நமக்காக ஜெபத்தை ஏறெடுப்பவர்
ஒரு சனிக் கிழமை, பிந்திய மதிய வேளையில், அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிடும்படி குடும்பத்துடன் அமர்ந்தோம். உணவு பரிமாறுபவர் எங்களது மேசையில் உணவுகளை வைத்தபோது, எனது கணவர் நிமிர்ந்து பார்த்து, அவருடைய பெயரைக் கேட்டார். அத்தோடு, “சாப்பிடும் முன்னர் நாங்கள் குடும்பமாக ஜெபிப்பது வழக்கம், இன்று உனக்காக நாங்கள் ஜெபிக்கும்படி ஏதாகிலும் இருக்கிறதா?” எனக் கேட்டார். அவனுடைய பெயரை நாங்கள் இப்பொழுது அறிவோம், சஞ்ஜெய் எங்களை ஆச்சரியத்தோடும், எதிர்பார்ப்போடும் பார்த்தான். சிறிது நேர அமைதிக்குப் பின்னர், அவன் தன்னுடைய நண்பனின் அறையில் தங்கியிருந்து அவனுடைய சோபாவில் தான் ஒவ்வொரு இரவும் தூங்குவதாகவும், அவனுடைய மோட்டார் வாகனம் பழுதடைந்து விட்டதாகவும் கூறி மனமுடைந்து போனான்.
என்னுடைய கணவர், தேவனிடம், சஞ்சைக்குத் தேவையானவற்றைக் கொடுக்குமாறும், அவனுக்கு தேவனுடைய அன்பைக் காட்டுமாறும் ஜெபித்தார். நாம் பரிந்து கேட்கும் ஜெபமும் பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு, தேவனுக்கு அவற்றைத் தெரியப்படுத்துவதை போல உள்ளது. நம்முடைய மிகப் பெரிய தேவைகளின் போதும், நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் நம் வாழ்வை கையாள முடியாது என உணரும் போதும், தேவனிடம் என்ன சொல்வது என்று அறியாமல் திகைக்கும் போதும், “ஆவியானவர் தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). ஆவியானவர் என்ன சொல்லுவார் என்பதை நாம் அறியோம், ஆனால் அது தேவன் நம்முடைய வாழ்விற்கு வைத்திருக்கும் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தமுறை நீ தேவனுடைய வழி நடத்தலுக்காக, தேவைகளுக்காக, ஒருவரின் வாழ்வின் பாதுகாப்பிற்காக ஜெபிக்கும் போது, அ ந்த இரக்கத்தின் செயல் மூலம் உன்னுடைய ஆவிக்குரிய தேவைகள் தேவனிடம் எடுத்துச் செல்லப் படுகின்றன என்பதை தெரிந்து கொள். அவர் உன்னுடைய பெயரை அறிவார், உன்னுடைய பிரச்சனைகளை அவர் பார்த்துக் கொள்வார்.

நினைத்துப் பார்க்க முடியாத மன்னிப்பு
ரேவன்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் எஞ்சியிரு ந்த மக்களிடையே இந்த ஜெபம் மிகவும் குறுகிப் போய்விட்டது என்று விடுதலையாளர்கள் கண்டார்கள், அங்கு ஏறத்தாள 50,000 பெண்களை நாசிக் படையினர் கொன்று விட்டனர். “ஓ, தேவனே, நல்லெண்ணம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் மட்டுமல்ல, கெட்ட எண்ணம் கொண்டவர்களையும் நினைத்தருளும். அவர்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள வேதனைகளை நினையாதிரும். நாங்கள் கனிகொடுக்க உதவிய இத்துன்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், எங்கள் கனிகளை நினைத்தருளும் – எங்களின் நட்புணர்வு, எங்களின் உண்மை, தாழ்மை, தைரியம், பெருந்தன்மை, மேன்மை பொருந்திய இருதயம் ஆகியவற்றை இவற்றின் வழியாக நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களை நீர் நியாயம் தீர்க்க வரும்போது, நாங்கள் இவர்களின் மூலம் பெற்ற கனிகள் இவர்களின் மன்னிப்பிற்கு காரணமாயிருப்பதாக” என்று ஜெபித்தனர்.
இந்த ஜெபத்தை எழுதிய, தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இப்பெண்ணுக்குள் இருந்த பயத்தையும், வேதனையையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவளுக்குள் இருந்து விவரிக்க முடியாத கிருபை நிறைந்த வார்த்தைகள் எப்படி வெளியாக முடிகிறது என்பதையும் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவள் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்தாள், அவள் தன்னைக் கொடுமை படுத்தியவர்களும் தேவனின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினாள்.
இந்த ஜெபம் கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்தை பிரதிபலிக்கின்றது. தவறான குற்றச் சாட்டுகளை இயேசுவின் மீது திணித்து, கேலி செய்து, அடித்து, ஜனங்களுக்கு முன்பாக அவமானப் படுத்தி, “வேறே இரண்டு குற்றவாளிகளோடு………. அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” (லூக். 23:32). கோரமான ஒரு மரச் சிலுவையில், உடல் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் தொங்கியவராய், மூச்சு விட திணறிய வேளையில், தன்னை துன்பப் படுத்தியவகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கலாம், அவர்களைப் பழிவாங்க அல்லது நியாயத்தீர்ப்பு வழங்க தீர்மானித்திருக்கலாம். ஆனால் இயேசு மனித குணங்களையெல்லாவற்றிற்கும் மாறாக ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (வச. 34).
தேவன் அருளிய மன்னிப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது, ஆனால் இயேசு அதனை நமக்குத் தந்தார், அவருடைய தெய்வீக கிருபை யாராலும் தரமுடியாத மன்னிப்பை இலவசமாகக் கொட்டுகிறது.

பிரயாணத்திற்குத் தேவையான பெலன்
ஒரு கோடை காலத்தில், என்னால் செய்து முடிக்க முடியாது என்று நான் எண்ணிய ஒருகாரியத்தை செய்து கொண்டிருந்தேன், அது ஓர் எழுதும் வேலை, ஒரு கால வரையரையோடு கூடிய அந்த திட்டத்தை நிறைவேற்ற, அநேக நாட்களைச் செலவிட்டும் அதனை என்னால் முடிக்க முடியவில்லை, நான் மிகவும் சோர்வடைந்ததோடு, உற்சாகத்தையும் இழந்தேன். இத்திட்டத்தைக் கைவிட எண்ணினேன். அப்பொழுது ஒரு ஞானமுள்ள சினேகிதி, “எப்பொழுது கடைசியாக உன்னைப் புதிப்பித்துக் கொண்டாய்? உனக்கு ஓய்வு அவசியம், அத்தோடு ஒரு நல்ல உணவையும் நீ சாப்பிட வேண்டும்” என்றாள்.
அவள் கூறியது சரிதான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவளுடைய ஆலோசனை, எலியாவைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவன் யேசபேலிடமிருந்து ஒரு பயங்கரமான செய்தியைக் கேள்விப் படுகின்றான்
(1 இரா.19:2). என்னுடைய எழுதும் திட்டம், எலியா தீர்க்கதரிசியின் அநுபவத்திற்கு அருகில் வைத்து ஒப்பிடத்தகுந்தல்ல, கர்மேல் பர்வதத்தில் பொய் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று போட்ட போது, யேசபேல் எலியாவிடம் ஆட்களை அனுப்பி, அவனைக் கொன்றுபோடுவதாகச் செய்தி அனுப்புகின்றாள். விரக்தியடைந்த எலியா சாவை விரும்புகின்றான், ஆனால் ஒரு நல்ல தூக்கதிற்கு உள்ளாகின்றான், இரு முறை தேவ தூதன் அவனைத் தட்டி எழுப்பி அவனுக்கு ஆகாரம் கொடுக்கின்றான். தேவன் அவனுடைய சரீரத்தைப் பெலப்படுத்திய பின்பு, அவனுடைய பிரயாணத்தை அவனால் தொடரமுடிந்தது.
“நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” (வச. 7) ஆக இருக்கலாம், நமக்கு ஓய்வு அவசியமாக இருக்கலாம், நம்மை திருப்தி படுத்தும் சத்தான உணவு தேவைப்படலாம். நாம் களைப்படைந்தவர்களாய், பசியோடு இருக்கும் போது, ஏமாற்றத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக நேரலாம். ஆனால் இந்த விழுந்து போன உலகத்தில், தேவன், அவருடைய படைப்புகளின் மூலம், நம்முடைய சரீரத் தேவைகளைச் சந்திக்கும் போது, நாமும் அவருக்குப் பணிசெய்யும்படி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்.

கிரகணம்
கண்களைப் பாதுகாக்கும் உபகரணத்தோடும், வீட்டில் செய்த சில தின்பண்டங்களோடும் அந்தக் காட்சியைப் பார்க்கக் கூடிய இடத்திற்குச் சென்றேன். பல மில்லியன் மக்களோடு நானும் என்னுடைய குடும்பத்தினரும் மிக அரிதாக நடைபெறக் கூடிய முழு சூரிய கிரகணத்தைப் பார்த்தோம், சூரியனின் முழுபகுதியையும் நிலவு மறைத்தது.
கோடை காலத்தின், ஒரு பிரகாசமான மதிய வேளையில், இந்த கிரகணத்தின் காரணமாக இருள் சூழ்ந்தது. நமக்கு இந்த கிரகணம் ஒரு வேடிக்கை நிகழ்ச்சியாகவும் படைப்புகளின் மீது தேவன் கொண்டுள்ள வல்லமையை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது (சங். 135:6-7). ஆனால் சரித்திரம் முழுமையையும் பார்ப்போமாகில், பகல் வேளையில் இருள் சூழ்வதை பயத்தோடு, ஒரு விசித்திரமான நிகழ்வாகக் கருதுகின்றனர் (யாத். 10:21; மத். 27:45), இதனை, கெட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு ஓர் அடையாளமாகக் கருதுகின்றனர்.
இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்த போது, ஆமோஸ் தீர்க்கதரிசியும் இருளை குறித்து இவ்வாறு தான் எண்ணியிருப்பார். தேவனை அவர்கள் மறந்தால் அழிவு அவர்கள் மேல் வரும் என வடதேசத்தைக் குறித்து ஆமோஸ் தீர்க்கதரிசி எச்சரித்தார், தேவன் இதற்கு அடையாளமாக, “அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப் பகலிலே தேசத்தை அந்தகாரப் படுத்துவேன்” (ஆமோ. 8:9) என்றார்.
ஆனால் தேவனுடைய மேலான நோக்கமும், விருப்பமும் என்னவெனில், எல்லாவற்றையும் சரிப்படுத்துவதே, ஜனங்கள் அடிமைகளாக இரு ந்தாலும், ஒரு நாள், தேவன் அவர்களை மீட்டு, எருசலேமுக்குக் கொண்டு வருவார், “ அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப் போனதைச் சீர்படுத்துவேன்” (9:12) என்கின்றார்.
இஸ்ரவேலரைப் போன்று, நம்முடைய வாழ்வு, மிகஇருண்ட வேளையில் இருந்தாலும், எல்லா ஜனத்திற்கும் வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வரும் படி தேவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு ஆறுதளிப்பதாக உள்ளது (அப். 15:14-18).

நம்மைக் காண்பவர்
என்னுடைய மனைவி சமையல் அறைக்குள் நுழைந்தவுடன், “ஓ, இல்லை!” என சத்தமிட்டாள், அதே நேரத்தில், 90 பவுண்டு எடை கொண்ட “மேக்ஸ்” என்று நாங்கள் அழைக்கும் லேப்ரடார் வகை நாய் சமையல் அறையை விட்டு வெளியேறியது.
சமையல் அறை மேசையின் விழிம்பில் வைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகள் காணாமல் போய் விட்டன. மேக்ஸ் அதைச் சாப்பிட்டு விட்டது, வெறும் பாத்திரம் மட்டுமேயுள்ளது. மேக்ஸ் கட்டிலின் அடியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றது, ஆனால் அதனுடைய தலையும், தோள் பகுதிமட்டும் தான் மறைக்கப்பட்டுள்ளது, நான் அதனைத் தேடிச் சென்ற போது, அதனுடைய உடலும், வாலும் வெளியே தெரிந்து அதனைக் காட்டிக் கொடுத்து விட்டது.
“ஓ, மேக்ஸ், உன்னுடைய பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்றேன். இஸ்ரவேலரின் இரண்டு கோத்திரத்தாரை, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வாக்கிற்குச் செவிகொடுக்குமாறு எச்சரித்த போது, மோசே பயன்படுத்திய வார்த்தைகள் இவை. அவன், “நீங்கள் இப்படிச் செய்யாமல் போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23) என்றான்.
ஒரு கணத்திற்குப் பாவம் இனிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றது. மோசே இஸ்ரவேலரிடம் தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை என எச்சரிக்கின்றார். வேதாகம எழுத்தாளர் ஒருவர், “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” (எபி. 4:13) என்கின்றார்.
எல்லாவற்றையும் காண்கின்ற பரிசுத்த தேவன், நாம் பாவங்களை அறிக்கை செய்யும்படி அன்போடு நம்மை அழைக்கின்றார், பாவத்திற்காக மனம் வருந்தி, அதை விட்டுவிடு, தேவனோடு கூட நட ( 1 யோவா.1:9). இந்நாளிலிருந்து அன்போடு நாம் அவரைப் பின்பற்றுவோம்.