1925ஆம் ஆண்டு, ஒரு உணவு விடுதியில் உதவியாளராய் பணிபுரிந்த லாங்ஸ்டன் ஹியூஸ் எனும் எழுத்தாளர், அவரை அதிகமாய் பாதித்த கவிஞரான வச்செல் லின்ட்சே, தான் பணிபுரியும் உணவு விடுதியில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்டார். ஹியூஸ், சற்று தயக்கத்துடன் லின்ட்சேவிடம் தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். அதை லின்ட்சே பொதுக்கூட்டத்தில், வெளிப்படையாய் சொல்லி அவரைப் பாராட்டினார். லின்ட்சேவின் இந்த பாராட்டு ஹியூஸ்க்கு பல்கலைக்கழகத்தின் கல்வி ஊக்கத்தொகையை பெறுவதற்கும், எழுத்துத் துறையில் சாதிப்பதற்கும் வழிவகுத்தது. 

எந்தவொரு சிறிய பாராட்டும் வெகுவாக நம்மை ஊக்குவிக்கும், குறிப்பாக தேவன் அதில் இருக்கையில். தாவீதைக் கொல்ல நினைத்த சவுலிடமிருந்து, தாவீது தப்பியோடிய சம்பவத்தை வேதம் கூறுகிறது. சவுலின் குமாரன் யோனத்தான், தாவீதைத் தேடி கண்டுபிடித்து, தேவனிடத்தில் பலப்படுவதற்கு உதவி செய்கிறான். “நீர் பயப்பட வேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்” என்று ஆறுதல் கூறுகிறான் (1சாமுவேல் 23:15-17). 

யோனாத்தான் சொன்னது சரிதான். தாவீது ராஜாவாகிறான். யோனத்தான், தாவீதை “தேவனுக்குள்” (வச.16) திடப்படுத்தினான். அது, தாவீதை பெலப்படுத்தியது. தேவன், கிறிஸ்துவுக்குள் “நித்திய ஆறுதலையும், நல்நம்பிக்கையையும்” அருளுகிறார் (2 தெசலோனிக்கேயர் 2:16). அவருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துகையில், அவரைப் போல் நம்மை உயர்த்துவதற்கு யாராலும் முடியாது. 

நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு தேவனுடைய திடப்படுத்துதல் அவசியம். யோனத்தான், தாவீதைத் தேடியது போல நாமும் அவர்களைத் தேடி, அன்பான வார்த்தைகளையும், உதவிகளையும் நல்கும்போது, தேவன் மற்றதைப் பார்த்துக் கொள்வார். இந்த உலக வாழ்க்கை எப்படியிருந்தாலும், அவரை நம்பியவர்களுக்கு நித்தியத்தில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.