ஒரு பண்டிகைக் கால விடுமுறையைக் கொண்டாட தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் தன் வீட்டுக்கு அழைக்க என்னுடைய தோழி ஆர்வமாக இருந்தாள். விருந்தினர்களும் ஒன்றுகூடுவதை ஆர்வமாக எதிர்பார்த்தார்கள். அதிக பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் உணவுக்கு தங்கள் பங்களிப்பைச் செலுத்த விரும்பினார்கள். சிலர் ரொட்டி கொண்டுவந்தார்கள். சிலர் சாலட்டுக்கான பச்சைக் காய்கனிகளையும், கூட்டு வகைகளையும் இனிப்பு கொண்டுவந்தார்கள். ஆனால், ஒரு விருந்தினருக்கு அதிக பணத்தட்டுப்பாடு இருந்ததால் அவளால் எந்த உணவுப் பொருளும் வாங்கி வர முடியவில்லை. எனவே தன் பங்களிப்பாக என் தோழியின் வீட்டை சுத்தம் செய்ய முன்வந்தாள்.

அவள் எந்த உணவுப் பதார்த்தமும் கொண்டு வரவில்லை என்றாலும், அவளுக்கு பந்தியில் சமமான இடமே கிடைத்திருக்கும். ஆனாலும் தன்னால் முடிந்த தன் நேரத்தையும், தன் திறமையையும் கொடுக்க விரும்பினாள். தன் பங்களிப்பை முழுமனதோடு செய்தாள். 2 கொரிந்தியர் 8ல் உள்ள பவுலின் வார்த்தைகளின் சாராம்சமும் இதுவே. உடன் விசுவாசிகளுக்குக் கொடுத்து உதவ அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் முயற்சியில் நிலைத்திருக்கும்படி பவுல் அவர்களுக்கு வலியுறுத்தினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும், மன விருப்பத்தையும் பாராட்டினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஊக்கமே, வெகுமதி எந்த அளவானத், தொகையாக இருந்தாலும் ஏற்புடையதாக்கும் என்று கூறினார் (வச. 12).

அனேக முறை நாம் கொடுப்பதை மற்றவர்கள் கொடுப்பதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். குறிப்பாக நாம் கொடுக்க நினைக்கும் அளவிற்கு நம்முடைய நிதி நிலை இடமளிக்காதபோது ஒப்பிடுகிறோம். ஆனால் நாம் கொடுப்பதைத் தேவன் வேறு விதமாகப் பார்க்கிறார். நமக்கு இருப்பதில் நாம் மனம் உவந்து கொடுப்பதை அவர் விரும்புகிறார்.