உண்மையான தாழ்மை, உண்மையில் பெரியது
எதிர்பாராத வகையில், அமெரிக்கப் படைகள் சரண் அடைந்த போது, அமெரிக்க புரட்சி முடிவுக்கு வந்தது. அநேக அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் ஜியாஜ் வாஷிங்டனை புதிய தலைவராக்க திறமையான முயற்சிகள் எடுத்தனர். முழு அதிகாரமும் அவருடைய கரத்தில் இருக்கும் போது, அவர் தன்னுடைய குறிக்கோளான சுதந்திரத்தையும் விடுதலையும் பற்றி உறுதியாக நிற்பாரா என்ற எதிர்பார்ப்போடு, உலகமே அவரை கவனித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அரசர் ஜியார்ஜ் 111, ஓர் உண்மையைக் கண்டார், தன்னை இழுக்கின்ற விசையை எதிர்த்து, வெர்ஜீனியாவிலுள்ள தன்னுடைய பண்ணைக்குச் சென்று விட்டார் என்பதைக் கண்ட உலகு அவரை “ உலகிலேயே மிகப் பெரிய மனிதன்” என்று அழைத்தது. வலிமையான பதவி ஆசையை எதிர்த்து தள்ளியது, அவருடைய பெருந்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கட்டுகிறது என்பதை ஜியார்ஜ் அரசர் புரிந்துகொண்டார்.
இந்த உண்மையை அறிந்த பவுல், நம்மையும் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றுமாறு ஊக்கப் படுத்துகின்றார். “இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும்” அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (பிலி.2:6), தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டு, “அடிமையின் ரூபமெடுத்து” “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (வ.7-8). சகல அதிகாரத்தையும் உடையவர், சகலத்தையும் நம் மீதுள்ள அன்பின் நிமித்தம் விட்டுக் கொடுத்தார்.
ஆனால், நேர்மாறாக, தேவன் கிறிஸ்துவை ஒரு குற்றவாளியின் சிலுவையிலிருந்து, “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (வ.9). நாம் இயேசுவைப் போற்றுபடியும், நாம் அவருக்கு கீழ்ப்படியும், அவர் நம்மைக் கட்டாயப் படுத்தாமல் தன்னுடைய அதிகாரம் அனைத்தையும் விட்டு, நம்மை பிரம்மிக்கச் செய்யும் ஒரு செயலின் மூலம் நம்முடைய ஆராதனையும் அற்பணிப்பையும் ஜெயித்துவிட்டார். தம்மை முழுமையாக தாழ்த்தினதின் மூலம், இயேசு தன்னுடைய உண்மையான மேன்மையை நமக்குக் காட்டி, இவ்வுலகையே தலை கீழாக மாற்றினார்.

மீட்கப்பட வேண்டும்
ஆல்டி என்ற வாலிபன் இந்தோனேஷியாவிலிருந்து 125 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 78 மைல்கள்) தொலைவிற்கு அப்பால், சுலவேசி என்ற தீவில் தன்னந்தனியாக, ஒரு மிதக்கும் மீன் பிடி குடிசையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, குடிசையைத் தாக்கிய வலிமையான காற்று, நங்கூரத்தோடு அக்குடிசையை கடலில் தூக்கி எறிந்தது. 49 நாட்கள் ஆல்டி சமுத்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். ஒவ்வொரு முறை அவன் ஒரு கப்பலைப் பார்க்கும் போதும், தன்னுடைய விளக்கை ஏற்றி, மாலுமியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தான், ஆனால் ஏமாற்றத்தைத் தான் சந்தித்தான். நலிந்து காணப்பட்ட அந்த வாலிபன் மீட்கப் படும் முன்னர் ஏறத்தாள 10 கப்பல்கள் அவனைக் கடந்து சென்றன.
ஒரு நியாயசாஸ்திரியிடம் இயேசு, காப்பாற்றப் படவேண்டிய ஒரு மனிதனைக் குறித்த, ஓர் உவமையைச் சொன்னார் (லூக். 10:25). இரண்டு மனிதர்கள் – ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் தங்களின் பிரயாணத்தின் போது காயப்பட்டு கிடந்த ஒரு மனிதனைக் காண்கின்றனர். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் “பக்கமாய் விலகிப் போயினர்” (வ. 31-32). ஏன் அவ்வாறு சென்றனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. இருவருமே மதப்பற்றுடையவர்கள், எனவே நிச்சயமாக, பிறனை நேசி என்ற தேவனுடைய கட்டளையை அறிந்திருக்க வேண்டும் (லேவி.19:17-18). ஆனால், அவர்கள் அதனை மிகவும் ஆபத்தானது என்று கருதியிருக்கலாம், அல்லது மரித்துப்போன உடலைத் தொடுவதன் மூலம், தீட்டுப்பட்டவர்கள் ஆலயத்தில் பணிசெய்யக் கூடாது என்ற யூத சட்டத்தை மீற நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக யூதர்கள், இழிவாகக் கருதும் சமாரியன் ஒருவன் உயர்ந்த காரியத்தைச் செய்கின்றான். அவன் தேவையிலிருக்கும் அந்த மனிதனைப் பார்க்கின்றான், தன்னலமின்றி அவனைப் பாதுகாக்கின்றான்.
இயேசு, தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடம் “நீயும் போய் அந்தப்படியே செய்” (லூக்.10:37) என்கின்ற கட்டளையோடு தன்னுடைய போதனையை முடிக்கின்றார். பிறருக்கு உதவி செய்வதில் கஷ்டங்கள் இருந்தாலும், அன்போடும் முழுமனத்தோடும் உதவி செய்ய தேவன் நமக்கு உதவி செய்வாராக.

ஓரத்தில் காணப்பட்ட போது
ஒரு மோட்டார் வாகன செயல்முறை விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், பிரமிக்கச் செய்யும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்த நான், ஓடுவதற்கு தயாராக இருந்த நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். சுற்றிலும் பார்த்த நான், 3 குழந்தைகள், அருகில் இருந்த மரத்தில் ஏறியிருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அவர்களால் இக்கூட்டத்தினரின் முன்பாக நின்று கொண்டு, இந்த செயலைப் பார்க்க முடியவில்லை.
உயரமான இடத்திலிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்த அக்குழந்தைகளை கவனித்த எனக்கு, லூக்கா கண்டுபிடித்த செல்வந்தனான ஆயக்காரன் சகேயு (லூக்.19:2) நினைவுக்கு வந்தான். இந்த வரி வசூலிப்பவர்களை, இஸ்ரவேலர், ரோம அரசுக்காக வேலை செய்பவர்களாகவும், தங்களுடைய சொந்த ஜனங்களிடமிருந்தே அதிக வரியை வசூலித்து, தங்களின் வருமானத்தையும் பெருக்கிக் கொள்பவர்களாகவும் பார்க்கின்றார்கள். எனவே, சகேயு தன்னுடைய சொந்த சமுதாயத்தினராலே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தான்.
இயேசு எரிகோவிற்குச் சென்ற போது, சகேயு அவரைப் பார்க்க ஆவலாயிருந்தான். ஆனால் ஜனக் கூட்டத்தினிடையே அவரைப் பார்க்க கூடாதவனாக இருந்தான். ஒரு வேளை விரக்தியையும் தனிமையையும் உணர்ந்த அவன் ஒரு காட்டத்தி மரத்தில் ஏறி, இயேசுவை எப்படியாகிலும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டான் (வ.3-4). அங்கே, அந்த கூட்டத்தினருக்கு வெளியே, இயேசு அவனைத் தேடி, அவனுடைய விருந்தினராக, அவனுடைய வீட்டிற்கு தான் வர விரும்புவதைத் தெரிவிக்கின்றார் (வ.5).
இவ்வுலகத்தில், “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் (வ.9-10) என்பதை சகேயுவின் கதை நமக்கு வெளிப்படுத்துகின்றது, இயேசு அவனுக்கு தன்னுடைய நட்பையும், இலவச ஈவாகிய இரட்சிப்பையும் கொடுத்தார். நம்முடைய சமுதாயத்தின் ஓரத்தில் இருப்பதாக நாம் உணர்ந்தாலும், “கூட்டத்தின் கடைசிக்குத்” தள்ளப்பட்டாலும், தேவன் அங்கேயும் நம்மைக் காண்கின்றார் என்ற உறுதியோடு இருப்போம்.

பயன் தரும் சோதனைகள்
15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான. தாமஸ் ஏ கெம்பிஸ் எழுதிய, யாவரும் விரும்பத்தக்க தரம் வாய்ந்த “த இம்மிட்டேஷன் ஆஃப் கிறிஸ்து” (The Imitation of Christ) என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள, சோதனைகளைக் குறித்த ஒரு கண்ணோட்டம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளது. சோதனைகள் வேதனைகளையும், கஷ்டங்களையும் கொண்டுவரும் என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, “சோதனைகள் பயனுள்ளவை ஏனெனில், அவை நம்மை தாழ்மைப் படுத்துகின்றது, நம்மைச் சுத்திகரிக்கின்றது, நமக்குக் கற்றுத் தருகின்றது” என்று எழுதியுள்ளார். மேலும் அவர், “வெற்றியின் திறவு கோல் தாழ்மையும், பொறுமையுமாம், இவற்றின் மூலம் நம் பகைவர்களையும் மேற்கொள்ளலாம்” என்கின்றார்.
தாழ்மையும் பொறுமையும் : என்னுடைய சோதனைகளை நான் இவற்றின் மூலம் சந்திக்கும் போது, நான் கிறிஸ்துவோடு நடக்கும் வாழ்வு எவ்வளவு வித்தியாசமானதாக இருக்க முடியும்! ஆனால், நான் அடிக்கடி வெட்கத்தோடும், ஏமாற்றத்தோடும், பொறுமையில்லாமலும் என்னுடைய போராட்டங்களில் இருந்து வெளியேற முயற்சிக்கின்றேன்.
சோதனைகளும் இன்னல்களும் வெறுமனே நம்மைப் பயப்படுத்துவதற்காக வருவன அல்ல, அவை ஒரு நோக்கத்திற்காகவே வருகின்றன, என யாக்கோபு முதலாம் அதிகாரம் கற்றுத் தருகின்றது. சோதனைகளின் வழியாக மன வேதனையும் பேரழிவும் ஏற்படும் போது, நாம் தாழ்ந்த இருதயத்தோடு, தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும் தேடும் போது, “அவர் ஒருவரையும் கடிந்து கொள்ளாமல், யாவருக்கும் சம்பூரணமாய் கொடுக்கின்றார்” (வ.5). தேவனுடைய வல்லமையினாலே, நம்முடைய சோதனைகள், போராட்டங்களின் மத்தியில், நாம் பாவத்துக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகின்றோம், அப்பொழுது நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்போம்” (வ.4).
நாம் இயேசுவின் பேரில் நம்பிக்கையோடு இருக்கும் போது, நாம் பயத்தோடு வாழ அவசியமே இல்லை. நாம் அவருடைய நேசப் பிள்ளைகள், நாம் சோதனைகளைச் சந்திக்கும் போதும் அவருடைய அன்பின் கரத்தினுள் அமர்ந்து சமாதானத்தோடு இருக்கக் கடவோம்.

என்னுடைய தந்தையின் குழந்தை
அவர்கள் அந்த மங்கலான புகைப்படத்தை பார்த்தனர், பின்னர் என்னைப் பார்த்தனர், பின்னர் என்னுடைய தந்தையைப் பார்த்தனர், மீண்டும் என்னைப் பார்த்தனர், மீண்டும் என்னுடைய தந்தையைப் பார்த்தனர். அவர்களின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. “தாத்தா சிறுவனாக இருந்தபோது, எவ்வாறு இருந்தாரோ அப்படியே நீங்கள் இருக்கின்றீர்கள் அப்பா!” நானும் என்னுடைய தந்தையும் வெகுவாக சிரித்தோம், ஏனெனில் இதனை நாங்கள் ஏற்கனவே அறிவோம், ஆனால் என்னுடைய குழந்தைகள் இதனை சமீபத்தில் தான் கண்டுபிடித்துள்ளனர். நானும் என்னுடைய தந்தையும் வெவ்வேறு நபர்களாக இருந்த போதிலும், ஒரு வகையில், என்னைப் பார்ப்பவர்கள் என்னுடைய தந்தையை இளவயதில் பார்த்ததைப் போலவே உணர்வர்: மிகவும் மெலிந்த உயரமான உருவம், தலை நிறைய கருமை நிற முடி, பெரிய மூக்கு, பெரிய காதுகள். ஆனால், நான் தந்தை அல்ல, நான் என்னுடைய தந்தையின் மகன்.
இயேசுவின் சீஷனான பிலிப்பு ஒரு முறை அவரிடம், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும்” (யோவா.14:8) என்று கேட்டான். இயேசு அநேக முறை பிதாவைக் குறித்து தெரிவித்திருந்தும், இம்முறையும் அவருடைய பதில் அவர்களை சிந்திக்க வைக்கின்றது. “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (வ.9) என்று கூறினார். என்னுடைய தந்தைக்கும் எனக்கும் இடையே காணப்படும் வெளித்தோற்ற ஒற்றுமையைப் போலல்லாமல், இயேசு இங்கு ஒரு புரட்சிகரமான கருத்தைத் தெரிவிக்கின்றார், “நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?” (வ.10) என்று கேட்கின்றார். அவருடைய முழு பண்பும் குணமும் அப்படியே பிதாவினுடையதாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்து நேரடியாக தன்னுடைய அன்பு சீஷர்களுக்கும் நமக்கும் தெரிவிக்கின்றார். தேவன் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமானால் என்னைப் பார் என்கின்றார்.