
முடிவிலிருந்து துவங்கு
நான் சிறுவனாக இருக்கும்பது “நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்” என்று அநேகர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் என் பதில் மாறும்: மருத்துவர், தீயணைப்பு படையினர், ஊழியக்காரர், விஞ்ஞானி அல்லது தொலைக்காட்சி நடிகர். இப்பொழுது நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாகியபின், இவ்விதமான கேள்வி எவ்வளவு கடினமாக காணப்படும் என்று நான் உணருகிறேன். சில சமயங்களில் “நீ எதிலே சிறந்து விளங்குவாய் என்று எனக்கு தெரியும்” என்று பிள்ளைகளிடத்தில் சொல்லத்தோன்றும். அவ்வப்போது பிள்ளைகள் தங்களை காண்பதற்கு மேலாகவே, பெற்றோர்கள் அவர்களில் காண்கிறார்கள்.
இது பவுல், தான் அன்புகூர்ந்து நேசித்த பிலிப்பிய சபை விசுவாசிகளிலே (பிலிப்பியர் 1:3) காண்பதிற்க்கு ஒப்பிடலாம். எல்லாம் கடந்த பின்பு அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், என்று அவர்கள் கடை நிலைமையை அறிந்திருந்தார். ஏனெனில் வேதம் கதையின் இறுதியில் ஒரு அருமையான காட்சியை காண்பிக்கிறது: உயிர்த்தெழுதலும், எல்லா காரியங்களும் புதுப்பிக்கப்படுதலும் ( 1 கொரிந்தியர் 15, வெளிப்படுத்தின விஷேசம் 21 ஐ பார்க்க). பின்னுமாக இந்த கதையை எழுதியவர் யார் என்றும் அது சொல்லுகிறது.
சிறைச்சாலையிலிருந்து பிலிப்பியருக்கு பவுல் எழுதிய இந்த நிருபத்தின் முதல் வரிகள்: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:5) என்று பிலிப்பியருக்கு நினைவுபடுத்துகிறார்.
உங்களில் நல்ல வேலையை தொடங்கிய இயேசு அதை முடித்திடுவார். ‘முடிப்பது’ என்பது மிக முக்கியமான ஒரு வார்த்தை. ஏனென்றால் இறைவன் எதையும் அரைகுறையாக விடுவதில்லை.

விசித்திரமான ஆறுதல்
நலம் பெற வாழ்த்தி வந்த அட்டையில் எழுதியிருந்த வசனம் அவளுடைய நிலைமைக்கு பொருந்துவதாக லீசாவுக்கு தெரியவில்லை: “கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்”. 2 இராஜாக்கள் 6:17 எனக்கோ புற்றுநோய் உள்ளது. ஒரு குழந்தையை இப்போதுதான் இழுந்து போனேன். தேவதூதர்களை பற்றிய இந்த வசனம் எனக்கு அல்ல என்று குழம்பினாள்.
பிறகு, ஒவ்வொருவராக தேவதூதர்கள் வர ஆரம்பித்தார்கள்! புற்றுநோயிலிருந்து குணமான அநேகர் தங்களுடைய நேரத்தை அவளுக்கு ஒதுக்கி அவளோடு பேசினார்கள். அவளுடைய கணவன் வெளிநாட்டில் இராணுவத்திலிருந்து சீக்கிரமாக விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினான். அவள் கூட ஜெபிக்க, நண்பர்கள் வந்தார்கள். ஆனால் அவள் எப்பொழுது இறைவனுடைய அன்பை மிகவும் உணர்ந்தாள் தெரியுமா? அவளுடைய தோழி ப்பட்டி (Patty) இரண்டு திசு காகிதம் (tissue) பெட்டிகளுடன் அவளுடைய வீட்டுக்கு வந்து லீசா பக்கத்தில் அதை வைத்து விட்டு அழத் தொடங்கின போதுதான், ப்பட்டிக்கு தெரியும். அவளுக்கும் குழந்தைகளை இழந்த அனுபவம் இருந்தது.
“மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் இது எனக்கு மிகவும் அருமையானது” என்றாள் லீசா. அங்த வாழ்த்து அட்டை இப்பொழுது புரிகிறது. தேவதூதர் எப்பொழுதுமே என்னை சுற்றி இருந்திருக்கிறார்கள்.
எலிசாவை ஒரு படை சுற்றி இருக்கும்போது தேவதூதர்கள் எலிசாவை காத்துக் கொண்டனர். அவனுடைய வேலைக்காரன் அவர்களை பார்க்க முடியவில்லை. எலிசாவை நோக்கி: “ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம்” என்றான் ( வ 15). அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” (வ 17) என்றான்;
நாம் தேவனை நோக்கி பார்க்கும்பொழுது தான் நாமிருக்கும் அந்த நெருக்கடியில் எது முக்கியம் என்று தெரிய வரும்; அவர் நம்மை தனியே விடமாட்டார். கர்த்தருடைய ஆறுதலளிக்கும் சமுகம் நம்மை விடுவதில்லை. பல வழிகளில் அவர் தம்முடைய அன்பை நமக்கு காண்பிக்கிறார்.

ஊடுருபவரை நீக்கு
விடிவதற்கு முன்னே என்னுடைய கணவர் படுக்கையில் இருந்து எழுந்து சமையலறைக்குச் சென்று அங்கே விளக்கை போட்டு அணைத்துக் கொண்டிருந்தார். நான் அவர் என்ன செய்கிறார் என்று யோசித்தேன். அப்பொழுதுதான் முந்தின நாள், நான் அங்கே ஒரு சிலந்தி பூச்சியை கண்டு அலறின கதை ஞாபகம் வந்தது. என் கணவர் என்னுடைய பயத்தை அறிந்து உடனே வந்து அதை எடுத்துவிட்டார். இன்றைக்கு அவர் அதிகாலமே எழுந்திருந்ததின் காரணம் சமையலறையில் நான் பயப்படாமல் உள்ளே போகதக்கத்தாக ஒரு பூச்சியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவே. அவர் அப்படித்தான்!
என்னை பற்றிய நினைவாக அவ்விதமாக எழுந்து, என்னுடைய தேவையை அவருடைய தேவைக்கு முன் என் கணவன் வைத்தது, பவுல் சொல்லுகிற அன்பை காட்டுகிறது. எபேசியருக்கு அவர் எழுதின காரியம்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25,27) இன்னுமாக பவுல் சொல்லுவது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்”. (எபேசியர் 5:28). கிறிஸ்துவுடைய அன்பு மற்றவர்களின் தேவையை முன் வைத்ததை தழுவி தான் கணவனின் அன்பையும் சித்தரிக்கிறார் பவுல்.
என்னுடைய பயம் என் கணவருக்கு தெரியும். அதனால் அவர் என்னுடைய தேவையை முன் வைத்தார். இந்த மாதிரியே நாமும் தியாகமாக முன் வந்து, பயம், மன அழுத்தம், கவலை வெட்கம் போன்றவைகளை மற்றவர் வாழ்வினின்று அகற்றி, அவர்களுக்கு உதவலாமே..

அவர் நம்மை விடமாட்டார்
ஜூலியோ என்ற மனிதன் ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தின்மேல் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாலம் நியூயார்க் நகரத்தையும் நியூஜெர்ஸி மாகாணத்தையும் இணைக்கும் ஒரு பாலம்; போக்குவரத்து நெரிசல் அதிகம். அப்போது அங்கே வாழ்வா சாவா என்கிற நிலையில் இருந்த ஒரு மனிதனை பார்த்தான். அந்த மனிதன் பாலத்திலிருந்து நதிக்குள் குதிக்க தயாராக இருந்தான். போலீஸ் வருவதற்கு நேரம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஜூலியோ தன்னுடைய சைக்கிளிலிருந்து விரைவாக இறங்கி, கைகளை விரித்துக்கொண்டு அந்த மனிதனை அணுகி “நீ குதிக்காதே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்” என்று சொல்லி கலக்கத்தில் இருந்த அவனை இறுகப் பிடித்துக் கொண்டு அப்பாதையில் சென்றுகொண்டிருந்த இன்னொரு மனிதனோடு சேர்ந்து அவனை பாதுகாப்பாக கொண்டுவந்தான். அபாயம் கடந்த போதும் கூட ஜூலியோ அந்த மனிதனை விடவில்லை.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் இதே விதமாக, வாழ்வு அல்லது மரணம் என்ற நிலையில் மனித வர்க்கம் இருக்கும்போதுதான் நல்ல மேய்ப்பராகிய இயேசு தம்முடைய ஜீவனையே பலியாக கொடுத்து தம்மேல் நம்பிக்கை வைத்தவர்களை ஒருபோதும் விட்டு விடுவதில்லை என்றார். தம்மில் நம்பிக்கை வைத்த ஆடுகளை இவ்விதமாக ஆசீர்வதிப்பேன் என்றும் சொன்னார்: “அவர்கள் அவரை சொந்தமாக அறிந்திருப்பார்கள், அவர்களுக்கு என்றும் அழியாத நித்திய ஜீவனை கொடுப்பார், அவருடைய கவனிப்பில் பாதுகாப்பாக இருப்பார்கள்”. இந்த பாதுகாப்பு அந்த பலவீனமான, வலிமையற்ற ஆடுகளினால் அல்ல; அந்த வலிமை மிக்க மேய்ப்பருடைய போதுமான தன்மையில் அது காணப்பட்டது. “அவர்களை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28-29).
நாம் நம்பிக்கையற்று பரிதாபமாக இருக்கும் போது, இயேசு நம்மை மீட்டுக்கொண்டார். நாம் இப்பொழுது பாதுகாப்பாக அவருடைய சொந்தத்தில் இருக்கலாம். அவர் நம்மை நேசிக்கிறார், தேடிக் கண்டுபிடிக்கிறார் இரட்சிக்கிறார், எப்பொழுதும் நம்மை கைவிடார் என்று வாக்களிக்கிறார்.
