அந்த சிறுபெண் ஆழமில்லா அந்நீரோடையில் தடுமாறி நடப்பதை அவள் தந்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தன் முட்டி வரைக்கும் காலணி அணிந்திருந்தாள். கீழ்நோக்கி பாய்ந்த நீரோடையில் அவள் சறுக்குகையில், தண்ணீர் ஆழமாகி, அவளால் மேற்கொண்டு நடக்ககூடாதபடி பாய்ந்தது. தன்னால் அடுத்த அடி வைக்கமுடியாதபோது, “அப்பா, நான் சிக்கிக்கொண்டேன்” என்று அலறினாள். மூன்றே அடிகள் தான், அவள் தந்தை அவளருகே நின்றார், அவளை கரையில் இழுத்துவிட்டார். அவள் சிரித்துக்கொண்டே தன் காலணியை உதறி கழட்ட, அதிலிருந்த தண்ணீர் கீழே கொட்டியது.

தேவன், சங்கீதக்காரன் தாவீதை தன்னுடைய சத்துருக்களிடமிருந்து மீட்ட பிறகு, அவரும் இப்படி சற்று நேரமெடுத்து அமர்ந்து, “தன் காலணிகளை கழற்றி,” தன் ஆத்துமா விடுதலையில் நனைய அனுமதித்தார். தன் உணர்வுகளை வெளிப்படுத்த பாடலொன்றையும் எழுதினார். “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமுவேல் 22:4) என்றார். தேவன் தன்னுடைய கன்மலை, கோட்டை, கேடகம் மற்றும் உயர்ந்த அடைக்கலம் என்று துதிக்கிறார் (வச. 2–3). பின்பு தேவன் பதிலளித்த விதத்தை பாடல்நடையில் வர்ணிக்கிறார், “பூமி அசைந்து அதிர்ந்தது; வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (வச. 8, 10, 13–15, 17).

இன்றைக்கு உங்களைச் சுற்றிலும் எதிர்ப்பை நீங்கள் உணரலாம். ஆவிக்குரிய ரீதியில் முன்னேறக்கூடாதபடி பாவத்தில் நீங்கள் சிக்கியிருக்கலாம். தேவன் கடந்த காலத்தில் உங்களுக்கு உதவிய விதத்தை நினைத்துப்பாருங்கள். அவரைத் துதித்து, மீண்டும் அதை செய்யுமாறு அவரைக் கேளுங்கள். விசேஷமாக உங்களை தமது ராஜ்யத்திற்குட்படுத்தி விடுவித்ததற்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள் (கொலோசெயர் 1:13).