எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

நாம் எங்கே சென்றாலும் நேசிப்போம்

ஒரு கோடை விடுமுறையில், ஓர் ஏரிக்கரையில் அமர்ந்து என் வேதத்தை வாசித்தவாறே, என் கணவர்  மீன் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு வாலிபன் எங்களை அணுகி நாங்கள் வேறொரு தூண்டிலை பயன்படுத்தும்படிக்கு பரிந்துரைத்தார். என்னை சற்று நோட்டமிட்டபின் பரபரத்த குரலில், "நான் சிறையில் இருந்தேன்" என்றார். பின்னர், என் கையிலிருந்த வேதத்தை சுட்டிக்காட்டி," என்னை போன்றவர்களை குறித்து தேவன் உண்மையாகவே அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று பெருமூச்சுவிட்டார்.

மத்தேயு 25ஐ திருப்பி, சிறைச்சாலையில் உள்ளவர்களை சந்திக்கும் தனது சீடர்களை குறித்து இயேசு சொல்வதை சத்தமாக அவருக்கு வாசித்தேன்.

தமது பிள்ளைகளுக்கு காண்பிக்கும் இரக்கத்தை, தேவன் தமக்காகவே தனிப்பட்ட முறையில் காட்டும் அன்பின் செயலாக கருதுவதை (வ.31-40) நான் பகிர்ந்தபோது, கண்களில் நீர்த்தழும்ப "சிறையில் இருப்பதனை குறித்து அவ்வாறு சொல்லப்பட்டுள்ளதா?" என்றார்.

பின்னர், “என் பெற்றோரும் என்னை மன்னித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்!” என்று தலைகுனிந்தபடி சொன்னவர். “இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லி போய், தன்னுடைய சிதைந்த வேதாகமத்துடன் திரும்பி, அதை என்னிடம் அளித்து, “அந்த வார்த்தைகளை நான் எங்கே பார்க்க முடியும் என்று காட்டுவீர்களா?” என்று கேட்டார். சந்தோஷமாக தலையசைத்த நான், என் கணவரோடு அவரை அணைத்து அவருக்காகவும், அவர் பெற்றோருக்காகவும் ஜெபித்தோம் பின்னர் எங்களைத் தொடர்பு கொள்ளும் தகவல்களை பரிமாறி கொண்டோம் மேலும் அவருக்காக தொடர்ந்து ஜெபித்தோம். 

நாம் எல்லோருமே ஏதோ ஒரு கட்டத்தில் நேசிக்கப்படாதவர்களாகவும், வேண்டாதவர்களாகவும், தேவையுள்ளவர்களாகவும் உணர்கிறோம் அல்லது சரீர பிரகாரமாகவோ, உணர்வு ரீதியாகவோ சிறையில் இருக்கிறோம். (வ.35-36)  அப்பொழுதெல்லாம் தேவனுடைய அன்பான மனதுருக்கத்தையும், அவருடைய மன்னிப்பையும் நமக்கு நினைப்புட்டுபவர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு நமக்கும் கிடைக்கும். நாம் செல்லும் இடமெல்லாம் அவருடைய சத்தியத்தையும், அன்பையும் பரவச் செய்யும்போது தேவனுடைய மீட்கும் திட்டத்தில் நாமும் பங்காற்றலாம்.

சொல்லுகிறபடி செய்யுங்கள்

என்னுடைய இளைய மகன் சேவியர், கிண்டர்கார்டனில் படிக்கும்போது நான் என் மகன்களுக்கு வேதாகமத்தை வாசித்துக் காண்பிக்கத் தொடங்கினேன். எங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப வசனங்களைப் பகிரவும், என்னோடு சேர்ந்து ஜெபிக்கவும் அவர்களை ஊக்குவித்தேன். சேவியர் வேதாகமத்தை எளிதாய் மனனம் செய்தான். நாங்கள் இக்கட்டான தருணங்களில் இருக்கும்போது சத்தியத்தை மிளிரச்செய்யும் அவன் நினைவில் வைத்திருக்கும் வேதாகமவசனங்களைக் கூறி எங்களை உற்சாகப்படுத்துவான். 

ஒரு நாள் எனக்கு கோபம் வந்து கடினமாய் பேசினேன். என் மகன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு “நீங்கள் சொல்லுகிறபடி செய்யுங்கள் அம்மா,” என்றான்.

சேவியர் சொன்ன இந்த வார்த்தைகள், யூத விசுவாசிகளுக்கு போதனை செய்த யாக்கோபின் ஞானமான ஆலோசனையை எதிரொலிக்கிறது (யாக்கோபு 1:1). நாம் இயேசுவின் சாட்சிகளாய் இருக்கும்போது, பாவம் பல்வேறு வழிகளில் நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் என்பதை வெளிப்படுத்தி, அவர்களை, “உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் இருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்" (வச. 21) என்று ஊக்கமளிக்கிறார். திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவர்கள், கண்ணாடியிலே தங்கள் முகத்தைப் பார்த்து, அதை உடனே மறந்துவிடுகிறவர்கள் போன்றவர்கள் (வச. 23-24). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டு, அவர் சாயலைத் தரித்தவர்களுக்கென்று கிடைக்கும் சலுகைகளை நாம் இழக்க நேரிடலாம். 

சுவிசேஷத்தை பறைசாற்றுவதற்கு விசுவாசிகளுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். ஆளுமையைத் தருகிறார். நாம் நற்செய்தியைப் பரப்பும் தூதர்களாகவும் முன்னேறுவோம். தேவன் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கேயெல்லாம் நம்முடைய அன்பான தேவனின் சத்தியத்தையும் அன்பையும் வெளிச்சமாய் பிரதிபலிப்போம். நாம் பிரசங்கிப்பதை வாழ்க்கையில் வாழ்ந்தால் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லலாம்.

உறுதியான விசுவாசம்

ஏரிக்கரையின் வடக்கே உள்ள மணற்குன்றால் வீடுகள் புதை மணலால் புதைந்து விடும் அபாயம் இருக்கிறது. குடியிருப்பவர்கள் வீடுகளைப் பாதுகாக்க மண் மேடுகளை அகற்ற முயற்சி செய்தும் பலன் இல்லை. அவர்கள் வீடுகள் மணலில் புதைந்து போவதைக் கண்ணெதிரே காண நேர்ந்தது. சமீபத்தில் துப்புரவு பணியை மேற்பார்வையிட்ட உள்ளூர் ஷெரிப், இதைத் தடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். மணற்குன்றுகள் உறுதியான அடித்தளத்திற்கு ஏற்புடைதல்ல என்பதினால், வீட்டின் சொந்தக்காரர்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பலனில்லை. 

இயேசு, மணல் மீது கட்டும் வீடு வீணான முயற்சி என்றார். இயேசு சீஷர்களிடம் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்து, அன்பின் கீழ்ப்படிதல் ஞானத்தை வெளிப்படுத்தும் என்று உறுதியாய் கூறினார் (மத்தேயு 7:15-23). “இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்" (வச. 24). தேவனின் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26).

நம் சூழ்நிலைகள் புதைமணல் போல வேதனைக்குள்ளும் கவலைக்குள்ளும் நம்மை அழுத்தும்போது, நம் நம்பிக்கையை கிறிஸ்து என்னும் கன்மலையின் மீது நாம் வைக்க முற்படலாம். அவர் தமது மாறாத சுபாவங்களால், அசைக்கமுடியாத அஸ்திபாரத்தை நமக்கு தந்து, நம் உறுதியான விசுவாசம் வளர உதவு செய்கிறார்.

தேவ பிள்ளைகள்

எஸ்தர் தன்னுடைய ஊனமுற்ற மகளுடன் துணிக்கடைக்கு சென்றாள். பில் கவுண்டரின் வரிசையில் நிற்கும்போது, அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த ஒரு நபர், அந்த பிள்ளை ஊனமாயிருப்பதைக் கண்டு மௌனமாய் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். 

இதுபோன்ற நபர்களின் இந்த காயப்படுத்தும் செய்கைகள் எஸ்தருக்கு புதியதல்ல. அவளுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களாலேயே பலவேளைகளில் மனம் உடைந்து போயிருக்கிறாள். இவைகள் அனைத்தும் அவளை ஒரு தாய்மைக்கு சற்று குறைவாய் எண்ணத் தூண்டியது. தன் மகளை தன்னிடமாய் அணைத்து, அக்கடையில் பணத்தைக் கட்டிவிட்டு, தன்னுடைய காருக்குச் சென்றாள். 

காரில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய மகளின் நிமித்தம் நிந்திக்கிறவர்களை மன்னிக்கக்கூடிய இருதயத்தைத் தரும்படிக்கு தேவனிடம் கேட்டாள். அவள் ஒரு தாயாய் தன்னை தகுதியற்றவளாய் எண்ணும் அந்த எண்ணத்தை மேற்கொள்ளும்படி தேவனிடம் விண்ணப்பித்தாள். மேலும் தேவனுக்கு பிரியமான பிள்ளை என்றும் அவளுடைய மெய்யான அங்கீகாரத்தை சார்ந்துகொள்வதற்கும் உதவும்படிக்கு கேட்டாள். 

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே” என்னும் அவர்களின் அழகான வேற்றுமைகளோடு சம மதிப்புமிக்கவர்கள் என்று பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவதற்கு உள்ளாக இணைக்கப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 3:26-29). தேவன் நம்மை விடுவிக்கும்பொருட்டு தன்னுடைய குமாரனை அனுப்பியபோது, அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நாம் ஒரே குடும்பமாக்கப்பட்டுள்ளோம் (4:4-7). நாம் தேவனுடைய சாயலைத் தரித்தவர்கள். மற்றவர்களுடைய கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், பாரபட்சங்கள் ஆகியவைகள் நம்முடைய தரத்தைத் தீர்மானிப்பதில்லை. 

நாம் யார்? நாம் தேவனுடைய பிள்ளைகள். 

மெய்யான அங்கீகாரம்

நான் எடுத்த என்னுடைய சிநேகிதியின் புகைப்படத்தை அவள் பார்த்தாள். அதில் அவளுடைய உடல் உறுப்புகளின் அமைப்பை அவள் ஒரு குறையாகப் பார்த்தாள். நான் அவளை கவனமாய் உற்றுப்பார்க்கும்படி கூறினேன். “சர்வ மகத்துவமுள்ள ராஜாதி ராஜாவின் அழகான மகளை நான் பார்க்கிறேன்” என்று அவளிடம் கூறினேன். “பலபேருடைய வாழ்க்கையை மாற்றியுள்ள தயவுள்ள, தாராளமான, உண்மையான தேவனையும் பிறரையும் நேசிக்கிற ஒருவளை நான் பார்க்கிறேன்” என்றேன். அவளுடைய கண்களில் நீர்சொறிய ஆரம்பித்ததை பார்த்த நான், “உனக்கு ஒரு கிரீடத்தை வாங்கவேண்டும்” என்றேன். அன்று மதியம், அவளுடைய உண்மையான அங்கீகாரத்தை உணர்த்தும்பொருட்டு, என்னுடைய சிநேகிதிக்கு அழகான ஒரு கிரீடத்தை வாங்கினோம். 

நாம் இயேசுவை தனிப்பட்ட விதத்தில் அறியும்போது, அவர் நம்மை அன்பினால் முடிசூட்டி, நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). “அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு” (2:28) விசுவாசத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு பெலப்படுத்துகிறார். அவர் நம்மை இருக்கும்விதமாகவே ஏற்றுக்கொண்டாலும், அவருடைய அன்பு நம்மை சுத்திகரித்து, அவருடைய சாயலுக்கு நம்மை மறுரூபமாக்குகிறது (3:2-3). அவருடைய தேவையை நம் வாழ்க்கையில் அறியச்செய்து, பாவத்திலிருந்து மனந்திரும்புவதற்கு நம்மை பெலப்படுத்துகிறார் (வச. 7-9). அவருடைய சத்தியத்தை நம்முடைய இருதயத்தில் ஒளித்து, அவருடைய ஆவியை நம்முடைய ஜீவியத்தில் பதித்து, அவருக்கு கீழ்படியும் அன்பான வாழ்க்கையை நாம் வாழமுடியும் (வச. 10). 

என்னுடைய சிநேகிதிக்கு தலைப்பாகையோ அல்லது அணிகலனோ அன்று தேவைப்படவில்லை. ஆனால் நாங்கள் தேவனுடைய பிரியமான பிள்ளைகள் என்பதை அன்று நினைவுகூர்ந்தோம். 

நம்பிக்கையை பகிர்தல்

தேவனுடைய பிரியமான பிள்ளையாய், அவளுடைய அங்கீகாரத்தை சாந்தி பெற்றுக்கொள்வதற்கு தேவன் அவளுக்கு எப்படி உதவிசெய்தார் என்று விளக்குவதற்கு, உரையாடலில் வேதவாக்கியத்தை மேற்கோள் காண்பித்தாள். தன்னுடைய வார்த்தைகளை நிறுத்தி, தேவனுடைய வார்த்தைகளை மேற்கோள் காண்பித்த இந்த பள்ளி மாணவி பயன்படுத்திய வசனங்கள் எனக்கே தடுமாற்றமாயிருந்தது. அவளை நடமாடும் வேதாகமம் என்று நான் பாராட்டியபோது அவளின் புருவம் உயர்ந்தது. அவள் யோசித்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை. அன்றாடம் வேதம் வாசிப்பதினால் அவளுடைய பேச்சில் வேத வாக்கியங்கள் இரண்டற கலந்துவிட்டது. தேவனுடைய நிலையான பிரசன்னத்தில் மகிழ்ந்த அவள், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சத்தியத்தை பிரகடனப்படுத்த பயன்படுத்திக்கொண்டாள். வேதத்தை ஜெபத்தோடு வாசிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும், வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தவும் தேவன் பயன்படுத்திய வாலிப பிள்ளைகளில் சாந்தி முதலாவது நபர் இல்லை.     

தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தி தலைமைத்துவத்தில் அடியெடுத்து வைக்கத் தூண்டிய பவுல் அவர் மீதான நம்பிக்கையைப் பிரதிபலித்தார் (1 தீமோத்தேயு 4:11-16). தீமோத்தேயு சிறுபிராயத்திலிருந்தே வேதத்தில் உறுதியான அஸ்திபாரத்தை ஸ்தாபித்திருந்தார் என்று பவுல் பதிவுசெய்கிறார் (2 தீமோ. 3:15). பவுலைப் போலவே தீமோத்தேயுவும் சந்தேகத்தினால் சோதிக்கப்பட்டார். ஆனாலும் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று இருவரும் நம்பினர். “அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அவர்கள் உணர்ந்தனர் (2 தீமோ. 3:16-17). 

தேவனுடைய ஞானத்தை நம்முடைய இருதயத்தில் புதைத்து வைத்தால், நம்முடைய இயல்பான பேச்சில் அவருடைய சத்தியமும் அன்பும் வெளிப்படும். அப்போதே, தேவனுடைய நித்திய நம்பிக்கையை செல்லுமிடமெல்லாம் பறைசாற்றும் நடமாடும் வேதாகமமாய் நாம் இருக்கமுடியும்.

சேவை செய்ய வாழுங்கள்

பத்து வயது நிரம்பிய செல்சியா ஓர் அழகான ஓவிய பெட்டகத்தை பரிசாகப் பெற்றாள். அவள் சோகமாயிருக்கும்போது ஓவியம் தீட்டுவதின் மூலம் அவள் மகிழ்ச்சியடைந்தாள். ஆகையினால் இந்த ஓவியப் பொருட்களை வாங்க முடியாத மற்ற பிள்ளைகளுக்கு அதை பரிசளிக்க எண்ணினாள். அவளுடைய பிறந்தநாள் வந்தபோது, அவளுடைய நண்பர்களிடம் தனக்கு பரிசுப்பொருட்களை கொடுக்கவேண்டாம், அதற்கு பதிலாக தேவையுள்ள பிள்ளைகளுக்கான ஓவியப் பொருட்களைக் கொண்டு பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள். 

சில நாட்களில், தன் குடும்பத்தினரின் உதவியோடு செல்சியா தொண்டு நிறுவனத்தைத் துவங்கினாள். தேவையிலுள்ள பிள்ளைகளுக்கு உதவும்பொருட்டு அநேகரிடத்தில் அந்த பெட்டகத்தை நிரப்பும்படிக்கு கேட்டுக்கொண்டாள். அவளிடத்திலிருந்து ஓவியப் பொருட்களை பெறும் பிள்ளைகளுக்கு ஓவியம் தீட்டும் அறிவுரைகளையும் அவ்வப்போது கொடுத்தாள். ஓரு செய்தித்தொடர்பாளர் செல்சியாவை பேட்டியெடுத்து ஒளிபரப்பிய பின், உலக நாடுகளிலிருந்தும் அவளுக்கு உதவி வரத் துவங்கியது. செல்சியாவின் தரும காரியங்கள் மற்ற நாடுகளை சென்றடைந்தது. சேவை செய்ய விரும்பினால் தேவன் நம்மைப் பயன்படுத்துவார் என்பதற்கு இந்த சிறு பிள்ளை ஓர் அழகான உதாரணம்.

செல்சியாவின் கரிசனையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையும் ஓர் உண்மையான உக்கிராணக்காரனின் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது. தேவன் தங்களுக்குக் கொடுத்த பொருட்களையும் வரங்களையும் கொண்டு இயேசுவுக்கு உண்மையான உக்கிராணக்காரனாய் “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” (1பேதுரு 4:8-11) என்று அப்போஸ்தலர் பேதுரு அறிவுறுத்துகிறார். 

அன்பைப் பிரதிபலிக்கும் நம்முடைய சிறிய செயல்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும். அதற்கான ஆதரவாளர்களை தேவன் நம் பின்னே அணிவகுக்கும்படி செய்வார். நாம் தேவனை சார்ந்துகொள்ளும்போது சேவை செய்யும் வாழ்க்கை வாழ்ந்து தேவனுக்கு மகிமையை செலுத்தமுடியும். 

நாம் எங்கே ஆராதித்தாலும்

கடுமையான வலியும், என்னை பலவீனப்படுத்துகிற தலைவலியும் உள்ளுர் சபை ஆராதனையில் மீண்டும் பங்கு பெற விடாமல் என்னைத் தடுத்தது. ஆராதனைக்குப் போக முடியவில்லையே என்ற வேதனையுடன் இணையதளத்தில் பிரசங்கத்தைக் கேட்டேன். துவக்கத்தில் அதை ஒரு குறையாகவே எண்ணினேன். காணொலியில் வந்த ஒளியும் ஒலியும் என் கவனத்தை சிதைத்தது. அதன்பின்பு அந்த காணொலியில் பரீட்சயமான ஒரு பாடல் பாடப்பட்டது. அதை சேர்ந்து பாடும்போது என் கண்களில் கண்ணீர் வடிந்தது: “ஓ தேவனே என் இருதயத்தின் பார்வையாயிரும், நீரே எனக்கு பெலனாயிரும், இரவும் பகலும் என் எண்ணங்களில் நீர் இரும், எழுந்தாலும் படுத்தாலும் உம் பிரசன்னமே என் ஒளி.” தேவனுடைய நிலையான பிரசன்னம் என்னும் பரிசை உணர்ந்து, என் அறையில் அமர்ந்து கொண்டு அவரை நான் ஆராதித்தேன்.

கூடி ஆராதிக்கும் திருச்சபை ஆராதனையை வேதம் முக்கியத்துவப்படுத்தினாலும் (எபிரெயர் 10:25), திருச்சபையின் சுவர்களுக்குள் தேவனை அடைக்க முடியாது. சமாரிய ஸ்திரீயுடன் கிணற்றண்டையில் அமர்ந்து இயேசு பேசியபோது, அவர் மேசியாவின் வரம்பை மீறுகிறார் (யோவான் 4:9) என்று எண்ணப்பட்டது. கண்டன செய்தியை அறிவிப்பதற்கு பதிலாக, கிணற்றண்டை நிற்பவளிடம் பேசி அவளை நேசித்தார் (வச.10). தேவனுடைய பிள்ளைகளைக் குறித்த கர்த்தருடைய அறிவை அவர் வெளிப்படுத்தினார் (வச.17-18). தன் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தி, குறிப்பிட்ட இடத்திலிருந்து அல்லாமல், கர்த்தருடைய பிள்ளைகளின் இருதயத்திலிருந்தே உண்மையான ஆராதனையை பரிசுத்த ஆவியானவர் தூண்டுகிறார் என்று இயேசு அறிவிக்கிறார் (வச. 23-24). 

தேவன் யார் என்பதையும், அவரின் மகத்துவங்களையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் நாம் நினைக்கும்போது அவருடைய தொடர்ச்சியான தெய்வீக பிரசன்னத்தை நாம் உணர முடியும். மற்றவர்களோடு சேர்ந்தோ, அல்லது தனி அறையிலோ, எங்கு ஆராதித்தாலும் இந்த தேவப் பிரசன்னத்தை நாம் உணர முடியும்.

நாம் உணருகிறோம் என்று தேவன் அறிவார்

சிம்ரா, தன்னுடைய மகன் அடிமைத்தனத்தோடு போராடுவதைக் கண்டு மிகவும் துக்கமடைந்தாள். “நான் மோசமாக உணர்கிறேன், நான் ஜெபிக்கும்போது என் அழுகையை நிறுத்த முடியாததால் எனக்கு விசுவாசம் இல்லையென்று தேவன் நினைக்கிறாரா?” “தேவன் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையான உணர்ச்சிகளை தேவன் கையாளமுடியும் என்று எனக்குத் தெரியும். நாம் நினைக்கிறது அவருக்குத் தெரியாது என்பது போல அல்ல” என்று நான் கூறினேன். நான் சிம்ராவுடன் சேர்ந்து அவளுடைய மகனின் விடுதலைக்காக கண்ணீரோடு மன்றாடி ஜெபித்தோம்.

தங்கள் போராட்டங்களில் தேவனோடு மல்லுகட்டும் அநேகருடைய எடுத்துக்காட்டுகள் வேதத்தில் உள்ளது. தேவனுடைய நிலையான மற்றும் வல்லமையான பிரசன்னத்தின் சமாதானத்துக்காக தன்னுடைய ஆழ்ந்த ஏக்கத்தை சங்கீதம் 42ஐ எழுதியவர் வெளிப்படுத்துகிறார். அவர் சகித்துக்கொண்ட துயரத்தினால் ஏற்பட்ட கண்ணீரையும் மனச்சோர்வையும் ஒப்புக்கொள்ளுகிறார். தேவனுடைய உண்மைத் தன்மையை நினைக்கும்போது அவர் உள்ளத்தில் இருக்கும் குழப்பம், நம்பிக்கையின் துதியாக வெளியே ஊற்றப்படுகிறது. தன்னுடைய “ஆத்துமாவை” உற்சாகப்படுத்த சங்கீதக்காரன் “தேவனை நோக்கி காத்திரு. என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்” (வச. 11) என்று எழுதுகிறார். தேவனைப் பற்றி அவர் அறிந்துக்கொண்டது உண்மைக்கும், மறுக்கமுடியாத அவருடைய உணர்ச்சிகளின் யதார்தத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக இழுக்கப்படுகிறார். 

தேவன் நம்மை அவருடைய சாயலாகவும், உணர்ச்சிகளுடனும் வடிவமைத்திருக்கிறார். மற்றவர்களுக்காக நாம் சிந்தும் கண்ணீர் - நமக்கு விசுவாமில்லாததால் அல்ல; மாறாக, ஆழ்ந்த அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. நமக்கு உணர்ச்சிகள் இருக்கிறது என்று தேவன் அறிந்திருப்பதால், நாம் மூல காயங்களுடனும், பழைய தழும்புகளுடனும் அவரை அணுகலாம். ஓவ்வொரு ஜெபமும், அமைதியானதாக இருந்தாலும், கண்ணீருடனாயிருந்தாலும், நம்பிக்கையோடு கூச்சலிட்டாலும், அவர் நம்மைக் கேட்டு, விசாரிக்கிறவர் என்ற வாக்குத்தத்தத்தை, நம்பிக்கையோடு வெளிப்படுத்துகிறது.