எங்கள் வாராந்திர ஊழிய கூடுகையின்போது, ரவி தான் “மண்ணென்று உணர்வதாக” குறிப்பிடுகையில், அவர் தன் முதுமை மற்றும் ஆரோக்கிய குறைபாடினிமித்தம் உண்டாகும் சரீர பெலவீனங்களைக் குறிப்பிடுவதை புரிந்துகொண்டேன். ஏனெனில் ரவியும், அவர் மனைவியும், அறுபது வயதை கடந்திருந்தனர். அவர்களின் 2020ஆம் வருடம், மருத்துவர்கள் ஆலோசனை, அறுவைசிகிச்சை முறைகள், வீட்டிலிருந்தே மருத்துவம் பார்க்க வீட்டை மாற்றி அமைத்தல் போன்றவைகளால் நிறைந்திருந்தது. அவர்கள் தங்கள் வாழ்வின் முடிவிலிருந்தார்கள். அதை நன்கு உணரவும் செய்தார்கள்.

சரீரப்பிரகாரமான, மனோரீதியான, உணர்வுரீதியான மற்றும் ஆவிக்குரிய ரீதியான பெலவீனங்கள், இயலாமைகள், குறைபாடுகள் ஆகியற்றை உணர ஒருவர் வயது சென்றவராய் இருக்க வேண்டுமென்றில்லை. தேவன், தம் குமாரன் இயேசுவின் மனுஉருவில், வீழிச்சியடைந்த இவ்வுலகத்திற்கு வந்து, மனித பிறவியின் சுமைகளை அனுபவிப்பவர்கள் மேல் கரிசனைகொள்கிறார் (சங்கீதம் 103:13). மேலும் தாவீது, “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” (வச. 14) என்றெழுதினார். “மண்” என்ற பதம் நம்மை ஆதியாகமத்திற்கு பின்னோக்கி கொண்டுசெல்கிறது. “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்; மனுஷன் ஜீவாத்துமாவானான்” (2:7).

நீங்கள் மண்ணென்று இந்நாட்களில் உணர்கிறீர்களா? பூமிக்குரிய வாழ்க்கையின் எதார்த்தங்களுக்கு உங்களை வரவேற்கிறோம். நாம் பெலவீனமானவர்கள் என்று உணரும்போது நாம் தனித்திருப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனதுருக்கம் நிறைந்த நம் தேவன் அறிந்திருக்கிறார், நினைவுகூருகிறார். பூமிக்குரிய மனிதர்களான நம்மைப் போன்றவர்களுக்கு மன்னிப்பை அருள தன் குமாரனையே நமக்காக அனுப்பி தம் அன்பை நிரூபித்துள்ளார். வாழ்க்கை நமக்கு எதையளித்தாலும், நாம் அவரை நம்புவோமாக.