வகை  |  odb

அவர் வெறுமையானதை நிரப்புகிறார்

பதினைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணின் மேலாடையின் கைகளை பாதி இழுத்துவிட்டுக்கொண்டதை, உளவியல் நிபுணர் கவனித்தார். அது பொதுவாக, சுய தீங்கில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் நீளமான கையுறைகள் கொண்ட ஆடை. அவள் தன் சட்டையின் கையுறையை மேலே தூக்கி, ஒரு பிளேடைக் கொண்டு தன் முன்னங்கையில் “வெறுமை” என்று கீறிக்கொண்டதைப் பார்த்த லெவின் திடுக்கிட்டார். அவள் சோகமாயிருந்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான உதவியை பெறுவதற்கு அவள் ஆயத்தமாயிருந்தாள். 

இன்று அந்தப் பெண்ணைப்போலவே தங்கள் இருதயங்களில் “வெறுமை” என்று கீறிக்கொண்ட அநேகர் உண்டு. இந்த வெறுமைகள் “பரிபூரணப்பட” (யோவான் 10:10) இயேசு வந்திருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறார். பரிபூரணப்பட விரும்பும் இருதயத்தை தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்து, அவர்கள் தன்னுடைய உறவில் பிரியப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதே நேரத்தில், ‘திருடன்’ மக்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, அவர்களை கொள்ளையிடுவதற்கே வருவான் என்றும் எச்சரிக்கிறார் (வச. 1,10). இருவரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் சாயலாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு கொடுக்கும் “நித்திய ஜீவன்” நிஜமானது, “ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்றும் வாக்களிக்கிறார் (வச. 28). 

நம்முடைய இருதயத்தில் இருக்கும் வெறுமையை கிறிஸ்துவாலேயே பரிபூரணமடையச் செய்ய முடியும். நீங்கள் வெறுமையாய் உணர்ந்தால், இன்றே அவரைக் கூப்பிடுங்கள். தொடர்ச்சியாய் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள். நிறைவுள்ள பரிபூரணமான வாழ்க்கையை கிறிஸ்துவால் மட்டுமே கொடுக்கமுடியும். வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் அவரிடத்திலேயே உண்டு. 

தொடர்ந்து போகமுடியாத போது

எனது தந்தைக்கு 2006ஆம் ஆண்டு நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதினால் அவருடைய நினைவுகள், பேச்சு மற்றும் உடல் அசைவுகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்தார். 2011ல் அவர் படுத்தபடுக்கையானார். என் தாயார் அவரை வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டார்கள். அந்த நோயின் ஆரம்பகட்டம் இருண்டதாயிருந்தது. நான் மிகவும் பயந்தேன். ஒரு நோயாளியை வீட்டில் வைத்துப் பராமரிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பணத்தேவைக்குறித்தும், எனது தாயாரின் உடல் ஆரோக்கியத்தைக் குறித்தும் நான் கவலைப்பட்டேன். 

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது, என் இருதயத்தைப்போன்றே இருள் சூழ்ந்த அந்த அனுபவத்திலிருந்து வெளிவருவதற்கு புலம்பல் 3:22 எனக்கு உதவியது: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே.” “நிர்மூலமாதல்” என்ற வார்த்தைக்கான எபிரெய பதம், “முற்றிலும் அழிக்கப்பட்ட” அல்லது “முடிவுக்கு வருதல்” என்று அர்த்தங்கொள்கிறது. 

ஒவ்வொரு நாளையும் நாம் கடந்துசெல்வதற்கு தேவனுடைய கிருபை நம்மை ஊக்குவிக்கிறது. நம்முடைய சோதனைகள் நம்மை மேற்கொள்வதாக தெரியலாம், ஆனால் அது நம்மை சேதப்படுத்தாது, ஏனென்றால் நம்மிடம் இருக்கும் தேவனுடைய கிருபை அதைக்காட்டிலும் மேலானது.

என்னுடைய குடும்பத்திற்கு தேவன் பல விதங்களில் தன்னுடைய உண்மைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் நல் ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் ஆகியவற்றின் மூலமாய் தேவனுடைய கிருபையை நான் பார்க்க நேர்ந்தது. இவைகள் அனைத்தும், என் தந்தையை ஒரு நாள் பரலோகத்தில் சந்திப்பேன் என்று எனக்கு நினைவுபடுத்தியது. 

நீங்கள் இருளான பாதையில் பயணிக்கிறவர்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நீங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் உங்களை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. தேவனுடைய மெய்யான அன்பிற்காகவும் அவருடைய கிருபைக்காகவும் அவரைத் தொடர்ந்து நம்புவோம். 

தேவன் காயங்கட்டுகிறார்

அதீத்தும் அவருடைய மனைவி ரேஷ்மாவும் கலைப்பொருள் அங்காடிக்கு சென்று தன் வீட்டில் மாட்டுவதற்கு ஒரு ஓவியத்தைத் தேடினர். அதீத் ஒரு சரியான ஓவியத்தை தேர்ந்தெடுத்து, ரேஷ்மாவை பார்க்கும்படிக்கு அழைத்தார். அந்த செராமிக் ஓவியத்தின் வலதுபுறத்தில் கிருபை என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதின் இடதுபுறத்தில் இரண்டு விரிசல்கள் ஏற்பட்டிருந்ததால், அது உடைந்திருக்கிறது என்று ரேஷ்மா அதேபோன்ற வேறொரு உடையாத ஓவியத்தைத் தேடினாள். ஆனால் அதீத் “இல்லை,” “அதில் தான் செய்தியே இருக்கிறது” என்றார். “நாம் உடைக்கப்பட்டவர்களாய் இருக்கும் தருணத்தில் தான் கிருபை நம்மை தேடிவருகிறது” என்றார். எனவே அந்த விரிசல் உள்ள ஓவியத்தையே அவர்கள் வாங்க தீர்மானித்தனர். அதற்கான தொகையை செலுத்த முயலும்போது, அந்த கடைக்காரர், “ஓ, இது உடைந்திருக்கிறது” என்று சொல்ல, ரேஷ்மா, “நாங்களும் தான்” என்று மெல்லமாய் சொன்னாள். 

“உடைக்கப்பட்டவர்கள்” என்றால் என்ன? ஒருவர் இவ்விதமாய் பதிலளிக்கிறார்: “நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், வாழ்க்கை வளமாவதற்கு பதிலாக, சரிவடைந்துகொண்டே தான் இருக்கிறது.” அது தேவன் நம்முடைய வாழ்க்கையின் தேவை என்பதையும் அவருடைய இடைபாடு நம்முடைய வாழ்க்கையில் அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

“அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை” என்று பவுல் அப்போஸ்தலர் நம்முடைய உடைக்கப்படுதலை விவரிக்கிறார் (எபேசியர் 2:1). மன்னிக்கப்படுதலுக்கும் மாற்றத்திற்குமான நம்முடைய தேவைக்கு 4 மற்றும் 5ஆம் வசனம் பதிலளிக்கிறது: தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே... நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.”

“நான் உடைக்கப்பட்டவன்” என்று அவரிடம் ஒத்துக்கொள்ளும்போது அவருடைய கிருபையினாலே நம்மை சுகமாக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். 

ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அங்கீகரிக்கப்பட்டதும்

ஒரு குழந்தையாய், டென்னி பாதுகாப்பற்றவனாய் உணர்ந்தான். அவன் தன் தந்தையின் ஒப்புதலைப் பெற முயன்றான். ஆனால் அதை அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் பள்ளியிலோ அல்லது வீட்டிலோ என்ன செய்தாலும் அதை நேர்த்தியாய் செய்வதில்லை. அவன் வளர்ந்தபோதும் அந்த குற்றவுணர்வு அவனுக்குள் இருந்தது. நான் சிறந்தவனா?. என்ற கேள்வி அவனுக்குள் எப்பொழுதும் இருந்தது.

டென்னி, இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட பின்பே பாதுகாப்பாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும் உணர ஆரம்பித்தான். அவனை படைத்த ஆண்டவர் அவனை நேசித்து தன்னுடைய பிள்ளையாக்கிக்கொண்டார் என்பதைக் கற்றுக்கொண்டான். கடைசியாக, அவன் மதிப்புமிக்கவன், பாராட்டுக்குரியவன் என்னும் நம்பிக்கையோடு தன் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். 

ஏசாயா 43:1-4ல், தேவன் தான் தெரிந்துகொண்ட மற்றும் உருவாக்கின இஸ்ரவேலிடம், அவர்களை தன்னுடைய பெலத்தினாலும் அன்பினாலும் மீட்டுக்கொள்வதாக அறிவிக்கிறார். “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” என்று அறிவிக்கிறார். அவர் அவர்களை நேசித்தபடியினால், அவர்களின் சார்பில் நின்று செயலாற்றுவதாக அறிவிக்கிறார் (வச. 4).

அவர் நேசிக்கிறவர்கள் மீது உண்டாகும் மதிப்பானது எதிலிருந்தும் கிடைப்பதில்லை, அவர் நம்மை அவருடையவர்களாய் தெரிந்துகொண்டார் என்னும் எளிமையான, வலிமையான சத்தியத்திலிருந்தே கிடைக்கிறது. 

ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் உள்ள இந்த வார்த்தைகள் டென்னிக்கு வெறும் பாதுகாப்பை மட்டும் கொடுக்கவில்லை, தேவன் அவனை அழைத்த அழைப்பிற்கு தன்னால் இயன்றவரை உண்மையாய் செயல்படவேண்டும் என்ற உத்வேகத்தை அவனுக்குள் ஏற்படுத்தியது. இன்று அவர் ஒரு போதகராய், “நாங்கள் இயேசுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டோம்” என்னும் வாழ்வளிக்கும் செய்தியைக் கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார். இன்று இந்த சத்தியத்தை நாமும் உறுதியாய் நம்பி ஜீவிக்கலாம். 

நம் மெய்யான அங்கீகாரம்

ஒரு மனிதன் முதலில் ஒரு பொருட்கள் சேகரிக்கும் பெட்டியை கையிலெடுத்தார். அவருடைய ஊரில் இருந்த ஒரு மீன் தூண்டில் கடையில், தூண்டில் கொக்கிகள், ஈர்ப்புகள், தக்கைகள் மற்றும் எடைகளுடன் தன்னுடைய வணிகக் கூடையை நிரப்பினார். அத்துடன் ஒரு முழுமையான தூண்டிலோடு கூட குச்சியையும் சுற்றும் குழலையும் தேர்ந்தெடுத்தார். இதற்கு முன்பாக மீன் பிடித்ததுண்டா? என்று கடைக்காரர் அவரிடம் கேட்டார். அவர் இல்லை என்று பதிலளித்தார். “இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று அந்த கடைக்காரர் முதலுதவிப் பெட்டியை நீட்டினார். அதை ஒத்துக்கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விடைபெற்ற அந்த மனிதர், மாலையில் கொக்கிகளினாலும், கயிற்றினாலும் கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் ஒரு மீன் கூட பிடிக்காமல் திரும்பினார்.    

அந்த பிரச்சனை சீமோன் பேதுருவுக்கு இல்லை. அவன் ஒரு திறமையான மீன்பிடிக்கும் நபர். அவனைப் பார்த்து இயேசு, “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று சொல்லும்போது அவன் ஆச்சரியப்படுகிறான் (லூக்கா 5:4). இரா முழுதும் தேடியும் ஒரு மீனும் அகப்படாத நிலையில் சீமோனும் அவனுடைய குழுவினரும் “தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்” (வச. 6). “இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்” (வச. 7).

அதைப் பார்த்த சீமோன் பேதுரு, “இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்” (வச. 8). இயேசு சீமோனின் உண்மையான அங்கீகாரத்தை அறிந்திருந்தார். தன்னுடைய சீஷனைப் பார்த்து, “இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்று சொன்னார். அதைக் கேட்டமாத்திரத்தில் சீமோன், “எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றான்” (வச. 10-11). நாமும் அவரைப் பின்பற்றும்போது, நம்மை யார் என்பதையும், நாம் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நமக்கு விளங்கச்செய்வார்.