வகை  |  odb

சிங்கங்களுடன் வாழ்வது

banner image

சிங்கங்களுடன் வாழ்வது

“அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்”-தானியேல் 6 :26

சிக்காகோ அருங்காட்சியகத்தில் நான் பாபிலோனின் அசல் ஸ்ட்ரைடிங் சிங்கங்களில் ஒன்றை கண்டேன்-ஒரு பயங்கரமான…

“அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்”

banner image

“அச்சிறுவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்”

வாசிக்க: மாற்கு 9 :14-27
“அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்”.-…

நோசோமி நம்பிக்கை

banner image

நோசோமி நம்பிக்கை

இந்த மகத்துவம் உள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல் தேவனால் உண்டாயிருக்கிறது என்று விளங்கும்படி, இந்த பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். - 2 கொரிந்தியர்…

வளர வேண்டிய நேரம்

banner image

வளர வேண்டிய நேரம்

நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாது இருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.- கலாத்தியர் 6:9.

டெபியின் புதிய வீட்டில் அவர்…

மேகனின் இருதயம்

banner image

மேகனின் இருதயம்

வாசிக்க: யாக்கோபு 1:19-27
அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். – யாக்கோபு 1: 22

மேகன் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது…

கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது

banner image

கவனச்சிதறல் இன்றி சேவை செய்வது

வாசிக்க: லூக்கா 10:38-42
மார்த்தாளோ பற்பல வேலைகளை செய்வதில் மிகவும் வருத்தம் அடைந்து, அவரிடத்தில் வந்து: “ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி…

ஜெபத்தினால் கிரியைசெய்தல்

என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். 

மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான். 

தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது.