Dennis Fisher | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டென்னிஸ் பிஷ்ஷர்கட்டுரைகள்

தேவனின் கைரேகை

லீகன் ஸ்டீவன்ஸ் தன்னுடைய சகோதரன் நிக்கோடு சேர்ந்து மலையேறுவதில் ஆர்வமுள்ளவள். அவர்கள் இருவரும் மலையேறுவதில் அனுபவமிக்கவர்கள். வட அமெரிக்காவிலுள்ள மிக்கின்லெ என்ற மிக உயரமான மலையுச்சியை அடைந்தவர்கள். ஜனவரி 2008ல் கொலொரடோ மலையில் ஏற்பட்ட ஒரு பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் நிக் காயமடைந்தான், இருபது வயது நிரம்பிய லீகன் மரித்துப் போனாள். பின் நாட்களில் நிக், தன் சகோதரி லீகனின் பையொன்றிலிருந்து பயணக் குறிப்பொன்றைக் கண்டெடுத்தான். அதின் உள்ளடக்கத்தை வாசித்தபோது அவன் மிகவும் ஆறுதலையடைந்தான். அது முழுவதும் தியானங்கள், ஜெபங்கள், தேவனை மகிமைப்படுத்தல் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அதில் ‘‘நான் தேவனுடைய கரத்தால் செய்யப்பட்ட ஒரு கலை. ஆனால் தேவன் அதை இன்னமும் முடிக்கவில்லை. இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கின்றார்.... நான் என்மீது தேவனின் விரல் ரேகைகளைப் பதியப் பெற்றிருக்கிறேன்.  என்னைப் போல மற்றொருவர் ஒருபோதும் இருக்க முடியாது... என்னுடைய இந்த வாழ்வில் எனக்கொரு வேலையுள்ளது. அதனை வேறொருவர் நிறைவேற்ற முடியாது” என எழுதியிருந்தார்.

லீகன் இந்த உலகில் உடல் ரீதியாக இல்லையெனினும் அவள் விட்டுச் சென்ற பாரம்பரியம், அவளுடைய பயணக் குறிப்புகள் மற்றும் சவால்கள் யாவும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன.

நாம் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்டுள்ளோம். (ஆதி. 1:26) ஒவ்வொருவரும் ‘‘தேவனுடைய கரத்தினால் செய்யப்பட்ட கலை”. பவுல் அப்போஸ்தலன் கூறுவது போல. ‘‘நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (எபே. 2:10).

தேவன் நம்மை அவர் குறித்த நேரத்தில் அவருடைய சொந்த வழியில் பிறருக்கு உதவும்படி பயன்படுத்துகின்றார். எனவே நாம் அவரை மகிமைப்படுத்துவோம்.

வனாந்திரத்தில் உயிர் பிழைத்தல்

1960களில் கிங்ஸ்டன் டிரையோ என்று அழைக்கப்பட்ட இசைக் குழுவினர் “டெசட் பீட் என்ற பாடலை இயற்றி வெளியிட்டனர். அந்தப் பாடலில், ஒரு பாலைவனத்தை மிகுந்த தாகத்துடன் கடக்கும் ஒரு மந்தை மேய்ப்பன் பாலைவனத்தில் ஓர் அடி குழாயைக் காண்கிறான். அதன் அருகில் சென்ற பொழுது அந்தக் குழாயின் அருகில் ஒரு குறிப்பும் ஒரு ஜாடியில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குறிப்பில், ஜாடியில் இருந்த தண்ணீரைப் பருகாமல் அதை அந்த அடிகுழாயிற்குள் ஊற்றி பின் குழாயை அடிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருந்தது. மிகுந்த தாகத்துடன் இருந்த அந்த மந்தை மேய்ப்பன், அவனது தாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்தக் குறிப்பில்  கூறியிருந்தபடியே அந்த ஜாடியில் இருந்த தண்ணீரைக் குழாய்க்குள் ஊற்றி பின் குழாயை அடித்தான். அவனது விசுவாசத்திற்கான வெகுமதியாக, குழாயில் இருந்து குளிர்ந்தநீர் அதிகமாக வந்தது. அந்த நீரைக் தாகம் தீரக் குடித்து திருப்தி அடைந்தான். அவன் அந்தக் குறிப்பில் கூறப்பட்டதை விசுவாசித்து செயல்படாமல் இருந்திருந்தால் அந்த ஜாடியில் இருந்த சூடான நீர் மட்டும் தான் கிடைத்திருக்கும். அது அவன் தாகத்தை தீர்த்திருக்காது.

அந்தப்பாடலின் கருத்து, இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் பயணம் பண்ணினதை எனக்கு நினைப்பூட்டியது. தாகத்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டபொழுது மோசே தேவனை நோக்கி முறையிட்டான். ஒரேபில் இருந்த கன்மலையை அவனது கோலால் அடிக்கும்படி தேவன் மோசேயிடம் கூறினார். மோசே தேவனுடைய வார்த்தைகளை விசுவாசித்து கீழ்ப்படிந்தான். கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது.

ஆனால், இஸ்ரவேல் மக்கள் மோசேயின் விசுவாசத்தில் தொடர்ந்து நிலையாகப் பின்பற்றவில்லை. அது மிகவும் வருந்தத்தக்கதாகும். இறுதியில் கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்கு பிரயோஜனப் படவில்லை என்று எபிரெயர் 4:2ல் எழுதப்பட்டபடி ஆயிற்று.

சில சமயங்களில் வாழ்க்கை வறண்ட பாலைவனம் போலக் காணப்படும். ஆனால், தேவன் தமது கடினமான சூழ்நிலைகளில் கூட செயல்பட்டு, நமது ஆன்மீகத் தாகத்தை தீர்க்கிறார். தேவனுடைய வார்த்தைகளை விசுவாசத்துடன் நம்பினால், நமது அன்றாடக் தேவைகளுக்காக ஜீவ தண்ணீரையும், கிருபையையும் பெருக்கெடுத்து ஓடும் ஆறாக நாம் அனுபவிக்கலாம்.

பேசும் மரம்

ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).

இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.

இருதயங்களை சீர்செய்தல்

சமீபத்தில், சில ஆடைகளை சரிசெய்ய துணிதைக்கும் ஒரு பெண்ணின் கடைக்குச் சென்றேன். நான் அக்கடையில் நுழையும் பொழுது அதன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பதாகைகளை பார்த்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அந்தப் பதாகைகள் ஒன்றில் “நாங்கள் உங்கள் ஆடைகளை சரிசெய்வோம், ஆனால் உங்கள் இருதயத்தை கடவுளால் மட்டும் தான் சரிசெய்ய இயலும்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் உயிர்த்தெழுந்த இயேசு, அழுதுகொண்டிருந்த மகதலேனா மரியாளுக்கு கொண்டிருந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பதாகையில் “ஜெபம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கிறோம்” என்று குறிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடைக்கு சொந்தக்காரப் பெண் அந்தக் கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறினாள். “இங்கு பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள விசுவாச வார்த்தைகளால் தேவன் எப்படியாகக் கிரியை செய்துள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறோம். சிறிது நாட்களுக்கு முன்பாக, இதே இடத்தில் ஒருவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். தேவன் கிரியை செய்வதை பார்க்கும்பொழுது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினாள். நானும் ஒரு கிறிஸ்தவன் என்று அவளிடம் கூறி, அவள் பணி செய்யும் இடத்தில் இப்படியாக கிறிஸ்துவை அறிவித்து வருவதைக் குறித்து பாராட்டினேன்.

நாம் அனைவருமே நாம் பணிசெய்யும் இடங்களில் அந்த தையல்கார பெண்மணியைப்போல தைரியமாக செயல்பட இயலாது. ஆனால் பிறர் எதிர்பாராத முறையில் அவர்களிடம் அன்பு, பொறுமை, இரக்கம் காண்பிப்பதன் மூலம் புதிய செயல்முறைத் திட்டங்களை நாம் கண்டறியலாம். அந்த தையல் கடையை விட்டுவந்ததிலிருந்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத். 5:14) என்று இயேசு கூறினதை வாழ்ந்து காண்பிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அவசரகால ஜெபம்

2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 81வது தளத்தில், தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டான்லி பிரேம்நாத் (Stanley Praimnath) ஒரு விமானம் தன்னை நோக்கி பறந்து வருவதைக் கண்டு, “தேவனே, என்னால் இது கூடாத காரியம்! நீர் பார்த்துக்கொள்ளும்!” என்று அவசரமாக ஒரு ஜெபத்தை செய்துவிட்டு தன்னுடைய மேஜையின் கீழ் பாதுகாப்பு கருதி விரைவாய் ஒளிந்துக்கொண்டார்.

மோசமான விமான தாக்குதலின் விளைவால், ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் ஸ்டான்லி மாட்டிக்கொண்டார். சுவர் போல மூடியிருந்த அக்குப்பை மேட்டிற்குள்ளிருந்து,…

புதியதாக வனைய நொறுக்கப்படுதல்

இரண்டாவது உலகப்போரின் பொழுது என் தந்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் தென் பசிபிக் பகுதியில் பணியாற்றினார். அக்காலத்தில் என் தந்தை சமயக் கோட்பாடுகளை வெறுத்து,“நான் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால் ஆவிக்குரிய காரியங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஓர் நாளில் பெற்றுக்கொண்டார். மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க என் தாய் பிரசவ வார்டுக்குள் சென்று விட்டார். புதிதாகப் பிறக்கப்போகிற ஓர் தம்பியையோ அல்லது தங்கையையோ சீக்கிரம் பார்க்கப் போகிற உணர்வுகளுடன் நானும் என் சகோதரனும் படுக்கைக்குச் சென்றோம். மறுநாள் காலை படுக்கை…

மீட்டெடுக்கும் தொழில்

ஆதாம் மின்ட்டர் தேவையற்ற பழைய பொருட்களை வாங்கும், விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பழைய தேவையற்ற பொருட்களை வாங்கும், விற்கும் தொழில் செய்பவரின் மகனான இவர், அப்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உலகமெங்கும் சுற்றி வருகிறார். ‘பழைய தேவையற்ற பொருட்களால் நிறைந்த கோள்’ என்ற அவரது புத்தகத்தில், இக்குப்பைகளை மறு சுழற்சி செய்யும் தொழில் பல கோடி டாலர் கிடைக்கக் கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உலகமெங்குமுள்ள தொழில் முனைவர்கள், பயன்படுத்த இயலாது என்று தள்ளப்பட்ட தாமிரக் கம்பிகள், அழுக்கான கந்தைத் துணிகள், உடைந்த பிளாஸ்டிக்குகள்…

நித்தியகாலமாய் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தை

2வது உலகமகா யுத்தத்தின் துவக்க காலத்தில் போலந்திலுள்ள வார்சா, ஆகாய மார்க்கமாக குண்டு மழை பொழிந்ததால் தரைமட்டமானது. சிமெண்ட் கட்டிகள், சிதைந்த நீர்குழாய்கள், கண்ணாடித்துண்டுகள் போன்றவை அந்த பெரு நகரத்தில் சிதறிக்கிடந்தது. நகரின் நிர்வாக வணிக அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் சிதைவுண்ட கட்டிடங்களில் ஒன்று இன்னும் அசையாது நிமிர்ந்து நிற்கிறது. அது ஆங்கிலேயே மற்றும் வெளிநாடுகளின் வேதாகம சங்கத்தின் “போலந்திலுள்ள தலைமைச் செயலகமாகும்.” வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (மத் 24:35) என்ற வசனம் அங்கு சிதைந்து நிற்கும் சுவரில்…

ஹாலிவுட் மலைகளில் உள்ள சிலுவை

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள தென் கலிஃபோர்னியாவில் உள்ள ஹாலிவுட் அனைவரின் மனதில் தோன்றும் சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் “டின்செல்டவுன்”க்கு சிமெண்டால் செய்யப்பட்ட நட்சத்திரங்களின் கால் தடங்களைப் பார்க்கவும், அவ்வழியாகக் கடந்து செல்லும் பிரபலங்களை ஓர் முறை பார்க்கவும் வருகிறார்கள். இவ்வாறு வரும் பார்வையாளர், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமோர் அடையாளத்தையும் பார்க்காமல் இருக்கவே முடியாது.

ஹாலிவுட் மலைகளில் இலகுவாகக் கண்டு கொள்ளக்கூடிய மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாக, நித்தியத்தை முக்கியப்படுத்திக் காட்டும் அடையாளம் ஒன்று அங்கு உண்டு…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்பினிமித்தம்

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை  அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.  
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).  
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.  

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.