்டியும், கரிசனையுள்ள கணவனுமான அந்தப் பேராயர் தன் மனைவியிடம், “மேரி, அந்தப் பெண்களையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவர்களோடு அழு” என்றார். அவர் தன்னுடைய மனைவியின் வேதனையை அறிவார், அவளை மற்றவர்களின் வேதனையையும் பகிர்ந்துகொள்ளுமாறு வித்தியாசமான முறையில், அவளைத் தயாரித்தார்.

சபையாகிய தேவனுடைய குடும்பத்தில் வாழ்கின்ற அனைவரும் நல்லவற்றையும், நல்லதல்லாததையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் வரும் “ஒருவரையொருவர்” என்ற வார்த்தை, நாம் ஒருவரையொருவர்  சார்ந்து வாழ்வதைக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்” (ரோம. 12:10,16). நாம் ஒருவரோடொருவர் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை வசனம் 15 வெளிப்படுத்துகின்றது. “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்”.

இனபடுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் காணும் போது, எங்களுடைய துன்பங்களின் ஆழமும், தாக்கமும் மிகவும் லேசானது, மேரியின் வேதனையும் கூட, ஏனெனில் தேவன் நமக்குச் செய்துள்ளவற்றை நினைவுகூர்ந்து, அவற்றை அணைத்துக்கொண்டு, மற்றவர்களைத் தேற்றவும் அவர்களின் நன்மைக்காகவும் பயன் படுத்துவோம்.

நாம் தூசிக்குச் சமம்

அந்த இளம் தந்தை, பொறுமையின் எல்லைக்கே வந்து விட்டார். “ஐஸ் கிரீம்! ஐஸ் கிரீம்!” என்று கத்திக்கொண்டிருந்தான், அவருடைய சிறிய மகன். அந்த அங்காடியின் கூட்டத்திற்கு மத்தியில், அங்கு பொருட்கள் வாங்க வந்திருந்த அனைவரின் கவனமும் எங்கள் பக்கம் திரும்பியது. “நல்லது, ஆனால் முதலில் அம்மாவிற்கு தேவையானவற்றை முடித்துக்கொள்வோம், சரிதானே?” என்றார் அந்த தகப்பன். “இல்ல்ல்லை! ஐஸ் கிரீம்!” என்றான் சிறுவன். அப்பொழுது, நன்கு உடை அணிந்து, தன்னுடைய காலணிகளின் நிறத்திலேயே கைப்பையையும் வைத்திருந்த ஒரு பெண், அவ்விடத்துக்கு வந்தாள். “அவன் பிடிவாதமாக இருக்கிறான்” என்றார் தந்தை. அவள் சிரித்துக்கொண்டே, “உங்களுடைய சிறுபையனுக்கு பொருத்தமில்லாதது நடந்து கொண்டிருக்கிறது. அவன் ஒரு சிறு பையன் என்பதை மறந்து விடாதிருங்கள், நீங்கள் பொறுமையோடு அவனருகில் இருப்பதையே அவன் எதிர்பார்க்கிறான்” என்றாள். அந்த சூழ்நிலை எவ்விதத்திலும் அப்பொழுது மாறிவிடவில்லையெனினும், தந்தையும் மகனும் ஒன்றாயிருக்கும் ஒரு சந்தர்ப்பமே அந்நேரத்தில் தேவையாயிருந்தது.

அந்த புத்திசாலியான பெண் கூறிய வார்த்தைகளை சங்கீதம் 103 ல் காண்கின்றோம். தாவீது நம்முடைய தேவனைக் குறித்து, “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையும் உள்ளவர்… அவர் என்றைக்கும் கோபம் கொண்டிரார்” (வச. 8-9). அதனைத் தொடர்ந்து இவ்வுலகத் தந்தையின் தன்மையைக் காட்டுகின்றார், “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (வச. 13). “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14). நாம் மிகவும் சிறியவர்கள், உடையக்கூடியவர்கள் என்பதை அவர் அறிவார்.

இந்த உலகம் நம்மைக் கையாளுகின்ற விதத்தால், நாம் மேற்கொள்ளப்பட்டு, உடைந்து போகிறோம். ஆனால் நம் தேவன் அளவற்ற அன்போடும், பொறுமையோடும் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்ற ஆச்சரியமான உறுதியைத் தருகிறார்.