நம்முடைய முதலீட்டின் பிரதிபலன்
1995 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பங்கு சந்தையின் முதலீட்டாளர்கள் மிக அதிகமான பலனைப் பெற்றனர். சராசரியாக 37:6 சதவீத அபார பலனைத் தந்தது. 2008 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்கள் அதே அளவு இழப்பைச் சந்தித்தனர். அதாவது 37.0 சதவீதம் இழப்பு. இவற்றிற்கிடையேயுள்ள வருடங்களில் மாறுபட்ட பலன் கிடைத்தது. சந்தையில் பணத்தோடுள்ளவர்கள் சிலவேளைகளில் அதிசயிக்கும் வண்ணமும், சிலவேளை பயப்படும் வகையிலும் இருந்தது.
தங்களுடைய வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்பவர்களுக்கு நம்பமுடியாத அளவு பிரதிபலன் கிடைக்குமென, இயேசு தம் சீடர்களுக்கு உறுதியளித்துள்ளார். அவர்கள், 'எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே" (வச. 28) என்று சொல்லத் தொடங்கினர். தங்கள் வீட்டையும், வேலையையும் அந்தஸ்தையும், குடும்பத்தையும் விட்டுத் தங்கள் வாழ்வை இயேசுவுக்காக முதலீடு செய்தனர் (வச.28). செல்வந்தனான ஒருவன் உலக ஆஸ்தியின் மீதுள்ள பற்றுதலை விட்டுவிட மனதில்லாதிருந்ததைக் கண்டபோது, தங்களுடைய முதலீடும் பலனற்றதாகிவிடுமோ என எண்ணத் தொடங்கினர். இயேசு அவர்களை நோக்கி, யாராகிலும் இயேசுவுக்காக தியாகம் செய்ய தயாராக இருந்தால் அவன், 'இம்மையிலே துன்பங்களோடே கூட நூறத்தனையாக வீடுகளையும் சகோதர சகோதரிகளையும்... மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்" (வச. 30) என்று சொன்னார். இந்த பிரதிபலன் எந்த பங்குச் சந்தையாலும் கொடுக்கக்கூடாத மிகப் பெரிய பலனாகும்.
நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் நம்முடைய முதலீட்டின் வட்டி விகிதத்தைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். தேவன் எதனோடும் ஒப்பிடமுடியாத உறுதியைத் தருகின்றார். பணத்தைக் கொண்டு மிக அதிகமான பொருளாதார லாபத்தைப் பெற நாம் முயற்சிக்கின்றோம். ஆனால், தேவன் நமக்குத் திருப்பித்தருவதோ டாலர் மதிப்புகளால் அளவிட முடியாதவை. அவரை அறிந்து கொள்வதால் வரும் மகிழ்ச்சி இப்பொழுதும், எப்பொழுதும் நிலையானது. அதனை நாம் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.
முற்றிலும் பிரம்மிக்கச் செய்கிறது
என்னுடைய வாழ்வில் அடிக்கடி பரபரப்பையும், வெறித்தனத்தையும் உணருகின்றேன். நான் ஒரு வேலையிலிருந்து மற்றொன்றிற்கு வேகமாக மாறுகிறேன், அவசரமாக அலைபேசி அழைப்புகளில் பேசுவதும், போகின்ற வழியிலேயே. அன்று முடிக்கப்படவேண்டிய வேலைகளின் நீண்டபட்டியலை சரிபார்ப்பதுமாக இருப்பேன். மிகவும் சோர்வடைந்த நிலையில் ஒரு ஞாயிறு, எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள ஊஞ்சல் படுக்கையில் சாய்ந்தேன். என்னுடைய கைப்பேசி வீட்டிலிருந்தது, என்னுடைய குழந்தைகளும் கணவரும் வீட்டிலிருந்தனர். நான் ஒருசில நிமிடங்கள் மட்டுமே உட்கார்ந்து விட்டு செல்லலாம் என்று அங்கு வந்தேன். ஆனால், அங்கிருந்த தடையில்லாத அமைதி, நான் அங்கு கண்ட காட்சிகளை மேலும் மேலும் பார்க்கத் தூண்டியது. என்னுடைய ஊஞ்சல் படுக்கையின் அசைவினால் ஏற்பட்ட மெல்லிய சத்தத்தையும், அருகிலுள்ள லாவண்டர் மலர்களைச் சுற்றிக் கொண்டிருந்த தேனீக்களின் ரீங்காரத்தையும், எனக்கு மேலே பறந்த பறவைகளின் இறக்கையொலியையும் என்னால் கேட்க முடிந்தது. பிரகாசமான நீல வானில், காற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேகங்களையும் கண்டு வியந்தேன்.
தேவன் படைத்த அனைத்தையும் பார்த்தபோது என் கண்கள் கண்ணீரால் நிரம்பிற்று. என் கண்களின் வழியேயும், செவியின் வழியேயும் இத்தனை அதிசயமான காரியங்களைப் பார்க்கவும், கேட்கவும் நான் அதிக நேரத்தைக் கொடுத்தபோது, நன்றி நிறைந்த உள்ளத்தோடு, தேவனுடைய படைப்பின் வல்லமையை வியந்து, ஆராதிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் 104ஐ எழுதியவரும், தேவனுடைய கரத்தின் கிரியைகளைக் கண்டு வியந்து, தன்னைத் தாழ்த்தி, 'உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது" என்கின்றார் (வச. 13).
ஓர் அவசரமான வாழ்வின் நடுவில், ஓர் அமைதியான நேரம் தேவனுடைய வல்லமையுள்ள படைப்பாற்றலை நம்முடைய நினைவில் கொண்டு வருகிறது. அவருடைய வல்லமையான படைப்பும், அவருடைய மென்மையும் நம்மைச் சூழ்ந்திருக்கின்றது. அவரே உயர்ந்த பர்வதங்களையும் பறவைகள் தங்கும் மரக்கிளைகளையும் படைத்தார். 'அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர்" (வச. 24).
மீட்கப்பட்டது
2003 ஆம் ஆண்டு வந்த மோர்மார் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் மேல் கால்வைக்காமல் ஓர் எட்டு கூட நடக்கக் கூடாதபடி அதன் எண்ணிக்கை மிகவும் பெரியதாயிருந்தது. 1848 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த பச்சை வெட்டுக்கிளிகள் பவுஞ்சுகளாக வந்தபோது, ஒவ்வொரு வெட்டுக்கிளியும் தன் வாழ்நாளில் 38 பவுண்டு தாவரங்களை உண்கின்றன என கணக்கிடப்பட்டது. இவற்றின் படையெடுப்பின் விளைவாக ஒரு விவசாயியின் வாழ்விலும், ஒரு மாநிலம் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் பேரழிவு ஏற்பட்டது.
யூதா ஜனங்கள் அனைவரும் கீழ்படியாமற் போனபடியால், இத்தகைய ஒரு பெருங்கூட்டமான பூச்சிகள் யூதா தேசம் முழுவதிலும் இதுவரைக் கண்டிராத அளவு பெரிய நாசத்தை ஏற்படுத்தின என பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யோவேல் விளக்குகின்றார். அவர் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் குறித்து முன்னறிவித்தார் (வேத வல்லுனர்கள் இதனை ஓர் அந்நிய இராணுவப் படையினருக்குச் சமமானதாகக் குறிப்பிடுகின்றனர்) (யோவேல் 1:2). அந்த வெட்டுக்கிளிகள் தாங்கள் காண்கின்ற யாவற்றையும் நாசமாக்கி, ஜனங்களை பஞ்சத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கின. எனினும் ஜனங்கள் தங்களுடைய பாவ வழியை விட்டுத் திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் போது 'வெட்டுக்கிளிகளும்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" என தேவன் கூறுவதாகத் தெரிவிக்கின்றார்.
யூதாவிடமிருந்து நாமும் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம். இந்தப் பூச்சிகளைப் போன்று நம்முடைய தவறுகள் தேவன் நமக்கு வைத்திருக்கின்ற நன்மைகளையும் தேவனுடைய வாசனை வீசும் வாழ்வையும் இழக்கச் செய்கின்றன. நம்முடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு நாம் தேவனிடம் திரும்பும் போது, தேவன் நம்முடைய வெட்கத்தை மாற்றி அவருக்குள் ஒரு நிறைவான வாழ்வை மீண்டும் தருகின்றார்.
இறுக மூடப்பட்ட கண்கள்
தான் அதனைச் செய்திருக்கக் கூடாதென்று என்னுடைய சகோதரனின் மகனுக்குத் தெளிவாகக் தெரியும். தான் செய்தது தவறு என்பதை அவன் நன்கு புரிந்த கொண்டானென நான் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். அது அவனுடைய முகத்திலேயே தெரிந்தது. அவன் செய்த காரியத்தைக் குறித்து அவனோடு விவாதிக்க அமர்ந்தபோது, அவன் தன் கண்களை மூடிக்கொண்டு, கசக்க ஆரம்பித்தான். அவன் சிறுபிள்ளைத்தனமாகச் செயல்பட்டான். தன் கண்களை மூடிக் கொண்டதால் என்னைக் காண முடியவில்லை, ஆகையால் நானும் அவனைக் காண முடியாதென எண்ணினான். அவன் தன்னை மறைத்துக் கொண்டால், எங்களுடைய விவாதத்தையும் அதன் விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என எண்ணினான்.
நான் அவனை அந்தக் கணத்தில் பார்க்க முடிந்ததால் மகிழ்ச்சியடைந்தேன். அவனுடைய செயலை நான் காணாதது போல விட்டு விட முடியாதாகையால், நாங்கள் அதனைக் குறித்தப் பேசியேயாக வேண்டும். எனவே, எங்களுக்கிடையே எந்த தடையும் வர நான் விரும்பவில்லை. நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன், நான் அவனை முற்றிலும் மன்னிக்க ஆவலாயிருக்கிறேன் என்பதை, அவன் என் முகத்தை முழுவதும் பார்த்து தெரிந்துகொள்ள விரும்பினேன். அப்பொழுதுதான் எனக்குள் அந்த சிந்தனை வந்தது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் தேவனுடைய நம்பிக்கையை இழந்தபோது தேவன் எப்படி உணர்ந்திருப்பார் என்பதைக் குறித்து சிறிது நினைக்கத் தோன்றியது. தங்கள் தவற்றை உணர்ந்து அவர்கள் தேவனுடைய சமூகத்தினின்று விலகி ஒளிந்து கொண்டனர் (ஆதி. 3:10) நான் எனது சகோதரனின் மகனைக் கண்டது போல தேவனும் அவர்களைத் தெளிவாகக் கண்டார்.
நாமும் சில தவறுகளைச் செய்துவிட்டோமென உணரும் போது அதனால் வரும் விளைவுகளைச் சந்திக்க விரும்புவதில்லை. நாமும் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவோ, அதனை மறைத்து விடவோ அல்லது உண்மைக்கு நம் கண்களை மூடிக்கொள்ளவோ எண்ணுவதுண்டு. தேவன் தம்முடைய நீதிக்கு முன்பாக நம்மை கணக்குக் கொடுக்கும்படி நம்மைத் தேடுகின்றார். நம்மைக் காண்கின்றார். ஏனெனில், அவர் நம்மை நேசிக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் மூலம் நமக்கு மன்னிப்பைக் கொடுக்கின்றார்.
செழிப்பிலும் உபத்திரவங்களிலும்
ஆன் வோஸ்கேம்ப் எழுதிய “ஓராயிரம் கொடைகள்” என்ற புத்தகத்தில் வாசகர்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களுக்குத் தந்துள்ள நன்மைகளை எண்ணிப் பார்க்குமாறு ஊக்கப்படுத்துவார். அதில் அவள் அநுதினமும் தேவன் அவளுக்குத் தாராளமாகத் தருகின்ற சிறியதும், பெரியதும் - பாத்திரம் கழுவும் தொட்டியில் தோன்றும் வண்ணமிகு நீர்க்குமிழிமுதல் தன்னைப் போன்ற பாவிகளுக்குத் (நமக்கும்!) தரப்பட்ட ஒப்பிடமுடியாத இரட்சிப்புவரையுள்ள வௌ;வேறு கொடைகளைக் குறிப்பிடுகின்றாள். நம் வாழ்வில் மிகவும் கஷ்டம் நிறைந்த நேரத்தில் தேவனைக் காண்பதற்குத் தேவையான திறவுகோல் நன்றியோடுள்ள உள்ளமேயென அவள் குறிப்பிடுகின்றாள்.
நாம் நன்கறிந்த யோபுவின் வாழ்வில் துன்பங்கள் நிறைந்த நேரம் அது. அவனுடைய இழப்புகள் துயரமிகுந்ததாகவும் ஏராளமாகவும் இருந்தன. தனக்கிருந்த எல்லா கால்நடைகளையும், வேலைக்காரரையும் இழந்து நிற்கும் போது, ஒரே நேரத்தில் அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்துப்போனார்களென அறிகிறான். யோபுவினுடைய ஆழ்ந்த துயரம் அவனுடைய செயலில் தெரிகிறது. அவன் தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (1:20) அந்த வேதனை நேரத்திலும் அவன் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது. அவன் நன்றியுணர்வை வெளிப்படுத்தினான். அவன் இழந்த யாவற்றையும் தேவன் தனக்குத் தந்தார் என தெரிவிக்கின்றான் (வச. 21) ஒன்றும் செய்ய இயலாத அத்தகைய துயரத்தின் மத்தியில் இவ்வாறன்றி, அவன் வேறே எப்படி தேவனை ஆராதிக்க முடியும்?
இழப்பின் காலத்தில் ஏற்படும் வேதனையின் அளவு, நம்முடைய அனுதின நன்றியறிதலால் ஒருபோதும் குறைக்கப்படுவதில்லை. யோபு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, யோபு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே துயரத்தினூடே கடந்து சென்றான். நம் வாழ்வின் இருண்ட நேரங்களில் சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் தேவன் நமக்குச் செய்த நன்மைகளையெண்ணி, அவரை துதித்துப் போற்ற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம்.
உதவும் கரம்
இடாகோ என்ற இடத்தில் குளிர்காலத்தில், எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள பனிசறுக்கு தளத்தில் விளையாடுவதை என்னுடைய குழந்தைகள் அநுபவித்து மகிழ்வர். அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பனிச்சறுக்கலைக் கற்றுக் கொள்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அவர்களை மனமிணங்கச் செய்து, அவர்களுடைய கால்களை அந்த கடினமான குளிர் தளத்தில் பதியவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், கீழே விழுந்தால் அது எத்தனை வலியைத் தருமென அவர்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் கால் வழுக்கி கீழே விழ ஏதுவாகும் போது நான் அல்லது என்னுடைய கணவர் அவர்களைத் தாங்கி பிடித்து மீண்டும் அவர்கள் தங்கள் கால்களில் உறுதியாக நிற்கும்படியும் அவர்கள் தங்களின் சட்டத்தை நிலையாக பிடித்துக் கொள்ளும்படியும் உதவுவோம்.
நாம் கீழே விழும்போது யாரோ ஒருவரின் உதவும் கரங்கள் அங்குவந்து தாங்கிக் கொள்ளுவதை குறித்து பிரசங்கி புத்தகம் வெளிப்படுத்துகின்றது. பிறரோடு இணைந்து வேலை செய்வது நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் (4:9). ஒருவர் வாழ்வில், உற்சாகத்தைக் கொண்டு வருபவன் அவருடைய நண்பன். நாம் சவால்களைக் சந்திக்கும் போது யாரேனும் நம்மருகிலிருந்து, நம்முடைய செயலுக்கும் மனதிற்கும் உறுதுணையாக இருந்தால் அது நன்மைபயக்கும். இத்தகைய உறவுகள் நமக்கு பெலனையும், ஒரு நோக்கத்தையும் ஆறுதலையும் தரும்.
நம் வாழ்வின் கடினமான பனிபோன்ற சோதனைகளில் நாம் விழுந்து கிடக்கும்போது, அருகில் உதவும்படி யாரேனும் இருப்பார்களா? அப்படியிருந்தால் அது தேவனி;டமிருந்து வரும் உதவி, அல்லது யாருக்காயினும் நண்பனின் உதவி தேவையாயிருந்தால், தேவன் அனுப்பும் நண்பனாக நாம் அவர்களைத் தூக்கி விடுவோமா? நம்முடைய துணையாளராக எப்போதும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே. ஒருவேளை நம்மைத் தூக்கி நிறுத்த நம்மருகில் யாருமேயில்லையென உணரும்போது, தேவன் நமக்கு உதவும்படி எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலைத் தருவதாகவுள்ளது (சங். 46:1). நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நம்மைத் தூக்கி நிலை நிறுத்த, அவருடைய கரம் நம்மை உறுதியாகப் பற்றுகிறது.
நம்மிடம் இருப்பது
ஒரு பண்டிகைக் கால விடுமுறையைக் கொண்டாட தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் தன் வீட்டுக்கு அழைக்க என்னுடைய தோழி ஆர்வமாக இருந்தாள். விருந்தினர்களும் ஒன்றுகூடுவதை ஆர்வமாக எதிர்பார்த்தார்கள். அதிக பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் உணவுக்கு தங்கள் பங்களிப்பைச் செலுத்த விரும்பினார்கள். சிலர் ரொட்டி கொண்டுவந்தார்கள். சிலர் சாலட்டுக்கான பச்சைக் காய்கனிகளையும், கூட்டு வகைகளையும் இனிப்பு கொண்டுவந்தார்கள். ஆனால், ஒரு விருந்தினருக்கு அதிக பணத்தட்டுப்பாடு இருந்ததால் அவளால் எந்த உணவுப் பொருளும் வாங்கி வர முடியவில்லை. எனவே தன் பங்களிப்பாக என் தோழியின் வீட்டை சுத்தம் செய்ய முன்வந்தாள்.
அவள் எந்த உணவுப் பதார்த்தமும் கொண்டு வரவில்லை என்றாலும், அவளுக்கு பந்தியில் சமமான இடமே கிடைத்திருக்கும். ஆனாலும் தன்னால் முடிந்த தன் நேரத்தையும், தன் திறமையையும் கொடுக்க விரும்பினாள். தன் பங்களிப்பை முழுமனதோடு செய்தாள். 2 கொரிந்தியர் 8ல் உள்ள பவுலின் வார்த்தைகளின் சாராம்சமும் இதுவே. உடன் விசுவாசிகளுக்குக் கொடுத்து உதவ அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் முயற்சியில் நிலைத்திருக்கும்படி பவுல் அவர்களுக்கு வலியுறுத்தினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும், மன விருப்பத்தையும் பாராட்டினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஊக்கமே, வெகுமதி எந்த அளவானத், தொகையாக இருந்தாலும் ஏற்புடையதாக்கும் என்று கூறினார் (வச. 12).
அனேக முறை நாம் கொடுப்பதை மற்றவர்கள் கொடுப்பதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். குறிப்பாக நாம் கொடுக்க நினைக்கும் அளவிற்கு நம்முடைய நிதி நிலை இடமளிக்காதபோது ஒப்பிடுகிறோம். ஆனால் நாம் கொடுப்பதைத் தேவன் வேறு விதமாகப் பார்க்கிறார். நமக்கு இருப்பதில் நாம் மனம் உவந்து கொடுப்பதை அவர் விரும்புகிறார்.
ஊக்குவிப்பதற்காக கட்டப்படுதல்
ஸ்டீவன் தாம்ஸன் நினைவு சென்டிபீட் என்பது திறந்தவெளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயம் மற்ற ஓட்டப் பந்தயங்களில் இருந்து மாறுபட்டது. ஏழு நபர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும், மூன்று மைல் பந்தயத்தின் முதல் இரண்டு மைல் தொலைவிற்கு ஒரு கயிற்றைப் பிடித்தபடி ஓடவேண்டும். இரண்டு மைல் ஓடிய பிறகு, கயிற்றை விட்டுவிட்டு, ஒவ்வொரு நபரும் தனித்தனியாக ஓடவேண்டும். எனவே குழுவின் வேகமும், தனிநபர் வேகமும் சேர்ந்ததே ஒரு நபரின் வேகம்.
இந்த வருடம் என் மகளின் குழு நான் இதுவரை கண்டிராத ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. வேகமாக ஒடக்கூடிய பெண்ணை முதலில் ஓடவிட்டு, இருப்பதிலேயே மெதுவாக ஓடும் பெண்ணை அவளுக்குப் பின்னால் ஓடவிட்டார்கள். அதிக வேகமாக ஓடும் பெண் மெதுவாக ஓடும் பெண்ணின் அருகிலேயே ஓடுவதால், அவளை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே வரவேண்டும் என்பது அவர்களது திட்டம்.
அவர்களது திட்டம் எபிரேயரில் உள்ள ஒரு பத்தியை எனக்கு நினைவுபடுத்தியது. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஒருவரையொருவர் ஏவும்போது” (வச. 24) “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்று பவுல் எழுதுகிறார். இதை செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், அவர் ஒன்றை முன்னிலைப்படுத்துகிறார். “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” என்கிறார் (வச. 25). மற்ற விசுவாசிகளோடு ஒன்றுகூடுதல் விசுவாச வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.
சில சமயங்களில் வாழ்க்கை ஓட்டம் நம்மால் கையாள முடியாததாகத் தோன்றலாம். தன்னம்பிக்கை இழந்து, கயிற்றை விட்டுவிடும் அளவிற்கு நம் உறுதியை இழக்கலாம். நாம் சேர்ந்து ஓடும்போது, திடமாக ஓட ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போமாக!
பூசணிக்காய்க்குள் பொக்கிஷம்
ஒரு புதிய, இளம் தாயாக, என்னுடைய மகளின் முதல் ஆண்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவள் எப்படி மாறி இருக்கிறாள், எப்படி வளர்ந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளும்விதமாக, ஒவ்வொரு மாதமும் அவளைப் புகைப்படம் எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தில், உள்ளூர் விவசாயிடம் வாங்கிய பூசணிக்காயைக் குடைந்து, அதற்குள் அவள் சந்தோஷமாக உட்கார்ந்திருப்பாள். என் மனதுக்கினிய என் மகள், பெரிதாக வளர்ந்த ஒரு பூசணிக்காய்க்குள் இருந்தாள். சில வாரங்களில் பூசணிக்காய் காய்ந்துபோனது, ஆனால் என் மகளோ தொடர்ந்து வளர்ந்தாள்.
இயேசு யார் என்பதை உணர்ந்த பவுல் அதை விவரிப்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவைக்குறித்து நம் இருதயத்தில் இருக்கும் அறிவை, மண்பாண்டத்துக்குள் உள்ள பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். “எல்லா பக்கங்களிலும் நெருக்கப்பட்டாலும்” (2 கொரிந்தியர் 4:8), இயேசு நமக்காக செய்தவற்றை நினைப்பது, போராட்டங்கள் மத்தியில் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. கடவுளின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதால், “கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகாமல்”, நாம் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறோம் (வச. 9).
காய்ந்துபோன பூசணிக்காயைப்போல, நம்முடைய சோதனைகளால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனால் அந்த கடினமான சவால்களுக்கு மத்தியில், இயேசு தரும் சந்தோஷம் நம்மில் பெருக முடியும். நம்முடைய வாழ்க்கையில் செயல்படும் அவரது வல்லமை பற்றிய நமது புரிந்துகொள்ளுதல்தான் பலவீன மண்பாண்டங்களாகிய நம்முடைய உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம். நம்மில் அவர் வல்லமை செயல்படுவதால், கஷ்டங்கள் மத்தியில் நாம் செழித்து வளரமுடியும்.