1450 ல் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவர் தன்னுடைய அச்சகத்தை நகர்த்தக்கூடிய முறையில் இணைத்து,  மேற்கத்திய வெகுஜன தொடர்பின் சகாப்தத்தின்போது இதை பயன்படுத்தி, கற்றலை புதிய சமூக பகுதிகளுக்கு பரப்பினார், உலகமுழுவதும் கல்வியறிவு அதிகரித்தது. புதிய யோசனைகள் சமூக மற்றும் மத சூழலில் விரைவான மாற்றத்தை கொண்டு வந்தது. குட்டன்பெர்க், வேதாகமத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை தயாரித்தார். இதற்கு முன்பு, வேதாகமம் மிகுந்த சிரத்தையோடு, எழுத்தாளர்களால் ஒரு வருடம் வரை கைநகலெடுக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளக, அச்சகத்தின் மூலமாக நீங்களும் நானும் வேதத்தை நேரடியாக அணுகமுடிகிறது. நம்மிடத்தில் மின்னணு பதிப்புகள் இருந்தாலும்,  அனேகர் அவருடைய கண்டுபிடிப்பாகிய அச்சிடப்பட்ட வேதாகமத்தையே நம் கரங்களில் வைத்திருக்கிறோம், வேதாகமத்தின் செலவு மற்றும் அதை நகலெடுக்கும் நேரத்தைக் கொண்டு, ஒரு காலத்தில் அணுகமுடியாமல் இருந்த வேதாகமம் இன்று நம் விரல் நுனியில் உள்ளது.

தேவனுடைய சத்தியத்தை அணுகுவது ஒரு ஆச்சர்யமான சிலாக்கியம். நீதிமொழிகளை எழுதியவர் நாம் வேத வசனங்களில் அவருடைய கட்டளைகளை,  நேசிக்க வேண்டிய ஒன்றாக, கண்மணியைப் போல (நீதி. 7:2) கருதவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவைகளை விரல்களில் கட்டி, இருதய பலகையில் எழுதிக்கொள்ளவும் (வச. 3) குறிப்பிடுகிறார். நாம் வேதத்தை புரிந்துக்கொண்டு அதன் ஞானத்தின்படி வாழ முயலும்போது, நாம், எழுத்தாளர்களைப் போல, தேவனுடைய சத்தியத்தை, நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்ல, விரல்களிலிருந்து இருதயத்திற்குள் இழுக்கிறோம்.