எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

பன்றி இறைச்சியும் முட்டைகளும்

கற்பனைக் கதை ஒன்றில் கோழியும், பன்றியும் ஆகிய இரு விலங்குகள் சேர்ந்து உணவகம் ஒன்று துவங்குவது குறித்து பேசிக் கொண்டன. உணவு வகைகளைக் குறித்து அவை திட்ட மிட்ட போது, கோழி, பன்றி இறைச்சியும், முட்டையும் பரிமாறலாம் எனக் கூறியது. பன்றி இதனை மறுத்து “நன்றி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் முழுமையாக அர்பணிக்கப்பட வேண்டும்.” ஆனால், நீ இதில் கலந்து கொள்ள மாத்திரம் செய்யலாம் என்று கூறியது.

அந்த பன்றி தன்னை தட்டில் பரிமாறப்படுவதற்கு கவலைப்படவில்லை, தான் முழுவதும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது. இயேசுவை முழுமனதோடு பின்பற்றவேண்டும் என்ற பாடத்தை எனக்குக் கற்று கொடுத்தது.

யூதாவின் ராஜாவாகிய ஆசா தன் ராஜ்ஜியத்தை காத்துக் கொள்வதற்காக தன் அரண்மனை மற்றும் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களிலிருந்து வெள்ளியையும், பொன்னையும் எடுத்து சீரியாவின் ராஜா பெனாதாத்திடம் அனுப்பி இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும், அவனுக்கும் இருக்கும் உடன்படிக்கையை முறித்துப் போடும்படி அனுப்பினான். பெனாதாத் இதற்கு சம்மதித்து, இருவரும் இஸ்ரவேலை எதிர்த்தனர் (2 நாளா. 16:2).

ஆனால், கர்த்தருடைய தீர்க்கதரிசி அனானி ஆசாவிடத்தில் வந்து, கர்த்தர் ஏராளமான பகைஞர்களின் கைக்கு உம்மை விடுவித்திருந்தும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளாமல் சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு மதிகேடாய் நடந்து கொண்டீர் என்றான். “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9).

நாம் நமது போராட்டங்களையும் சவால்களையும் சந்திக்கும் போது கர்த்தரே நமக்கு சிறந்த துணை என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் முழுமனதோடு அவருக்கு பணிசெய்ய அர்ப்பணிக்கும் போது அவர் நம்மை பெலப்படுத்துகிறார்.

இன்னும் மேலாக அறிதல்

நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.

அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).

வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.

மிகச்சிறந்த பரிசு எது

சமீபத்தில் என் கணவர் தனது முக்கியமானதொரு பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்தப் பிறந்தநாளின் எண் பூஜ்யத்தில் முடிந்தது. அதுவே புதியதொரு பத்தாண்டுகளைக் கடக்கப்போகிறார் என்றும், அதற்கு நான் கொடுக்கும் பரிசு அவரைக் கனம் பண்ணுவதாக இருக்க வேண்டும் என்றும் தீவிரமாக சிந்தித்தேன். இதை ஏற்ற விதத்தில் கொண்டாடுவது எப்படி என்று பலவிதமான சிந்தனைகளைக் பற்றி என் பிள்ளைகளிடம் ஆலோசித்தேன். புதிதாக துவங்க இருக்கும் புத்தாண்டு காலத்திற்கான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அந்த கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். கொடுக்கும் பரிசு, அவர் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு இன்றியமையாமவர் என்பதைப் பிரதிபலிக்க வேண்டுமென்று விரும்பினேன். எங்கள் பரிசு அவருடைய வாழ்க்கையில்  இந்த முக்கிய பிறந்த நாளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமென்று விரும்பினேன்.

முக்கியமான பிறந்தநாளை விட மிகப்பெரிய பரிசொன்றை தேவனுக்குக் கொடுக்க சாலமோன் ராஜா விரும்பினார். தான் கட்டும் ஆலயம் தேவனுடைய பிரசன்னத்திற்கு உகந்ததாக இருக்க விரும்பினார். தேவாலய கட்டுமானப் பொருட்களுக்காகத் தீரு ராஜாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் “எங்கள் தேவன் மற்ற எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரிதாயிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் (2 நாளா. 2:5). மனிதரின் கைகளினால் கட்டப்படும் ஆலயம், வானங்களும் கொள்ளாத தேவனின் நற்பண்புகளுக்கு ஒருநாளும் ஈடாகாது என்று அறிந்தும், அவர் மேலுள்ள அன்பினாலும், அவரை ஆராதிக்க அவர்மேல் கொண்ட விருப்பத்தினாலும் கட்டினான்.

நம்முடைய தேவன் மெய்யாகவே, எல்லாத் தேவர்களையும்விட பெரியவர். அவர் நம் வாழ்க்கையில் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறபடியால், நம் இருதயங்கள் அன்பினால், தூண்டப்பட்டு, அதன் மதிப்பை பொருட்படுத்த விலையுயர்ந்த காணிக்கைகளை செலுத்துகிறோம். சாலமோனுக்குத் தன் காணிக்கை தேவனுடைய தகுதிக்கு ஈடாகாது என்று அறிந்தும், சந்தோஷமாகத் தன் காணிக்கைகளைச் செலுத்தினான். நாமும் அப்படியே செய்யலாம்.

மிக மிக சிறந்தது.

எனது தாயாரின் பிறந்த நாளுக்கு மறுநாள் எனது பிறந்த நாளாகும். நான் வாலிப வயதிலிருந்த பொழுது எனது பொருளாதார நிலைமைக்கு ஏற்ப எனது தாயாருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய என்ன பரிசைக் கொடுக்கலாம் என்று அதிகமாக யோசித்தேன். எனது கையிலிருந்த பணத்தைப் போட்டு எனது தாயாருக்கு பரிசு ஒன்று வாங்கி அவர்களுக்கு கொடுக்கும் பொழுது, எனது தாயார் அதை மிகவும் நன்றியுடனும், பாராட்டுடனும் ஏற்றுக் கொள்வார்கள். மறுநாள் வரும் எனது பிறந்த நாளுக்கு எனது தாயார் ஒரு வெகுமதியை எனக்கு பரிசாக அளிப்பார்கள் அவர்களது பரிசு நான் அவர்களுக்கு அறித்த பரிசை விட நிச்சயமாக மிகச் சிறந்ததாக இருக்கும். நான் அவர்களுக்கு அளித்த பரிசின் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படிச் செய்யவில்லை. ஆனால் என்னிடமுள்ள பணத்தைவிட அவர்கள் அதிகமாக பணம் வைத்திருந்த நிலைமைக்கு தகுந்தபடி தாராளமாக கொடுப்பார்கள்.

எனது தாயாருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற எனது விருப்பம், தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்று தாவீதின் விருப்பத்தை எனக்கு நினைப்பூட்டியது. அவன் வாழ்ந்து வந்த ஆடம்பரமான அரண்மனைக்கும், தேவன் அவரை வெளிப்படுத்தும் எளிமையான கூடாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு அவனை அதிகம் பாதித்தது. ஆகவே தேவனுக்கு ஓர் ஆலயம் கட்ட அதிகமாக விரும்பினான். தாவீதின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மிகச் சிறந்த ஒரு பரிசை தேவன் தாவீதிற்கு அருளினார். தாவீதின் குமாரர்களின் ஒருவனாகிய சாலமோன் அவருக்கு ஆலயத்தை கட்டுவான் என்று கூறினதோடு, தேவன் தாவீதிற்கு ஒரு வீட்டை கட்டப்போவதாகவும், ஒரு இராஜ்ஜியத்தை அருளப்போவதாகவும் வாக்குப் பண்ணினார் (1 நாளா. 17:11). அந்த வாக்குத்தத்தம் சாலமோனில் ஆரம்பித்து இறுதியில் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய (வச. 12) இராஜ்ஜியத்தையுடைய இயேசுவில் நிறைவேறியுள்ளது. தாவீது அழிந்து போகக்கூடிய அவனது ஆஸ்தியிலிருந்து தேவனுக்கு கொடுக்க விரும்பினான். ஆனால், தேவனோ என்றென்றும் அழியாமல் நிலைதிருக்கக்கூடிய ஒன்றை தாவீதிற்கு வாக்குப் பண்ணினார்.

தாவீதைப் போல நாமும் நமது நன்றி உணர்வினாலும், அன்பினாலும் தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் உந்தப்படுவோம். தேவன் இயேசுவின் மூலமாக நமக்கு அருளிய அளவற்ற ஆசீர்வாதங்களை நாம் எப்பொழுதும் காணலாம்.

போதுமானது

ஒரு சிறு குழுவை எங்களது வீட்டில் வைத்து உபசரிக்க வேண்டுமென்று என் கணவரிடமும் என்னிடமும் கேட்ட பொழுது உடனே அதை மறுத்துவிட நினைத்தேன். அவர்களை உபசரிக்கும் அளவிற்கு எனக்கு வசதிகள் இல்லை. எங்களது வீடு மிகச் சிறியது. அதிக ஆட்கள் அதில் தங்க இயலாது. அனைவருக்கும் போதுமான இருக்கைகள் கூட இல்லை. அவர்களோடு உரையாடலில் ஈடுபடுமளவிற்கு எங்களிடம் திறமைகளும் இல்லை. அச்சிறிய குழுவிற்கு தேவையான உணவை தயாரித்து தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், அதற்காக செயல்படும் திறமையோ பணவசதியோ என்னிடம் இல்லை. அவர்களை பராமரிக்க என்னிடம் போதுமான வசதிகள் இல்லை. ஆனால், தேவனுக்கும் இந்த சமுதாயத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆவல் உண்டு. ஆகவே எங்களது பயங்களை புறம்பே தள்ளிவிட்டு அச்சிறு குழுவை பராமரிக்க ஒத்துக் கொண்டோம். அச்சிறு குழுவை எங்களது வரவேற்பரையில் ஏற்றுக் கொண்டது, கடந்த ஐந்து அண்டுகளாக, மகிழ்ச்சியைத் தந்தது..

தேவனுடைய மனுஷனான எலிசாவிற்கு, அப்பங்களை கொண்டுவந்த மனிதனுக்கும் இதைப் போலவே தயக்கமும் சந்தேகமும் இருந்தது. அந்த மனிதன் கொண்டு வந்த அப்பத்தை மனிதர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி எலிசா கூறினான். அவனது பணிவிடைக்காரனோ அந்த இருபது அப்பங்களை எப்படி நூறு பேருக்கு கொடுக்க முடியும் என்று கேட்டான். மனிதர்கள் எண்ணத்தின்படி அந்த இருபது அப்பங்கள் நூறு பேரை போஷிக்க போதுமானதாக இருக்காது என்று எண்ணி அவற்றை மனிதர்கள் முன்பு வைக்க வேண்டாமென்று எண்ணினான். ஆனால், அந்த அப்பங்கள் அவர்களது தேவைக்கு அதிகமாக இருந்தது (2 இரா. 4:44). ஏனென்றால் அந்த மனிதன் கீழ்ப்படிந்து கொடுத்ததினால் தேவன் அவற்றை அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்தார்.

நாம் தகுதியற்றவர்களன்றோ கொடுப்பதற்கு நம்மிடம் போதுமானது இல்லை என்று எண்ணும்பொழுதோ, நம்மிடம் உள்ளது எதுவோ அதை விசுவாசத்துடன் கூடிய கீழ்ப்படிதலோடு தேவனிடம் கொடுக்க வேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனே அனைத்தையும் போதுமானதாக மாற்றுகிறவர்.

வெறுமையினின்று நிறைவிற்கு

பிரபலமான ஒரு குழந்தைகளின் கதைப் புத்தகம், ராஜாவைக் கனம்பண்ணி தன் தொப்பியைக் கழற்றின ஒரு ஏழை கிராமத்துப் பையன் பர்த்தொலொமேயுவின் கதையைக் கூறுகிறது. அவன் தொப்பியைக் கழற்றியவுடன் அவன் தலையில் இன்னொரு தொப்பி வந்தது, ராஜா தன்னை இந்தப்பையன் அவமதித்தாக நினைத்துக் கோபப்பட்டான். அவனை அரமனைக்குக் கொண்டுசெல்லும்பொழுது அவன் தலையிலிருந்து எடுக்க எடுக்க இன்னொரு தொப்பி வந்துகொண்டேயிருந்தது. ஒவ்வொரு தொப்பியும் விலையேறப்பெற்ற கற்கள் பதிந்து இன்னும் அழகாக இருந்தது. 500வது தொப்பி ராஜா டெர்வினுக்கே பொறாமையூட்டுவதாய், வைரங்களாலும் அழகிய இறகுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ராஜா பர்த்தலோமேயுவை மன்னித்து அந்த தொப்பியை 500 பொற்காசுகளுக்கு வாங்கினான். பர்த்தலோமேயுக்கு இப்பொழுது தொப்பியில்லை. ஆனால், 500 பொற்காசுகளுடன் சுதந்திரமாக வீட்டிற்குச் சென்றான்.

கடன்கொடுத்தவன் தன் பிள்ளைகளைப் பிடித்துக்கொள்ளப் போகிறானென்று, ஒரு விதவை எலிசாவிடம் ஓடி வந்தாள். அவளிடம் ஒரு குடம் என்ணெய் மாத்திரமே இருந்தது. ஆனால், அண்டை வீட்டுக்காரரிடத்தில் இரவல் வாங்கின பாத்;திரங்களையெல்லாம் தேவன் எண்ணெய்யால் நிரப்பினார். அவள் அதை விற்று, கடனை அடைத்து மீந்ததை வீட்டுச்செலவிற்கும் வைத்துக்கொண்டாள் (4:7).

தேவன் எப்படி எனக்கு இரட்சிப்பை இலவசமாய்க் கொடுத்தாரோ அப்படியே அந்த விதவைக்கும் பொருளாதார விடுதலை கொடுத்தார். நான் பாவத்தினின்று விடுபடுவதற்கான கிரயம் செலுத்தமுடியாமல் இருந்தேன். இயேசு அந்தக் கிரயத்தைச் செலுத்தி என்னை விடுவித்ததுமல்லாமல், நித்திய ஜீவனையும் எனக்களித்தார். எப்படி பர்த்தலோமேயு ராஜாவை அவமதித்ததற்கான கிரயத்தை செலுத்த முடியாதிருந்தாதானோ, அப்படியே நாமும் இருந்தோம். தேவனோ அற்புதமாய் கிரயம் செலுத்தி நம்மை மீட்டார். அவரை நம்புகிற ஒவ்வொருவருக்கும் தேவன் பரிபூரண ஜீவனைத்தருகிறார்.

தேவனிடம் கொடுத்துவிடு

ஒரு வாலிபனாக அநேக சவால்களைச் சந்திக்கும் போதும், விளைவு அல்லது உயர் விளைவு தீர்மானங்களை எடுக்கும் போதும், என் தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு நண்மையான காரியம் என்னவெனில், எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதினால் சரியான கோணத்தில்  பிரச்சனையை பார்க்க முடியும் என்பதே. சரியான பாடங்களை தேர்ந்தெடுத்தலின் தெளிவற்ற நிலையோ அல்லது எந்த வேலையை தேர்ந்தெடுப்பதென்பதோ, வயது வந்தோரினை பயமுறுத்தும் சூழல்களை எவ்வாறு சமாளிப்பது போன்ற தெளிவற்ற நிலையின் போது, நான் என் தாயாரின் எழுதும் வழக்கத்தின்படி செய்வேன். அடிப்படை உண்மைகள், அதன் தீர்வுக்கான வழிமுறைகள் அதன் பின் விளைவுகள் என எழுத ஆரம்பித்தேன். என் இருதயத்தை அந்த பக்கங்களில் கொட்டியபின் பிரச்சனையிலிருந்து எளிதாக வெளிவரமுடிந்தது. என் உணர்வு சார்ந்த நோக்கங்களை விட அப்பிரச்சனைகளின்  நிலையைத் தெளிவாகக் காண முடிந்தது.

என் எண்ணங்களை ஒரு தாளிள் பதித்ததின் மூலம் புதிய கோணத்தில் அணுக முடிந்தது போல என் இருதயத்தை தேவனிடம் ஜெபத்தின் மூலம் ஊற்றும் போது அவருடைய கண்ணோட்டம், அவருடைய வல்லமையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. எசேக்கியா ராஜா தன்னை அச்சுறுத்தும் சத்துருவிடமிருந்து ஒரு வருத்தமான கடிதத்தைப் பெற்ற போது இதனையே செய்கிறான். ஆசீரியர் பல தேசங்களை அழித்தது போல எருசலேமையும் அழித்து விடுவோம் என பயமுறுத்தியபோது எசேக்கிய அக்கடிதத்தை தேவனுக்கு முன்பாக விரித்தான். விண்ணப்பத்தோடு அவரை நோக்கிக் கூப்பிட்டான். இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜயங்கள் எல்லாம் அறியும்படிக்கு எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான் (2 இரா. 19:19).

நாம் நம்மை பதட்டத்துக்குள்ளாக்கும் பயத்தைக் கொண்டுவரும். அதனால் நம்மீடத்திலுள்ளது போதாது என்ற விழிப்புணர்வு ஏற்படும்பொழுது, எசேக்கியாவின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி கர்த்தரை நோக்கி ஓடுவோம். நம் பிரச்சனைகளை அவருக்கு முன்பாக சமர்ப்பிப்போம். அவர் நம் நடைகளை நல் வழிப்படுத்துவார். அமைதியற்ற இருதயத்தை அமைதிப்படுத்துவார் என அவர் மீது நம்பிக்கை வைப்போம்.

மிகவும் கவனமாகத் தேடுதல்!

எங்களது மகள் உயர் நிலைப்பள்ளி குழு ஓட்டப்பந்தயக் குழுவில் ஓடும் போது, எங்களது குடும்பத்தினர் ஒவ்வொரு சனிக்கிழமையும் பந்தய மைதானத்தில் ஓரத்தில் வரிசையாக நின்று அவளை உற்சாகப்படுத்தி கோஷமிடுவோம். பந்தயத்தின் முடிவு கோட்டைத் தொட்டபின் விளையாட்டு வீரர்கள் கூட்டமாக வெளியே வந்து தங்களது சக வீரர்களையும் பயிற்சியாளர்களையும் பெற்றோரையும் சந்திப்பர். 300-க்கும் மேற்பட்ட கூட்டத்தினர் அவர்களை அப்படியே சூழ்ந்துகொள்வதால், அக் கூட்டத்தில் யாராவது ஒருவரை காண்பது மிகவும் சிரமமானது. நாங்கள் எங்களது மகளை தேடி கண்டுபிடித்து, நாங்கள் காணவிரும்பிய அந்த ஒரே ஒரு வீராங்கனையை உற்சாகமாய் கட்டித் தழுவுவோம். அவள் எங்களது அன்பான மகள்.

பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்ட பின், தேவன் யூதர்களை எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பப் பண்ணினார். தேவன் அவர்கள் மீது கொண்டிருந்த மகிழ்ச்சியையும், அவர்கள் யாத்திரையாக சொந்த வீட்டிற்குத் திரும்புவதற்காக வழிகளை ஆயத்தம் பண்ணின அவரது கிரியைகளையும் அவர்களை வரவேற்க வாசல்களைத் தேவன் ஆயத்தமாக்கினதையும் ஏசாயா விரிவாக எடுத்துரைக்கிறார். அவர்கள் தமது பரிசுத்த ஜனமென்பதை உறுதிப்படுத்தும் கர்த்தர், அவர்களது பெருமையை புதிய நாமத்தின் மூலம் திரும்பக் கொண்டுவருகிறார். “தேடிக்கொள்ளப்பட்டதென்றும் புதிய நகரமென்றும் பெயர் பெறுவாய்” (62:12) பாபிலோனில் சிதறடிக்கப்பட்ட அவர்கள் அனைவரையும் தேடிச் சேர்த்து, தம்மிடம் திரும்பிய அவர்களை அழைத்துவந்தார்.

இஸ்ரவேல் புத்திரரைப் போலவே, தேவனால் கவனமாகத் தேடப்படும் தேவனுடைய அன்பான பிள்ளைகளாய் நாம் இயேசுவானவரின் தியாகபலி திரும்பவும் நம்மைத் தேவனிடம் கொண்டுசேர்க்கிறது. நம்மை மனதாரத் கட்டித் தழுவும்படி நம் ஒவ்வொருவரையும் கவனமாய்த் தேடும் அவர், அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஆழத்திலிருந்து

பிரச்சனை ஏற்படுவதற்கான அறிகுறி ஏதும் தோன்றுகிறதாவென்று அறிய, நீச்சல் குளத்தின் நீர்ப்பரப்பை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நீச்சல் குளத்தில் உயிர்காப்புப் பணியாளராக அன்று, எனது ஆறு மணிநேர முறைமாற்று வேலையிலிருந்த நான், நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்களது பாதுகாவல் குறித்து கண்காணிப்பதற்காக குளத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் நிற்கும் இடத்தைவிட்டு அகன்றாலோ அல்லது சற்று கவனக் குறைவாக இருந்தாலோ நீச்சல்குளத்திலிருப்பவர்களுக்கு ஆபத்தான விளைவுகள் ஏற்பட்டுவிடும். காயத்தினாலோ அல்லது நீச்சல் திறமைக் குறைவினாலோ நீந்துபவர் நீரில் மூழ்கக்கூடிய ஆபத்திலிருந்தால், உடனே அவர்களை குளத்திலிருந்து தூக்கி பாதுகாப்பாக கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எனது பொறுப்பாகும்.

பெலிஸ்தர்களுக்கு எதிரான யுத்தத்தில் (2 சாமு. 21:15-22) தேவன் தாவீதுக்கு உதவி செய்த அனுபவத்தை “ ஆழமான தண்ணீரிலிருந்து” (வச. 22:17) தூக்கி எடுக்கப்பட்ட அனுபவத்தோடு தாவீது ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தாவீதின் வாழ்க்கையும், அவனோடுகூட இருந்த மக்களின் வாழ்க்கையும், அவர்களது சத்துருக்களால் ஏற்பட்ட ஆபத்துக்களால் நிறைந்திருந்தது. அழிவுக்குள் மூழ்கின தாவீதை தேவன் தூக்கி எடுத்தார். உயிர்காப்பாளர்கள் நீந்துபவர்களுக்காக பாதுகாப்பு பணியில் உள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தேவனோ தாவீதின் மேலுள்ள பிரியத்தினால் (வச. 20) அவனைக் காப்பாற்றினார். தேவன் என்னை கண்காணித்து காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தினால் அல்லாமல் என்மேலுள்ள பிரியத்தினால், தேவன் என்னைக் காப்பாற்ற விரும்புவதை நான் உணரும் பொழுது, என் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது.

நாம் நமது வாழ்க்கையின் போராட்டங்களினால் நாம் மேற்கொள்ளப்படும்பொழுது, நமது உயிர் காப்பாளரான தேவன் நமது போராட்டங்களை காண்கிறாரென்றும், நம்மேலுள்ள பிரியத்தினால் நம்மைக் கண்காணித்து காப்பாற்றுகிறார் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.