பாடகர் குழு இயக்குனர் அரியான் அபெலா தன்னுடைய குழந்தைப் பருவத்தை, தன் கைகளை மறைக்க, அவைகளின் மேல் உட்கார்ந்து கழித்தார். விரல்கள் காணாமல் அல்லது ஒன்றோடொன்று ஒட்டின விரல்களோடு பிறந்த அவளுக்கு இடது கால் இல்லை மற்றும் வலது காலின் விரல்களும் இல்லை. ஒரு இசை விரும்பி மற்றும் சுப்ரனோ பாடகியான அவள் அரசாங்கத்தின் ஸ்மித் கல்லூரியில் இசையில் முக்கிய படிப்பைப மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாள். ஒரு நாள் அவளுடைய பாடகர் குழு ஆசிரியர் அவளை பாடகர் குழுவை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இது அவளுடைய கைகள் நன்கு தெரியும்படி இருந்தது. அந்த தருணத்தில் இருந்து அவர் ஆலயத்தின் பாடகர்களை நடத்திக்கொண்டு மற்றொரு பல்கலைக்கழகத்தில் பாடகர் குழு இயக்குனராக பணியாற்றி தன்னுடைய தொழிலைக் கண்டுக்கொண்டார். “என் ஆசிரியர்கள் என்னிடத்தில் ஏதோ ஒன்றை கண்டுபிடித்தனர்” என்று விளக்குகிறார்.

அவளுடைய எழுச்சியூட்டும் கதை “நம்முடைய பரிசுத்த ஆசிரியர் நம்முடைய வரம்புகளை பொருட்படுத்தாமல் நம்மிடத்தில் என்ன பார்க்கிறார் ?” என்று விசுவாசிகளைக் கேட்கத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தன்னையே பார்க்கிறார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார். அவனை தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27).

மற்றவர்கள் நம்மைப் பார்க்கும்போது, அவருடைய மகிமையான சாயலைத் தாங்கியவர்களான நாம், அவரை பிரதிபலிக்க வேண்டும். அபெலாவுக்கு அவளுடைய கைகள் அல்லது விரல்களின்மை அல்ல மாறாக இயேசுவே மிக முக்கியமானவராக இருந்தார். இது எல்லா விசுவாசிகளுக்கும் பொருந்தும். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்டு அந்தச் சாயலாகத்தானே மறுரூபப்படுகிறோம்” என்று  2 கொரிந்தியர் 3:18ல் வாசிக்கிறோம்.

அபெலாவைப் போல நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மறுரூபப்படுத்தும் வல்லமையினால் நடத்தப்பட்டு (வச. 18), தேவனினை கனப்படுத்தும் வாழ்க்கை பாடலாக வாழ ஒப்புக்கொடுக்க வேண்டும்.