வகை  |  odb

தூய ஆராதனை

ஜோசப் போதகராக இருந்த ஆலயம், அதன் நிகழ்ச்சிகளான மேடை நாடகங்கள், இசைநிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிற்குப் பேர் பெற்றது. அவை மிகவும் சிறப்பாகச் செய்யப் படும், ஆயினும் அந்த ஆலயத்தின் சுறுசுறுப்பான காரியங்கள் தொழில் ரீதியாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் கவலையுற்றார். சரியான காரணத்தோடுதான் சபை வளருகின்றதா? அல்லது அதன் செயல்பாடுகளுக்காக வளருகிறதா? ஜோசப் அதனை அறிய விரும்பினார். எனவே அவர் ஆலயத்தின் ஆராதனையைத் தவிர அனைத்து நிகழ்வுகளையும் ஓர் ஆண்டிற்கு நிறுத்தி வைத்தார், இதன் மூலம் சபையினர் தங்களை தேவனுடைய ஆலயமாக மாற்றி, தேவனை ஆராதிக்கச் செய்தார்.

ஜோசப்பின் தீர்மானம் சற்று அதிகமாகத் தோன்றினாலும், எருசலேம் தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தினுள் இயேசு நுழைந்த போது, அவர் செய்ததைக் கவனித்தால் இது புரியும். அந்த பரிசுத்த ஸ்தலம் முழுவதும் எளிமையான ஜெபம் நிறைந்திருப்பதற்குப் பதிலாக, ஆராதனை என்ற பெயரில் குழப்பமான வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது,  “புறாக்களை இங்கே வாங்குங்கள்! லில்லி மலரின் வெண்மை நிறமுடைய புறாக்களே, தேவன் விரும்பும் நிறம்!” இயேசு அந்த வியாபாரிகளின் பலகைகளைக் கவிழ்த்துப் போட்டார், அங்கு வாங்க வந்தவர்களைத் தடுத்து விட்டார், அவர்கள் செய்த காரியங்களின் நிமித்தம் கோபமடைந்தவராய், “என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்னப்படும்” (ஏசா. 56:7, எரே. 7), “நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மாற். 11:17) என்றார். புறஜாதியாருக்கென்று கொடுக்கப்பட்ட முற்றம், பிறசமயத்தினர் தேவனை ஆராதிக்கும்படி கொடுக்கப்பட்ட இடம், அனுதின தேவைக்கான பொருட்களை வாங்கும் சந்தையாக, பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றப்பட்டிருந்தது.

நாம் வியாபாரம் செய்வதிலும் அல்லது நம்மைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதிலும் தவறொன்றுமில்லை, ஆனால் அதற்கான இடம் தேவாலயமாக இருக்க வேண்டாம், நாம் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறோம். நம்முடைய பிரதாமான வேலை இயேசுவை ஆராதிப்பது தான். இயேசு செய்ததைப் போன்று நாமும் காசுக்காரரின் மேசைகளை கவிழ்க்கத் தேவையில்லை. ஆனால் இத்தகைய தீவிர திருத்தங்களைக் கொண்டு வரும்படி, தேவன் நம்மையும் அழைக்கிறார். 

கண்களால் காண்பதையும் விட அதிகம்

இயந்திரங்களை இயக்குபவர்கள், மிகவும் ஆபத்தான விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தங்களின் விரல்கள் கனரக இயந்திரங்களின் சுழல் சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் போது, விரல்களை இழக்க நேரிடும். அதிலும் பெரு விரலை இழந்தால், அது பெரிய துயரத்தைக் கொண்டுவரும். இவ்வாறு பெருவிரலை இழந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர். பெருவிரலை பயன் படுத்தாமல் பல் துலக்குதல், சட்டையின் பொத்தான் மாட்டுதல், தலை வாருதல், ஷூ அணிதல், சாப்பிடல் போன்றவற்றை முயற்சித்துப் பார், அந்தப் பெருவிரல் எத்தனை முக்கித்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் சபையில் இத்தகைய ஒரு காட்சியைப் பற்றி விளக்குகின்றார். அதிகமாக கண்களுக்குத் தென்படாதவர்கள், அதிகம் பேசாதவர்கள், “நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதாக, மற்றவர்கள் அவர்களைக் குறித்துக் கருதுவதாக உணர்வர் (1 கொரி. 12:21). இது பேசப்படாத, உணர்வு சார்ந்த கருத்து, சில வேளைகளில் அது சத்தமாகவும் தெரிவிக்கப் படலாம்.

தேவன் நம்மை, ஒருவர் மீது ஒருவர் சம கரிசனையும், சம மரியாதையும் கொடுக்கும்படி அழைக்கின்றார் (வச. 25). ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள் (வ.27), இது நாம் பெற்றுள்ள வரங்களைச் சார்ந்து அல்ல, நம் அனைவருக்கும் மற்றவர் தேவை, நம்மில் சிலர் கண்களாயும், செவிகளாயும் உள்ளனர், அவர்கள் பேச வேண்டும், சிலர் பெருவிரலாயுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சில வேலைகளில் கண்களால் காண்பதையும் விட அதிக பங்கு உள்ளது.

இருவர் கூடியிருப்பது நல்லது

1997 ஆம் ஆண்டு, ஹவாயில் நடைபெற்ற அயர்ன் மன் டிரையத்லான் போட்டியில், (மிதிவண்டி ஓட்டுதல், நீந்துதல், ஓடுதல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய ஒரு விளையாட்டு) இரண்டு பெண்கள், தங்கள் பாதங்களால் நிற்கக் கூட பெலனற்றவர்களாய், தடுமாறியபடியே எல்லைக் கோட்டை நெருங்கினர். மிகவும் சோர்வடைந்த இந்த ஓட்ட வீரர்கள், தங்களின் நிலையற்ற கால்களோடு, விடாமுயற்சியோடு ஓடிக்கொண்டிருந்தபோது, சியான் வெல்ச் தடுமாறி வென்டி இன்கிரஹாம் மீது மோதிக் கொண்டாள், அவர்கள் இருவரும் கீழே விழுந்தனர். போராடி எழுந்திருந்த அவர்கள், இலக்கினை அடைய இன்னும் இருபது மீட்டர் தொலைவே இருந்த நிலையில், மீண்டும் முன்புறம் விழுந்தனர், வென்டி தவழ்ந்து செல்ல ஆரம்பித்த போது, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர். அவளுடைய போட்டியாளரும் அவளைப் பின் தொடர, பார்வையாளர்கள் சத்தமாக அவர்களை உற்சாகப்படுத்தினர். வென்டி நான்காவதாக எல்லைக் கோட்டைத் தாண்டி, அவளுடைய ஆதரவாளர்களின் கரங்களில் வீழ்ந்தாள், அப்பொழுது அவள் தன்னோடு தடுமாறிய சகோதரிக்கு கரத்தை நீட்டினாள், சியான் முன்னோக்கி வந்து தன்னுடைய தளர்ந்த கரங்களை நீட்டி, வென்டியின் கரங்களைப் பற்றியவாறே எல்லைக் கோட்டைத் தொட்டாள், அவள் ஐந்தாவதாக ஓட்டத்தை முடித்தபோது, கூட்டத்தினர் ஆரவாரத்தோடு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இந்த ஜோடி, 140 மைல் தூரத்தை கடந்து முடித்தக் காட்சி அநேகரைக் கவர்ந்தது. வலுவிழந்தபோதும் விடாமுயற்சியோடு இருவர் இணைந்து போராடிய அந்தக் காட்சி என் மனதை விட்டு அகலவேயில்லை, பிரசங்கி 4:9-11ல் கூறப்பட்டுள்ள வாழ்விற்கு புத்துணர்ச்சியூட்டும் உண்மையை இது உறுதிப் படுத்துகின்றது.

நம்முடைய வாழ்விலும் நமக்கு ஒரு உதவியாளர் தேவை என்பதை நாம் ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை (வ.9). நம்முடைய தேவைகளை, எல்லாம் அறிந்த தேவனிடமிருந்து நாம் மறைத்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வேளையில் நாம் அனைவருமே உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கீழேவிழ நேரலாம். நாம் எழுந்திருக்க முயற்சிக்கும் போது, நாம் தனியாக இல்லை என்பது நமக்கு ஆறுதலைத் தரும். நம்முடைய அன்புத்தந்தை நமக்கு உதவிசெய்கின்றார், நாம் மற்றவர்களுக்கும் உதவும் படி நம்மை பெலப்படுத்துகின்றார், அவர்களும், தாங்களும் தனியாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவர்.

தடைபட்ட திட்டங்கள்

பேச்சுக் குறைவைத் திருத்தும் பயிற்சியாளராக வேண்டுமென திட்டமிட்ட ஜேன், அதற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படகூடியவள் என்பதால், பயிலும் போதுள்ள செயல்முறை பயிற்சியின் போது, தான் அந்த வேலைக்குப் பொருத்தமில்லாதவள் என்பதாக உணர்ந்தாள். பின்னர், அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதும் வாய்ப்பைப் பெற்றாள். அவள் தன்னை ஒரு எழுத்தாளராக நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகளை எழுதுபவராக மாறினார். “என்னுடைய வாழ்வை நான் பின்னோக்கிப் பார்க்கும் போது, என்னுடைய திட்டத்தை தேவன் ஏன் மாற்றினார் என்பதைக் காணமுடிகிறது, அவர் எனக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார்” என்றாள்.

தடைசெய்யப்பட்ட திட்டங்களைக்குறிப்பிடும் அநேக நிகழ்வுகளை வேதாகமத்தில், நாம் காணலாம். பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது, அவர் பித்தினியா நாட்டிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல பிரயாசம் எடுத்தார், ஆனால் ஆவியானவரோ அவரை அங்கு போகத் தடை பண்ணினார் (அப். 16:6-7). இது நம்மை நிச்சயமாக திகைக்கச் செய்யும், ஏனெனில், தேவன் தந்த ஊழியத்தினிமித்தம் செய்யும் திட்டங்களை, ஏன் இயேசுவானவர் தடைசெய்ய வேண்டும்? அதற்கான பதிலை அவர் கனவில் பெற்றார், மக்கெதோனியாவினருக்கு அவருடைய உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஐரோப்பாவின் முதல் சபையை, பவுல் அங்கு தான் நிறுவினார். சாலமோன் இதனையே, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” என்று கூறியுள்ளார் (நீதி. 19:21). 

நாம் நமக்குத் திட்டங்களை வகுத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தான். “திட்டமிடத் தவறு;  தவறுவதற்கு திட்டமிடுகின்றாய்” என்பது ஒரு பழமொழி. தேவன் தம்முடைய திட்டங்களை நம்மில் நிறைவேற்றும் படி, நம்முடைய திட்டங்களைத் தடை செய்யலாம். தேவன் மீது நம்பிக்கையுள்ள நாம், அவருடைய வார்த்தைகளை கவனித்து, அதற்குக் கீழ்படிய வேண்டும். அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாவோம்.

நாம் நம்முடைய திட்டங்களைத் தொடரும் போது, அதில் ஒரு புதிய திருப்பத்தையும் சேர்த்துக் கொள்வோம், கவனிப்பதற்குத் திட்டமிடுவோம், தேவனுடைய திட்டத்தைக் கவனிப்போம்.