வகை  |  odb

ஒரு புதிய துவக்கம்

எங்குமுள்ள தமிழ் குடும்பங்களால் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு, பருவங்களின் மாற்றத்தோடு தொடர்புடையது. பொதுவாக ஜனவரி மாதத்தின் மத்தியில் வரும் இந்த காலம், குடும்பங்களை ஒன்றிணைக்கும் பல பாரம்பரியங்களை உடையது - அவற்றில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவை. புத்தாடைகளை வாங்கி அணிதல், நம்முடைய வீடுகளை தூய்மைப்படுத்துதல், மேலும் வீட்டில் தயாரித்த உணவு பண்டங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் என்று இவ்வாறு உறவுகள் பின்னப்படுகின்றன. துடைக்கப்பட்ட எழுத்துப் பலகை போல கடந்தகாலத்தை நமக்கு பின்பாக எறிந்துவிட்டு, வருடத்தை புதிதாக ஆரம்பிக்க இது நமக்கு நினைவூட்டுகிறது.

இந்தப் பாரம்பரியங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது புதிய வாழ்வையும் எனக்கு நினைப்பூட்டுகின்றன. நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தோம் அல்லது என்னவெல்லாம் செய்தோம் என்பதை பொருட்படுத்தாமல் அனைத்தையும் நமக்கு பின்பாக எறிந்திட முடியும். இயேசுவின் சிலுவை மரணத்தினால் நாம் முற்றிலும் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்தவர்களாக நம்முடைய கடந்தகாலத்தை நினைத்து வருந்துவதை நாம் நிறுத்தி, குற்ற உணர்வு நீங்கினவர்களாக நம்மால் இருக்க முடியும். மேலும் இயேசுவைப் போல மறுரூபமாக, பரிசுத்த ஆவியானவரை நாம் அனுதினமும் சார்ந்துகொண்டு புதிதாக துவங்கலாம்.

எனவேதான் பவுல், விசுவாசிகளுக்கு "பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." (2 கொரிந்தியர் 5:17)

என நினைப்பூட்டுகிறார். நாமும் கூட இதை சொல்லலாம், ஏனெனில் எளிமையான ஆனால் வல்லமையான சத்தியமானது: "தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி" (வ.19) என்பதே.

நம்மை சுற்றியுள்ள மற்றவர்கள், நம் கடந்தகால தவறுகளை மறக்க மனமில்லாதிருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோமர் ) என்பதால் தைரியம் கொள்வோம். இயேசுவின் மூலமாக தேவன் நமக்களித்த புதிய துவக்கத்தை நாம் சுகமாய் அனுபவிப்போம்.

தாழ்மையான தோரணை

"உன் கைகளை பின்பாக கட்டிக் கொள். அது உனக்கு சௌகரியமாக இருக்கும்" ஜேன் ஒரு குழுவிற்கு முன்பாக பேசுவதற்கு முன், அவ ளுடைய கணவன் எப்போதும் கொடுக்கும் அன்பான அறிவுரை இதுதான். எப்போதெல்லாம் அவள் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவோ  அல்லது ஒரு சூழ்நிலையை கட்டுப்படுத்தவோ நினைக்கும் போதெல்லாம் அவள் இந்த தோரணையில் தான் இருப்பாள். ஏனெனில் அது அவளுடைய மனதை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க பக்குவப்படுத்திகிறது. தனக்கு முன்பாக இருப்பவர்களை நேசிக்கவும், தாழ்மையாக இருக்கவும், பரிசுத்த ஆவியானவருக்கு தன்னை ஒப்புவிக்கவும் இந்த தோரணையை பயன்படுத்தினாள்.

தாழ்மையை குறித்ததான ஜேனின் இந்த புரிந்து கொள்ளுதல், தேவனிடமிருந்தே  அனைத்தும் வருகிறது என்ற தாவீது ராஜாவின் அனுமானத்தில் வேரூன்றி உள்ளது. தாவீது தேவனை நோக்கி "தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்" (சங்கீதம் 16:2) என்கிறார். அவர் தேவனை நம்பவும், அவருடைய ஆலோசனையை நாடவும் கற்றுக்கொண்டார்: "இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்". (வ.7) “அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (வ.8) என்பதை அறிந்திருந்தார். அவர் தன்னை தானே உயர்த்த வேண்டியிருந்ததில்லை ஏனெனில் அவர் தன்னை நேசிக்கும் வல்ல தேவனை நம்பினார்.

நாம் அனுதினமும் தேவனை நோக்கிப் பார்த்து விரக்தி அடையும் போதெல்லாம் அவருடைய உதவியை கேட்கும்போதும் அல்லது நாவு கட்டப்பட்டாற்போல  போல பேச வார்த்தைகளின்றி, வார்த்தைகளுக்காக கேட்கும்போதும் அவர் நம்முடைய வாழ்வில் கிரியை செய்வதை நம்மால் பார்க்க முடியும். ஜேன் சொல்வது போல நாமும் "தேவனோடு கூட கூட்டாளி" ஆகலாம். பின்னர் நாம் சிறப்பாக செய்து முடித்ததை, நாம் உணர்ந்து கொள்வோம் ஏனெனில் தேவனே நாம் செழிக்க உதவியுள்ளார்.

நம் கைகளை நமக்கு பின்பாக தாழ்மையின் தோரணையாக கட்டிக்கொண்டு, சகலமும் தேவனிடமிருந்து நமக்கு வருகிறது என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, மற்றவர்களை நாமும் அன்போடு பார்க்க முடியும்.

நாம் எங்கே சென்றாலும் நேசிப்போம்

ஒரு கோடை விடுமுறையில், ஓர் ஏரிக்கரையில் அமர்ந்து என் வேதத்தை வாசித்தவாறே, என் கணவர்  மீன் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வாலிபன் எங்களை அணுகி நாங்கள் வேறொரு தூண்டிலை பயன்படுத்தும்படிக்கு பரிந்துரைத்தார். என்னை சற்று நோட்டமிட்டபின் பரபரத்த குரலில், "நான் சிறையில் இருந்தேன்" என்றார். பின்னர், என் கையிலிருந்த வேதத்தை சுட்டிக்காட்டி," என்னை போன்றவர்களை குறித்து தேவன் உண்மையாகவே அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று பெருமூச்சுவிட்டார்.

மத்தேயு 25ஐ திருப்பி, சிறைச்சாலையில் உள்ளவர்களை சந்திக்கும் தனது சீடர்களை குறித்து இயேசு சொல்வதை சத்தமாக அவருக்கு வாசித்தேன்.

தமது பிள்ளைகளுக்கு காண்பிக்கும் இரக்கத்தை, தேவன் தமக்காகவே தனிப்பட்ட முறையில் காட்டும் அன்பின் செயலாக கருதுவதை (வ.31-40) நான் பகிர்ந்தபோது, கண்களில் நீர்த்தழும்ப "சிறையில் இருப்பதனை குறித்து அவ்வாறு சொல்லப்பட்டுள்ளதா?" என்றார்.

பின்னர், “என் பெற்றோரும் என்னை மன்னித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!” என்று தலைகுனிந்தபடி சொன்னவர். “இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி போய், தன்னுடைய சிதைந்த வேதாகமத்துடன் திரும்பி, அதை என்னிடம் அளித்து, “அந்த வார்த்தைகளை நான் எங்கே பார்க்க முடியும் என்று காட்டுவீர்களா?” என்று கேட்டார். சந்தோஷமாக தலையசைத்த நான், என் கணவரோடு அவரை அணைத்து அவருக்காகவும், அவர் பெற்றோருக்காகவும் ஜெபித்தோம் பின்னர் எங்களைத் தொடர்பு கொள்ளும் தகவல்களை பரிமாறி கொண்டோம் மேலும் அவருக்காக தொடர்ந்து ஜெபித்தோம். 

நாம் எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் நேசிக்கப்படாதவர்களாகவும், வேண்டாதவர்களாகவும், தேவையுள்ளவர்களாகவும் உணர்கிறோம் அல்லது சரீர பிரகாரமாகவோ, உணர்வு ரீதியாகவோ சிறையில் இருக்கிறோம். (வ.35-36)  அப்பொழுதெல்லாம் தேவனுடைய அன்பான மனதுருக்கத்தையும், அவருடைய மன்னிப்பையும் நமக்கு நினைப்புட்டுபவர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு நமக்கும் கிடைக்கும். நாம் செல்லும் இடமெல்லாம் அவருடைய சத்தியத்தையும், அன்பையும் பரவச் செய்யும்போது தேவனுடைய மீட்கும் திட்டத்தில் நாமும் பங்காற்றலாம்.

தயக்கமில்லா கண்ணீர்

“என்னை மன்னிக்கவும்,” சீமா தன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்டார். அவருடைய கணவர் இறந்த பிறகு, தன்னுடைய பதின்ம வயது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அவர் ஏற்க நேர்ந்தது. அவருடைய திருச்சபை, அவருடைய சுமையை குறைக்கும் விதத்தில் ஒரு வாரயிறுதி உல்லாச முகாமுக்கு அவர்களை அழைத்து மகிழ்ச்சிபடுத்தியது. அந்த மகிழ்ச்சி பெருமிதத்தில் கண்ணீர் சிந்திய சீமா, தன்னுடைய கண்ணீருக்காக மன்னிப்புக் கோரினாள்.

நாம் ஏன் கண்ணீருக்காக மன்னிப்புக் கேட்கிறோம்? சீமோன் என்னும் ஒரு பரிசேயன் இயேசுவை விருந்துக்கு அழைக்கிறான். உணவின் இடையிலே ஒரு பாவியாகிய பெண் தன்னோடு பரிமளதைலத்தைக் கொண்டுவருகிறாள். “அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய  பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்” (லூக்கா 7:38). சற்றும் தயக்கமின்றி இந்த ஸ்திரீ, வெளிப்படையாக தன்னுடைய அன்பை பிரதிபலிக்க தன் தலைமயிரினால் இயேசுவின் பாதத்தைத் துடைத்தாள். நன்றி பெருக்காலும், அன்பாலும் அவள் கண்ணீரின் மேலே பரிமள தைலத்துடன் முத்தங்களை பரிசாக்கினாள். அவளுடைய இந்த செய்கை இந்த விருந்தை ஆயத்தப்படுத்திய இரக்கமற்ற பரிசேயனின் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருந்தது.

அவனுக்கு இயேசுவின் பதில்? அவர் அவளின் உற்சாகமான அன்பின் வெளிப்பாட்டை புகழ்ந்து, அவளின் அநேக பாவங்கள் “மன்னிக்கப்பட்டது” (வச. 44-48) என்று அறிவித்தார்.

நன்றியுணர்வினால் கண்ணீர் பெருக்கெடுக்கும்போது, அந்த கண்ணீரை நாம் அடக்கிவைக்க முற்படுகிறோம். ஆனால் தேவன் நம்மை உணர்ச்சி மிகுந்தவர்களாகவே படைத்துள்ளார். நாம் அவரை நம் உணர்வுகள் மூலம் கனப்படுத்துகிறோம். லூக்கா நற்செய்தியில் வரும் பெண்ணைப்  போல நாமும் நமது நல்ல தேவனிடம் நம் அன்பை தயக்கமின்றி வெளிப்படுத்துவோம். தேவன் நம் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். அவர் நம் நன்றியின் பதில்களையும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளுகிறார்.