வகை  |  odb

வல்லமை

23 வாரங்களில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை செய்பி, 245 கிராம் எடை மட்டுமே இருந்தாள். அவள் உயிர் வாழ்வது சந்தேகம் என்று மருத்துவர்கள் அவள் பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் செய்பி தொடர்ந்து போராடினாள். அவள் அருகே ஒரு இளஞ்சிவப்பு நிற அட்டையில் ”சிறிய ஆனால் வல்லமையான” என்று எழுதி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு அற்புதமாக செய்பி 2.26 கிலோ எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தையாக வீடு திரும்பியது மட்டுமல்லாமல் உலகிலேயே உயிர் பிழைத்த மிக சிறிய குழந்தை என்ற உலக சாதனையையும் எடுத்து சென்றாள்.

முரண்பாடுகளை வென்றவர்களின் கதைகளைக் கேட்பது வல்லமை வாய்ந்தது. வேதாகமமும் அது போன்ற ஒரு கதையை கூறுகிறது. தேவனை தூஷித்து இஸ்ரவேலை மிரட்டிய ஒரு ராட்சத போர்வீரனான கோலியத்தை எதிர்த்து சண்டையிட ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது முன் வந்தான். சவுல் இராஜா "நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்” (1 சாமுவேல் 17:33). தாவீது போர்க்களத்தில் இறங்கியபோது, கோலியாத் “சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.” (வச 42). ஆனால் தாவீது போர்க்களத்திற்கு தனியாக செல்லவில்லை. “இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்றான் (வச 45). அந்த நாள் நிறைவடைந்தபோது செத்துப்போன கோலியாத்தின் மீது வெற்றி பெற்ற தாவீது நின்றான்.

பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் நம்மோடு இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பெலத்தினால் நாமும் வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம்.

அணைத்து வழிகளுமா?

நான் வேலையிலிருந்து எனது பேத்தியின் தடகள போட்டியை பார்க்கும்படி செல்லும்போது “நெடுஞ்சாலையை எடுக்க வேண்டாம்” இன்று எனது மகளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்க்கும் போது தான் எனக்கு தெரியவந்தது அங்கு அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கிறது என்று. நான் வேறு வழியில்லாமல் வந்த பாதை எடுத்து திரும்ப சென்றேன்.

திரும்ப வீடு செல்லும்படி நான் எடுத்த எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்தது எல்லா சாலைகளும் தேவனுடனான நித்திய உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறும் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. சிலர் கருணை மற்றும் நன்னடத்தையின் பாதை நம்மை அங்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் மதம் சம்மந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கான பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.

அந்த வழிகளை நம்பி செல்வது நம்மை மூடப்பட்ட சாலைகளுக்கு தான் எடுத்து செல்லும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு இதை தெளிவுபடுத்துகிறார் (யோவா. 14:6). பிதாவின் வாசஸ்தலத்துக்கு உள்ளாக நாம் செல்லும்படியாக நமக்காய் அவர் மரிக்க போகிறார் என்பதை இந்த வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

தேவ பிரசன்னத்திற்குள்ளாக நம்மை அழைத்து செல்லாத எந்த வழியையும் நாம் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இரட்சகராகிய இயேசுவை நம்புவோம் (யோவா.3:36). அவரை நம்பி கொண்டு இருப்பவர்கள், அவர் அளித்திருக்கும் வழிகளில் ஓய்வெடுக்கலாம்.

நம் இரக்கமுள்ள தேவன்

குளிர் நிறைந்த ஒரு இரவு நாளில், ஒரு யூத குடும்ப வீட்டின் ஜன்னல் ஒன்றின் மீது கல் எறியப்பட்டது. தாவீதின் நட்சத்திரமானது அந்த ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்தது. யூதர்களின் ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஹானுக்கா-வை முன்னிட்டு மெனோரவும் (யூத விளக்குத்தண்டு) வைக்கப்பட்டிருந்தது. சில ஆயிரம் மக்கள் வசித்து வந்த இந்த சிறிய அமெரிக்க நகரத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் - அவர்கள் அந்த வெறுப்பு நிறைந்த செயலுக்கு இறக்கத்துடன் பதிலளித்தார்கள். அவர்கள் அருகில் வாழ்ந்து வந்த யூதர்களின் வலியிலும் பயத்திலும் பங்கேற்க்கும் வண்ணமாக, மெனோராக்களின் படங்களை தங்கள் வீடுகளின் ஜன்னல்களில் ஒட்டினார்கள்.

நம் இரட்சகராகிய இயேசு நமக்காக தம்மை தாழ்த்தி நம்மோடு வாழும்படி (யோ 1:14) வந்ததால் விசுவாசிகள் ஆகிய நாமும் பெரிதான இரக்கத்தை பெற்றவர்களாய் இருக்கிறோம். நமக்காக “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,.. தம்மை வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்தார்” (பிலி 2:6-7). நான் அழும்போது நம்மோடு அவரும் அழுது, நம்மை காக்கும் படி நமக்காக சிலுவையில் மரித்தார்.

தேவனுடைய அக்கறைக்கு அப்பால் நமக்கு எந்த சோதனையும் நேரிடாது. நம்மீது யாராவது ‘கல்லெறிந்தால்’ அவர் நமக்கு ஆறுதலாய் இருப்பார், வாழ்க்கை நமக்கு ஏமாற்றங்களை கொண்டு வந்தால் நம்மோடு அந்த கஷ்டத்தில் நடக்கிறார் (சங் 138:6). சோதனையில் நம்மை தப்புவித்து நம் பயங்களுக்கு நம்மை தப்புவிக்கிறார். உம் இரக்கம் நிறைந்த அன்பிற்காக நன்றி, தேவனே.

உங்கள் பாட்டு என்ன?

அரசியல்வாதியான அலெக்சாண்டர் ஹாமில்டனை அதிகமாக அமெரிக்காவில் யாருக்கும் தெரியாது. 2015ஆம் ஆண்டு லின்- மானுவேல் மிராண்டா என்கிற பிரபல பாடகர் “ஹாமில்டன்” என்கிற பாடலை வெளியிட்டது முதல் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களும், சிறுவர் முதற்கொண்டு ஹாமில்டனின் கதை தெரியவந்தது.

தேவனுக்கு ஒரு பாடலின் மகிமை என்னவென்று தெரியும், அதினால் தான் மோசேவினிடம் “நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக் கொண்டு இதை இஸ்ரவேல் புத்திரருக்கு படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்கு சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்கு இருக்கும் என்றார்” ( உபா. 31:19). தேவன், இஸ்ரவேல் மக்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இடத்தில் வந்த பிறகு பின்வாங்கி மற்ற கடவுள்களை கும்பிடுவார்கள் என்று அறிந்து இதை மோசேயிடம் கூறியிருந்தார்.

நாம் எளிதாக பாடல்களை மறந்துவிட முடியாது, அதினால் நாம் தெரிந்தெடுக்கும் பாடல்களை ஞானமாக தெரிந்தெடுக்க வேண்டும். நம்மை விசுவாசத்தில் பலப்படுத்தும் பாடல்களை நாம் கிறிஸ்துவுக்குள்ளாக வளர ஆதாயப்படுத்திக் கொள்ளவும் கூடுமான அளவு மற்றவர்களிடம் பேசும்போதெல்லாம் சங்கீதங்கள் கீர்த்தனங்கள் மற்றும் ஆவிக்குரிய பாடல்கள் மூலமாக வார்த்தைகளை பயன்படுத்தவும். ஆகையால் உங்கள் இருதயத்தில் இருந்து தேவனுக்கு பாடல்களை பாடுங்கள் ( எபே. 5:15-19).

நம் இருதயத்தின் வாஞ்சைகள் பாடலாக காணப்படலாம். அது இயேசுவை வெளிப்படுத்துகிறதா? அதை மனப்பூர்வமாக படுகிறோமா? நாம் என்ன பாடுகிறோமோ அது நம் நம்பிக்கையாக மாறுகிறது. ஆகையால் நாம் என்ன பாடுகிறோம் என்று கவனமாக, ஞானமாக யோசித்து சத்தமாக பாட வேண்டும்.

பழைய வழக்கத்தை முறித்துவிடு

டேவிடுக்கு முதல் முறையாக தன் தகப்பனிடம்மிருந்து தனது பதினாலாவது பிறந்த நாள் அன்று அடி கிடைத்தது. தெரியாமல் வீட்டு கண்ணாடியை அவன் உடைத்ததினால் “என்னை மிதித்து உன்னை குற்றினார்” என்று சொன்னான் டேவிட். ஆனால், அதர்க்கு பிறகு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்றான். அவர் குடித்துவிட்டு எப்போதும் பிரச்சனை பண்ணிகொண்டிருப்பார். இதற்கு ஒரு முடிவு உண்டாகும்படி நான் பிரயாசப்படுகிறேன் என்று வருத்ததுடன் கூறினான்.
இதற்கு முடிவு வரவேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த டேவிடுக்கு இந்த நிலமைக்கு வருவதர்க்கு அதிக வருடங்கள் எடுத்தது. தன் வாலிபத்தின் அதிக நாட்கள் அவன் சிறைச்சாலைகளிளும் போதை சிகிச்சை மையங்களிலும் தான் கிளத்தான். தன் கனவுகளை அனைத்தும் உடைந்து போன நிலமையில் இருக்கும்போது அவன் செல்லும் சிகிச்சை நிலையில் மூலம் இயேசு கிறிஸ்துவைபற்றி அற்நதான். அது முதல் அவன் நம்பிக்கை படி படியாக வளர தொடங்கியது. இப்போதோ டேவிட் சொல்வது என்னவென்றால் “கசப்பு நிறைந்த என் வாழ்வு இப்போது அதர்க்கு எதிர்மாறாக மாரிவிட்டது. அனுதினமும் காலையில் என வாழ்கையை அவருக்கு அர்பனிக்கிறேன்.
மற்றவர்களோ அல்லது நாம் நமக்கு செய்த தவறுகளால், உடைக்கப்பட்ட இருதயத்தோடு நாம் தேவனிடம் வருவோமானால், தேவன் அதை எடுத்து புதிதாக மாற்றுகிறார் (2 கொரி. 5:11). தேவ அன்பும் புது வாழ்வும் நம் பழைய வாழ்க்கையை முறித்துவிட்டு ஒரு புது வாழ்வையும் எதிர்காலத்தையும் நமக்கு தருகிறது. அதை தொடர்ந்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்பிக்கையும் பெலனும் அவரிடம் இருந்து பெறும்படி நம்மோடு இருக்கிறார்.