எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

வீட்டிற்கு திரும்புவோம்

ராணுவ வீரரான வால்டர் டிக்சன் தன் திருமணம் முடிந்து ஐந்து நாளில் போருக்கு திரும்ப சென்றுவிட்டார். சில மாதங்களில் தன் மனைவியின் கடிதங்கள் நிறைந்த அவரது மேலுறையை போர்க்களத்தில் கண்டுபிடித்தார்கள். இதனிமித்தமாக ராணுவ அதிகாரிகள் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரின் மனைவியிடம் தகவல் தெரிவித்தார்கள். ஆனால் இரண்டரை வருடங்களாக அவர் போர்கைதியாக சிறைபிடிக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு நிமிடமும் தப்பிப்பதைகுறித்து சிந்தித்துகொண்டிருப்பார். ஐந்து முறை தப்பிக்க முயற்சி செய்த போதும் மறுபடியும் பிடிக்கப்பட்டார். இறுதியில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் வீடு திரும்பும்போது அனைவருடைய அதிர்ச்சியை நினைத்து பாருங்கள்.

சிறைபிடிக்கப்பட்டு, வீட்டிலிருந்து தூரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதின் கஷ்டம் தேவ பிள்ளைகளுக்கு தெரியும். அவர்கள் தேவனுக்கு எதிர்த்து நின்றது நிமித்தம் நாடுகடத்தப்பட்டார்கள். அனுதினமும் காலையில் எழுந்து வீடுதிரும்ப வேண்டும் என்று ஏங்கினார்கள், ஆனால் அவர்கள் தப்பிப்போகும்படி அவர்களுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை. ஆனால் தேவனோ அவர்களை மறக்கவில்லை என்று அவர்களுக்கு வாக்குத்தத்தம் கூறினார் "அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்"(சகரியா 10: 6). அவர்களின் வீடாமுயற்சியினால் அல்ல, கர்த்தரே  அவருடைய இரகத்தினால் அவர்களுடைய தேவையை சந்தித்தார் "நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்.....தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள்" (வச. 8,9).

சில சமயங்களில் நம் பாவத்தினாலேயோ அல்லது கடினமான சூழ்நிலைகளில் நாம் தேவனிடமிருந்து மிகவும் தூரம் சென்றது போல் தோன்றினாலும் அவர் நம்மை மறப்பதில்லை என்பது நிச்சயம். நம் வாஞ்சைகளை அவர் அறிவார், அதை அறிந்து நம்மை அழைப்பார். அதற்கு நாம் செவிகொடுப்போமானால் அவர் இருக்கும் இடமாகிய நம் வீட்டிற்க்கு திரும்புவோம்.

தேவன் நம்மை தாங்குகிறார்

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம் என்பவர் 2018-ல் 114 வயதை எட்டி உலகத்திலேயே நீண்ட ஆயுள் பெற்றவர் என்று கருதப்பட்டார். ரைட் சகோதரர்கள் ஃபிளயர் II  உருவாக்கிய வருடம் 1904-ல் பிறந்து அவர் இரண்டு உலக மகா யுத்தங்கள், நிறவெறி கலகம், பொருளாதார மந்த நிலை இவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவருடைய நீண்ட வாழ் நாளுக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அந்த கேள்வியை அவர் தட்டி கழிக்கிறார். நம்மில் அநேகர் போல அவரும் ஆரோக்கியமான உணவுகளையோ பழக்கங்களையோ கையாண்டவர் அல்ல. ஆனால் தன்னுடைய நீண்ட வாழ்விற்கு ஒரு காரணம் மட்டும் சொல்லுகிறார். அது “ஒன்றே ஒன்று  தான், அது தேவன். தேவனுக்கு எல்லா வல்லமையும் உண்டு… அவர் என்னை தாங்குகிறார்” என்றார்.

எதிரிகளின் அடக்குமுறையில் தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலருக்கு தேவன் கூறியவாக்குகளை போலவே ப்ளோம்-ம் எதிரொலிக்கிறார்.  “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10) என்று தேவன்வாக்களிக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக மாறினாலும், மீட்பிற்கு வழியே தெரியவில்லை என்றாலும் அவர்கள் தம்முடைய மெண்மையான பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்று தேவன் உறுதியளிக்கிறார். ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா. 41:10) என்று வலியுறுத்துகிறார்

எவ்வளவு வருடங்கள்நாம் வாழ்ந்தாலும் கடினங்கள் நம் கதவைத் தட்டதான் செய்யும்: திருமணவாழ்வில் சிக்கல். பிள்ளைகள் நம்மை கவனிக்காதது. மருத்துவரிடமிருந்து திகிலூட்டும் செய்தி. நம் விசுவாசத்தின் நிம்மித்தம் துன்பப்படுவதாக கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்முடைய தேவன் அவர் கரத்தை நீட்டி நம்மை இறுக்கமாகபற்றிக்கொள்ளுகிறார். அவருடைய பலத்த, மென்மையான கரங்களுக்குள் சேர்த்து அணைக்கிறார்.

ஒன்றாக துன்பம் அனுபவித்தல்

2013ம் ஆண்டு, எழுபது வயது நிரம்பிய ஜேம்ஸ் மெக்கொன்னெல், ஒரு பிரிட்டிஷ் அரச கடல் வீரர், மரித்தார். மெக்கொன்னெலுக்கு குடும்பம் இல்லை என்பதால் அவர் தங்கி இருந்த முதியோர் இல்லத்தின் ஊழியர்கள், அவருடைய இருதிச் சடங்கில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று பயந்தனர். மெக்கொன்னெல்லின் நினைவு ஆராதனையை நடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதினார் : “இந்த நாளிலும், காலத்திலும். துக்கப்பட ஒருவரும் இல்லாமல் இறப்பது சோகமான சம்பவம், ஆனால் இந்த மனிதர் ஒரு குடும்பம்… இந்த முன்னாள் சகோதரருக்கு இறுதி மரியாதை செலுத்த கல்லரைக்கு வரமுடியுமானால் தயவுசெய்து அங்கு வர முயற்ச்சிக்கவும்.” இருநூறு அரச கடற்படையினர் கல்லரைக்கு வந்திருந்தனர்.

இந்த பிரிட்டிஷ் தோழர்கள் வேதாகமத்தின் ஒரு உண்மையை  வெளிப்படுத்தினர் : நாங்கள் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம். “சரீரம் ஒரே ஒரு அவயவத்தினால் ஆனதல்ல. அதில் அநேக அவயவங்கள் உண்டு” என்று பவுல் 1 கொரிந்தியர் 12:14ல் கூருகிறார். நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல மாறாக இயேசுவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சரீரத்தில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கிறோம். “ ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட சேர்ந்து பாடுப்படும்.” (வச. 26).

இயேசுவில் விசுவாசிகளாய், தேவனின் புது குடும்பத்தில் உறுப்பினர்களாய், நாம் ஒருவருக்கொருவர் வலியை நோக்கி, துன்பத்தை நோக்கி, நாம் தனியாக போக பயப்படும் இருண்ட இடங்களுக்கும் செல்ல நகர்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நாம் தனியாக செல்வதில்லை.

நாம் தனியாக இருளில் ழூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம் துன்பத்தின் மிக மோசமான பகுதி. ஆனால் நம்மோடு பாடுபட ஒரு புதிய சமூகத்தை தேவன் உருவாக்குகிறார். யாரும் இருளிலே விடப்பட்டு விடக்கூடாத ஒரு புதிய சமூகம்.

உண்மையாகவே போர் முடிந்து விட்டது

இரண்டாம் உலகப் போர் முடிந்து, இருபத்தொன்பது ஆண்டுகள்   கடந்த பின்னரும், ஒரு ஜப்பானிய போர் வீரர் ஹீரூ ஒனோடா காடுகளுக்குள் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தார், தன்னுடைய நாடு சரணடைந்து விட்டது என்பதை நம்ப மறுத்தார். ஜப்பானிய இராணுவ தலைவர்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகளை இரகசியமாக வேவு பார்க்க, அவனை ஒரு தனிமையான தீவுக்கு அனுப்பியிருந்தனர். சமாதான பேச்சு வார்த்தை கையெழுத்தான பின்பும், பகைமை ஓய்ந்த பின்பும் அவன் அந்த காடுகளிலேயே   இருந்தான். 1974 ஆம் ஆண்டு, அவனுடைய இராணுவ அதிகாரி    அந்த தீவுக்குச் சென்று, அவனைக் கண்டு பிடித்து, யுத்தம் முடிந்து விட்டது என்பதை நம்பும்படிச் செய்தார்.

30 ஆண்டுகளாக இந்த மனிதன், ஒரு தனிமையான தீவில்      வாழ்ந்தான், ஏனெனில், அவன் சரணடைய மறுத்தான், போர் முடிந்து விட்டது என்பதை நம்ப மறுத்தான். நாமும் இத்தகைய தவறுகளைச் செய்ய நேரலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ் நானம் பெற்றோம்” (ரோம.6:3) என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு அதிர்ச்சியைத்தரும் உண்மையை தெரியப்படுத்துகின்றார். ஒரு வல்லமையான, வினோதமான வழியில், சாத்தானின் பொய்யையும், சாவின் பயங்கரத்தையும், பாவத்தின் வல்ல பிடியையும், இயேசு சிலுவையில் கொன்று விட்டார். எனவே நாம் “பாவத்திற்கு மரித்தவர்களாயும்”, “தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும்” (வ.11) இருக்கின்றோம். நாம் இன்னமும் அடிக்கடி, பிசாசு நம்மேல் ஆதிக்கத்தை வைத்திருப்பதாக எண்ணுகின்றோம். நாம் சோதனைகளுக்கு இடம் கொடுக்கின்றோம், பாவத்தின் மாயைக்கு அடிமையாகின்றோம், பொய்க்குச் செவி சாய்க்கின்றோம், இயேசுவை விசுவாசிக்க தவறுகின்றோம். ஆனால், நாம் இவற்றிற்கெல்லாம் செவிசாய்க்கத் தேவையில்லை. தவறாக கூறப்படும் கரியங்களின் படி நாம் நடக்கத் தேவையில்லை. தேவனுடைய கிருபையால், கிறிஸ்து வெற்றிச் சிறந்த உண்மை கதையை நாம் பற்றிக் கொள்வோம்.

நாம் இன்னும் பாவத்தோடு போராடிக் கொண்டிருந்தால், இயேசு யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்ற செய்தியைப் பற்றிக் கொள்வோம், நாம் விடுதலை பெறுவோம். தேவனுடைய வல்லமையால், அவருடைய உண்மையை வாழ்ந்து காட்டுவோம்.

முற்றிலும் நம்மைத் துடைக்கும் கிருபை

ஒலி வாயிலாக கட்டுப்படுத்தப்படும் அமெசான் சாதனமான அலெக்சா, ஆர்வமளிக்கக் கூடிய ஓர் அம்சத்தைக் கொண்டுள்ளது.  அதாவது, அதில் கூறியுள்ள அனைத்து செய்திகளையும் அழித்துவிடலாம். அலெக்சாவைச் செய்யும்படி கூறியுள்ள அனைத்தையும், அதனிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்ட அனைத்துச் செய்திகளையும் அழித்து விடலாம். ஓர் எளிய வாக்கியத்தால் (“நான் இன்று கூறிய அனைத்தையும் அழித்துவிடு”) அனைத்தையும் சுத்தமாக அழித்துவிடலாம், அது அங்கு இருந்தது என்பதற்கான அடையாளமேயில்லாமல் அழிக்கமுடியும். ஆனால்  நாம் தவறாகப் பேசிய வார்த்தைகளும்,  நம்முடைய ஒவ்வொரு கருணையற்ற செயலும், நாம் மறந்து விட நினைக்கும் நிகழ்வுகள் அனைத்தும், நாம் கூறும் ஒரே கட்டளையின் மூலம் அழித்து விட முடியும் என்ற வசதி நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்பது எத்தனை மோசமானது!

ஆனால் நமக்கு ஒரு நற்செய்தி உள்ளது. நாம் அனைவரும் ஒரு புதிய, தூய்மையான துவக்கத்தை ஆரம்பிக்க தேவன் நம்மை அழைக்கின்றார். அவர் நம்முடைய தவறுகளையும், கெட்ட பழக்கங்களையும் வெறுமனே நீக்குகிறவர் மட்டுமல்ல, அவர் இன்னும் ஆழமாகச் செல்கின்றார். அவர் நம்மை மீட்டு, முழுவதும் மாற்றும்படி ஆழமாக கழுவுகின்றார், நம்மை முற்றிலும் மாற்றி புதியதாக்குகின்றார். “என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” (ஏசா.44:22) என்கின்றார். இஸ்ரவேலர் கலகம் பண்ணி, கீழ்படியாமல் போனபோதும், தேவன்  மிகுந்த இரக்கத்துடன் அவர்களுக்கு இரங்கினார். அவர்களின் “மீறுதல்களை மேகத்தைப் போலவும், (அவர்களின்) பாவங்களை கார்மேகத்தைப் போலவும்” (வ.22) அகற்றிவிட்டார். அவர்களுடைய அவமானங்களையும், தோல்விகளையும் சேர்த்து, அவற்றை  அவருடைய ஆழ்ந்த கிருபையினால் துடைத்து விட்டார்.

தேவன் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் அவ்வாறே செய்கின்றார். அவரால் சரி செய்யக்கூடாத தவறு ஒன்றுமேயில்லை, அவரால் குணமாக்க முடியாத காயமுமில்லை. நம்முடைய ஆத்துமாவின் வேதனை நிறைந்த பகுதிகளை தேவனுடைய இரக்கம் சுகப்படுத்துகின்றது, நாம் இதுவரை மறைத்து வைத்திருந்த காரியங்களையும், நம்முடைய குற்ற உணர்வுகளையும், நாம் மனம் வருந்தும் அனைத்து காரியங்களையும் அவருடைய இரக்கம் முற்றிலும் கழுவி சுத்தப் படுத்துகின்றது.

உண்மையான தாழ்மை, உண்மையில் பெரியது

எதிர்பாராத வகையில், அமெரிக்கப் படைகள் சரண் அடைந்த போது, அமெரிக்க புரட்சி முடிவுக்கு வந்தது. அநேக அரசியல்வாதிகளும் இராணுவ அதிகாரிகளும் ஜெனரல் ஜியாஜ் வாஷிங்டனை புதிய தலைவராக்க திறமையான முயற்சிகள் எடுத்தனர். முழு அதிகாரமும் அவருடைய கரத்தில் இருக்கும் போது, அவர் தன்னுடைய குறிக்கோளான சுதந்திரத்தையும் விடுதலையும் பற்றி உறுதியாக நிற்பாரா என்ற எதிர்பார்ப்போடு, உலகமே அவரை கவனித்துக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் அரசர் ஜியார்ஜ் 111, ஓர் உண்மையைக் கண்டார், தன்னை இழுக்கின்ற விசையை எதிர்த்து, வெர்ஜீனியாவிலுள்ள தன்னுடைய பண்ணைக்குச் சென்று விட்டார் என்பதைக் கண்ட உலகு அவரை “ உலகிலேயே மிகப் பெரிய மனிதன்” என்று அழைத்தது. வலிமையான பதவி ஆசையை எதிர்த்து தள்ளியது, அவருடைய பெருந்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கட்டுகிறது என்பதை ஜியார்ஜ் அரசர்       புரிந்துகொண்டார்.

இந்த உண்மையை அறிந்த பவுல், நம்மையும் கிறிஸ்துவின் தாழ்மையைப் பின்பற்றுமாறு ஊக்கப் படுத்துகின்றார். “இயேசு கிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும்” அவர் “தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்” (பிலி.2:6), தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் கொடுத்து விட்டு, “அடிமையின் ரூபமெடுத்து” “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார் (வ.7-8). சகல அதிகாரத்தையும் உடையவர், சகலத்தையும் நம் மீதுள்ள அன்பின்  நிமித்தம் விட்டுக் கொடுத்தார்.

ஆனால், நேர்மாறாக, தேவன் கிறிஸ்துவை ஒரு குற்றவாளியின்           சிலுவையிலிருந்து, “எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (வ.9). நாம் இயேசுவைப் போற்றுபடியும், நாம் அவருக்கு கீழ்ப்படியும், அவர் நம்மைக் கட்டாயப் படுத்தாமல்  தன்னுடைய அதிகாரம் அனைத்தையும் விட்டு, நம்மை பிரம்மிக்கச் செய்யும் ஒரு செயலின் மூலம் நம்முடைய ஆராதனையும் அற்பணிப்பையும் ஜெயித்துவிட்டார். தம்மை முழுமையாக தாழ்த்தினதின் மூலம், இயேசு தன்னுடைய உண்மையான மேன்மையை நமக்குக் காட்டி, இவ்வுலகையே தலை கீழாக மாற்றினார்.

நினைத்துப் பார்க்க முடியாத மன்னிப்பு

ரேவன்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் எஞ்சியிரு ந்த மக்களிடையே இந்த ஜெபம் மிகவும் குறுகிப் போய்விட்டது என்று விடுதலையாளர்கள் கண்டார்கள், அங்கு ஏறத்தாள 50,000 பெண்களை நாசிக் படையினர் கொன்று விட்டனர். “ஓ, தேவனே, நல்லெண்ணம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் மட்டுமல்ல, கெட்ட எண்ணம் கொண்டவர்களையும் நினைத்தருளும். அவர்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள வேதனைகளை நினையாதிரும். நாங்கள் கனிகொடுக்க உதவிய இத்துன்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், எங்கள் கனிகளை நினைத்தருளும் – எங்களின் நட்புணர்வு, எங்களின் உண்மை, தாழ்மை, தைரியம், பெருந்தன்மை, மேன்மை பொருந்திய இருதயம் ஆகியவற்றை இவற்றின் வழியாக நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களை நீர் நியாயம் தீர்க்க வரும்போது, நாங்கள் இவர்களின் மூலம் பெற்ற கனிகள் இவர்களின் மன்னிப்பிற்கு காரணமாயிருப்பதாக” என்று ஜெபித்தனர்.

இந்த ஜெபத்தை எழுதிய, தீவிரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இப்பெண்ணுக்குள் இருந்த பயத்தையும், வேதனையையும் என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவளுக்குள் இருந்து விவரிக்க முடியாத கிருபை நிறைந்த வார்த்தைகள் எப்படி வெளியாக முடிகிறது என்பதையும் கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. அவள் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்தாள், அவள் தன்னைக் கொடுமை படுத்தியவர்களும் தேவனின் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினாள்.

இந்த ஜெபம் கிறிஸ்து ஏறெடுத்த ஜெபத்தை பிரதிபலிக்கின்றது. தவறான குற்றச் சாட்டுகளை இயேசுவின் மீது திணித்து, கேலி செய்து, அடித்து, ஜனங்களுக்கு முன்பாக அவமானப் படுத்தி, “வேறே இரண்டு குற்றவாளிகளோடு………. அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்” (லூக். 23:32). கோரமான ஒரு மரச் சிலுவையில், உடல் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் தொங்கியவராய், மூச்சு விட திணறிய வேளையில், தன்னை துன்பப் படுத்தியவகளுக்கு தீர்ப்பு வழங்கியிருக்கலாம், அவர்களைப் பழிவாங்க அல்லது நியாயத்தீர்ப்பு வழங்க தீர்மானித்திருக்கலாம். ஆனால் இயேசு மனித குணங்களையெல்லாவற்றிற்கும் மாறாக ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றார் (வச. 34).

தேவன் அருளிய மன்னிப்பு நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது, ஆனால் இயேசு அதனை நமக்குத் தந்தார், அவருடைய தெய்வீக கிருபை யாராலும் தரமுடியாத மன்னிப்பை இலவசமாகக் கொட்டுகிறது.

தண்ணீரின் வழியே

“த ஃப்ரீ ஸ்டேட் ஆஃப் ஜோன்ஸ்” (The Free State of Jones ) என்ற திரைப் படம், நியூட்டன் நைட் என்பவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடத்திய உள் நாட்டு யுத்தத்தைக் குறித்து விவரிக்கின்றது. ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த சிலரும், சில அடிமைகளும் யுனியன் இராணுவத்திற்கு உதவியாயிருந்தனர், பின்னர் யுத்தம் முடிந்தபோது, அடிமைகளின் எஜமானர்களையும் எதிர்த்தனர். அநேகர் நைட்டைத் தங்களுக்குத் தலைவராகக் கொண்டனர், ஐக்கிய ஆட்சியிலிருந்து பிரிந்த நைட்டின் உயிரை இரு அடிமைகள் காப்பாற்றினர், அவர்கள், அவரை யாரும் எளிதில் செல்ல முடியாத, அடர்ந்த காட்டுக்குள் இருந்த சதுப்பு நிலப் பகுதிக்கு எடுத்துச் சென்றனர், ஐக்கிய ஆட்சியாளரின் படைகளிடமிருந்து தப்பிச் சென்ற போது, அவருடைய காலில் ஏற்பட்ட காயத்தையும் குணப்படுத்தினர், இந்த அடிமைகள் மட்டும் அவரைக் கைவிட்டிருந்தால், அவர் மரித்திருப்பார்.

யூதாவின் ஜனங்கள் காயமுற்றவர்களாய், கைவிடப்பட்டவர்களாய், உதவியற்றவர்களாய் எதிரிகளைச் சந்தித்து வந்தனர். இஸ்ரவேலரை அசீரியர்கள் மேற்கொண்டனர். ஒரு நாள் அவர்கள் (யூதா) எதிரிகளால் மேற்கொள்ளப்படுவர் என ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார், பாபிலோனியர்கள் அவர்களை மேற்கொண்டனர். யூதாவுக்கு உதவி செய்யவும், அவர்களைக் கைவிடாமல், மீட்கும்படியாகவும் ஒரு தேவன் தேவை. தேவனுடைய உறுதியளிக்கும் வாக்குத்தத்தங்களைப் பெற்ற போது அவர்களின் நம்பிக்கை அவர்களை எப்படி முன்னோக்கிச் செல்ல தூண்டியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார். ”பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்” (ஏசா.43:5) என்கின்றார் தேவன். எத்தனை பெரிய ஆபத்துக்களை அவர்கள் சந்திக்க நேரிட்டாலும், எவ்வளவு வேதனைகளை அவர்கள் சகித்தாலும் தேவன் அவர்களோடு இருக்கின்றார். அவர்கள் “தண்ணீர்களைக் கடக்கும் போது” அவர்களோடு இருப்பார், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நடத்திச் செல்வார் (வச. 2), அவர் “அக்கினியில் நடக்கும் போது” கூடவே நடந்து வருவார், சுட்டெரிக்கும் நெருப்பிலும் அவர்களுக்கு உதவுகின்றார் (வச. 2).

தேவன் தன்னுடைய பிள்ளைகளின் கூடவே இருந்து அவர்களைப் பாதுகாக்கின்றார், வழிநடத்துகின்றார், அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை, வாழ்விலும், மரணத்திலும் கைவிடுவதில்லை என்பதாக வேதாகமம் முழுவதிலும் காண்கின்றோம். நீ கடினமான இடத்தில் இருந்தாலும் தேவன் உன்னோடு இருக்கின்றார், அவர் உன்னை தண்ணீரைக் கடக்கச் செய்வார்.

நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்கள்

ஒரு வாலிபனான டேனியல், தனக்குப் போதிய பணம் இல்லை என்ற பயத்தோடு, தன்னுடைய இளம்வயதிலேயே தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதில் குறியாக இருந்தான். ஒரு பிரசித்திப் பெற்ற கணினி தொழிற்சாலையில் பணியைத்துவக்கி, அதில் படிப் படியாக உயர்ந்தான், மிகப் பெரிய செல்வத்தைச் சேர்த்தான். மிகப் பெரிய வங்கிக் கணக்கு, உயர் ரக கார், கோடிக் கணக்கான பெருமதியுள்ள வீடு என அவன் விரும்பியதையெல்லாம் வாங்கினான். ஆயினும் அவன் மிகவும் மகிழ்ச்சியற்றவனாக காணப்பட்டான். “நான் மிகவும் ஆவலோடும் திருப்தியற்றவனாகவும் காணப்படுகிறேன்” என்றான் டேனியல். “உண்மையில் செல்வம் வாழ்வை மிகவும் மோசமானதாக மாற்றிவிட்டது” என்றான். குவித்து வைக்கப் பட்டுள்ள பணத்தினால் நட்பையும், சமுதாய உறவையும், மகிழ்ச்சியையும் தரமுடியவில்லை, அதிக இருதய வேதனையைத் தான் கொண்டு வருகின்றது என்றான்.

சிலர் தங்களுடைய ஆற்றலையெல்லாம் செலவிட்டு, அதிகமான செல்வத்தைச் சேர்த்து வைப்பதன் மூலம் தங்களின் வாழ்வை பாதுகாத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அது ஒரு முட்டாள் தனமான செயல். “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என வேதாகமம் கூறுகின்றது (பிர.5:10). சிலர் தங்கள் எலும்புகள் தேயும் வரை வேலை செய்கின்றார்கள். அவர்கள் போராடி, தள்ளி, மற்றவர்களின் உடைமைகளோடு ஒப்பிட்டு, ஒரு பொருளாதார அந்தஸ்தை அடைய தங்களை வருத்திக் கொள்கின்றார்கள். அவர்கள் தாங்கள் விரும்பிய பொருளாதார நிலையை அடை ந்தும் அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அது அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. பிரசங்கி கூறுவதைப் போன்று, “இதுவும் மாயையே” (வச. 10).

உண்மை என்னவெனின், தேவனைத் தவிர வேறெந்த காரியத்தையும் நிறைவேற்றும்படி நாம் உழைப்பதெல்லாம் வீண். நம்முடைய திறமைகளையெல்லாம் பயன் படுத்தி, கடினமாக உழைத்து, இவ்வுலகிற்கு ஏதேனும் நல்லது செய்யும்படி வேதாகமம் நம்மை அறிவுறுத்துகின்றது. நாம் எவ்வளவு தான் பொருட்களைச் சேர்த்தாலும், அது ஒரு போதும் நம்முடைய ஆழ்ந்த ஏக்கங்களை நிறைவு செய்ய மாட்டாது. இயேசு ஒருவராலேயே உண்மையான பரிபூரண வாழ்வைத் தரமுடியும் (யோவா. 10:10) – அது அன்பின் உறவுகளினால் ஏற்படும் உண்மையான நிறைவு!