வகை  |  odb

தேவனுடன் போரை எதிர்கொள்வது

அமெரிக்க இராணுவ சிப்பாய் டெஸ்மண்ட் டோஸின் வீரச்செயல்கள் 2016 திரைப்படமான ஹாக்ஸா ரிட்ஜில் இடம்பெற்றுள்ளன. டோஸின் நம்பிக்கைகள் அவரை மனித உயிரைப் பறிக்க அனுமதிக்காது, நன்கு பயிற்சிபெற்ற ஒரு இராணுவ வீரராக அவர் சொந்த உயிரை பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்டோபர் 12, 1945 அன்று, டோஸின்’ மரியாதை பதக்க விழாவில் படித்த மேற்கோள் பின்வரும் இந்த வார்த்தைகளை உள்ளடக்கியிருந்தது: “தனியார் முதல் வகுப்பு டோஸ் மறைத்துக்கொள்ள முயலாமல், தீப்பிடித்திருத்த பகுதியில் பாதிக்கப்பபட்டிருந்த பலருடன் இருந்து
, அவர்களை ஒவ்வொருவராக நீண்ட குன்றின் விளிம்பிற்கு கொண்டு சென்றார் . . . . ஒரு பீரங்கி அதிகாரிக்கு உதவுவதற்காக அவர் எதிரியின் வெடிகுண்டு தாக்குதல்கள்  மற்றும் சிறிய ஆயுதத் துப்பாக்கிகளைத் தயக்கமின்றி எதிர்கொள்ளத் துணிந்தார்."
 
சங்கீதம் 11-ல், நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன் என்ற தாவீதின் நம்பிக்கை, தனது எதிரிகளை எதிர்கொள்ளாமல் தப்பித்து ஓடிவிடலாம் என்ற அறிவுரைகளை எதிர்க்க அவனை கட்டாயப்படுத்தியது (வச. 2–3). மூன்று எளிய வார்த்தைகள் அவருடைய விசுவாச அறிக்கையை உள்ளடக்கியது: “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்” (வச. 1). நன்கு வேரூன்றிய நம்பிக்கை அவரது நடத்தைக்கு வழிகாட்டும்.

4-7 வசனங்களில் உள்ள தாவீதின் வார்த்தைகள் தேவனுடைய மகத்துவத்தை விரிவாக விவரித்தது. ஆம், வாழ்க்கை சில நேரங்களில் ஒரு யுத்தக்களம் போல இருக்கக்கூடும். மேலும் உடல்நல சவால்கள் அல்லது பணரீதியான, உறவு முறைகள் பற்றிய அல்லது ஆவிக்குரிய அழுத்தங்களால் நாம் தொடர்ந்து தாக்கப்படும்போது விரோத நெருப்பு மறைவிடத்திற்கு நேராக நம்மை சிதறடிக்கும் எனில், நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன்தான் இப்பிரபஞ்சத்தின்  ராஜா என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் (வச. 4); துல்லியமாக நியாயந்தீர்க்கும் அவருடைய ஆற்றலில் மகிழ்ச்சிகொள்ளுங்கள் (வச. 5-6); செம்மைகள், நியாயங்கள் மற்றும் நடுநிலைகளில் அவர் களிகூருவதில் நீங்கள் இளைப்பாருங்கள் (வச. 7). புகலிடத்திற்காக நாம் விரைவாக தேவனிடம் ஓட முடியும்!

என்னை கவனி!

என் தேவதை நடனத்தை பாருங்கள் பாட்டி! என்று என் மூன்று வயது பேத்தி மகிழ்ச்சியுடன் அழைத்தாள். முகத்தில் ஒரு பெரிய சிரிப்புடன் எங்கள் அறையின் முற்றத்தை சுற்றி அவள் ஓடினாள். அவளுடைய “நடனம்” புன்னகையைக் கொண்டு வந்தது; மற்றும் “அவள் நடனமாடவில்லை, ஓடுகிறாள்” என்ற அவளுடைய பெரிய சகோதரனுடைய கடினமான வார்த்தைகள், குடும்பத்துடன் விடுமுறையில் இருப்பதில் அவள் கொண்டிருந்த மகிழ்ச்சியைக் குறைக்கவில்லை.

முதல் குருத்தோலை ஞாயிறு என்பது உயர்வு மற்றும் தாழ்வின் நாள். இயேசு கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றபோது ​​திரளான ஜனங்கள்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” (மத்தேயு 21: 9) என்று உற்சாகமாக ஆர்ப்பரித்தார்கள். ஆயினும் கூட்டத்தில் இருந்த பலரும் மேசியா அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதே வாரத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்காக மரிக்கவிருக்கும் இரட்சகரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த நாளின் பிற்பகுதியில் இயேசுவின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தி பிரதான ஆசாரியர்கள் கோபத்திலிருந்தபோதிலும் அத்தேவாலயத்திலிருந்த குழந்தைகள் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என ஆர்ப்பரித்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் (வச.15). ஒருவேளை முற்றத்தை சுற்றி ஓடும்போது குதித்து பனை ஓலைகளை அசைக்கலாம். அவர்களால் அவரை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை, இயேசு கோபமாக இருந்த தலைவர்களிடம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் (உம்முடைய) துதி உண்டாகும்படி செய்தீர்” (வச. 16) என்றார். அவர்கள் இரட்சகருடைய பிரசன்னத்தில் இருந்தார்கள்.

அவர் யார் என்பதற்காக அவரைக் காணவும் இயேசு நம்மை அழைக்கிறார். சந்தோஷத்தில் நிரம்பி வழியும் குழந்தையைப்போல நாமும் செயல்படும்போது நிச்சயமாக அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்போம்.

ராஜரிகத்தை உபசரிப்பது

ஸ்காட்லாந்தில் ஷிண்ட்டி (ஹாக்கி போன்ற விளையாட்டு) விளையாட்டில் இங்கிலாந்து ராணியை சந்தித்த பிறகு, சில்வியா மற்றும் அவரது கணவர் தேநீருக்காக அரச குடும்பத்தினர் அவர்களை சந்திக்க விரும்புகிறார்கள் என்ற செய்தி அவர்களை வந்தடைந்தது. சில்வியா சுத்தம் செய்து தயார்படுத்தத் தொடங்கினார். அரச விருந்தினர்களுக்கு விருந்தளிப்பதில் பதட்டமாக இருந்தார். அவர்கள் வருவதற்குள் மேசை மீது வைக்க சில பூக்களை எடுத்துவர அவள் வெளியே சென்றாள், அவளுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உடனடியாக, அவர்தான் ராஜாதி ராஜா என்பதையும் அவர் ஒவ்வொரு நாளும் அவளுடன் இருக்கிறார் என்பதையும் தேவன் நினைவூட்டுவதை அவள் உணர்ந்தாள். உடனே அவள் சமாதானமாக உணர்ந்தாள், “மொத்தத்தில் எப்படியிருந்தாலும், இது ராணி மட்டுமே!” என்று எண்ணினாள்.
சில்வியா யோசித்தது சரிதான். அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டது போல, “தேவன் ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர்” (1 தீமோத்தேயு 6:15), அவரை பின்பற்றும் யாவரும் “தேவனுடைய புத்திரர்கள்” (கலாத்தியர் 3:26). நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறோம் (வச. 29). இனி நாம் பிரிவினைகளால் கட்டுப்பட்டவர்களல்ல - இனம் சமூக நிலை அல்லது பாலின வேறுபாடுகள் போன்றவை – “நாமெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்” (வச. 28). நாமெல்லாரும் இராஜாவின் பிள்ளைகள்.

சில்வியாவும் அவரது கணவரும் ராணியுடன் ஒரு அற்புதமான உணவு விருந்தை அனுபவித்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜாதி ராஜா ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருக்கிறார் என்ற நினைப்பூட்டலை நான் விரும்புகிறேன். இயேசுவை முழுமனதுடன் விசுவாசிப்பவர்கள் (வச. 27) தாங்கள் தேவனுடைய பிள்ளைகள் என்றறிந்து ஒற்றுமையில் வாழமுடியும்.

இந்த சத்தியத்தைப் பிடித்துக் கொள்வது இன்று நாம் வாழும் முறையை எவ்வாறு வடிவமைக்கும்?

சேரி பாடல்கள்

தென் அமெரிக்காவின் பராகுவேயில் உள்ள ஒரு சிறிய சேரியில் மிகவும் ஏழ்மையான அதன் கிராமவாசிகள் அதன் குப்பைத் தொட்டிகளில் இருந்த பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பிழைக்கிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கையற்ற நிலைமைகளிலிருந்து அழகான ஒன்று வெளிப்பட்டுள்ளது - ஒரு இசைக்குழு.

இந்த சேரியில் ஒரு வீட்டை விட ஒரு
பிடில் (வயலின்) விலை அதிகமாக இருப்பதால் இசைக்குழு படைப்பாற்றலைப் பயன்படுத்தவேண்டியதாயிருந்தது மற்றும் அவர்களின் சொந்தக் கருவிகளை, அவர்களின் குப்பைகளிலிருந்தே வடிவமைக்க வேண்டியதாயிருந்தது. எண்ணெய்க் கலன்களில் வளைந்த முட்கரண்டியை வால்பகுதியாக கொண்டு பிடில் (வயலின்) தயாரிக்கப்படுகிறது. குப்பியின் மூடியை விசையாகக் கொண்டு வடிநீர் குழாய்களிலிருந்து கூடிசைக்குழுமக் கருவி (சாக்ஸபோன்கள்) உருவாக்கப்பட்டது. கழுதிப்பகுதியிலுள்ள நரம்பை ஒத்திசைவு செய்ய உருளை வடிவ தகர பாத்திரத்தில் மர சுருள்கிரிகரண்டியை கொண்டு நான்கு நரம்பு வாத்தியக்கருவி உருவாக்கப்பட்டது. இந்த முரண்பாடுகளில் மொஸார்ட் டின் இசையை ஒலிக்கச் செய்துகேட்பது ஒரு அழகான விஷயம். அந்த இசைக்குழு பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இளம் உறுப்பினர்களின் மீதான பார்வையை உயர்த்தியது.

கீழே கிடந்தவைகளிலிருந்து பிடில் (வயலின்). சேரிகளில் இருந்து இசை. இது தேவன் என்ன செய்கிறார் என்பதின் முன்மாதிரி தான் அது. ஏசாயா தீர்க்கதரிசி தேவனின் புதிய சிருஷ்டிப்பை உருவகப்படுத்திக் காணும்போது, ​​வறுமையிலிருந்து-சிங்காரம்-வெளிப்படும் படத்திற்கு இணையானது, வறண்ட நிலம் வெடித்து பூக்கள் பூப்பது (ஏசாயா 35: 1-2); நீரோடைகள் பாயும் வனாந்தரம் (வச. 6-7); தூக்கி எறியப்பட்ட போர்க்கருவிகள் தோட்டக்கருவிகளாக வடிவமைக்கப்பட்டது (2:4); வறுமையிலுள்ள மக்கள் சந்தோஷ கீதங்களால் முழுமையாவது (35: 5–6, 10) போன்ற படங்கள் வெளிப்படுகிறது.

"உலகம் எங்களுக்கு குப்பைகளை அனுப்புகிறது; நாங்கள் இசையை திருப்பி அனுப்புகிறோம்." என்று இசைக்குழு இயக்குனர் கூறுகிறார். அப்படி அவர்கள் செய்யும்போது, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வையை உலகுக்குத் தருகிறார்கள், அப்போது தேவன் ஒவ்வொரு கண்ணின் கண்ணீரையும் துடைப்பார், வறுமை இனி இருக்காது.