
நம் வறுமையிலிருந்து
வாரன் பபெட், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் கொடுக்கும் வாக்குறுதியைத் தொடங்கி ஒரு சரித்திரம் படைத்தனர், அவர்களது பணத்தில் பாதியை நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்தனர். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 92 பில்லியன் டாலர்களைக் கொடுப்பதாகும். இந்த உறுதி மொழியானது உளவியலாளர் பால் பிஃப்பை கொடுக்கும் முறைகளைப் பற்றி படிக்கத் தூண்டியது. ஒரு பரிசோதனையின் மூலம், ஏழைகள் செல்வந்தர்களை விட 44 சதவிகிதம் அதிகம் கொடுக்க விரும்புவதைக் கண்டறிந்தார். தங்கள் சொந்த வறுமையை உணர்ந்தவர்கள் பெரும்பாலும் அதிக தாராள மனப்பான்மைக்கு நேராக நகர்த்தப்படுகிறார்கள்.
இயேசு இதை நன்றாக அறிந்திருந்தார். தேவாலயத்திற்கு சென்றிருந்த அவர், மக்கள் பரிசுகளை பண்டகசாலையில் போடுவதைப் பார்த்தார். பணக்காரர்கள் பணத்தைத் தூக்கி எறிந்தனர். ஆனால் ஒரு ஏழை விதவை ஏறக்குறைய ஒரு ருபாய் மதிப்புள்ள தனது கடைசி இரண்டு செப்பு நாணயங்களை வெளியே எடுத்து பண்டகசாலையில் வைத்தார். நான் இயேசு எழுந்துநின்று மகிழ்ந்து, திகைத்து நிற்பதை கற்பனையாகப் பார்க்கிறேன். உடனடியாக அவர் தம்முடைய சீஷர்களைச் கூட்டி, இந்த திகைப்பூட்டும் செயலை அவர்கள் தவறவிடாமல் பார்த்துக் கொண்டார். “அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ. 43) என்றார். இயேசு எதைப் பற்றி பேசுகிறார் என்பதை யாரேனும் விளக்குவார்கள் என்று நம்பி சீஷர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கலக்கமடைந்து போனார்கள். எனவே, அவர் அதை தெளிவுபடுத்தினார்: “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்றார் (வ.44).
நம்மிடம் கொடுப்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால் நம்முடைய வறுமையிலிருந்து கொடுக்க இயேசு நம்மை அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோம். நம்முடைய நிறைவான பரிசுகளில் தேவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.

இந்த விஷயங்களை பயிற்சி செய்யுங்கள்
நான் என் மகனுக்கு கணக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்தபோதுதான், அதே பாடத்தில் எழும் சிக்கலான கணக்குகளை செய்வதில் அவனுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது என்பது வெளிப்பட்டது. “நான் அதை செய்து முடித்துவிட்டேன்”, என்று அவன் என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தான், அப்படி சொன்னால் நான் அவனை எல்ல வீட்டுப்பாடத்தையும் செய்யசொல்லி வற்புறுத்தமாட்டேன் என்று நம்பி அப்படி சொன்னான். நடைமுறையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் கற்றுக் கொள்ளும் வரை ஒரு கருத்து ஒரு கருத்து மட்டுமே என்று நான் அவனுக்கு கனிவாக விளக்கினேன்.
பவுல் கடைப்பிடிப்பதை குறித்து பிலிப்பியில் உள்ள தனது நண்பர்களுக்கு எழுதுகிறார். “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்” (பிலிப்பியர் 4:9). அவர் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார்: ஒப்புரவாவது - அவர் எயோதியாளும், சிந்திகேயாளும் ஒப்புரவாகும்படி வலியுறுத்துகிறார் (வ. 2-3); சந்தோஷம் - அவர் தனது வாசகர்களை பக்குவப்படும்படி நினைப்பூட்டுகிறார் (வ. 4); சாந்தகுணம் - உலகத்துடனான அவர்களின் உறவில் வேலைசெய்யமாறு அவர் அவர்களை வலியுறுத்துகிறார் (வ. 5); ஜெபம் - அவர் தனிப்பட்ட முறையிலும் மற்றும் எழுத்திலும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்ததுபோல (வ. 6-7); சிந்தை - அவர் சிறையிலும் வெளிப்படுத்திகாட்டியபடி (வ. 8). ஒப்புரவாகுதல், சந்தோஷம், சாந்தகுணம், ஜெபம் மற்றும் சிந்தை - இயேசுவில் விசுவாசிகளாக வாழ அழைக்கப்பட்ட விஷயங்கள் இவை பக்குவப்பட மற்றெந்த பழக்கத்தையும் போல இந்த நற்பண்புகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
பவுல் ஏற்கனவே பிலிப்பியருக்கு சொன்னது போல சுவிசேஷத்தின் நற்செய்தி ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (2:13). நாம் நம் சொந்த வல்லமையில் ஒருபோதும் செயல்படுவதில்லை. தேவனே நமக்கு தேவையானதை போஷிக்கிறார் (4:19).

பனி கலை
அமெரிக்காவில், ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த உள்ளூர் இசைக்குழு, ஒவ்வொரு ஆண்டும் நகரத்தில் நடக்கும் ஒரு மாற்றத்தைப் பற்றி ஒரு பாடலைப் பாடுவார்கள். “ஆண்டின் முதல் மெய்யான பனிப்பொழிவைப் பெறும்போதெல்லாம் புனிதமான ஒன்று நடப்பதைப்போல அது இருந்தது” என்று இசைக்குழுவின் இணை நிறுவனர் விளக்கினார். அது கொஞ்சம் புதிய தொடக்கத்தைப் போல இருந்தது. நகரம்தன் வேகத்தை குறைத்து, அமைதியாக வளர்ந்தது.
நீங்கள் கடுமையான பனிப்பொழிவை அனுபவித்திருந்தால், அது ஒரு பாடலை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். பனி அழுக்குகள் மற்றும் குழப்பத்தை மறைக்கும்போது ஒரு அற்புதமான அமைதி உலகத்தை ஈர்க்கிறது. சில தருணங்களுக்கு குளிர்காலத்தின் இருண்ட தன்மையானது பிரகாசிப்பிக்கிறது, எங்களின் பிரதிபலிப்பையும், மகிழ்ச்சியையும் வரவழைக்கிறது.
தேவனை பற்றிய நல்ல பார்வையைப் பெற்றிருக்கக்கூடிய யோபுவின் நண்பரில் ஒருவரான எலிஹு சிருஷ்டிப்பு எப்படி நம் கவனத்தை இழுக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.“தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்” என்று அவர் கூறுகிறார் (யோபு 37:5). “அவர் உறைந்த மழையையும் கல்மழையையும் தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.” இத்தகைய மகத்துவம் ஒரு தெய்வீக ஓய்வை வேண்டி நம் வாழ்க்கையை இடைமறிக்கிறது. “தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்” என்பதை எலிஹூ கவனித்தார் (வ 6-7).
இயற்கை சில நேரங்களில் நாம் விரும்பாத வழிகளில் நம் கவனத்தை ஈர்க்கிறது. நமக்கு என்ன நேர்ந்தாலும் அல்லது நம்மை சுற்றியுள்ள எதை நாம் கவனித்தாலும், ஒவ்வொரு கணமும்-அற்புதங்களும், அச்சுறுத்துதல்களும், அல்லது சாதாரணமானவைகளும் கூட நம் ஆராதனையை ஊக்குவிக்கும். நமக்குள் இருக்கும் கவிஞரின் இதயம் தெய்வீக அமைதிக்காக ஏங்குகிறது.

எழுதுவதற்கான காரணம்
“கர்த்தர் என் உயர்ந்த கோட்டை…. நாங்கள் பாடல் முகாமிலிருந்து கிளம்பினோம்” செப்டம்பர் 7, 1943 அன்று எட்டி ஹில்லெஸம் அந்த வார்த்தைகளை ஒரு அஞ்சலட்டையில் எழுதி ரயிலில் இருந்து தூக்கி எறிந்தார். அவளிடமிருந்து நாம் கேட்கும், கடைசியாக பதிவு செய்யப்பட்ட வார்த்தைகள் அவை. அவள் ஆஷ்விட்சில் கொலை செய்யப்பட்டாள். பின்னர், ஹில்லெஸம் ஒரு சித்திரவதை முகாமில் (இரண்டாம் உலகப் போரின்போது) அனுபவித்த அவளது அனுபவங்களின் குறிப்பேடுகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. தேவனுடைய உலகின் அழகோடு, நாஜி ஆக்கிரமிப்பின் கொடூரங்கள் பற்றிய அவளுடைய கண்ணோட்டத்தை அவர்கள் தொகுத்தார்கள். நல்லது மற்றும் கெட்டதைப் படித்து நம்பும் அனைவருக்கும் ஒரு பரிசாக, அவளது குறிப்பேடுகள் அறுபத்தேழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அப்போஸ்தலனாகிய யோவான் பூமியில் இயேசுவின் வாழ்க்கையின் கடுமையான உண்மைகளை புறக்கணிக்கவில்லை; இயேசு செய்த நன்மை மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்கள் இரண்டையும் அவர் எழுதினார். அவரது சுவிசேஷத்தின் இறுதி வார்த்தைகள் அவரது பெயரைக் கொண்ட புத்தகத்தின் பின்னால் உள்ள நோக்கத்தைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகின்றன. “இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு…. செய்தார்” (20:30).“ஆனால் நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும்இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறுகிறார் (வ 31). யோவானின் “குறிப்பேடு” வெற்றிக் குறிப்பில் முடிவடைகிறது: “இயேசுவே மேசியா, தேவனுடைய குமாரன்.” அந்த சுவிஷேச வார்த்தைகளின் பரிசானது விசுவாசிப்பதற்கும் “அவருடைய நாமத்தில் நித்திய ஜீவனை அடைவதற்கும்” நமக்கு வாய்ப்பளிக்கிறது.
சுவிசேஷம் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் குறிப்பேடுகளாகும். அவை படிப்பதற்கும், விசுவாசிப்பதற்கும், பகிர்வதற்குமான வார்த்தைகள். ஏனெனில் அவை நம்மை ஜீவனுக்கு நேராக வழி நடத்துகின்றன. அவை நம்மை கிறிஸ்துக்கு நேராக வழி நடத்துகின்றன.
