எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

உறுதியான மறுப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. ஜெர்மானிய  நாசிப்படைகள், ப்ரான்ஸ் ஜகார்ஸ்டேட்டரை இழுத்துக் கொண்டுவந்து அடிப்படை இராணுவப் பயிற்சி கொடுத்தனர். பயிற்சியின்போது அடால்ஃப் ஹிட்லருக்கு உண்மையாயிருக்கும்படிக்கான உறுதிமொழி எடுக்க விரும்பாமல் தவிர்த்தான். எனவே அவனை அவனுடைய பண்ணைக்குத் திருப்பி அனுப்பினர். ஆனால் சிலநாட்களில் யுத்தத்திற்கு வரும்படி அவனுக்கு அழைப்பு வந்தது. ஜெர்மானிய நாசியினரின் கொள்கையையும் யூத இனப்படுகொலையையும் ஏற்கமறுத்த ஜகார்ஸ்டேட்டர், தேவனுக்கு உண்மையாயிருக்க தீர்மானித்து, நாசி படையோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட மறுத்தான். அவனுடைய மனைவி மற்றும் மூன்று மகள்களும் நிர்க்கதியாய் விடப்பட்டு, ஜகார்ஸ்டேட்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

மரணத்தின் பிடியில் நிறுத்தப்பட்டு ஆண்டாண்டுகாலமாய் கிறிஸ்துவை மறுதலிக்கும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பல உண்மைக் கிறிஸ்தவர்கள் அதை செய்யாமல் உறுதியாய் நின்றனர். அதில் ஒன்றுதான் தானியேலின் சம்பவம். “எந்த மனுஷனாகிலும்... ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும்” சேவித்தால் அவனை சிங்கக் கெபியில் போடவேண்டும் என்றும் கட்டளை அதிகாரப்பூர்வமாய் வெளியிடப்பட்டபோதும், தானியேல் கர்த்தருக்கு உண்மையாயிருந்தான். “தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வச. 10). தீர்க்கதரிசி தேவனிடத்தில் முழங்காற்படியிட்டு, என்ன வந்தாலும் சரியென்று தேவனை மட்டும் சார்ந்துகொண்டான். 

சிலவேளைகளில் நம்முடைய தேர்ந்தெடுப்பு தெளிவாயிருக்கும். நம்மைச் சுற்றிலுமிருக்கிற மக்கள் இதைச் செய்யுங்கள் என்று நம்மை தூண்டினாலும், நம்முடைய பேரும் புகழும், சுகவாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், நாம் தேவனுக்கு கீழ்ப்படிவதிலிருந்து பின்வாங்காமல் இருப்போம். அது விலையுயர்ந்த ஆசீர்வாதங்களாயிருந்தாலும் நம்முடைய மறுப்பைத் தெரியப்படுத்துவோம்.

சமாதானமான வாழ்க்கை

ஆஸ்திரேலியாவின் பெர்த் என்ற இடத்தில் “சமாதான இல்லம்” என்று ஒரு இடமுண்டு. போதை பழக்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கான இடம் அது. இந்த சமாதான இல்லத்தில் தேவனுடைய சமாதானத்தை அறிவிக்கும் அன்புள்ள பணியாளர்களை அவர்கள் சந்திக்க நேரிடும். போதை, மதுபானம், சூதாட்டம் மற்றும் பல கெட்ட பழக்கங்களினால் சிதைந்துபோன வாழ்க்கை அங்கே தேவனுடைய அன்பினால் சீரமைக்கப்படுகிறது.

இங்கு நடைபெறும் மனமாற்றத்திற்கு பெரிய காரணம், சிலுவையின் செய்தியே. சமாதான இல்லத்தை நாடும் உடைக்கப்பட்ட மக்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதால், தங்களுடைய ஜீவியத்திலும் உயிர்தெழும் அனுபவத்தை பெறுகிறார்கள். நாமும் கிறிஸ்துவில் சமாதானத்தையும் சுகத்தையும் அடைகிறோம்.

சமாதானம் என்பது பிரச்சனையே இல்லாத வாழ்க்கையல்ல மாறாக, பிரச்சனைகளின் மத்தியில் தேவனுடைய நிறைவை அனுபவிப்பது. நம் எல்லோருக்கும் இந்த சமாதானம் தேவை. அது கிறிஸ்துவினாலும் அவருடைய ஆவியானவராலும் மட்டுமே சாத்தியம். ஆகையினால்தான் பவுல் கலாத்திய சபையை ஆவியின் மறுரூபத்திற்கு நேராய் வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவி நம்முடைய வாழ்க்கையில் கிரியை செய்யும்போது, அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை போன்ற ஆவியின் கனிகள் நம்மில் உருவாகத் துவங்கும் (கலாத்தியர் 5:22-23). அவராலேயே நிலையான சமாதானத்தை நமக்குத் தரமுடியும்.

ஆவியானவர் நமக்கு தேவ சமாதானத்தை கொடுக்கும்போது, நம்முடைய எல்லா தேவைகளுக்காகவும் நாம் பரமபிதாவை நாடுவதற்கு பழகுகிறோம். அப்பொழுது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்,” “(நம்முடைய) இருதயங்களையும் (நம்முடைய) சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி. 4:7).

கிறிஸ்துவின் ஆவியில் நம்முடைய உள்ளம் மெய்சமாதானத்தை அனுபவிக்கிறது. 

தெய்வீக மீட்பு

நேரிடப்போகிற ஒரு பெரிய ஆபத்தைக் குறித்த செய்தியை தொலைபேசி வாயிலாக கேள்விப்பட்ட காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய வாகனத்தை இருட்டான இரயில் பாதையில் வேகமாய் செலுத்தி, அந்த இரயில் பாதையில் கார்  சிக்கியிருந்த இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார். வெகுவேகமாய் வந்த இரயிலானது அந்த காரை உடைத்து நொறுக்கியது அருகிலிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. “50லிருந்து 80 மைல் வேகத்தில்” அந்த இரயில் வந்தது என்று அந்த அதிகாரி அறிவித்தார். அந்த இரயில் காரை உடைத்து நொறுக்குவுதற்கு சற்று முன், சற்றும் யோசிக்காமல் அந்த காவல் அதிகாரி, காரில் சுயநினைவிழந்திருந்த நபரை வெளியே இழுத்து கனப்பொழுதில் அவரின் உயிரைக் காப்பாற்றினார்.    

நம்பிக்கையிழக்கும் வாழ்க்கைத் தருணத்திலெல்லாம் தேவன் நம்மை விடுவிக்கிறவர் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது. எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கி, ஒடுக்கப்பட்டு தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலர்கள், தாங்கள் விடுவிக்கப்படுவது சாத்தியமேயில்லை என்று நினைத்தனர். யாத்திராகமத்தில் தேவன் அவர்களுக்கான நம்பிக்கையின் வார்த்தையைக் கொடுக்கிறார்: “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,” “அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன்,” “அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்” (3:7). தேவன் பார்ப்பது மட்டுமின்றி, கிரியையும் செய்கிறார். “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்க... இறங்கினேன்” (வச. 8) என்று கூறுகிறார். அதற்கேற்ப, தேவன் இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். இதுதான் தெய்வீக மீட்பு.

தேவன் இஸ்ரவேலை மீட்கும் இந்த சம்பவம், இக்கட்டில் சிக்கித் தவிக்கும் நமக்கு தேவனுடைய இருதயத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்துகிறது. தேவன் வந்து விடுவித்தாலொழிய வாய்ப்பே இல்லை என்று அழிவின் பாதையில் பயணிக்கும் நம்மில் பலருக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நம்முடைய சூழ்நிலைகள் சாத்தியமில்லாமல் தெரியலாம். அதிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவரான தேவனை நோக்கி நம் கண்களை ஏறெடுத்து, நம் இருதயத்தை அவரிடமாய் திருப்புவோம்.

சரியான தீர்ப்பு

பதினான்கு வயது சிறுவனைக் கொலைசெய்த குற்றத்திற்காக 1983ஆம் ஆண்டு மூன்று வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். “சிறுவனின் தடகள சட்டைக்காய் அவன் சுடப்பட்டான்” என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று வாலிபர்களும் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்படுவதற்குள் அவர்கள் 36 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்கு பின்பாக செலவிடவேண்டியிருந்தது. ஆம், அந்த கொலையை செய்தது வேறொரு நபர். அந்த மூவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து அவர்களை விடுவிக்குமுன், அந்த நீதிபதி அவர்களிடம் மன்னிப்புகேட்டார்.

எவ்வளவுதான் நாம் முயற்சிசெய்தாலும் (நம்முடைய அதிகாரிகள் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும்) மனிதனுடைய நீதி பெரும்பாலும் குறைவுள்ளதாகவே இருக்கிறது. நாம் எப்போதும் எல்லா விவரங்களையும்  தெரிந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் நேர்மையற்றவர்கள், நிஜத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். சிலநேரங்களில் நாமே தவறு செய்கிறோம். தவறுகளை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்த சிக்கலான மனிதர்களை போலல்லாமல், தேவன் சரியான நீதியை வழங்குகிறார். “அவர் கிரியை உத்தமமானது” என்றும் “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்றும் மோசே கூறுகிறார் (உப. 32:4). தேவன் உள்ளதை உள்ளதென்று பார்க்கிறார். சிலவேளைகளில் நாம் தவறிழைத்தாலும் கடைசியில் தேவன் அவைகளை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார். அது எப்போது என்பது துல்லியமாய்  தெரியவில்லை என்றாலும், நாம் நம்பிக்கையோடு சேவிக்கிற தேவன், “நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” (வச. 4).

எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கமுடியாத ஒரு குழப்பமான பாதையில் நாம் நடக்கலாம். நமக்கு அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை காலத்திற்கும் சரிசெய்யமுடியாதோ என்று ஒருவேளை நாம் பயப்படலாம். ஆனால் இம்மையிலோ அல்லது மறுமையிலோ, நமக்கான நீதியை நிச்சயமாய் நிலைநாட்டும் நம்முடைய நீதியின் தேவனை முழுமையாய் நம்ப முற்படுவோம்.

ஏராளமான தண்ணீர்

தீவிர வறட்சி, உஷ்ணம், நெருப்பு என்று “ஒரு மோசமான கதையை” அந்த அறிக்கை சமர்ப்பித்தது. பசபசப்பான செடிகளை காய்ந்த சருகுகளாக மாற்றக்கூடிய, வெகு குறைந்த மழையுடனான ஒரு பயங்கரமான ஆண்டைக் குறித்து அந்த அறிக்கை விவரித்தது. பொங்கி எழுந்த தீ கிராமப்புறங்களை எரித்தது. மீன்கள் உயிரிழந்தது. பயிர்கள் அற்றுபோயிற்று. எல்லாவற்றிற்கும் காரணம் நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் தண்ணீர் என்னும் ஒரு எளிய ஆதாரம் அவர்களிடம் இல்லாததுதான். நாம் அனைவரும் வாழ தண்ணீர் மிகவும் அவசியம்.

இஸ்ரவேலர்கள் கடினமான ஒரு சூழ்நிலையில் இருந்தனர். ஜனங்கள் தூசி நிறைந்த, தரிசான பாலைவனத்தில் முகாமிட்டபோது, அவர்கள் இப்படியாய் கூறுகிறார்கள்: “அங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது” (யாத்திராகமம் 17:1). மக்கள் பயந்தார்கள். அவர்களின் தொண்டை வறண்டு இருந்தது. மணலின் சூடு அவர்களை தாக்கிற்று. அவர்களின் குழந்தைகளுக்கு தாகம் ஏற்பட்டது. பீதியடைந்த மக்கள், தண்ணீர் வேண்டி மோசேயுடன் வாதாடினார்கள் (வச. 2). ஆனால் மோசே என்ன செய்ய முடியும்? அவர் தேவனிடம் மட்டுமே செல்ல முடியும்.

தேவன் மோசேக்கு ஒரு விசித்திரமான அலோசனையைக் கொடுத்தார்: “உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு... நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்” (வச. 5-6). ஆகவே, மோசே கன்மலையை அடித்தான், ஒரு நதி அதிலிருந்து புறப்பட்டது, ஜனங்களுக்கும் அவர்களுடைய கால்நடைகளுக்கும் குடிக்க ஏராளமாய் தண்ணீர் கிடைத்தது. தங்கள் தேவன் தங்களை நேசிக்கிறார் என்பதை இஸ்ரவேல் அந்நாளிலே அறிந்தார்கள். அவர்களின் தேவன் ஏராளமான தண்ணீரினால் அவர்களை ஆசீர்வதித்தார்.

நீங்கள் வாழ்க்கையில் வறட்சியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலை தேவனுக்கு தெரியும் என்பதையும் அவர் உங்களோடே இருக்கிறார் என்பதையும் அறியுங்கள். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், உங்கள் குறைபாடு எதுவாக இருந்தாலும், அவருடைய ஏராளமான தண்ணீரில் நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் காணலாம்.

புதிய கண்களுடன் பார்த்தல்

வீடியோ கேம், இது ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது, ஒரு மெய்நிகர் (வெர்சுவல்) தீவில் நூறு வீரர்களை இடம்பெறச் செய்து இறுதியில் ஒரே ஒரு வீரர் மிஞ்சும் வரை போட்டியிட வைக்கிறது. ஒரு வீரர் உங்களை போட்டியில் இருந்து நீக்கும் போதெல்லாம், அந்த வீரரின் வான்டேஜ் புள்ளியை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுவது போல், “நீங்கள் மற்றொரு வீரரின் மனநிலையில் நுழைந்து அவர்களின் நோக்கில் பார்க்கும்போது, ​​உணர்ச்சி பதிவு. . . சுய பாதுகாப்பிலிருந்து ......... இனவாத ஒற்றுமையாக மாறுகிறது.  . . .  நீங்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்லாத, அந்நியரிடம் முதலீடு செய்ததை உணரத் தொடங்குகிறீர்கள்.”

மற்றொருவரின் அனுபவத்தைக் காண நாம் நமது உள்ளத்தை திறக்கும் போதெல்லாம், நம்முடைய சொந்த பார்வைக்கு அப்பால் பார்த்து, மற்றொருவரின் வலி, பயம் அல்லது நம்பிக்கையை எதிர்கொள்ளும் போது மாற்றம் நிகழ்கிறது. நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், அதற்கு பதிலாக “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”, அப்படியானால் நாம் தவறவிட்ட விஷயங்களை கவனிக்கிறோம் (பிலிப்பியர் 2: 3). நம்டைய கவலைகள் விரிவடைகின்றன. நாம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறோம். நம்முடைய சொந்த தேவைகள் அல்லது மனக்கவலைகளில் மட்டுமே ஈடுபடுவதை விட, மற்றவர்களின் நல்வாழ்வில் முதலீடு செய்பவர்களாகிறோம். “[நமது] சொந்த நலன்களை” பார்ப்பதற்குப் பதிலாக, “மற்றவர்கள் நலன்களுக்காக நாம் உறுதியாக இருக்கிறோம்”(வச.. 4). நாம் செழிக்க வேண்டும் என்று கருதுவதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் செழிக்க உதவும் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பின்பற்றுகிறோம்.

இந்த மாற்றப்பட்ட பார்வையால், நாம் மற்றவர்களுக்காக இரக்கம் கொள்கிறோம். நமது குடும்பத்தை நேசிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். நாம் எதிரியிடமிருந்து கூட ஒரு நண்பரை உருவாக்கலாம்!

அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது

பெரும்பாலான சமோவா இளைஞர்கள் (ஒரு ஆஸ்திரேலிய கடலோர தீவு) அவர்களின் மக்களுக்கும் மற்றும் அவர்களது தலைமைக்கும் தங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை அடையாளங்களாக பச்சையாககுத்தியிறுப்பார்கள். இயற்கையாகவே, இந்த அடையாளங்கள் சமோவான் ஆண்கள் ரக்பி அணி உறுப்பினர்களின் கைகளில் இடம்பெற்றிருக்கும். பச்சை குத்தல்கள் என்றாலே எதிர்மறையான அர்த்தங்களைக் கொடுக்கும் நாடான ஜப்பானுக்குப் பயணம் செய்தபோது, ​​குழு உறுப்பினர்கள் தங்கள் பச்சை குத்தல்கள்  தங்களை அழைத்தவர்களுக்கு ஒரு சிக்கலை வழங்கியதை உணர்ந்தனர். நட்பின் வெளிப்பாடாக, சமோவான் அணியினர் தங்கள் பச்சை குத்தியதை மறைக்க வடிவமைப்புகளை உள்ளடக்கிய தோல் நிற உறைகளை அணிந்தனர். "ஜப்பானியரின் எண்ணங்களுக்கு நாங்கள் மரியாதைக்குரியவர்களாகவும் மற்றும் கவனத்துடனும் இருக்கிறோம்....ஜப்பானிய வழியில்” என்று அணியின் தலைவர் விளக்கினார். "நாங்கள் பச்சையை காண்பிப்பது சரி என்ற நிலையை நாங்கள் உறுதி செய்வோம்."

தனிமனித கருத்துக்களை முக்கியப்படுத்தும் ஒரு யுகத்தில், சுய வரம்பை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது—ரோமருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கூறிய கருத்து. சில சமயங்களில் அன்பினால் மற்றவர்களுக்காக நம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அவசியமாகிறது என்று அவர் எங்களிடம் கூறினார். நம்முடைய சுதந்திரத்தை எல்லைக்கே தள்ளுவதற்குப் பதிலாக, சில சமயங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது. பவுல் அப்போஸ்தலன் தேவாலயத்தில் சிலர் “எந்த பதார்த்தத்தையும் சாப்பிட” சுதந்திரம் இருப்பதாக நம்பினார்கள், ஆனால் மற்றவர்கள் “மரக்கறிகளை மட்டுமே” சாப்பிட்டார்கள் (ரோமர் 14: 2) என்பதை விளக்கினார்.  இது ஒரு சிறிய பிரச்சினை போல் தோன்றினாலும், முதல் நூற்றாண்டில், பழைய ஏற்பாட்டின் உணவுமுறை சட்டங்களை பின்பற்றுவது சர்ச்சைக்குரியதாக இருந்தது. சுதந்திரமாக சாப்பிட்டவர்களை குறிப்பிட்ட வார்த்தைகளால் தீர்மானிப்பதற்கு முன், "நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக" என்று பவுல் அனைவருக்கும் அறிவுறுத்தினார் (வச. 13). "மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்." (வச. 21).

சில நேரங்களில், இன்னொருவரை நேசிப்பது என்பது நமது சொந்த சுதந்திரங்களை கட்டுப்படுத்துவதாகும். நமக்கு முழு சுதந்திரம் உள்ளதாலேயே அனைத்தையும் எப்போதும் செய்யலாம் என்றில்லை. சில நேரங்களில் அன்பு நம்மைக் கட்டுப்படுத்துகிறது.

நம் வறுமையிலிருந்து

வாரன் பபெட், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் கொடுக்கும் வாக்குறுதியைத் தொடங்கி ஒரு சரித்திரம் படைத்தனர், அவர்களது பணத்தில் பாதியை நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்தனர். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 92 பில்லியன் டாலர்களைக் கொடுப்பதாகும். இந்த உறுதி மொழியானது  உளவியலாளர் பால் பிஃப்பை கொடுக்கும் முறைகளைப் பற்றி படிக்கத் தூண்டியது. ஒரு பரிசோதனையின் மூலம், ஏழைகள் செல்வந்தர்களை விட 44 சதவிகிதம் அதிகம் கொடுக்க விரும்புவதைக் கண்டறிந்தார். தங்கள் சொந்த வறுமையை உணர்ந்தவர்கள் பெரும்பாலும் அதிக தாராள மனப்பான்மைக்கு நேராக நகர்த்தப்படுகிறார்கள்.

இயேசு இதை நன்றாக அறிந்திருந்தார். தேவாலயத்திற்கு சென்றிருந்த அவர், மக்கள் பரிசுகளை பண்டகசாலையில் போடுவதைப் பார்த்தார். பணக்காரர்கள் பணத்தைத் தூக்கி எறிந்தனர். ஆனால் ஒரு ஏழை விதவை ஏறக்குறைய ஒரு ருபாய் மதிப்புள்ள தனது கடைசி இரண்டு செப்பு நாணயங்களை வெளியே எடுத்து பண்டகசாலையில் வைத்தார். நான் இயேசு எழுந்துநின்று மகிழ்ந்து, திகைத்து நிற்பதை கற்பனையாகப் பார்க்கிறேன். உடனடியாக அவர் தம்முடைய சீஷர்களைச் கூட்டி, இந்த திகைப்பூட்டும் செயலை அவர்கள் தவறவிடாமல் பார்த்துக் கொண்டார். “அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ. 43) என்றார். இயேசு எதைப் பற்றி பேசுகிறார் என்பதை யாரேனும் விளக்குவார்கள் என்று நம்பி சீஷர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கலக்கமடைந்து போனார்கள். எனவே, அவர் அதை தெளிவுபடுத்தினார்: “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்றார் (வ.44).

நம்மிடம் கொடுப்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால் நம்முடைய வறுமையிலிருந்து கொடுக்க இயேசு நம்மை அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோம். நம்முடைய நிறைவான பரிசுகளில் தேவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.

வித்தியாசமாக சிந்திப்பது

கல்லூரியில் படிக்கும் போது, ​​வெனிசுலாவில் கோடைகாலத்தின் ஒரு நல்ல பகுதியை நான் கழித்தேன். உணவு வியக்க வைப்பதாக இருந்தது. மக்கள் மகிழ்ச்சிகரமானவர்கள், வானிலை மற்றும் விருந்தோம்பல் அழகாக இருந்தது. இருப்பினும், முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்குள், நேர நிர்வாகத்தை குறித்த எனது கருத்துக்கள் எனது புதிய நண்பர்களால் பகிரப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் மதியம் மதிய உணவு சாப்பிட திட்டமிட்டிருந்தால், அது மதியம் 12 முதல் 1 மணி இடையில் எப்பொழுதாவது இருக்கலாம். கூட்டங்கள் அல்லது பயணங்களுக்கும் இப்படியே: காலவரையறைகள் குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் தோராயமாக இருந்தன. “சரியான நேரத்தில்” என்ற எனது யோசனை நான் உணர்ந்ததை விட மிக அதிகமாக கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.

பொதுவாக நாம் எப்போதும் கவனிக்காமலேயே, நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள கலாச்சார விழுமியங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளோம். பவுல் இந்த கலாச்சார சக்தியை “பிரபஞ்சம்” என்று அழைக்கிறார் (ரோம. 12:2). இங்கே, “பிரபஞ்சம்” என்பது இயற்பியல் பிரபஞ்சத்தை குறிக்காது, மாறாக நம் இருப்பைப் பரப்பும் சிந்தனை வழிகளைக் குறிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நாம் வாழ்வதால் கேள்விக்குறியாகாத அனுமானங்களையும் வழிகாட்டும் கொள்கைகளையும் குறிக்கிறது.

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” என்று விழிப்புடன் இருக்குமாறு பவுல் எச்சரிக்கிறார். மாறாக, “ உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” (வச. 2). சிந்தனை வழிகளை செயலற்ற முறையில் எடுத்துக்கொள்வதற்கும், நம்மைச் சூழ்ந்திருப்பதாக நம்புவதற்கும் பதிலாக, தேவனின் சிந்தனை வழியை தீவிரமாகப் பின்தொடரவும், அவருடைய “நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை” எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் கற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகிறோம் (வச. 2). மற்றவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதை விட, தேவனுக்கு செவிசாய்ப்போம்.