இயந்திரங்களை இயக்குபவர்கள், மிகவும் ஆபத்தான விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தங்களின் விரல்கள் கனரக இயந்திரங்களின் சுழல் சக்கரங்களில் சிக்கிக் கொள்ளும் போது, விரல்களை இழக்க நேரிடும். அதிலும் பெரு விரலை இழந்தால், அது பெரிய துயரத்தைக் கொண்டுவரும். இவ்வாறு பெருவிரலை இழந்தவர்கள் தங்கள் எதிர்காலத்தை இழந்து விடவில்லை, மாறாக அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர். பெருவிரலை பயன் படுத்தாமல் பல் துலக்குதல், சட்டையின் பொத்தான் மாட்டுதல், தலை வாருதல், ஷூ அணிதல், சாப்பிடல் போன்றவற்றை முயற்சித்துப் பார், அந்தப் பெருவிரல் எத்தனை முக்கித்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் சபையில் இத்தகைய ஒரு காட்சியைப் பற்றி விளக்குகின்றார். அதிகமாக கண்களுக்குத் தென்படாதவர்கள், அதிகம் பேசாதவர்கள், “நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்பதாக, மற்றவர்கள் அவர்களைக் குறித்துக் கருதுவதாக உணர்வர் (1 கொரி. 12:21). இது பேசப்படாத, உணர்வு சார்ந்த கருத்து, சில வேளைகளில் அது சத்தமாகவும் தெரிவிக்கப் படலாம்.

தேவன் நம்மை, ஒருவர் மீது ஒருவர் சம கரிசனையும், சம மரியாதையும் கொடுக்கும்படி அழைக்கின்றார் (வச. 25). ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்கள் (வ.27), இது நாம் பெற்றுள்ள வரங்களைச் சார்ந்து அல்ல, நம் அனைவருக்கும் மற்றவர் தேவை, நம்மில் சிலர் கண்களாயும், செவிகளாயும் உள்ளனர், அவர்கள் பேச வேண்டும், சிலர் பெருவிரலாயுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது. சில வேலைகளில் கண்களால் காண்பதையும் விட அதிக பங்கு உள்ளது.