வகை  |  odb

எங்கள் இதயங்களில் அச்சிடப்பட்டுள்ளது

பாடகர் குழு இயக்குனர் அரியான் அபெலா தன்னுடைய குழந்தைப் பருவத்தை, தன் கைகளை மறைக்க, அவைகளின் மேல் உட்கார்ந்து கழித்தார். விரல்கள் காணாமல் அல்லது ஒன்றோடொன்று ஒட்டின விரல்களோடு பிறந்த அவளுக்கு இடது கால் இல்லை மற்றும் வலது காலின் விரல்களும் இல்லை. ஒரு இசை விரும்பி மற்றும் சுப்ரனோ பாடகியான அவள் அரசாங்கத்தின் ஸ்மித் கல்லூரியில் இசையில் முக்கிய படிப்பைப மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாள். ஒரு நாள் அவளுடைய பாடகர் குழு ஆசிரியர் அவளை பாடகர் குழுவை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இது அவளுடைய கைகள் நன்கு தெரியும்படி இருந்தது. அந்த தருணத்தில் இருந்து அவர் ஆலயத்தின் பாடகர்களை நடத்திக்கொண்டு மற்றொரு பல்கலைக்கழகத்தில் பாடகர் குழு இயக்குனராக பணியாற்றி தன்னுடைய தொழிலைக் கண்டுக்கொண்டார். “என் ஆசிரியர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றை கண்டுபிடித்தனர்” என்று விளக்குகிறார்.

அவளுடைய எழுச்சியூட்டும் கதை “நம்முடைய பரிசுத்த ஆசிரியர் நம்முடைய வரம்புகளை பொருட்படுத்தாமல் நம்மிடத்தில் என்ன பார்க்கிறார் ?” என்று விசுவாசிகளைக் கேட்கத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னையே பார்க்கிறார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27).

மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது, அவருடைய மகிமையான சாயலைத் தாங்கியவர்களான நாம், அவரை பிரதிபலிக்க வேண்டும். அபெலாவுக்கு அவளுடைய கைகள் அல்லது விரல்களின்மை அல்ல மாறாக இயேசுவே மிக முக்கியமானவராக இருந்தார். இது எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்டு அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம்” என்று  2 கொரிந்தியர் 3:18ல் வாசிக்கிறோம்.

அபெலாவைப் போல நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மறுரூபப்படுத்தும் வல்லமையினால் நடத்தப்பட்டு (வச. 18), தேவனினை கனப்படுத்தும் வாழ்க்கை பாடலாக வாழ ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நம்முடைய ஜெபத்தின் மூலம் மற்றவர்களை நேசித்தல்

1450 ல் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவர் தன்னுடைய அச்சகத்தை நகர்த்தக்கூடிய முறையில் இணைத்து,  மேற்கத்திய வெகுஜன தொடர்பின் சகாப்தத்தின்போது இதை பயன்படுத்தி, கற்றலை புதிய சமூக பகுதிகளுக்கு பரப்பினார், உலகமுழுவதும் கல்வியறிவு அதிகரித்தது. புதிய யோசனைகள் சமூக மற்றும் மத சூழலில் விரைவான மாற்றத்தை கொண்டு வந்தது. குட்டன்பெர்க், வேதாகமத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை தயாரித்தார். இதற்கு முன்பு, வேதாகமம் மிகுந்த சிரத்தையோடு, எழுத்தாளர்களால் ஒரு வருடம் வரை கைநகலெடுக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளக, அச்சகத்தின் மூலமாக நீங்களும் நானும் வேதத்தை நேரடியாக அணுகமுடிகிறது. நம்மிடத்தில் மின்னணு பதிப்புகள் இருந்தாலும்,  அனேகர் அவருடைய கண்டுபிடிப்பாகிய அச்சிடப்பட்ட வேதாகமத்தையே நம் கரங்களில் வைத்திருக்கிறோம், வேதாகமத்தின் செலவு மற்றும் அதை நகலெடுக்கும் நேரத்தைக் கொண்டு, ஒரு காலத்தில் அணுகமுடியாமல் இருந்த வேதாகமம் இன்று நம் விரல் நுனியில் உள்ளது.

தேவனுடைய சத்தியத்தை அணுகுவது ஒரு ஆச்சர்யமான சிலாக்கியம். நீதிமொழிகளை எழுதியவர் நாம் வேத வசனங்களில் அவருடைய கட்டளைகளை,  நேசிக்க வேண்டிய ஒன்றாக, கண்மணியைப் போல (நீதி. 7:2) கருதவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவைகளை விரல்களில் கட்டி, இருதய பலகையில் எழுதிக்கொள்ளவும் (வச. 3) குறிப்பிடுகிறார். நாம் வேதத்தை புரிந்துக்கொண்டு அதன் ஞானத்தின்படி வாழ முயலும்போது, நாம், எழுத்தாளர்களைப் போல, தேவனுடைய சத்தியத்தை, நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்ல, விரல்களிலிருந்து இருதயத்திற்குள் இழுக்கிறோம்.

இப்போது, பிறகு அடுத்தது

நான் சமீபத்தில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டேன். அப்போது பேச்சாளர் அங்கு பட்டம்பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு தேவையான சவாலை வழங்கினார். அவர்களுடைய வாழ்க்கையில் “அடுத்து என்ன ?” அடுத்து என்ன தொழில் தொடர போகிறார்கள்? எங்கு பள்ளிக்கூடத்திற்கு அல்லது அடுத்த வேலைக்கு செல்லப்போகிறார்கள் ? என்று எல்லோராலும் கேட்கப்படும் ஒரு காலம் என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், இப்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ? என்ற கேள்வியே மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார்.

அவர்களுடைய விசுவாச பயணத்தின் சூழலில், ஒவ்வொரு நாளும் தனக்காக அல்ல, இயேசுவுக்காக வாழ என்ன முடிவுகளை எடுப்பார்கள்?. 

இவருடைய வார்த்தைகள், இப்போது எப்படி வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற நீதிமொழிகள் புத்தகத்தை நினைப்பூட்டியது. ஊதாரணமாக, இப்பொழுது நேர்மையாக நடக்க வேண்டும் (11:1), இப்பொழுது சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் (12:26), இப்பொழுது நேர்மையுடன் வாழவேண்டும் (13:6) இப்பொழுது நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் (13:15), இப்பொழுது ஞானமாய் பேச வேண்டும் (14:3).

பரிசுத்த ஆவியின் ஏவுதலால், இப்பொழுது, தேவனுக்காய் வாழ்வது, அடுத்தது சுலபமானது எது என்பது பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. “ தேவன் ஞானத்தைத் தருகிறார்: …. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார், …. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதைகளை காப்பாற்றுகிறார்” (2:6-8). இப்பொழுது, அவருடைய பிரமாணங்களின்படி வாழ நமக்கு தேவையானதை தேவன் தருவார் மற்றும் அவருடைய கனத்திற்காக அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் தேவன் வழிகாட்டுவார்.

மீண்டும் தோல்வியடைந்தது

எனது பிரசங்க நாட்களில் சில ஞாயிறுகளின் காலை நேரங்களை ஒரு தாழ்வான புழுவைப்போல அணுகினேன். அதற்கு முந்தின வாரத்தில், நான் ஒரு நல்ல கணவனாய், தகப்பனாய் மற்றும் நண்பனாய் இருக்கவில்லை. தேவன் என்னை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் நான் ஒரு சரியான வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ஆகவே வரும் வாரத்தில் சிறப்பாக வாழ முயற்சிக்க முடியும் என சபதம் செய்து என் பிரசங்கத்தை  நடத்தினேன்.

அது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல. கலாத்தியர் 3ம் அதிகாரத்தில. தேவன் தொடர்ந்து இலவச பரிசாக தமது ஆவியை அளித்து நம்மில் வல்லமையாய் கிரியை செய்கிறார் - நாம் எதையோ செய்திருக்கிறோமென்றோ அல்லது அதற்கு தகுதியானவர்கள் என்றோ அல்ல.

ஆபிரகாமின் வாழ்க்கை  அதை நிரூபிக்கிறது. சில நேரங்களில் அவர் ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை. உதாரணமாக, இரண்டு முறை தன்னை காப்பாற்றிக்கொள்ள, பொய் சொல்லி,  சாராளின் வாழ்க்கையை ஆபத்தில்  சிக்க வைத்து விட்டார். (ஆதியாகமம் 12:10-20; 20:1-18). இருப்பினும் தன்னுடைய விசுவாசத்தை தேவன் நீதியாக எண்ணினார் (கலா. 3:6). ஆபிரகாம் தன்னுடைய தோல்விகளிலும்  தன்னை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தார். இதனால் தன்னுடைய வம்சத்தின் மூலம் இந்த உலகத்திற்கே இரட்சிப்பை கொண்டு வர தேவன் அவரை பயன்படுத்தினார்.

தவறாக நடத்துக்கொள்வதற்கு எந்த நியாயத்தீர்ப்பும் இல்லை. நாம் கீழ்படிதலோடு அவரை பின்பற்ற இயேசு நம்மிடத்தில் கேட்கிறார், அதற்கான வழிமுறைகளையும் எற்படுத்தி கொடுக்கிறார். ஒரு கடினமான, மனந்திரும்பாத இதயம், அவர் நமக்காக வைத்திருக்கும் நோக்கங்களுக்கு தடையாக இருக்கும். ஆனால். அவர் நம்மை பயன்படுத்தும் முறை நம்முடைய நீண்ட நல்ல நடத்தை முறையை சார்ந்தது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை பயன்படுத்த தேவனுடை சித்தம் மட்டுமே அடிப்படையானது : இரட்சிக்கப்பட்டு அவருடைய கிருபையில் வளருவதே.  அந்த கிருபைக்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அது முற்றிலும் இலவசம்.

தேவன் புரிந்துக்கொள்கிறார்

சமீபத்திய நடவடிக்கைக்குப்பிறகு, மாதுரியின் ஏழு வயது மகன் ரோஹித், தனது புதிய பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துக்கொள்ளத் தயாரானப்போது வம்பு செய்தார்.

மாற்றம் கடினமானது என்று அவள் புரிந்துக்கொண்டதை சொல்லி அவனை மாதுரி ஊக்குவித்தாள். ஆனால் ஒரு காலையில் ரோஹித்தின் அவனை மீறிய நடத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தது. மாதுரி இரக்கத்துடன் “எது உன்னை தொந்தரவு செய்கிறது மகனே? என்று கேட்டாள்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு “எனக்கு தெரியவில்லை அம்மா. எனக்கு பல உணர்வுகள் உள்ளன” என்று ரோஹித் கூறினான்.

அவனை ஆறுதல் படுத்தும்போது மாதுரியின் இருதயம் கனத்தது. அவனுக்கு உதவ வேண்டி இந்த காரியம் அவருக்கும் கடினமானதாக இருக்கிறது என்பதை பகிர்ந்துக்கொண்டார். அவர்களுடைய விரக்தியை புரிந்துக்கொள்ளவோ, குரல் கொடுக்கவோ முடியாத நேரத்திலும், எல்லாவற்றிலும் தேவன் அருகிலிருப்பார் என்று உறுதியளித்தார். “பள்ளி ஆரம்பிக்கும் முன் உன் தோழர்களைப் சந்திப்போம்” என்று கூறினாள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிகமான உணர்வுகள் இருந்தாலும் தேவன் அதைப் புரிந்துக்கொள்ளுகிறார் என்ற நன்றியறிதலோடு அவர்கள் திட்டமிட்டார்கள்.

சங்கீதம் 147ஐ எழுதினவர் தன்னுடைய விசுவாச பயணம் முழுவதும் பெரும் உணர்ச்சிகளை அனுபவித்தார். எல்லாம் அறிந்தவர், எல்லோரையும் பராமரிப்பவர், உடல் மற்றும் உணர்ச்சிகளால் ஏற்பட்ட காயத்ததை ஆற்றுகிறவர் - இவரைப் துதிப்பதால் வரும் நன்மைகளை அறிந்துக்கொண்டார். (வச. 1-6). அவர்களுக்கு தேவன் வழங்கும் வழிகளுக்காகவும், தமக்கு பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் (வ 11) என்றும் அவரைத் துதித்தார்

எப்போதும் மாறும் நம்முடைய உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள நாம் போராடும்போது, நாம் தனிமையாக அல்லது ஊக்கமில்லாமல் இருப்பதாக உணர வேண்டியதில்லை. என்றும் மாறாத தேவனின் நிபந்தனையற்ற அன்பிலும், வரம்பற்ற புரிதலிலும் நாம் சார்ந்துக்கொள்ளலாம்.