ஆயுஷ், தன்னுடைய முப்பது வயதில் தனக்கு பிடிக்காத விற்பனைத்துறையில் வேலை செய்யாமல் புதிய துறையில் வேலையைத் தேட முடிவு செய்தார். ரேணு, புத்தாண்டில் தன் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அசோக், தன் கோபத்தை அடுத்த மாதமாவது குறைக்க வேண்டும் என உறுதியாய் தீர்மானித்திருந்தார்.  

புதிய மாதத்திலோ, ஆண்டிலோ அல்லது பிறந்த நாளிலோ தாங்கள் மாற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு புதிய தீர்மான விளைவு என்று அழைக்கின்றனர். காலண்டரில் குறிப்பிட்ட இதுபோன்ற சில விசேஷ நாட்களிலே, மக்கள் பழமையை பின்னுக்குத் தள்ளி பல புதிய தீர்மானங்களை எடுக்க முயற்சிக்கின்றனர் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் சிறந்த மனிதர்களாய் இருக்க விரும்பி, புதிய துவக்கத்தை விரும்புகிறோம். 

இயேசுவின் மீதுள்ள விசுவாசம் நாம் முன்பைவிட சிறந்தவராய் வாழ நம்மை தூண்டுகிறது (கொலோசெயர் 3:12-14). நம்முடைய பழையவைகளை களைந்து போட்டு (வச. 5-9), நாம் சிறந்த மனிதர்களாக வாழ ஒரு தரிசனத்தைத் தருகிறது. இந்த மாற்றம் தீர்மானங்களாலோ அல்லது பொருத்தனையினாலோ அல்ல; தெய்வீக வல்லமையால் ஏற்படுகிறது. நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது புதிய மனிதர்களாய் மாறுகிறோம். தேவனுடைய ஆவியானவரின் கிரியை நம்மை முழுமையாக்குகிறது (வச.10; தீத்து 3:5). 

இயேசுவின் இரட்சிப்பை பெறுவதே மேன்மையான புதிய துவக்கம். நாட்காட்டியில் விசேஷ பண்டிகை நாட்களை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் புதிய வாழ்க்கையை இப்பொழுதே ஆரம்பிக்கலாம்.