எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

சமாதானம் பண்ணுதல்

இன்று நம் உலகம் இருக்கிற நிலையை விவாகரத்து மிகச்சரியாக எடுத்துக்காட்டுவதாக லுக் அன்ட் ஸீ: எ போர்ட்ரைட் ஆஃப் வென்டல் பெரி என்கிற ஆவணப்படத்தில், அதன் ஆசிரியரான பெரி வலியுறுத்துகிறார். நாம் மற்றவர்களிடமிருந்தும், நம் வரலாற்றிடமிருந்தும், நம் தேசத்திடமிருந்தும் விவாகரத்தான நிலையில்தான் இருக்கிறோம். ஒன்று சேர்ந்து இருக்கவேண்டியவை பிரிந்து நிற்கின்றன. இந்த மோசமான உண்மையைச் சரிசெய்வதற்கு என்ன செய்யலாம் என்று பெரியிடம் கேட்டபோது, “எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றுசேர்த்துவிட முடியாது. இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றைச் சேர்க்கலாம்” என்று சொன்னார். பிரிந்துகிடக்கிற இரண்டு விஷயங்களை எடுத்து, அவற்றை மீண்டும் ஒன்றாகச் சேர்க்கலாம்.

“சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொல்கிறார் (மத். 5:9). சமாதானத்தைக் கொண்டுவருவதுதான் ஷலோம். உலகத்தை மீண்டும் சரிசெய்கிற ஒரு நிலையை ஷலோம் சுட்டிக்காட்டுகிறது. ஷலோம் என்றால், “இப்பிரபஞ்சம் செழித்து, ஒன்றுபட்டு, மகிழ்ச்சி
நிறைந்திருப்பதாகும்... அப்படித்தான் எல்லாமே இருக்கவேண்டும்” என்று இறையியல் வல்லுனர் ஒருவர் கூறுகிறார். உடைந்துபோன ஒன்றை எடுத்து, மீண்டும் சரிபடுத்துவதுதான் ஷலோம். இயேசு வழிகாட்டுவதுபோல, காரியங்களைச் சரிசெய்வதற்கு நாம் பிரயாசப்படுவோம். நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கவும், “பூமிக்கு உப்பாக” இருக்கவும், “உலகத்திற்கு வெளிச்சமாக” இருக்கவும் அவர் நம்மை அழைக்கிறார் (வச. 13-14).

உலகத்தில் சமாதானம் பண்ணுகிறவர்களாக விளங்குவதற்கு அநேக வழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் பிரிவை வெல்லுபவர்களாக இருக்கவேண்டுமே தவிர, பிரிவை உண்டாக்குபவர்களாக இருந்துவிடக்கூடாது. நட்பு முறிந்துபோகவோ, வாழ்வதற்கே திண்டாடிவரும் அக்கம்பக்கத்தார் ஒருவர் முடங்கிப்போவதற்கோ, தைரியமிழப்பதற்கோ தனிமைப்படுவதற்கோ விடமாட்டேன் என்று தேவனுடைய வல்லமையால் நாம் தீர்மானம் எடுக்கவேண்டும். எங்கெல்லாம் பிரிவு நுழைந்திருக்கிறதெனப் பார்ப்போம், பிரிவை அகற்றி மீண்டும் சரிசெய்வதற்கு தேவன் ஞானத்தைத் தருவாரென்கிற நம்பிக்கையோடு அதைச் சரிசெய்ய முயல்வோம்.

தேவனே உயர்ந்து நிற்கிறார்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாவலரான கைல்ஸ் கெல்மேன்சன் தான் கண்ட நம்புவதற்கரிய ஒரு காட்சிபற்றிக் கூறினார். அதாவது, ஆறு சிங்கங்களை எதிர்த்து இரண்டு தேன்வளைக் கரடிகள் (பேட்ஜர்) சண்டையிட்டனவாம். சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தங்களைவிட பத்துமடங்கு பெரிய உருவமுள்ள கொடிய சிங்கங்களிடமிருந்து அவை பின்வாங்கவில்லை. சிங்கங்கள் அவை இரண்டையும் எளிதில் கொன்றுவிட நினைத்திருக்கலாம்; ஆனால் சண்டையின் முடிவில் வீரநடை போட்டு பேட்ஜர்கள் சென்றதை வீடியோ காட்சி காட்டியது.

தாவீது-கோலியாத் சம்பவமும் நம்பமுடியாத ஒரு சம்பவம்தான். அனுபவமற்ற வாலிபனான தாவீது கொடிய பெலிஸ்தனான கோலியாத்துடன் மோதினார். இந்த இளம் வீரனைவிட கோலியாத் உயரமானவன்; பயங்கரமான பெலசாலி; யாரிடமும் இல்லாத ஆயுதம் அவனிடம் இருந்தது; அதாவது வெண்கல கேடகம், கூரான வெண்கல ஈட்டி (1 சாமு. 17:5-6). ஆனால் தாவீது சாதாரண மேய்ப்பன். தன் சகோதரர்களுக்காக அப்பங்களையும் பால்கட்டிகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் போர்க்களத்திற்குச் சென்றிருந்தார். வசனங்கள் 17-18. ஒரு கவண் மட்டுமே அவரிடம் இருந்தது.

கோலியாத் இஸ்ரவேலரை யுத்தத்திற்கு அழைத்தான். ஆனால் அவனோடு யுத்தம் செய்ய யாரும் தயாராக இல்லை. சவுல் ராஜாவும் “இஸ்ரவேல் அனைவரும் ... கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்” (வச. 11). தாவீது களத்தில் குதித்தபோது எவ்வளவுக்கு அதிர்ந்து போயிருப்பார்கள்! அனுபவசாலிகளான இஸ்ரவேலின் போர்வீரர்களுக்கு இல்லாத தைரியம் தாவீதுக்கு எவ்வாறு வந்தது? அங்கிருந்த அனைவருமே கோலியாத்தைத் தான் பார்த்தார்கள். ஆனால் தாவீது தேவனைப் பார்த்தார். “கர்த்தர் உன்னை (கோலியாத்தை) என் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று ஆணித்தரமாகச் சொன்னார். (வச. 46). அங்கே எல்லாமே கோலியாத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அனைவரும் நினைத்தார்கள், ஆனால் தேவன்தாம் அங்கு உயர்ந்து நிற்பதாக தாவீது நம்பினார். கவணில் கல்லை வைத்து அந்த ராட்சதனின் நெற்றியில் அடித்து வீழ்த்தி, தன் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபித்தார்.

எல்லாமே “கோலியாத்தின்” (நம் பிரச்சனைகளின்) கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் தேவனே உயர்ந்தவர். நம் வாழ்க்கை அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

துன்பங்களை நீக்குவார்

பயங்கர கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார் மேரி அன் ஃபிரான்கோ. விபத்திலிருந்து உயிர்பிழைத்தாலும் கண்பார்வை முற்றிலும் பறிபோனது. “அதன்பிறகு இருளைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை” என்று ஃபிரான்கோ சொன்னார். இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு, ஒரு சமயம் அவர் கீழே விழுந்ததில் அவருடைய முதுகில் அடிபட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் (கண் சம்பந்தமாக எந்தச் சிகிச்சையும் செய்யவில்லை.) அற்புதம் என்ன வென்றால், அவருடைய கண்பார்வை திரும்பக் கிடைத்தது! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முதன்முதலாக அப்போதுதான் தன் மகளுடைய முகத்தை அவர் பார்த்தார். ஃபிரான்கோவுக்கு எவ்வாறு பார்வை திரும்பக்கிடைத்தது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலில்லை என்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர். இறுதியாக இருள் அகன்று, வெளிச்சத்தையும் அழகையும் அவரால் கண்டு ரசிக்கமுடிந்தது.

அறியாமை மற்றும் தீமையின் ஒரு மேகம் இந்த உலகத்தை மூடியுள்ளது; நாம் யாருமே தேவ அன்பைக் காணமுடியாதபடி அது செய்கிறது. ஏசா 25:7. இதை வேத வசனங்களும் சொல்லுகின்றன; நம்முடைய அனுபவத்திலும் காண்கிறோம். சுயநலம், பேராசை, சுயநிறைவு சிந்தை, அதிகாரம் மற்றும் புகழுக்கான பேராசை போன்றவை நம் பார்வையை மங்கச் செய்கின்றன; சத்தியமானவரும் மாறாதவருமான, “அதிசயமானவைகளைச் செய்த” தேவனை தெளிவாகப்பார்க்க முடியாதபடி செய்கின்றன. வசனம் 1.

'மூடியிருக்கிற மூடல்" என்கிற வார்த்தைகள் பொதுமொழிபெயர்ப்பில் 'துன்பத்துகில்" என்று உள்ளது. தனியே விடப்பட்டால் நாம் அந்தகாரத்தையும் குழப்பத்தையும் விரக்தியையும் மட்டுமே அனுபவிக்கிறோம். எதிலோ சிக்கிக்கொண்ட உணர்வும்தான் பெரும்பாலும் நம்மில் தடுமாற்றமும், காணப்படுகிறது; நமக்கு முன்னிருக்கும் பாதையை நாம் பார்க்கமுடிவதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவன் இறுதியாக 'சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலை... அகற்றிப் போடுவார்" என்று ஏசாயா சொல்கிறார் (வச. 7).

தேவன் நம்பிக்கையற்றவர்களாக நம்மை விடமாட்டார். நம் பார்வையை மறைக்கிற எதையும் அவருடைய பேரன்பு அகற்றி, நன்மையான வாழ்க்கையும் பரிபூரண கிருபையும் நமக்கிருப்பதைக் காண்பித்து, ஆச்சரியமூட்டுவார்.

தைரியமாயிருக்க அழைப்பு

உபவாசத்தின் உட்கருத்து

எதிர்பாராத வெற்றியாளர்கள்

2018ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் மிகவும் எதிர்பாரததும், அனைவரையும் வாயடைத்து நிற்கச்செய்த காரியம் என்னவெனில், செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த உலக வீராங்கனை எஸ்தர் லீடெக்கா மிகவும் வித்தியாசமான ஒரு விளையாட்டில் வெற்றி பெற்றாள். அது பனிச் சறுக்கல்! அதில் அவள் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றாள். யாராலும் செய்ய முடியதென கருதியிருந்த ஒரு போட்டியில், பனிக்சறுக்கலில் 26வது வீராங்கனையாக களமிறங்கிய அவள், நம்ப முடியாத அளவு முன்னிலைப் பெற்றாள்.

லீடெக்கா பெண்களுக்கான சூப்பர்-ஜி சறுக்கலுக்கும் வியத்தகு வகையில் தேர்வு செய்யப்பட்டாள். இந்த விளையாட்டு கீழ் நோக்கிய சறுக்கலையும், தடை சறுக்கலையும் உள்ளடக்கியது. இதில் அவள் தான் கடனாக வாங்கிய சறுக்குப் பலகைகளோடு .01 வினாடி முன்னிலையில் வெற்றி பெற்றாள். அங்கிருந்த செய்தியாளர்களும், பிற வீரர்களும் வேறு சில பிரசித்தி பெற்ற பனிசறுக்கர்களையே வெற்றிபெற  எதிர்பார்த்திருக்க லீடெக்கா அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தாள்.

உலகம் எதிர்பார்ப்பது இப்படித்தான். வெற்றி பெறுபவர்களே மேலும் வெற்றி பெறுவர் என்றும், மற்றவர்கள் தோற்றுவிடுவர் என்று தான் உலகம் எதிர்பார்க்கும், இயேசு, “ஐசுரியவான் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது அரிதென்று… (மத். 19:23) சொன்ன போது, அவருடைய சீடர்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. இயேசு எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுகின்றார். ஐசுரியவான் (வெற்றி பெற்றவன்) எப்படி ஒரு தடைக் கல்லாக இருக்க முடியும்? நாம் பெற்றிருப்பவற்றின் மீது நம்பிக்கையை வைக்கும் போது, நம்மால் எதைச் செய்யமுடியுமோ அல்லது நாம் எப்படியிருக்கின்றோமோ அதன் மீது நம்பிக்கையை வைக்கும் போது தேவன் மீது நம்பிக்கையை வைப்பது கடினமானது மட்டுமல்ல, இயலாததாகவும் மாறி விடுகின்றது.

தேவனுடைய இராஜ்ஜியம் நம்முடைய சட்ட திட்டங்களின்படி செயல்படுவதல்ல. “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள்” (வச. 30). நீ முதலிலோ அல்லது கடைசியிலோ எங்கிருந்தாலும், தேவனுடைய கிருபையினாலேயே நாம் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்கின்றோம் என்பதே உண்மை அது, தகுதியற்ற நமக்கு தேவனால் அருளப்பட்ட கிருபை.

அநியாயத்தின் பாரத்தை சுமத்தல்

குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, 38 வருடங்களுக்குப் பின், 2018 ஜனவரி 30 ஆம் நாள் மால்கம் அலெக்சாண்டர் சிறைச்சாலையை விட்டு சுதந்திர மனிதனாக வெளியே நடந்தார். டி.என்.எ சாட்சிகள் அலெக்சாண்டரை குற்றவாளியல்லவென்று காண்பிக்க, தொடர்ந்து தான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டரின் வாக்குகளின் மத்தியில் வெளியான அனைத்து நீதிமன்ற செயல்களும் அவருக்கு எதிராக அநீதியாக தீர்ப்பிட்டன. குற்றவாளியின் சார்பாக செயல்பட்ட திறமையற்ற அரசு வழக்கறிஞர்கள், ஜோடிக்கப்பட்ட சாட்சிகள், சந்தேகத்தைக் கொண்டுவரும் விசாரனை யுக்திகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதனை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் சிறையிலடைத்தது. கடைசியாக விடுதலைப்பெற்று வெளிவந்த போது, அலெக்சாண்டர் அளவிடமுடியாத கருணையைக் காண்பித்தார். 'நீ கோபத்தோடிருக்கக்கூடாது. இன்னும் கோபத்தோடிருக்க போதிய காலமில்லை" என கூறிக்கொண்டார்.

அலெக்சாண்டரின் வார்த்தைகள் ஆழ்ந்த கருணையின் வார்த்தைகள். அநீதி அவருடைய முப்பதெட்டு ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டது. அவருடைய பாரம்பரியத்தை கொன்றுவிட்டது. அப்படியாயின் நாம் கோபத்தோடும், வெறியோடுமல்லவா இருக்கவேண்டும். அலெக்சாண்டர் தன்மீது திணிக்கப்பட்ட குற்றங்களை சுமந்து, உள்ளம் உடைக்கப்பட்டவராக அநேக ஆண்டுகளைக் கழிக்க நேரிட்ட போதிலும், அவர் தீமையினால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய முழு பெலத்தையும் பழிவாங்கும்படி செலவிடாமல், பேதுரு கூறிய நிலையை வெளிப்படுத்துகின்றார். 'தீமைக்கு தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்" என்பதை செயலில் காட்டினார் (1 பேது. 3:9).

வேதாகமம் இன்னும் ஒருபடி மேலேயே கூறுகின்றது. பழிவாங்கலுக்குப் பதிலாக ஆசீர்வதியுங்கள் (வச. 9) எனக் கூறுகின்றது. நமக்கு அநீதியாக தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பையும், நல்வாழ்விற்கான நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் தீய செயல்களை காரணம் காட்டாமல், நம்முடைய குற்றங்களை இயேசு சிலுவையில் சுமந்ததாலேயே நாம் தேவ இரக்கத்தைப் பெற்றுள்ளோம். நாமும் அந்த இரக்கத்தைப் பிறருக்குக் காட்டுவோம். நமக்கு அநீதியிழைத்தவருக்கும் காட்டுவோம்.

தைரியமாக நில்

ஜெர்மனியின் அநேக தேவாலயங்களின் தலைவர்கள் ஹிட்லருக்குச் சாதகமாக செயல்பட்ட போதும், வேத வல்லுநரும், போதகருமான மார்டின் நிமோலெர் என்பவர் நாசிக் கட்சியின் கொடுமைகளை எதிர்த்து நின்ற தைரியசாலிகளோடிருந்தார். நான் வாசித்ததில் 1970ல் மூத்த ஜெர்மானியர் ஒரு கூட்டமாக, ஒரு பெரிய விடுதியின் முன் நின்றுகொண்டிருக்க, ஓர் இளைஞன் அந்தக் குழுவின் சார்பாக பேசிக் கொண்டிருந்தார். ஒருவர், 'யார் அந்தக் குழுவினர்?" எனக் கேட்டபோது, 'ஜெர்மானிய போதகர்கள்" என பதில் வந்தது. 'அந்த இளைஞன் யார்?" என்று கேட்டபோது அது மார்டின் நிமோலெர், அவருக்கு வயது எண்பது என்றனர். ஆனால், அவர் இளமைத் துடிப்போடிருந்தார். ஏனெனில், அவரிடம் பயமில்லை.

நிமோலெருக்கு பயத்தை எதிர்த்து பெரிய, பயமற்ற மனிதனுக்கப்பாற்பட்ட வல்லமையிருந்தது. அது தேவனுடைய கிருபையே. உண்மையில் அவர் ஆரம்பத்தில் யூதருக்கு விரோதமான எண்ணங்களையே கொண்டிருந்தார். ஆனால், அவர் மனந்திரும்பியபோது தேவன் அவரை மீட்டுக் கொண்டார். அவர் உண்மைக்காக தைரியமாகப் பேசும்படிக்கு அவருக்கு தேவன் உதவினார்.

இஸ்ரவேலரும் பயத்தை மேற்கொண்டு தேவனை உண்மையாய் தொடரும்படி, அவர்களுக்கு மோசே ஊக்கமளிக்கின்றார். மோசேயும் அவர்களை விட்டு எடுபட்டு விடுவார் என அவர்கள் கேள்விப்பட்ட போது, அவர்கள் பயத்தால் பின் வாங்காதபடி அவர்களுக்கு மோசே, 'நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்" (உபா. 31:6) என தைரியப்படுத்துகின்றார். இஸ்ரவேலர் தங்கள்

எதிர்காலத்தைக் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தேவன் அவர்களோடிருக்கின்றார்.

எத்தகைய இருள் உன்னைச் சூழ்ந்துகொண்டாலும், எத்தனை பயங்கரம் உன்னைத் தாக்கினாலும் தேவன் உன்னோடிருக்கின்றார். தேவனுடைய கிருபையால் நீ பயத்தை மேற்கொள்வாய். ஏனெனில் 'தேவன் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (வச. 6,8).

தவறான தகவல்களைச் செயல்படுத்தாதே

சமீபத்தில் நான் நியூயார்க் பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, என் மனைவியும் நானும் ஒரு பனிபொழிவின் சாயங்காலத்தில், தைரியமாக அதனூடே செல்ல விரும்பினோம். எனவே நாங்கள் எங்கள் விடுதியிலிருந்து கியூபன் சிற்றுண்டியகம் வரையிலும் மூன்று மைல் பயணத்திற்கு ஒரு வாடகை கார் ஒன்றினை எடுத்தோம். வாடகைக் கார் சேவை பதிவில் விளக்கங்களைப் பார்த்த போது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சிறிய தொலைவு பயணத்திற்கு 1547.26 டாலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மேலும் பார்த்த போது தான், நான் தவறுதலாக எங்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு எனப் பதித்திருந்ததைக் கவனித்தேன். அது பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடம்!

நீ தவறான செய்தியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்தால் அதன் முடிவு எப்பொழுதும் அழிவுக்கு நேராகத்தானிருக்கும். எனவேதான் நீதிமொழிகள், 'உன் இருதயத்தை புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக" என வலியுறுத்துகின்றது (நீதி. 23:12). அறிவிலிகளிடமும், தங்களுக்கு அதிகம் தெரியுமென நடிப்பவர்களிடமும், தேவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுபவர்களிடமும் ஆலோசனையைத் தேடுவாயானால், நிச்சயமாகப் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். 'மூடன்... உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்" (வச. 9) அவர்கள் நம்மை வழிவிலகிப்போகப் பண்ணுவார்கள், உதவமாட்டார்கள், தவறாக வழிகாட்டுவார்கள், இன்னும் அழிவுக்குள்ளாக்கும் ஆலோசனைகளையே தருவர்.

ஆனால், உன் செவியை 'அறிவின் வார்த்தைகளுக்குச் சாய்ப்பாயாக" (வச. 12) நம்முடைய இருதயத்தை தேவனுடைய விடுதலை தரும் ஆலோசனைகளுக்கும் தெளிந்த நம்பிக்கையின் வார்த்தைகளுக்கும் திறபப்பாயாக. தேவனுடைய ஆழமான வழியைக் கண்டுபிடித்தவர்களுக்கு செவி கொடுப்போமாகில் அவர்கள் நம்மை தேவ ஞானத்தைப் பெறவும், அதனைப் பின்பற்றவும் உதவுவர். தேவ ஞானம் ஒரு போதும் நம்மை பாதை தவற விடாது. ஆனால், அது நம்மை ஜீவனுக்கு நேராகச் செல்ல ஊக்கப்படுத்தி, முடிவுபரியந்தம் வழிநடத்தும்.

தேவக்கிருபையில் மூழ்குதல்

கடைசியாக ஜனவரி 8 ஆம் தேதி 1964 ஆம் ஆண்டு பதினேழு வயது நிரம்பிய ராண்டி கார்ட்னர் பதினொரு நாள், இருபத்தைந்து நிமிடங்கள் தான் செய்யாத ஒன்றைச் செய்தான். அவன் தலை சாய்த்துத் தூங்கினான். அவன் கின்னெஸ் புத்தகத்தின் உலகப் பதிவை முறியடிக்க விரும்பினான். ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியமென காட்ட விரும்பினான். மென் பானங்களைக் குடித்தும், மைதானத்தில் பந்து விளையாடியும் பந்து வீசியும், கார்ட்னர் ஒன்றரை வாரத்திற்குத் தூக்கத்தை தள்ளி வைத்தான். கடைசியாக, அவன் நிலை குலைந்து போவதற்கு முன்பாக, அவனுடைய சுவை உணர்வு, நுகர்வு, கேட்கும் திறன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக இழந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் வன்மையான தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டான். அவன் உலகப் பதிவை நிர்ணயித்தான். அத்தோடு மனிதனுக்கு தூக்கம் மிக அவசியம் என்பதை உறுதிப்படுத்தினான்.

நம்மில் அநேகர் நிம்மதியான தூக்கத்தைப் பெற போராடுகின்றோம். கார்ட்னர் தன்னுடைய தூக்கத்தை வேண்டுமென்றே தடுத்துக் கொண்டதைப் போலல்லாமல், அநேக பல காரணங்களால் தூங்க முடியாமல் தவிக்கின்றோம். மலைபோல பதட்டங்கள், நாம் அடைய முயற்சிப்பதைக் குறித்த பயம், பிறருடைய எதிர்பார்ப்புகளின் மீது பயம், என பலவகையான கவலைகளால் நடுக்கத்தோடு வாழ்கின்றோம். இந்தக் கவலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு நிம்மதியாக ஓய்வெடுப்பது என்பது இயலாததாகிவிடுகின்றது.

'கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா" என சங்கீதக்காரன் (சங். 127:1). நம்முடைய வீணான முயற்சிகளைக் குறித்து கூறுகின்றார். தேவன் நம்முடைய தேவைகளுக்குத் தராவிடில், நம்முடைய கடின உழைப்பும், கொடுமையான முயற்சிகளும் வீணானவை. ஆனால், தேவன் நம் தேவைகளுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பதால் நன்றி சொல்லுவோம். அவர் 'தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையளிக்கின்றார்" (வச. 2). தேவனுடைய அன்பு நம்மனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது. நம்முடைய பதட்டங்களையெல்லாம் தேவனிடம் கொடுத்து விட்டு, அவர் தரும் இளைப்பாறலிலும், கிருபையிலும் அமர்ந்திருக்குமாறு தேவன் நம்மை அழைக்கின்றார்.