தடுமாற்றத்தை கையாளுதல்
காகிதத் துண்டுகள் முதல் ஆயுள்காப்பீட்டு திட்டங்கள் வரை பல்வேறு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் உலகத்தில் நாம் வாழுகிறோம். 2004ஆம் ஆண்டு “தேர்ந்தெடுப்பில் முரண்பாடு” (The Paradox of Choice) என்ற புத்தகத்தை ஓர் உளவியலாளர் எழுதியிருக்கிறார். அதில்அவர், தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்கும் முக்கியம் என்றாலும் அதிக தேர்வுகள் நம்மை சோர்வுக்கும், உறுதியற்ற தன்மைக்கும் வழிநடத்தும் என்கிறார். தேர்வுகள் குறைவாயிருக்கும் போது, காகித துண்டுகளை தேர்வு செய்வதில் சிரமமில்லாத போதிலும், வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கையில் உறுதியற்ற நிலை பெரும் பங்கு வகித்து பாதிப்புக்குள்ளாக்கும். இந்த தீர்மான தடுமாற்றத்தை மேற்கொண்டு எவ்வாறு உறுதியுடன் முன்னேறி இயேசுவுக்காய் வாழ முடியும்?
கிறிஸ்துவின் விசுவாசிகளாய் தெய்வீக ஞானத்தை நாம் தேடுவது, கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். நாம்வாழ்க்கையில் சிறியதோ அல்லது பெரியதோ, எந்த தீர்மானங்களை எடுத்தாலும், “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” (நீதிமொழிகள் 3:5) என்று வேதம் நமக்கு ஆலோசனைக் கொடுக்கிறது. நம்முடைய சுயதீர்மானங்களை சார்ந்துகொள்ளும்போது, நாம் குழப்பத்திற்குள்ளாகவும், கவலைக்குள்ளாகவும் கடந்து போய் முக்கியமானதை தவறவிட்டு விடுகிறோம். அல்லது, தவறான தேர்வுகளை தேர்ந்தெடுக்கிறோம். எனினும் நாம் பதிலுக்காய் தேவனை சார்ந்துகொள்ளும்போது, அவர் “(நம்) பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச.6). நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எடுக்கும் தீர்மானங்களில் சமாதானத்தையும், தெளிவையும் உண்டுபண்ணுவார்.
நம்முடைய சுயதீர்மானங்களின் சுமையினால் நாம் முடக்கப்படுவதையும், மேற்கொள்ளப்படுவதையும் தேவன் விரும்பவில்லை. நம்முடைய தேவைகளை விண்ணப்பங்களாய் அவருடைய சமுகத்திற்கு கொண்டு வரும்போது, அவர் கொடுக்கும் வழிநடத்துதலிலும், ஞானத்திலும் இளைப்பாறுதலை நாம் பெறுகிறோம்.

வெளிப்பாடும் உறுதிப்பாடும்
2019இல் பிறந்த குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் வழிமுறைகள் ஆச்சரியமாயிருந்தது. ஜூலை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாய் காரில் நீலநிறப் புகையை வெளிப்படுத்தி தெரியப்படுத்தியதை நான் காணொலி ஒன்றில் பார்த்திருக்கிறேன். செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தையின் பிறப்பை தெரியப்படுத்துவதற்காய் உரத்தை தெளிக்கும் விமானத்தில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் இளஞ்சிவப்புநிற நீரை தெளித்து தெரியப்படுத்தினர். இந்த குழந்தைகள் வளருகிற இந்த உலகத்தில் இன்னும் பல வெளிப்பாடுகள்இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், யூவெர்ஷன் என்னும் வேதாகம செயலி அந்த ஆண்டில் அதிகமாய் பகிரப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வசனமாய் பிலிப்பியர் 4:6 -ஐ தேர்ந்தெடுத்தது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.”
இது ஒரு வெளிப்பாடு. மக்கள் இன்று பல காரியங்களைக் குறித்து கவலைப்படுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள், குடும்பம் மற்றும் சிநேகிதர்களின் பிரிவுகள், இயற்கைச் சீற்றங்கள், யுத்தங்கள் என்று அநேக காரியங்களைக் குறித்த கவலைப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” என்னும் வாக்கியத்தை அநேகர் உறுதியாய் பற்றிக்கொள்வதே மகிழ்ச்சியான செய்தி. அத்துடன் இந்த ஜனங்கள் “எல்லாவற்றையுங் குறித்து” தேவனிடத்தில் விண்ணப்பத்தில் தெரியப்படுத்தவும் மற்றவர்களை அவ்விதமாய் உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் ஒதுக்காமல் அவற்றை சமாளிப்பது ஒரு விதத்தில் தேவனுக்கு நன்றி செலுத்துதலாய் கருதப்படுகிறது.
அந்த ஆண்டின் முக்கிய வசனமாய் தெரிந்தெடுக்கப்படாததும் அதை பின்தொடரும் வசனமுமானது, “தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச.7) எனபதே, ஆனால் அதுவே உறுதிப்பாடாய் உள்ளது!
சிறியதும் பெரியதுமான சிருஷ்டிகள்
மிச்சல் கிராண்ட், டிம்பர் என்று பெயரிட்டு ஒரு நீர்நாய்க்கு பயிற்சியளித்து, அதை காட்டில் கொண்டுபோய் விட தீர்மானித்தார். அதற்கு நீச்சல் பழக்குவதற்கு அதை குளத்தில் கொண்டுபோய் விட்டபோது, சிறிய படகில் பயணித்த மிச்சலிடத்தில் அது திரும்பவந்து தன் மூக்கால் படகை வருடியது. ஒரு நாள் காலையில் டிம்பர் படகின் அருகே வரவேயில்லை. குளத்தில் ஆறு மணி நேரம் தேடியும் டிம்பரைக் காணவில்லை. சில வாரங்கள் கழித்து அந்த குளத்தின் அருகே ஒரு நீர்நாயின் எலும்புக்கூட்டை மிச்சல் கண்டெடுத்தாள். அது டிம்பருடைய எலும்புக் கூடுதான் என்று எண்ணிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
மிச்சலுக்காகவும் டிம்பருக்காகவும் என் மனது வலித்தது. “அது ஒரு நீர் வாழ் ஜந்து தானே” என்று எனக்குள் ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆனால் நான் அதை நேசிப்பதுபோல், தேவனும் அதை நேசித்து பராமரிக்கிறார் என்பதே உண்மை. வானளாவும் அவருடைய அன்பு, தாழ பூமியிலுள்ள சிறிய உரியினங்களையும் எட்டுகிறது. அவருடைய சிருஷ்டிப்பின் பகுதியில், நம்மை நல்ல பராமரிப்பாளர்களாக அழைக்கிறார் (ஆதியாகமம் 1:28). அவர் “மனுஷரையும் மிருகங்களையும்” காப்பாற்றுகிறார் (சங்கீதம் 36:5-6). “அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்” (147:9).
ஒரு நாள் மிச்சல் அந்த குளத்தில் படகின் மூலம் பயணித்தபோது, அங்கே டிம்பர் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அங்கே டிம்பர் தன் குடும்பத்தை தேடிக்கொண்டது. அதின் குடும்பத்தின் வேறு இரண்டு குட்டிகளை வளர்க்கவும் மிச்சல் உதவிசெய்தார். டிம்பர் மிச்சலின் படகின் அருகே வந்து, அதை தன் நுனி மூக்கால் செல்லமாய் வருடியது. “நீ நன்றாய் வாழ்கிறாய், உனக்கு அழகான ஒரு குடும்பம் இருக்கிறது” என்று மிச்சல் புன்னகையோடு கூறினாள். டிம்பர், சத்தம் எழுப்பிக்கொண்டு தன் வாலால் தண்ணீரை பீய்ச்சியடித்து, தன் புதிய அம்மாவை தேடிப் புறப்பட்டது.
எனக்கு மகிழ்ச்சியான முடிவு பிடிக்கும். பிதா, ஆகாயத்துப் பறவைகளை போஷிக்கிறவராதலால் அவர் நம்மையும் போஷிக்க போதுமானவர் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-26). “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் (அடைக்கலான் குருவிகள்) ஒன்றாகிலும் தரையிலே விழாது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (10:29-31).

அழகான பாதங்கள்
ஜான் நாஷ் என்பவருக்கு கணிதத்தில் அவருடைய முன்னோடிப் பணியை பாராட்டி 1994இல் பொருளாதாரத்திற்கான நோபல்பரிசுகொடுக்கப்பட்டது. அவரது சமன்பாடுகள், வணிகத்தில் போட்டி மனப்பான்மையைக் குறித்து புரிந்துகொள்வதற்கு உலகெங்கிலும் உள்ள வணிகங்களில் பரவலாய் பயன்படுத்தப்படுகிறது. “அழகான மூளை” (a beautiful mind) என்ற தலைப்பில் அவருடைய வாழ்க்கை புத்தகமாக்கப்பட்டு, திரைக்காவியமாக்கப்பட்டது. அவருடைய மூளை விசேஷமான திறன் கொண்டது இல்லையெனினும் அதைக் கொண்டு அவர் என்ன சாதித்தார் என்பதே இங்ஙனம் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான ஏசாயா, சுவிசேஷகனுடைய பாதங்களை அழகு என்று வர்ணிக்கிறார். அதின் மாம்சரீதியான அமைப்பை விவரிப்பதற்காய் இல்லை; மாறாக, அவர்கள் செய்கிற செய்கையை அழகு என்று வர்ணிக்கிறார். “சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசாயா 52:7). கர்த்தருக்கு உண்மையில்லாமல் வாழ்ந்ததின் விளைவாய் எழுபது ஆண்டுகள் சிறையிருப்பிற்குள் பிரவேசித்த இஸ்ரவேலர்களுக்கு “கர்த்தர் … எருசலேமை மீட்டுக்கொண்டார்” (வச. 9) என்னும் அவர்களின் சுயதேசம் திரும்பும் நற்செய்தியானது கர்த்தருடைய ஸ்தானாதிபதிகளின் மூலம் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரவேலின் இராணுவ பராக்கிரமத்தையோ அல்லது எந்த மாம்சீக முயற்சியையோ நற்செய்தி என்று அறிவிக்கவில்லை. மாறாக, அவர்களுக்காய் வெளிப்பட்ட “பரிசுத்த புயத்தை” (வச.10) நற்செய்தி என்று அழைக்கிறது. கிறிஸ்துவின் தியாகத்தினால் நம்முடைய ஆவிக்குரிய எதிரியோடு போராடி வெற்றியை ருசிபார்க்கும் நமக்கு இன்றும் அது உண்மையாகவே இருக்கிறது. அதின் விளைவாய் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு சமாதானத்தையும், நற்செய்தியையும், இரட்சிப்பையும் அறிவிக்கும் நற்செய்தியின் ஸ்தானாதிபதிகளாய் நாம் மாற்றப்பட்டுள்ளோம். அதை அழகான பாதங்களுடன் செயல்படுத்துகிறோம்.

காத்திருக்க விரும்புதல்
காத்திருத்தல் என்பது நம் அமைதியை திருடும் திருடனாய் இருக்கலாம். ரமேஷ் சீதாராமன் என்னும் கணிணி விஞ்ஞானியின் கூற்றுப்படி, “இணையதளங்களில், சில வலைதளங்கள் தோன்ற ஏற்படும் தாமதம் மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் பிறப்பிக்கிறது” என்று கூறுகிறார். ஆன்லைனில் ஒரு காணொலியை காண்பதற்கு, அதிகபட்சம் ஒருவர் இரண்டு விநாடிகள் மட்டுமே காத்திருக்க விரும்புவதாக அவர் கூறுகிறார். ஐந்து விநாடிகள் கடந்தவுடன் இருபத்தைந்து சதவிகித மக்கள் பதிவிறக்கும் முயற்சியை கைவிடுகின்றனர், பத்து விநாடிகள் கழித்து ஏறத்தாழ பாதிபேர் அணைத்து முயற்சிகளையும் கைவிடுகின்றனர். நாம் பொறுமையேயில்லாத ஜனங்கள்.
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் விசுவாசிகளுக்கு, அந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டாம் என்று யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவத்தின் மத்தியிலும், ஒருவரையொருவர் நேசிக்கவும், கனப்படுத்தவும் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இந்த நம்பிக்கை ஊக்குவிக்கும் என்று கூறுகிறார் (யாக்கோபு 5:7-10). அவருடைய இந்த கருத்தை வலியுறுத்துவதற்கு பயிரிடுகிற விவசாயியை உதாரணமாக்குகிறார். பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் (வச. 7) ஒரு விவசாயி காத்திருப்பது போல, இயேசுவின் வருகை வரும்வரை உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு யாக்கோபு உற்சாகப்படுத்துகிறார். அவர் வரும்போது, கோணலானவைகளை செவ்வையாக்கி, இளைப்பாறுதலை உண்டுபண்ணுவார்.
அவருக்காய் காத்திருக்கும்போது சிலவேளைகளில், அவரை நாம் மறுதலிக்க தூண்டப்படுகிறோம். ஆனால் காத்திருக்கும் வேளையில், “விழித்திருங்கள்” (மத்தேயு 24:42), உண்மையாய் இருங்கள் (மத்தேயு 25:14-30), அவருடைய வழியில் நடந்து, அவருடைய சுபாவத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (கொலோசெயர் 3:12). கிறிஸ்துவின் வருகை எப்போது என்பது நமக்கு தெரியவில்லை என்றாலும், அவர் வரும்வரை நாம் பொறுமையோடே காத்திருப்போம்.
