வகை  |  odb

அறிவின் எல்லைகளைக் கடந்து

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் வேலைகளை இழந்த அநேகருடைய வரிசையில் என் கணவரும் ஒருவர். அது, எங்கள் வாழ்வின் கடினமான நாள். தேவன் எங்கள் தேவைகளை சந்திப்பார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் அது எப்படி நடக்கும் என்ற நிச்சயமில்லாமை எங்களை பயமுறுத்தியது.

குழப்பமான என் மனநிலைகளை கடக்கையில், பதினாறாம் நூற்றாண்டின் கவிஞர், சிலுவையின் ஜான் என்பவரின் பாடல்வரிகளை நினைத்து பார்த்தேன். “போகும்பாதை அறியாமல், உள்ளே சென்றேன்” என்று தலைப்பிடப்பட்ட அந்த பாடல், அர்பணிப்பின் பிரயாணம் மனிதஅறிவின் அனைத்து எல்லைகளையும் கடந்து, அனைத்திலும் தெய்வீகத்தை கண்டுகொள்ளும் ஆச்சரியத்தை சித்தரிக்கிறது.. எனவே நானும், எனது கணவரும் அந்த காலகட்டத்தில் அதைச் செய்ய முயற்சித்தோம். எங்களால் புரிந்துகொள்ளக்கூடிய, சமாளிக்கக்கூடியவைகளின் மீதிருந்த எங்கள் கவனத்தை; எங்களை சுற்றிலும் அழகான, எதிர்பாராத, விந்தையான வழிகளில் வெளிப்படும் தேவன் மீது திருப்பினோம்.

பவுல் அப்போஸ்தலன், காணப்படுகிறவைகளிலிருந்து காணப்படாதவைகளுக்கு, வெளித்தோற்றத்திலிருந்து உள்ளான நிஜத்திற்கு, தற்காலிக துன்பங்களிலிருந்து “மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கு” விசுவாசிகளை அழைக்கிறார் (2 கொரிந்தியர் 4:17).

அவர்களுடைய போராட்டங்களை குறித்து கரிசனை இல்லாமல் பவுல் இவ்வாறு வலிறுயுறுத்தவில்லை மாறாக அவர்கள் புரிந்தகொள்ளக் கூடியவைகளை அவர்கள் விட்டுவிடுகையில் தான் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் ஆறுதல், சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை அவர்களால் அனுபவிக்க கூடும் என்று அவர் அறிந்திருந்தார். (வச.10,15-16). கிறிஸ்துவின் ஜீவியம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது என்பதை அவர்களுக்கு அறியச்செய்வதற்காகவே பிரயாசப்படுகிறார்.

அவருடைய சமாதானம்

என்னுடைய பணியிடத்தில் ஏற்பட்ட சூழ்ச்சிகளை, பல மாதங்களாய் என்னால் சமாளிக்க முடிந்தது. கவலைப்படுவது என்பது எனக்கு இரண்டாம் பட்சம். நான் ஆச்சரியப்படும் வகையில் சமாதானமாய் உணர்ந்தேன். கவலைப்படுவதற்கு மாறாக, என்னுடைய எண்ணமும், மனமும் அமைதலாக இருந்தது. இந்த சமாதானம் தேவனிடத்திலிருந்தே வந்திருக்கும் என்பதை நான் அறிவேன். 

அதற்கு முற்றிலும் முரணாய், என்னுடைய வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் எல்லாம் நன்றாக நடந்துகொண்டிருந்த போதும் என் இருதயம் மிகவும் அமைதலற்று இருந்தது. நான் தேவனையும், அவர் நடத்துதலையும் நம்புவதை விட்டுவிட்டு, என் சுயதிறமையின் மீது நம்பிக்கை வைத்ததே அதற்கான காரணம் என்பதையும் நான் அறிவேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, மெய்யான தேவசமாதானம் என்பது சூழ்நிலைகள் தீர்மானிப்பது அல்ல; மாறாக, அது தேவனை நம்புவதாலே உண்டாகும் என உணர்ந்தேன்.

நம் சிந்தை உறுதியாயிருக்கையில், தேவசமாதானம் நமக்கு கிடைக்கும் (ஏசாயா 26:3). ‘உறுதி’ என்ற எபிரெய வார்த்தையின் அர்த்தம், “சாய்ந்து கொள்வது” என்பதாகும். நாம் அவர்மீது சாய்ந்து கொள்ளும்போது, அவருடைய மெய்யான இளைப்பாறுதலை நாம் அனுபவிக்கலாம். அவர் அகந்தையுள்ளவர்களையும் துன்மார்க்கரையும் தாழ்த்தி, அவரை நேசிக்கிறவர்களின் வழிகளை செம்மையாக்குகிறவர் என்பதை நினைவுகூர்ந்து தேவனை நாம் நம்பலாம் (வச. 5-7). 

என் கடினமான வேளைகளில் நான் சமாதானத்தை அனுபவிக்கையில், தேவசமாதானம் என்பது துன்பங்களே இல்லாத நிலை அல்ல என்றும், துன்பங்களின் நடுவிலும் நம்மை மிக பாதுகாப்பாய் உணரச்செய்வதே தேவசமாதானம் என்பதை நான் கண்டுபிடித்தேன். மிகவும் கடினமான வாழ்க்கைச் சூழல்களிலும் நம் அறிவையும், புரிதலையும் கடந்து நம் இருதயத்தை இந்த தேவசமாதானம் ஆளுகைச் செய்கிறது (பிலிப்பியர் 4:6-7).

ஜெபத்தின் சாரம்சம்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானபோது, அவர் உடைக்கப்பட்டிருந்த தேசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. லிங்கன், ஒரு புத்திசாலித்தனமான தலைவராகவும், உயர்ந்த நற்குணங்கள் கொண்ட மனிதனாகவும், தன்னுடைய நன்மதிப்பை ஸ்தாபித்திருந்தாலும், அவருடைய மற்றுமொரு தகுதியே அவருடைய எல்லா செயல்களுக்கும் அஸ்திபாரமாய் திகழ்ந்தது. தன்னிடத்தில் ஒப்பிவிக்கப்பட்ட பொறுப்பை செயல்படுத்துவதற்கு அவர் தகுதியுள்ளவர் அல்ல என்னும் அவருடைய நம்பிக்கையே அந்த தகுதி. தன்னுடைய இயலாமைக்கான அவருடைய பதில், லிங்கன் சொல்லுகிறார்: “எனக்கு எங்கும் செல்லுவதற்கு வழியில்லை என்ற நிலைமையினால் நான் பலமுறை முழங்காலில் நிற்க உந்தப்பட்டேன். அந்த குறிப்பிட்ட நாளை சந்திப்பதற்கு என்னுடைய ஞானம் போதுமானதாக இல்லை.” 

வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்போது, நம்முடைய குறைவான ஞானத்தையும், அறிவையும், பெலத்தையும் கொண்டு லிங்கனைப் போன்று எதிர்த்து போராட முனையாமல், வரையறையில்லாத கிறிஸ்துவை பூரணமாய் சார்ந்துகொள்ள முற்படுவோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று பேதுரு இந்த சார்ந்துகொள்ளுதலை நினைவுபடுத்துகிறார். 

தன்னுடைய பிள்ளைகளின் மீது தேவன் வைத்திருக்கிற அன்போடு, அவருடைய வல்லமையும் இணைந்து, நம்முடைய பெலவீனங்களில் அவரை சார்ந்துகொள்வதற்கு ஏற்ற ஒரு நபராய் அவரை நம்முன் நிறுத்துகிறது. அதுவே ஜெபத்தின் சாரம்சம். நம் இயலாமையை உணர்ந்தும், அவரே நித்தியத்திற்கும் போதுமானவர் என்பதையும் அறிக்கையிட்டு இயேசுவிடம் சேருவோம்.. “எங்கு போவதென்று தெரியவில்லை” என்று லிங்கன் சொன்னார். ஆனால், தேவன் நம்மீது மிகுந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று தெரிந்துகொள்வதே நற்செய்தி. அவரிடத்திற்கு நாம் போகலாம்! 

நேர்மையான வாழ்க்கை

ஆபேல் முத்தாய் என்னும் கென்யா நாட்டைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர், ஒருமுறை சர்வதேச அளவிலான திறந்தவெளி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகையில், வெற்றிக் கோட்டை மிகஅருகில் நெருங்கிவிட்டார். ஆனால், வெற்றிக் கோட்டை தான் கடந்துவிட்டதாக எண்ணி, அதற்கு முன்னமே தன்னுடைய ஓட்டத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு பின்னாக இரண்டாவது இடத்தில் ஓடிவந்த ஸ்பானிய ஓட்டபந்தய வீரர் இவான் பெர்னான்டஸ் அனயா தனக்கு முன்னாக ஓட்டத்தை நிறுத்திவிட்ட முத்தாயின் தவறைப் புரிந்துகொண்டார். அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி முந்திக்கொண்டு ஓடாமல், முத்தாயை தன்னுடைய தோள்மீது சாய்த்து, அவரை முன்னாக ஓடவிட்டு தங்கப் பதக்கத்தை அவர் பெறும்படி செய்தார். ஏன் வெற்றிவாய்ப்பை தவறவிட்டீர்கள் என்று நிருபர்கள் அனயாவிடம் கேட்டபோது, முத்தாய்தான் ஜெயிக்க வேண்டும்; நானல்ல என்று பதிலளித்தாராம். “என்னுடைய வெற்றிக்கான மதிப்பு என்ன? பதக்கத்தின் மதிப்பு என்னவாகும்? என்னுடைய தாயார் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” என்றார். ஒரு பத்திரிக்கையில் “அனயா, வெற்றிக்கு பதிலாக நேர்மையை தேர்ந்தெடுத்தார்” என்று பிரசுரிக்கப்பட்டது. 

நீதிமொழிகள், நேர்மையாய் வாழத் தீர்மானிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்தமானதை விட உண்மையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லுகிறது. “செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்” (நீதிமொழிகள் 11:3). நேர்மையாய் வாழ்வது என்பது சரியான வாழ்க்கை பாதை மட்டுமல்ல, மேன்மையான ஒரு வாழ்க்கையை நமக்கு வழங்குகிறது. “துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்” (வச.3) என்று நீதிமொழிகள் தொடர்கிறது. நீண்ட வாழ்க்கை ஓட்டத்தில் நேர்மையில்லாமை பலனளிக்காது.

நம்முடைய நேர்மையைத கைவிட்டால், தற்காலிக வெற்றி நிஜத்தில் தோல்வியே. ஆனால் விசுவாசமும், உண்மையும், தேவ வல்லமையில் நம்மை உருவாக்குகையில், நல்ல வாழ்க்கையை நேர்மையாய் வாழும் நற்குணசாலிகளாய் உருவாகுவோம்.