எங்களது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடனும், சாகசத்துடனும் கொண்டாடும் விதத்தில் என் கணவர் ‘இருவர் மிதிக்கும் மிதிவண்டியை’ வாடகைக்கு வாங்கிவந்தார். என் கணவர் முன்னால் அமர, நான் பின்னால் அமர்ந்துகொண்டேன். இருவரும் எங்களது பெடல்களை மிதிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் பல காரியங்கள் புலப்பட்டது. முதலில்,  எனக்கு பாதையே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த என் கணவரின் பரந்த தோள்கள் அதை மறைத்துவிட்டது. அடுத்து, என் கைப்பிடி ஒரே நிலையில் நிற்கும்படியாக பொருத்தப்படிருந்தது. அதை வைத்துக்கொண்டு வண்டியை திருப்பமுடியாது. முன்னால் அமர்ந்திருக்கும் ஓட்டுநரால்தான் வண்டியின் திசையை மாற்றமுடியும். என்னுடைய கைப்பிடி என்னை தாங்கிப்பிடித்துக்கொள்ளத்தான் உபயோகமாகயிருந்தது. கட்டுப்படுத்தப் பட்ட எனது நிலையை எண்ணி கடுப்பாகியிருக்கலாம் அல்லது எனது கணவர் மைக் பாதுகாப்பாகதான் ஓட்டிச்செல்வார் என நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விட்டு பயணத்தை குதூகலத்துடன் ரசிக்கத் தொடங்கலாம். 

தேவன் ஆபிராமை தன் தாயகத்தையும் குடும்பத்தினரையும் விட்டு வெளியே வரச்சொன்ன பொழுது, அவர் இலக்கை பற்றி அதிகமாக ஒன்றும் கூறவில்லை. புதிய தேசத்தின் நிலப்பகுதி குறித்தும் அதன் இயற்கைவளங்கள் குறித்தும் விவரிக்கவில்லை. அதை சென்றடைய எவ்வளவு காலம் ஆகும் என்றுகூட தேவன் சொல்லவில்லை. அவர் காண்பிக்கப் போகும் தேசத்தை நோக்கி “போ” என்று மாத்திரம் அறிவுறுத்தினார். துல்லியமான விவரங்களை எதிர்பார்க்கும் மக்களைப்போல் அல்லாமல், ஆபிராம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சென்றதே அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (எபி.11:8). 

நம் வாழ்வு கட்டுப்பாடில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பொழுதும், நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் பொழுதும், ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும். அவரைப்போல் நாமும் தேவனை நம்பி பின்தொடரலாம். ஏனெனில் தேவன் நம்மை செவ்வையான பாதையின் வழியே அழகாய் நடத்திச்செல்வார்.