வகை  |  odb

புதிய ஆரம்பத்தின் விளைவு

ஆயுஷ், தன்னுடைய முப்பது வயதில் தனக்கு பிடிக்காத விற்பனைத்துறையில் வேலை செய்யாமல் புதிய துறையில் வேலையைத் தேட முடிவு செய்தார். ரேணு, புத்தாண்டில் தன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அசோக், தன் கோபத்தை அடுத்த மாதமாவது குறைக்க வேண்டும் என உறுதியாய் தீர்மானித்திருந்தார்.  

புதிய மாதத்திலோ, ஆண்டிலோ அல்லது பிறந்த நாளிலோ தாங்கள் மாற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு புதிய தீர்மான விளைவு என்று அழைக்கின்றனர். காலண்டரில் குறிப்பிட்ட இதுபோன்ற சில விசேஷ நாட்களிலே, மக்கள் பழமையை பின்னுக்குத் தள்ளி பல புதிய தீர்மானங்களை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் சிறந்த மனிதர்களாய் இருக்க விரும்பி, புதிய துவக்கத்தை விரும்புகிறோம். 

இயேசுவின் மீதுள்ள விசுவாசம் நாம் முன்பைவிட சிறந்தவராய் வாழ நம்மை தூண்டுகிறது (கொலோசெயர் 3:12-14). நம்முடைய பழையவைகளை களைந்து போட்டு (வச. 5-9), நாம் சிறந்த மனிதர்களாக வாழ ஒரு தரிசனத்தைத் தருகிறது. இந்த மாற்றம் தீர்மானங்களாலோ அல்லது பொருத்தனையினாலோ அல்ல; தெய்வீக வல்லமையால் ஏற்படுகிறது. நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது புதிய மனிதர்களாய் மாறுகிறோம். தேவனுடைய ஆவியானவரின் கிரியை நம்மை முழுமையாக்குகிறது (வச.10; தீத்து 3:5). 

இயேசுவின் இரட்சிப்பை பெறுவதே மேன்மையான புதிய துவக்கம். நாட்காட்டியில் விசேஷ பண்டிகை நாட்களை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் புதிய வாழ்க்கையை இப்பொழுதே ஆரம்பிக்கலாம்.

வார்த்தையும் புத்தாண்டும்

மிச்செல்லன் பிலிப்பைன்ஸில் வளர்ந்தபோது பல சவால்களைச் அவள் சந்திக்க நேர்ந்தது. அவர் எப்போதும் வேத வார்த்தைகளை நேசித்து ஆறுதல் அடைந்துகொள்வது வழக்கம். அவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது ஒரு நாள் யோவான் சுவிசேஷத்தின் முதலாம் அதிகாரத்தைப் படிக்கையில் அவளுடைய “கடின இருதயம் கலங்கியது.” அவருடைய உள்ளுணர்வு, “ஆம்! நீ வார்த்தைகளை நேசிக்கிறாய், அதை அறிவாயா? நித்திய வார்த்தை என்று ஒன்று உண்டு. அவர் ஒருவரால் மட்டுமே எப்பொழுதும் இருளை அழிக்க முடியும். அந்த வார்த்தை மாம்சமாகியது. அந்த வார்த்தையினால் உன்னை நேசிக்க முடியும்” என்று அவளிடம் கூறியது. 

அவள் வாசித்த யோவான் சுவிசேஷத்தின் துவக்க வரிகளை வாசிப்பவர்களுக்கு, ஆதியாகமத்தின் துவக்க வார்த்தைகள் நினைவுக்கு வரும்: “ஆதியிலே…” (ஆதியாகமம் 1:1). யோவான் தன் சுவிசேஷத்தில், இயேசு தேவனோடு ஆதியிலே இருந்தார் என்பதை மட்டுமல்ல; இயேசுவே தேவன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் (யோவான் 1:1). அந்த ஜீவனுள்ள வார்த்தை மாம்சமாகி, “நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (வச. 14). மேலும், அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்று கொண்டவர்கள் அவரின் பிள்ளைகளானார்கள் (வச. 12). 

மிச்செல்லன் அன்றே தேவனுடைய அன்பைத் தழுவி “தேவனாலே மறுபடியும் பிறந்தார்” (வச. 13). அவளுடைய குடும்பத்தின் தொடர் போதைப் பழக்கத்திலிருந்து தேவனே அவளை மீட்டெடுத்தார். தற்போது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை பகிர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாய் கிறிஸ்துவின் சுவிசேஷ வார்த்தைகளை அதிகமாய் எழுதுகிறார். 

நாம் கிறிஸ்துவின் விசுவாசிகளாயிருந்தால் நாமும் தேவனுடைய நற்செய்தியையும் அவருடைய அன்பையும் பகிரலாமே. இந்த 2022 ஆம் ஆண்டு துவக்கத்தில், எப்படிப்பட்ட கிருபை நிறைந்த வார்த்தைகளை நாம் பேசப்போகிறோம்? 

கிறிஸ்மஸ்க்கு ஒருநாள் நெருக்கத்தில்

“கிறிஸ்மஸ் முடிந்து விட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று என்னுடைய மகள் மனமுடைந்து கூறினாள். 

அவள் எப்படி உணருகிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது: கிறிஸ்மஸ்க்கு பின்பு மந்தமான ஒரு உணர்வு ஏற்படுகிறது. பரிசுகள் எல்லாம் பிரித்துப் பார்க்கப்படும். வண்ண விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும். விடுமுறையற்ற ஜனவரி மாதம் வந்துவிடும். பல எதிர்பார்ப்புகளுடன் வரும் அடுத்த கிறிஸ்மஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. 

சில வருடங்களுக்கு முன்பு, கிறிஸ்மஸ் ஏற்பாடுகளை நாங்கள் செய்துகொண்டிருந்தபோது, “காலண்டர் என்ன தேதி வேண்டுமானாலும் காட்டட்டும். ஆனால் நாங்கள் எப்போதுமே கிறிஸ்மஸ்க்கு ஒரு நாள் நெருக்கத்தில் இருக்கிறோம்” என்பதை உணர்ந்தேன். அதை நான் அடிக்கடி சொல்ல பழகிக்கொண்டேன். 

காலத்திற்கு உட்பட்ட நம்முடைய சரீரப் பிரகாரமான கொண்டாட்டத்திற்கு பின் இருக்கும் ஆவிக்குரிய யதார்த்தம் மிகவும் முக்கியமானது: இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இரட்சிப்பு மற்றும் அவர் மீண்டும் வருவார் என்னும் நம்பிக்கை. இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து காத்திருங்கள் என்று வேதம் அடிக்கடி உற்சாகப்படுத்துகிறது. பிலிப்பியர் 3:15-21ல் சொல்லுவது எனக்கு பிடித்தமானது. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிற (வச. 19) உலகத்தின் வாழ்க்கைமுறையும் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் நம்பிக்கையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைமுறையும் முரண்படுத்தப்படுகிறது: “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” (வச. 20).

பரலோகத்திலிருக்கிற நம்முடைய குடியிருப்பானது நாம் என்ன நம்புகிறோம் என்பதையும், எப்படி வாழுகிறோம் என்று எல்லாவற்றையும் மாற்றுகிறது. இயேசுவின் வருகைக்கு ஒரு நாள் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு, நம்முடைய நம்பிக்கையை உறுதியாக்குகிறது. 

பொன்னிலும் சிறந்தது

அமெரிக்காவின் பெரிய தங்கவேட்டை நடந்த நாட்களில், கலிபோர்னியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட எட்வர்ட் ஜாக்சன், மே 20ம் தேதி 1849இல் தன்னுடைய டைரி குறிப்பில், வியாதினாலும் மரணத்தினாலும் குறிக்கப்பட்ட அந்த கொடுமையான வேகன் பயணத்தைக் குறித்து புலம்பியிருக்கிறார். “என்னுடைய எலும்புகளை இங்கு விட்டுச்செல்லாதீர்கள்; முடிந்தால் அவற்றை வீட்டிற்கு கொண்டுசெல்லுங்கள்” என்று அவர் எழுதியிருக்கிறார். தங்கவேட்டையில் ஈடுபட்ட ஜாண் வாக்கர் என்னும் வேறொரு நபர், “நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு இங்கு பொக்கி~ங்கள் இருக்கிறது... ஆனால் யாரும் இங்கே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

வாக்கர் பின்நாட்களில் வீடு திரும்பி, விவசாயத்தில் ஈடுபட்டு, கடைசியில் மாநில தேர்தலில் வெற்றிபெற்றார். வாக்கரின் பழைய கடிதங்களை அவருடைய வீட்டார், “ஆன்டிக்ஸ் ரோட்ஷோ” என்னும் அமெரிக்காவின் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு கொண்டுபோனபோது, அவைகள் அங்கு பல மில்லியன் டாலர்களுக்கு விலைபோனது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “அவர் தங்க வேட்டையைக் காட்டிலும் விலைமதிக்கமுடியாத கடிதங்களை அங்கிருந்து எடுத்துள்ளார்” என்று கூறினாராம். 

வாக்கரும் ஜாக்சனும் அந்த தங்க வேட்டையிலிருந்து ஞானத்தைக் கற்றுக்கொண்டு வீடு திரும்பி, நடைமுறை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டனர். “ஞானத்தைக் கண்டடைகிற மனு~ன்... பாக்கியவான்... அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம்” (நீதிமொழிகள் 3:13,18) என்று ஞானத்தைக் குறித்த சாலமோனின் வார்த்தைகளை பார்க்கிறோம். “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (வச. 14) என்று பூமியின் அனைத்து காரியங்களைக் காட்டிலும் ஞானம் விலையேறப்பெற்றதாய் முன்வைக்கப்படுகிறது (வச. 15).

“அதின் வலதுகையில் தீர்க்காயுசும், ... அதின் பாதைகளெல்லாம் சமாதானம்” (வச. 16-17). கண்ணைப் பறிக்கும் காரியங்களை விட்டுவிட்டு ஞானத்தை தெரிந்துகொள்வதே நம்முடைய சவால். இதுவே தேவனுடைய ஆசீர்வாதமான பாதை.