எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

ஏராளமான தண்ணீர்

தீவிர வறட்சி, உஷ்ணம், நெருப்பு என்று “ஒரு மோசமான கதையை” அந்த அறிக்கை சமர்ப்பித்தது. பசபசப்பான செடிகளை காய்ந்த சருகுகளாக மாற்றக்கூடிய, வெகு குறைந்த மழையுடனான ஒரு பயங்கரமான ஆண்டைக் குறித்து அந்த அறிக்கை விவரித்தது. பொங்கி எழுந்த தீ கிராமப்புறங்களை எரித்தது. மீன்கள் உயிரிழந்தது. பயிர்கள் அற்றுபோயிற்று. எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் தண்ணீர் என்னும் ஒரு எளிய ஆதாரம் அவர்களிடம் இல்லாததுதான். நாம் அனைவரும் வாழ தண்ணீர் மிகவும் அவசியம்.

இஸ்ரவேலர்கள் கடினமான ஒரு சூழ்நிலையில் இருந்தனர். ஜனங்கள் தூசி நிறைந்த, தரிசான பாலைவனத்தில் முகாமிட்டபோது, அவர்கள் இப்படியாய் கூறுகிறார்கள்: “அங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது” (யாத்திராகமம் 17:1). மக்கள் பயந்தார்கள். அவர்களின் தொண்டை வறண்டு இருந்தது. மணலின் சூடு அவர்களை தாக்கிற்று. அவர்களின் குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள், தண்ணீர் வேண்டி மோசேயுடன் வாதாடினார்கள் (வச. 2). ஆனால் மோசே என்ன செய்ய முடியும்? அவர் தேவனிடம் மட்டுமே செல்ல முடியும்.

தேவன் மோசேக்கு ஒரு விசித்திரமான அலோசனையைக் கொடுத்தார்: “உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு... நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்” (வச. 5-6). ஆகவே, மோசே கன்மலையை அடித்தான், ஒரு நதி அதிலிருந்து புறப்பட்டது, ஜனங்களுக்கும் அவர்களுடைய கால்நடைகளுக்கும் குடிக்க ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது. தங்கள் தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதை இஸ்ரவேல் அந்நாளிலே அறிந்தார்கள். அவர்களின் தேவன் ஏராளமான தண்ணீரினால் அவர்களை ஆசீர்வதித்தார்.

நீங்கள் வாழ்க்கையில் வறட்சியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலை தேவனுக்கு தெரியும் என்பதையும் அவர் உங்களோடே இருக்கிறார் என்பதையும் அறியுங்கள். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், உங்கள் குறைபாடு எதுவாக இருந்தாலும், அவருடைய ஏராளமான தண்ணீரில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் காணலாம்.

புதிய கண்களுடன் பார்த்தல்

வீடியோ கேம், இது ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது, ஒரு மெய்நிகர் (வெர்சுவல்) தீவில் நூறு வீரர்களை இடம்பெறச் செய்து இறுதியில் ஒரே ஒரு வீரர் மிஞ்சும் வரை போட்டியிட வைக்கிறது. ஒரு வீரர் உங்களை போட்டியில் இருந்து நீக்கும் போதெல்லாம், அந்த வீரரின் வான்டேஜ் புள்ளியை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுவது போல், “நீங்கள் மற்றொரு வீரரின் மனநிலையில் நுழைந்து அவர்களின் நோக்கில் பார்க்கும்போது, ​​உணர்ச்சி பதிவு. . . சுய பாதுகாப்பிலிருந்து ......... இனவாத ஒற்றுமையாக மாறுகிறது.  . . .  நீங்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்லாத, அந்நியரிடம் முதலீடு செய்ததை உணரத் தொடங்குகிறீர்கள்.”

மற்றொருவரின் அனுபவத்தைக் காண நாம் நமது உள்ளத்தை திறக்கும் போதெல்லாம், நம்முடைய சொந்த பார்வைக்கு அப்பால் பார்த்து, மற்றொருவரின் வலி, பயம் அல்லது நம்பிக்கையை எதிர்கொள்ளும் போது மாற்றம் நிகழ்கிறது. நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், அதற்கு பதிலாக “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”, அப்படியானால் நாம் தவறவிட்ட விஷயங்களை கவனிக்கிறோம் (பிலிப்பியர் 2: 3). நம்டைய கவலைகள் விரிவடைகின்றன. நாம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறோம். நம்முடைய சொந்த தேவைகள் அல்லது மனக்கவலைகளில் மட்டுமே ஈடுபடுவதை விட, மற்றவர்களின் நல்வாழ்வில் முதலீடு செய்பவர்களாகிறோம். “[நமது] சொந்த நலன்களை” பார்ப்பதற்குப் பதிலாக, “மற்றவர்கள் நலன்களுக்காக நாம் உறுதியாக இருக்கிறோம்”(வச.. 4). நாம் செழிக்க வேண்டும் என்று கருதுவதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் செழிக்க உதவும் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பின்பற்றுகிறோம்.

இந்த மாற்றப்பட்ட பார்வையால், நாம் மற்றவர்களுக்காக இரக்கம் கொள்கிறோம். நமது குடும்பத்தை நேசிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். நாம் எதிரியிடமிருந்து கூட ஒரு நண்பரை உருவாக்கலாம்!

அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது

பெரும்பாலான சமோவா இளைஞர்கள் (ஒரு ஆஸ்திரேலிய கடலோர தீவு) அவர்களின் மக்களுக்கும் மற்றும் அவர்களது தலைமைக்கும் தங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை அடையாளங்களாக பச்சையாககுத்தியிறுப்பார்கள். இயற்கையாகவே, இந்த அடையாளங்கள் சமோவான் ஆண்கள் ரக்பி அணி உறுப்பினர்களின் கைகளில் இடம்பெற்றிருக்கும். பச்சை குத்தல்கள் என்றாலே எதிர்மறையான அர்த்தங்களைக் கொடுக்கும் நாடான ஜப்பானுக்குப் பயணம் செய்தபோது, ​​குழு உறுப்பினர்கள் தங்கள் பச்சை குத்தல்கள்  தங்களை அழைத்தவர்களுக்கு ஒரு சிக்கலை வழங்கியதை உணர்ந்தனர். நட்பின் வெளிப்பாடாக, சமோவான் அணியினர் தங்கள் பச்சை குத்தியதை மறைக்க வடிவமைப்புகளை உள்ளடக்கிய தோல் நிற உறைகளை அணிந்தனர். "ஜப்பானியரின் எண்ணங்களுக்கு நாங்கள் மரியாதைக்குரியவர்களாகவும் மற்றும் கவனத்துடனும் இருக்கிறோம்....ஜப்பானிய வழியில்” என்று அணியின் தலைவர் விளக்கினார். "நாங்கள் பச்சையை காண்பிப்பது சரி என்ற நிலையை நாங்கள் உறுதி செய்வோம்."

தனிமனித கருத்துக்களை முக்கியப்படுத்தும் ஒரு யுகத்தில், சுய வரம்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது—ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கூறிய கருத்து. சில சமயங்களில் அன்பினால் மற்றவர்களுக்காக நம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அவசியமாகிறது என்று அவர் எங்களிடம் கூறினார். நம்முடைய சுதந்திரத்தை எல்லைக்கே தள்ளுவதற்குப் பதிலாக, சில சமயங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தேவாலயத்தில் சிலர் “எந்த பதார்த்தத்தையும் சாப்பிட” சுதந்திரம் இருப்பதாக நம்பினார்கள், ஆனால் மற்றவர்கள் “மரக்கறிகளை மட்டுமே” சாப்பிட்டார்கள் (ரோமர் 14: 2) என்பதை விளக்கினார்.  இது ஒரு சிறிய பிரச்சினை போல் தோன்றினாலும், முதல் நூற்றாண்டில், பழைய ஏற்பாட்டின் உணவுமுறை சட்டங்களை பின்பற்றுவது சர்ச்சைக்குரியதாக இருந்தது. சுதந்திரமாக சாப்பிட்டவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளால் தீர்மானிப்பதற்கு முன், "நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக" என்று பவுல் அனைவருக்கும் அறிவுறுத்தினார் (வச. 13). "மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்." (வச. 21).

சில நேரங்களில், இன்னொருவரை நேசிப்பது என்பது நமது சொந்த சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகும். நமக்கு முழு சுதந்திரம் உள்ளதாலேயே அனைத்தையும் எப்போதும் செய்யலாம் என்றில்லை. சில நேரங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

நம் வறுமையிலிருந்து

வாரன் பபெட், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் கொடுக்கும் வாக்குறுதியைத் தொடங்கி ஒரு சரித்திரம் படைத்தனர், அவர்களது பணத்தில் பாதியை நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்தனர். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 92 பில்லியன் டாலர்களைக் கொடுப்பதாகும். இந்த உறுதி மொழியானது  உளவியலாளர் பால் பிஃப்பை கொடுக்கும் முறைகளைப் பற்றி படிக்கத் தூண்டியது. ஒரு பரிசோதனையின் மூலம், ஏழைகள் செல்வந்தர்களை விட 44 சதவிகிதம் அதிகம் கொடுக்க விரும்புவதைக் கண்டறிந்தார். தங்கள் சொந்த வறுமையை உணர்ந்தவர்கள் பெரும்பாலும் அதிக தாராள மனப்பான்மைக்கு நேராக நகர்த்தப்படுகிறார்கள்.

இயேசு இதை நன்றாக அறிந்திருந்தார். தேவாலயத்திற்கு சென்றிருந்த அவர், மக்கள் பரிசுகளை பண்டகசாலையில் போடுவதைப் பார்த்தார். பணக்காரர்கள் பணத்தைத் தூக்கி எறிந்தனர். ஆனால் ஒரு ஏழை விதவை ஏறக்குறைய ஒரு ருபாய் மதிப்புள்ள தனது கடைசி இரண்டு செப்பு நாணயங்களை வெளியே எடுத்து பண்டகசாலையில் வைத்தார். நான் இயேசு எழுந்துநின்று மகிழ்ந்து, திகைத்து நிற்பதை கற்பனையாகப் பார்க்கிறேன். உடனடியாக அவர் தம்முடைய சீஷர்களைச் கூட்டி, இந்த திகைப்பூட்டும் செயலை அவர்கள் தவறவிடாமல் பார்த்துக் கொண்டார். “அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ. 43) என்றார். இயேசு எதைப் பற்றி பேசுகிறார் என்பதை யாரேனும் விளக்குவார்கள் என்று நம்பி சீஷர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கலக்கமடைந்து போனார்கள். எனவே, அவர் அதை தெளிவுபடுத்தினார்: “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்றார் (வ.44).

நம்மிடம் கொடுப்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால் நம்முடைய வறுமையிலிருந்து கொடுக்க இயேசு நம்மை அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோம். நம்முடைய நிறைவான பரிசுகளில் தேவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.

வித்தியாசமாக சிந்திப்பது

கல்லூரியில் படிக்கும் போது, ​​வெனிசுலாவில் கோடைகாலத்தின் ஒரு நல்ல பகுதியை நான் கழித்தேன். உணவு வியக்க வைப்பதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சிகரமானவர்கள், வானிலை மற்றும் விருந்தோம்பல் அழகாக இருந்தது. இருப்பினும், முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள், நேர நிர்வாகத்தை குறித்த எனது கருத்துக்கள் எனது புதிய நண்பர்களால் பகிரப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் மதியம் மதிய உணவு சாப்பிட திட்டமிட்டிருந்தால், அது மதியம் 12 முதல் 1 மணி இடையில் எப்பொழுதாவது இருக்கலாம். கூட்டங்கள் அல்லது பயணங்களுக்கும் இப்படியே: காலவரையறைகள் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் தோராயமாக இருந்தன. “சரியான நேரத்தில்” என்ற எனது யோசனை நான் உணர்ந்ததை விட மிக அதிகமாக கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.

பொதுவாக நாம் எப்போதும் கவனிக்காமலேயே, நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள கலாச்சார விழுமியங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளோம். பவுல் இந்த கலாச்சார சக்தியை “பிரபஞ்சம்” என்று அழைக்கிறார் (ரோம. 12:2). இங்கே, “பிரபஞ்சம்” என்பது இயற்பியல் பிரபஞ்சத்தை குறிக்காது, மாறாக நம் இருப்பைப் பரப்பும் சிந்தனை வழிகளைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நாம் வாழ்வதால் கேள்விக்குறியாகாத அனுமானங்களையும் வழிகாட்டும் கொள்கைகளையும் குறிக்கிறது.

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று விழிப்புடன் இருக்குமாறு பவுல் எச்சரிக்கிறார். மாறாக, “ உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (வச. 2). சிந்தனை வழிகளை செயலற்ற முறையில் எடுத்துக்கொள்வதற்கும், நம்மைச் சூழ்ந்திருப்பதாக நம்புவதற்கும் பதிலாக, தேவனின் சிந்தனை வழியை தீவிரமாகப் பின்தொடரவும், அவருடைய “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை” எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகிறோம் (வச. 2). மற்றவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை விட, தேவனுக்கு செவிசாய்ப்போம்.

கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீடு

34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தவறான அடித்தளங்களால் உடைந்து விழுவதற்கு அபாயத்தில் இருக்கின்றன. இதை உணராமல், ஒரு கான்கிரீட் நிறுவனம் கல்குவாரியில் ஒரு கனிமத்தில் கலந்து இருந்த கல்லை எடுத்தது. இது காலப்போக்கில் கான்க்ரீட் விரிசல் மற்றும் சிதைவுக்கு காரணமாயிற்று. கிட்டத்தட்ட 600 வீடுகளின் அஸ்திவாரங்கள் ஏற்கனவே நொறுங்கி விட்டன. காலப்போக்கில் அந்த எண்ணிக்கை வானளாவ உயரும்.
நிலையற்ற நிலத்தில் நம் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான மிகவும் ஆபத்தான நிலையை விளக்குவதற்கு, இயேசு தவறான அஸ்திவாரத்தின் மேல் ஒரு வீட்டைக் கட்டும் ஒரு படத்தை பயன்படுத்தினார். நம்மில் பலர் தகர்க்கமுடியாத பாறையில் நம் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதை அவர் விளக்கினார். கடுமையான புயல்களை எதிர்கொள்ளும் போது நாம் திடமாக இருப்பதை உறுதி செய்கிறோம். நம்மில் பலர் எவ்வாறாயினும் மணலில் தங்கள் வாழ்க்கையை எழுப்புகிறார்கள். சூறாவளிகள் சீறும்போது, ஒரு பெரிய விபத்துடன் நமது வாழ்க்கை வீழ்ச்சி அடைகிறது (மத். 7:27). அசைக்கமுடியாத அஸ்திவாரத்தின் மேல் கட்டுவதற்கும் நொறுங்க கூடிய அஸ்திவாரத்தின் மேல் கட்டுவதற்கும் இடையே உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால் கிறிஸ்துவின் வார்த்தைகளை 'நடைமுறையில்' வைக்கிறோமோ இல்லையா என்பதுதான். (வசனம் 26) அவருடைய வார்த்தைகளை நாம் கேட்கிறோமா இல்லையா என்பது கேள்வி அல்ல, ஆனால் அவர் நமக்கு உதவுவதைப் போல நாம் அவற்றை பயிற்சி செய்கிறோமா என்பதுதான்.
இந்த உலகில் நமக்கு நிறைய ஞானம் வழங்கப்படுகிறது - மேலும் நிறைய ஆலோசனைகள் மற்றும் உதவிகள் - அதில் பெரும்பகுதி நல்லது மற்றும் நன்மை பயக்கும். கடவுளின் சத்தியத்திற்கு தாழ்மையான வெளிப்படுதலை தவிர வேறு எந்த இடத்திலும் நம் வாழ்க்கையை அடித்தளமாக கொண்டால், எப்படி இருப்பினும் நாம் சிக்கலை வரவேற்கிறவர்களாய் இருப்போம். ஒரு வீடு, ஒரு வாழ்க்கை கற்பாறையின் மேல் கட்டப்பட ஒரே வழி, அவருடைய பலத்தில், தேவன் சொல்வதை செய்வது மட்டும்தான்.

வல்லமை

23 வாரங்களில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை செய்பி, 245 கிராம் எடை மட்டுமே இருந்தாள். அவள் உயிர் வாழ்வது சந்தேகம் என்று மருத்துவர்கள் அவள் பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் செய்பி தொடர்ந்து போராடினாள். அவள் அருகே ஒரு இளஞ்சிவப்பு நிற அட்டையில் ”சிறிய ஆனால் வல்லமையான” என்று எழுதி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு அற்புதமாக செய்பி 2.26 கிலோ எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தையாக வீடு திரும்பியது மட்டுமல்லாமல் உலகிலேயே உயிர் பிழைத்த மிக சிறிய குழந்தை என்ற உலக சாதனையையும் எடுத்து சென்றாள்.

முரண்பாடுகளை வென்றவர்களின் கதைகளைக் கேட்பது வல்லமை வாய்ந்தது. வேதாகமமும் அது போன்ற ஒரு கதையை கூறுகிறது. தேவனை தூஷித்து இஸ்ரவேலை மிரட்டிய ஒரு ராட்சத போர்வீரனான கோலியத்தை எதிர்த்து சண்டையிட ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது முன் வந்தான். சவுல் இராஜா "நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்” (1 சாமுவேல் 17:33). தாவீது போர்க்களத்தில் இறங்கியபோது, கோலியாத் “சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.” (வச 42). ஆனால் தாவீது போர்க்களத்திற்கு தனியாக செல்லவில்லை. “இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்றான் (வச 45). அந்த நாள் நிறைவடைந்தபோது செத்துப்போன கோலியாத்தின் மீது வெற்றி பெற்ற தாவீது நின்றான்.

பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் நம்மோடு இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பெலத்தினால் நாமும் வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம்.

பெட்டி ஆன்டியின் வழி

நான் சிறுவனாயிருக்கும்போது என்னுடைய அத்தை எங்களை பார்க்க வரும்போதெல்லாம் அது கிறிஸ்மஸ் போல இருந்தது. வரும்போது எனக்கு ஸ்டார் வார் (star war) பொம்மைகள் கொண்டு வருவார்கள். போகும்போது பணம் கொடுத்துவிட்டு செல்வார்கள். அவர்களுடன் நான் தங்கும்போதெல்லாம் காய்கறிகள் சமைக்கமாட்டார்கள் பதிலாக குளிர் சாதனப்பெட்டியில் ஐஸ் கிரிம்களை நிரப்பி வைப்பார்கள். அவருக்கு சில விதிகள் இருந்தன. என்னை தாமதமாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தார்கள். என் அத்தை தேவனின் பெருந்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு அற்புதமானவர். ஆனாலும் நான் ஆரோக்கியமாக வளர்வதற்கு, என் அத்தை என்னை கவனிப்பதைப் பார்க்கிலும் அதிக கவனம் தேவைப்பட்டது. என்னுடைய பெற்றோர்கள் என் மீதும் என் நடத்தை மீதும் எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டுமென்றும் என்னை அவர்களோடு வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியமாயிருந்தது.

அத்தை பெட்டியைப் பார்க்கிலும் தேவன் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்.  நாம் அவருக்கு எதிர்த்து நின்றாலும் அல்லது அவரை விட்டு ஓடினாலும் - அவர் நம்மேல் அசைக்கமுடியாத அன்பு வைத்திருந்தாலும், அவர் நம்மிடமிருந்து ஏதாவது எதிர்பார்க்கிறார். தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு எப்படி வாழவேண்டும் என அறிவுறுத்தும்போது பத்து பரிந்துரைகளை அல்ல பத்து கட்டளைகளை வழங்கினார் (யாத்திராகமம் 20:1-17). நாம் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுவோம் என்று அறிந்து நாம் தேவனிடத்தில் அன்பு கூறவும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் (1 யோவான் 5:3). அதிர்ஷ்டவசமாக தேவனின் கற்பனைகள் பாரமானவைகள் அல்ல (வச. 3). பரிசுத்த ஆவியின் வல்லமையால் தேவனுடைய அன்பையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பதால், நாம் அவருடைய கற்பனைகளின்படி வாழ முடியும். நம்மேல் அவர் வைத்துள்ள அன்பு இடைவிடாதது. ஆனால் அதற்கு பதிலாக நாம் தேவனை நேசிக்கின்றோமா என்பதை அறிந்துக்கொள்ள வேதாகமம் சில கேள்விகளை வைத்துள்ளது. ஆவியானவர் வழிநடத்தும் விதமாக நாம் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிகிறோமா? நாம் தேவனிடத்தில் அன்பு கூறுகிறோமென்று சொல்லலாம், ஆனால் அவருடைய பலத்தினால் நாம் என்ன செய்கிறோமென்பது தான் உண்மையானதை வெளிப்படுத்துகிறது.

தாராளமாய் கொடுக்கும் இருதயம்

விக்கியூடைய இருசக்கர  வாகனம் சரிபார்க்க முடியாத அளவிற்கு பழுதாகிவிட்டது. அவள் தன்னுடைய புது வாகனத்திற்கு சிறுக சிறுக சேமிக்க தொடங்கினாள். விக்கி வேலை பார்க்கும் உணவகத்திற்கு அடிக்கடி கிறிஸ் வருவது உண்டு. ஒரு நாள் அவள் வாகனம் வாங்கும்படி பணம் சேமித்து கொண்டிருந்ததை கேள்வி பட்டார் கிறிஸ். ஏதாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.  அதே சமயத்தில் அவருடைய மகன் தனது வாகனத்தை விற்கும்படி முடிவெடுத்தான். உடனே கிறிஸ் அதை விலைக்கு வாங்கி, அதை பழுது பார்த்து, சாவியை விக்கி கையில் கொடுத்தார். அது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. "யார் இப்படிப்பட்ட காரியங்கள் செய்யக்கூடும் " என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுக்க வேண்டும் என்று வசனம் நம்மை அழைக்கிறது. பவுல் தீமோத்தேயுக்கு சொன்னது போல் "நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்," (I தீமோத்தேயு 6:18). பேச்சுக்காக நன்மை செய்கிறவர்களாய் காணப்படுவதற்கு அல்ல, சந்தோஷத்துடன் கொடுக்கும் ஆவியுள்ளவர்களாய்இருக்க  நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம். தாராள மனதுள்ளவர்களாய் நம் இருதயம் காணப்பட வேண்டும் - "கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,"

(வசா. 18)

திறந்த இருதயம் கொண்டு, தாராளமாய் கொடுப்பதினால் நமக்கு தேவையானது இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலை நமக்கு வேண்டாம். நாம் அன்போடு தாராள மனதுள்ளவர்களாய் இருப்பதினால், நித்திய ஜீவனை பற்றிக்கொள்கிறோம்  என்று வேதம் கூறுகிறது. தேவனுக்குள் உண்மையாய் வாழ்வதின் அர்த்தம், நமக்கு இருக்கும் காரியத்தை சார்ந்து இருக்காமல் தேவை உள்ளவர்களுக்கு இலவசமாய் கொடுப்பதே.