வகை  |  odb

முழு உலகத்திற்கும் சுகம்

இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பல அலுவலர்களைக் கொண்ட ஒரு மருத்துவ அமைப்பு (ப்ரான்ஜா பார்டிசன் மருத்துவமனை), நாசிச கிளர்ச்சியாளர்களுக்கு மறைவாக, மேற்கு ஸ்லோவேனியாவின் ஒரு வனப்பகுதியில் மறைந்து செயல்பட்டனர். அதைக் கண்டுபிடிக்க நாசிச அமைப்பினர் ஏறெடுத்த பல முயற்சிகள் வீணாய் போனது. அவர்களின் கண்களுக்கு மறைந்து செயல்பட்டதே பெரிய சாதனை. அதை பார்க்கிலும் பெரிதானது, நேச நாடுகளிலிருந்தும், எதிரி நாடுகளிலிருந்தும் காயப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் அந்த அமைப்பு பராமரித்தது தான். அந்த மருத்துவமனை அனைவரையும் வரவேற்றது. 

முழு உலகமும் ஆவிக்குரிய சுகம் பெற நாம் உதவும்படி வேதம் நம்மை அழைக்கிறது. அதாவது, நாம் பாகுபாடில்லாமல் அனைவர் மீதும் இரக்கம் செலுத்தவேண்டும் என்று அர்த்தமாகிறது. யாராக இருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் பாத்திரவான்கள். பவுல், “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க...” (2 கொரிந்தியர் 5:14) என்று அனைவரையும் அரவணைக்கும் இயேசுவின் அன்பை குறிப்பிடுகிறார். பாவ நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மன்னிப்பு எனும் சுகம் நம் அனைவருக்கும் அவசியம். அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்க நம்மிடத்தில் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். 

தேவன் ஆச்சரியவிதமாய், “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை” (வச.19) நம்மிடத்தில் ஒப்புவித்துள்ளார். நம்மைப் போல் காயப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறார். தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலம், பாவநோயாளிகள் குணமாகும் மருத்துவ அமைப்பில் நாமும் அங்கத்தினராய் செயல்படுகிறோம். இந்த ஒப்புரவாகுதலும், சுகமும் விரும்புகிற யாவருக்கும் கொடுக்கப்படுகிறது. 

சற்று நிறுத்தி ஜெபியுங்கள்!

வீதியிலிருந்த தீயணைப்பு குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடைத்தது. அது எனக்கு ஒரு வாய்ப்பாய் தெரிந்தது. எனக்கு முன், பல கார்கள் அதின் தண்ணீரால் தங்களை சுத்தம் செய்துக் கொண்டது. 'காரை சுத்தம் செய்வதற்கு என்ன அருமையான இலவச வாய்ப்பு!' என்றெண்ணினேன். மாதக்கணக்காய் என் காரை கழுவவில்லை. அதினால் அழுக்கு அடர்த்தியாய் படிந்திருந்தது. ஆகையால் நானும் என் காரை அந்த தண்ணீருக்குள் செலுத்தினேன். 

அவ்வளவுதான், 'க்ராக்!' என்று சத்தம் கேட்டது. அன்று காலைல்தான் சூரிய ஒளி என் கருப்புநிற காரின் கண்ணாடி, உட்பகுதியையும் சூடேற்றியிருந்தது. தீயணைப்புக் குழாயிலிருந்து வந்த தண்ணீரோ உறைந்திருந்தது. இந்த குளிர்ந்த நீர் சூடான கண்ணாடியின் மேல் பட்ட மாத்திரத்தில், மேலிருந்து கீழாக விரிசல் ஏற்பட்டது. என் 'இலவச கார் சலவை', அதிக செலவையே உண்டுபண்ணியது. 

அதை செய்வதற்கு முன்பாக சற்று நேரமெடுத்து யோசித்திருந்தால் அல்லது ஜெபித்திருந்தால் நலமாயிருந்திருக்கும். அப்படிப்பட்ட தருணம் உங்களுக்கு நேரிட்டிருக்கிறதா? இஸ்ரவேலர்கள் இதைவிட கடினமான சூழ்நிலைகளில் இதை அனுபவித்துள்ளனர். தேவன் அவர்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் குடிகளை விரட்டியடிப்பதாக அவர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார் (யோசுவா 3:10). எனவே, அவர்கள் அந்நிய தேவர்களால் ஈர்க்கப்பட அவசியமில்லாதிருந்தது (உபாகமம் 20:16-18). ஆனால் ஒரு புறஜாதி தேசம், இஸ்ரவேலர்களின் வெற்றிகளை பார்த்து பயத்தினால், உலர்ந்து பூசணம் பூத்த அப்பத்தை  உண்ணக் கொடுத்து, தாங்கள் தூர தேசத்தில் வசிப்பவர்களென்று இவர்களை நம்பச் செய்தார்கள் . “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்”. (யோசுவா 9:14-15). யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணினான். இது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமானது. 

நாம் ஜெபத்தை இறுதியாய் அல்லாமல் முதன்மையாய் வைத்து தீர்மானம் எடுக்கும்போது, தேவனுடைய வழிநடத்துதலையும், ஞானத்தையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்குகிறோம். சற்று நேரம் நின்று யோசிப்பதற்கு தேவன் இன்று நமக்கு நினைப்பூட்டுவாராக.

இடுக்கமான வாசல் உணவகம்

சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.

பார்வையில் மாற்றம்

1854ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஒரு இளைய பீரங்கி அலுவலர், தன் பீரங்கியிருந்த மலை உச்சியிலிருந்து கீழே நடைபெறும் போர் படுகொலைகளைப் பார்த்தார். “ஜனங்கள், ஜனங்களைக் கொல்லுவதைப் பார்ப்பது ஒரு வேடிக்கையான இன்பம், எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மணிக்கணக்காய் நான் அதைப் பார்த்துக்கொண்டேயிருப்பேன்” என்று லியோ டால்ஸ்டாய் எழுதுகிறார். 

டால்ஸ்டாயின் பார்வை சீக்கிரத்தில் மாறியது. செவாஸ்டோபோல் நகரத்தில் ஏற்பட்ட அழிவையும் பாடுகளையும் நேரில் பார்த்த பின்பு, “நீங்கள் முன்பு பார்த்த பார்வையை விட, அந்த பட்டணத்தில் ஒலித்த துப்பாக்கி குண்டுகளின் சத்தங்கள் உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றிவிடும்” என்று எழுதுகிறார். 

யோனா தீர்க்கதரிசி, நினிவேயின் அழிவை பார்க்க மலையுச்சி ஏறினார் (யோனா 4:5). தேவனின் வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து அக்கொடிய நகரத்தை எச்சரித்திருந்தார். ஆனால் நினிவே மனந்திரும்பியது. யோனா ஏமாற்றமடைந்தார். சில நூற்றாண்டுகள் கழித்து நினிவே மீண்டும் பாவத்திற்கு திரும்பியது. இப்போது நாகூம் தீர்க்கதரிசி அதின் அழிவை முன்னறிவிக்கிறார். “அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்... அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்” (நாகூம் 2:3) என்று எழுதினார். 

நினிவேயின் தொடர்ச்சியான பாவத்தினால் தேவன் அதை தண்டித்தார். ஆனால் யோனாவிடமோ, நினிவேயில் ஆவிக்குரிய இருளில் 120000 பேருக்கு அதிகமான மனுஷர் இருக்கிற “மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?” (யோனா 4:11) என்கிறார்.

தேவனுடைய நீதியும், அன்பும் ஒன்றாகவே பயணிக்கிறது. தீமையின் விளைவை நாகூம் காண்பிக்கிறார். நம்மைக் காட்டிலும் மோசமான சந்ததியினருக்கான தேவனுடைய இரக்கத்தை யோனா காண்பிக்கிறார். நாம் மனந்திரும்பி, அவ்விரக்கத்தை மற்றவர்களுக்கும்காண்பிக்கவேண்டும் என்பதே தேவனுடைய மனவிருப்பம். 

அனலைக் கூட்டுங்கள்

அமெரிக்காவில் இருக்கும் கொலராடோ மாகாணத்தில் தட்பவெப்பநிலை நிமிடத்திற்கு நிமிடம் தீடீரென்று மாற்றமடையக் கூடியது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் அடிக்கடி மாறும் இந்த தட்பவெப்ப நிலையைக் குறித்து என் கணவர் டேன் மிகுந்த ஆர்வம் காண்பித்தார். சிறிய இயந்திர உபகரணங்களை சேகரிப்பதில் விருப்பமுடைய என் கணவர், அவர் சமீபத்தில் வாங்கிய வெப்பநிலைமானியைக் கொண்டு எங்கள் வீட்டின் நான்கு திசையிலும் தட்பவெப்பநிலையைக் கணக்கிட்டார். அவருடைய செயலை நான் கிண்டல் செய்தாலும், பின்னர் நானும் வெப்பநிலையை கணக்கிட ஆரம்பித்தேன். வீட்டினுள்ளும் வெளியேயும் அடிக்கடி மாறும் வெப்பநிலை மாற்றத்தைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். 

வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டுள்ள ஐசுவரியமான ஏழு பட்டணங்களில் ஒன்றான லவோதிக்கேயாவின் சபையை 'வெதுவெதுப்பான சபை' என்று இயேசு தட்பவெப்பநிலையை வைத்து குறிக்கிறார். பரபரப்பான வங்கி, ஆடைகள் மற்றும் மருத்துவத்திற்கு பெயர்போன இந்நகரம் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது. எனவே சூடான நீருற்றிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு நீர்வழிப் பாதை அவசியப்பட்டது. அந்நீருற்றிலிருந்து லவோதிக்கேயாவுக்கு தண்ணீர் வந்து சேரும்போது அது சூடாகவும் இல்லை குளிர்ந்ததாகவும் இல்லை. 

அங்கிருந்த திருச்சபையும் வெதுவெதுப்பாகவே இருந்தது. இயேசு, “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்” (வெளி. 3:15-16) என்கிறார். மேலும், “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு” (வச.19) என்றும் அறிவிக்கிறார். 

நம்முடைய இரட்சகரின் இந்த எச்சரிக்கை நமக்கும் அவசியமானது. நீங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறீர்களா? அவருடைய சிட்சையை ஏற்றுக்கொண்டு, ஜாக்கிரதையுடனும், விசுவாசத்தில் அனல்கொண்டும் வாழ அவரிடமே உதவி கேளுங்கள்.