மீண்டும் துடி
2012 ஆம் ஆண்டு, அமெரிக்கன் இசைக் குழுவினர் “Tell Your Heart to Beat Again”( உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்) என்ற ஒரு புதிய பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடல் ஓர் இருதய மருத்துவரின் உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு நோயாளியின் இருதயத்தைச் சரிசெய்யும்படி, அதனை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கின மருத்துவர், அதைச் சரிசெய்தபின்னர், அதனை, அதனுடைய இடத்தில் நெஞ்சில் பொருத்தினார், மெதுவாக அதனை அமுக்கி செயல்படுத்த முயற்சித்தார். ஆனால் அந்த இருதயம் செயல்படவில்லை. கடுமையான முயற்சிகளை எடுத்தும் ஒன்றும் பலனளிக்கவில்லை. கடைசியாக, அவர் அந்த மயக்க நிலையிலிருந்த நோயாளியின் அருகில் முழங்காலிட்டார், அவளிடம் பேசினார், “ மிஸ்.ஜாண்சன், நான் உன்னுடைய மருத்துவர் பேசுகின்றேன், இந்த அறுவை சிகிச்சை நன்றாக முடிந்து விட்டது, உன்னுடைய இருதயம் சரிசெய்யப் பட்டது, இப்பொழுது உன்னுடைய இருதயத்தை மீண்டும் துடிக்கச் சொல்” என்றார். அவளுடைய இருதயம் துடிக்க ஆரம்பித்தது.
நம்முடைய இருதயத்திற்கு கட்டளை கொடுக்க முடியும் என்ற எண்ணம் சற்று வினோதமாக காணப்படலாம், ஆனால் அது ஆவியோடு இணைக்கப்பட்டுள்ளது. “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?......தேவனை நோக்கிக் காத்திரு” (சங். 42:5) என்று சங்கீதக் காரன் தனக்குள்ளாக கேட்கின்றான். மற்றொரு இடத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பறுதலுக்குத் திரும்பு” (116:7) என்கின்றார். யுத்தத்தில் இஸ்ரவேலரின் எதிரிகளை தோற்கடித்தபின்னர், நியாயாதிபதியான தெபோராள், யுத்த வேளையில், அவளும் தன்னுடைய இருதயத்தோடு பேசியதாக வெளிப்படுத்துகின்றாள். “என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்” (நியா.5:21) என்று தன்னுடைய இருதயத்தை திடப்படுத்தினாள், ஏனெனில் தேவன் அவளுக்கு வெற்றியைக் கட்டளையிட்டார் (4:6-7).
நம்முடைய வல்லமையான மருத்துவராகிய தேவன், நம்முடைய இருதயத்தையும் திருப்புகின்றார் (சங்.103:3). பயம், மன அழுத்தம் அல்லது குற்ற உணர்வு நம்முடைய இருதயத்தினுள் வரும் போது, நாமும் நம் ஆத்துமாவை நோக்கி, தைரியமாக இரு, வலிமை இழந்த இருதயமே, மீண்டும் துடி என்று சொல்வோமாக.

ஆழ்ந்த விசுவாசம்
அநேக மரங்கள் 500 ஆண்டுகளையும் அதற்கும் மேலாகவும் தாண்டி வாழ்கின்றன. ஆரம்பத்தில் அவற்றின் வளைந்த கிளைகள் உயரமாகவும் படர்ந்தும் காணப்படும். அவற்றின் இலைகளுக்கு ஊடாக குளிர்ந்த காற்று வீசும், சூரிய கதிர் அந்த இடைவெளியில் ஊடுருவி, மரத்தின் அடியில், அசைந்தாடும் நிழலைத் தோற்றுவிக்கும். தரைக்கு அடியில்தான் மிகவும் விரிவடைந்த வேர்த் தொகுதி காணப்படுகின்றது. இது, மரத்திலிருந்து செங்குத்தாக கீழ் நோக்கி வளர்ந்து, தான் சார்ந்து வாழக் கூடிய ஊட்டச்சத்தைத் தேடுகின்றது. அந்த ஆணிவேரிலிருந்து ஏராளமான கிளைவேர்கள் தோன்றி, கிடைமட்டமாக பரவுகின்றது. இவை மரத்திற்குத் தேவையான நீர் சத்தையும் ஊட்டத்தையும் வாழ் நாள் முழுவதும் கொடுக்கின்றன. இந்த வலைப் பின்னல் போன்ற வேர்த் தோகுதி, மரத்தைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து, மரத்தைத் தாங்கிப் பிடிப்பதோடு, அதன் தண்டு தொகுதியை உறுதியாக நிறுத்தும் நங்கூரம் போல செயல் படுகின்றது.
இந்த பிரமாண்டமான மரத்தைப் போல, நமக்கு வாழ்வு தரும் வளர்ச்சி மேற்புறதிற்கு உள்ளே நடைபெறுகின்றது. இயேசு விதைப்பவன் உவமையை தன்னுடைய சீஷர்களுக்கு விளக்கிய போது, நாம் ஒவ்வொருவரும் பிதாவோடு, தனிப்பட்ட முறையில் உறுதியாக நிலைத்திருக்கும் உறவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார். நாம் வேதாகமத்தின் மூலம், தேவனைக் குறித்த அறிவில் வளரும் போது, நம்முடைய விசுவாச வேர்களை பரிசுத்த ஆவியானவர் தாங்கிப் பிடிப்பார். மாறுகின்ற சூழலைக் கொண்டுள்ள வாழ்வில் சோதனைகளோ, துன்பங்களோ, கவலையோ எது வந்த போதும், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு தேவன் உதவி செய்கின்றவராய் இருக்கின்றார் (மத்.13:18-23).
நம்முடைய அன்புத் தந்தை அவருடைய வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை பெலப்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குணத்தை மாற்றுகின்றார். நம்முடைய ஆழ்ந்த வேர் கொண்ட விசுவாசம், நம்மில் கனிகளை உருவாக்கும், இதனை நம்மைச் சுற்றிலும் இருப்பவகள் காண்பர்.

கடனை நீக்குபவர்
அமெரிக்காவிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது, அங்கிருந்த மொத்த கூட்டமும் தெரிவித்த பதிலை அதிர்ந்தது என்ற ஒரே வார்த்தையால் வெளிப்படுத்தலாம். அந்த பட்டமளிப்பு விழாவின் துவக்க பேச்சாளர், பட்டம் பெறும் அந்த வகுப்பிலுள்ள அனைத்து மாணவரின் கடன்களை, லட்சக்கணக்கான டாலர்களைத் தள்ளுபடி செய்ய, தானும் தன்னுடைய குடும்பத்தினரும் சேர்ந்து, அதனை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். மகிழ்ச்சியில் மூழ்கி, கண்ணீரோடும், ஆரவாரத்தோடும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்த கூட்டத்தில், ஒரு லட்சம் டாலர்கள் (72 லட்சம் ரூபாய்) கடன் வைத்திருந்த ஒரு மாணவனும் இருந்தான்.
“உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாக” இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தின பின்பு, யோவான், அவர் நிறைவேற்றின கடன் தள்ளுபடி வேலையைப் பற்றி எழுதுகின்றார். “நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினவரை” ஆராதிக்கின்றார் (வெளி. 1:6). இந்த வார்த்தைகள் மிக எளிமையாக இருந்தாலும், அதன் அர்த்தம் மிக ஆழமானது. மோர்ஹவுஸ்ஸில் பட்டம் பெற்ற மாணவர்கள் கேட்ட நற்செய்தியைக் காட்டிலும் சிறந்த செய்தி, இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் (சிலுவையில் சிந்தின இரத்தத்தினால்), நம்முடைய பாவச் செயல்களுக்கும், பாவ ஆசைகளுக்கும், பாவ உணர்வுகளுக்கும் உள்ள தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டு நம்மை அவர் விடுவித்தார். நம்மீது இருந்த கடன் தீர்ந்த்தால், யாரெல்லாம் இயேசுவை விசுவாசிக்கின்றார்களோ அவர்களின் பாவமெல்லாம் மன்னிக்கப் பட்டு, தேவனுடைய இராஜியத்தின் குடும்பத்தில் நாம் இணைகின்றோம். இந்த நற்செய்தி தான், எல்லா நற்செய்திகளிலும் மிகச் சிறந்தது!

நம்மைக் குறித்து தாழ்வாக மதிப்பிடல்
ஓர் இளைஞன், அவனுடைய விளையாட்டு குழுவின் தலைவனானான். விளையாட்டை தன்னுடைய தொழிலாகக் கொண்டிருந்த இக்குழு, முகச்சவரம் கூட செய்யத்தேவையில்லாத, சிறிதளவே பண்பட்ட இளைஞனால் வழி நடத்தப்படுகின்றது. அவன் முதல் முறையாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது, அது வரவேற்கத்தகுந்ததாக இல்லை. அவன் தன்னுடைய பயிற்சியாளரைச் சந்திப்பதையும், தன்னுடைய குழுவினரைச் சந்திப்பதையும் தள்ளிப் போட்டான், கருத்துக் கணிப்புகளைக் கூறுவதற்கு தயங்கினான், தன்னுடைய வேலையைச் செய்யும் போது முணுமுணுத்தான்.அந்த நாட்களில் அவனுடைய குழு பின்னடைதலைச் சந்தித்தது, கடைசியில் அந்த இளைஞன் விளையாட்டை வியாபாரமாக்கினான். அவன் தன்னுடைய குழுவை வழி நடத்தக்கூடிய அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதையே புரிந்துகொள்ளவில்லை அல்லது அவன் தன்னால் முடியும் என்பதை நம்பவில்லை.
தன்னுடைய வாழ்வில் தோல்விகளைச் சந்தித்த சவுல், “தன்னுடைய கண்களுக்கு மிகவும் சிறியவனாக” ( 1 சாமு. 15:17) காணப்பட்டான். தன்னுடைய கூட்டத்தினர் அனைவரையும் காட்டிலும் மிக உயரமானவன் என்று வர்ணிக்கப்படும் ஒருவன் இப்படிச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. எல்லா ஜனங்களும் அவனுடைய தோளுக்குக் கீழாயிருந்தார்கள் (9:2). ஆனால், அவனோ தன்னை அவ்வாறு பார்க்கவில்லை. தனக்கு கீழேயுள்ள ஜனங்களின் சொற்படி நடப்பவனாக காணப்படுகின்றான் என்பதை இந்த அதிகாரத்தில் காண்கின்றோம். ஜனங்களல்ல, தேவன் அவனுக்கு இந்த பணியைக் கொடுத்தார் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு தனி மனிதனுடைய தோல்விக்கும் காரணமென்ன என்பதை சவுலின் இக்காரியம் காட்டுகின்றது. நாம் தேவனுடைய சாயலில், அவருடைய அரசாட்சியை வெளிக்காட்டும்படி உருவாக்கப் பட்டோம் என்பதைக் காணத்தவறிவிடுகின்றோம், கடைசியில், நம்முடைய அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி, உலகில் அழிவை கொண்டுவருகின்றவர்களாக இருக்கின்றோம். இதனைச் சரிசெய்ய நாம்தேவனிடத்திற்குத் திரும்புவோம், நம்முடைய பிதா தமது அன்பினால் நம்மை மாற்றுவார், அவர் நம்மை தமது ஆவியினால் நிரப்புவார், இயேசு நம்மை இவ்வுலகினுள் நடத்துவார்.

நித்திய கண்கள்
நித்திய கண்களை என்னுடைய குழந்தைகளுக்கும் என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் தாரும் என்பதாக என்னுடைய சிநேகிதி மரியா ஜெபித்தாள். அவளுடைய குடும்பம் ஒரு கொந்தளிப்புக்குள் கிடந்து தத்தளித்தது, கடைசியில் தன்னுடைய மகளை இழந்தாள். இந்த பயங்கரமான இழப்பினால் வருத்தத்தில் இக்குடும்பம் இருக்கும் போது, மரியா அக்குடும்பத்தினரை குறுகிய பார்வைக்குள் இழுத்துச் சென்றாள், இவ்வுலகின் வேதனையால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டனர். நம்முடைய பார்வை தூரத்திற்குச் செல்லும் போது தான், நம்முடைய அன்பின் தேவன் தரும் நம்பிக்கையால் நிரப்பப் படுவோம்.
அப்போஸ்தலனாகிய பவுலும் அவனோடு ஊழியம் செய்தவர்களும் எதிர்ப்பாளர்களாலும், அவர்களின் பெயரைக் கெடுக்க எண்ணிய விசுவாசிகளாலும் அநேக துன்பங்களைச் சகித்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கண்களை நித்தியத்திற்கு நேராக வைத்திருந்தனர். பவுல், “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான உபத்திரவம்……… ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி.4:17-18) என தைரியமாகச் சொல்கின்றார்.
அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்தாலும், உண்மையில் அவர்கள் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டனர்”, “கலக்கமடைந்தனர்”, “துன்பப்படுத்தப்பட்டனர்”, “கீழே தள்ளப்பட்டனர்” (வ.8-9). தேவன் அவர்களை, இத்தனை துன்பங்களில் இருந்து விடுவித்திருக்கக் கூடாதா? ஆனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து, சோர்ந்துபோகவில்லை. பவுல் தன்னுடைய நம்பிக்கையை, சீக்கிரத்தில் நீங்கும் இந்த உபத்திரத்தையும் தாண்டி “நித்திய மகிமையின்” (வ.17) மீது வைத்திருந்தார். தேவனுடைய வல்லமை அவருக்குள் கிரியை செய்ததை பவுல் உணர்ந்திருந்தார். “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக் கொண்டு எழுப்புவார்” (வ.14) என்ற உறுதியைப் பெற்றிருந்தார்.
நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிலையற்றதாக காணப்பட்டாலும், நாம் நம்முடைய கண்களை, அழிவில்லாத நித்திய கன்மலையாகிய தேவனுக்கு நேராகத் திருப்புவோம்.