2019இல் பிறந்த குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் வழிமுறைகள் ஆச்சரியமாயிருந்தது. ஜூலை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாய் காரில் நீலநிறப் புகையை வெளிப்படுத்தி தெரியப்படுத்தியதை நான் காணொலி ஒன்றில் பார்த்திருக்கிறேன். செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தையின் பிறப்பை தெரியப்படுத்துவதற்காய் உரத்தை தெளிக்கும் விமானத்தில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் இளஞ்சிவப்புநிற நீரை தெளித்து தெரியப்படுத்தினர். இந்த குழந்தைகள் வளருகிற இந்த உலகத்தில் இன்னும் பல வெளிப்பாடுகள்இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், யூவெர்ஷன் என்னும் வேதாகம செயலி அந்த ஆண்டில் அதிகமாய் பகிரப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வசனமாய் பிலிப்பியர் 4:6 -ஐ தேர்ந்தெடுத்தது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.”

இது ஒரு வெளிப்பாடு. மக்கள் இன்று பல காரியங்களைக் குறித்து கவலைப்படுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள், குடும்பம் மற்றும் சிநேகிதர்களின் பிரிவுகள், இயற்கைச் சீற்றங்கள், யுத்தங்கள் என்று அநேக காரியங்களைக் குறித்த கவலைப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” என்னும் வாக்கியத்தை அநேகர் உறுதியாய் பற்றிக்கொள்வதே மகிழ்ச்சியான செய்தி. அத்துடன் இந்த ஜனங்கள் “எல்லாவற்றையுங் குறித்து” தேவனிடத்தில் விண்ணப்பத்தில் தெரியப்படுத்தவும் மற்றவர்களை அவ்விதமாய் உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் ஒதுக்காமல் அவற்றை சமாளிப்பது ஒரு விதத்தில் தேவனுக்கு நன்றி செலுத்துதலாய் கருதப்படுகிறது.

அந்த ஆண்டின் முக்கிய வசனமாய் தெரிந்தெடுக்கப்படாததும் அதை பின்தொடரும் வசனமுமானது, “தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச.7) எனபதே, ஆனால் அதுவே உறுதிப்பாடாய் உள்ளது!