எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

வெட்கமடையா விசுவாசம்

விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அணியின் புகழைப் பாட விரும்புவர். அவர்கள் லோகோக்களை அணிவதாலும், முகநூலில் தாங்கள் விரும்பும் அணியைக் குறித்து குறிப்புகளைப் பதிப்பதன் மூலம், அல்லது அந்த அணியைப் பற்றி நண்பர்களோடு பேசுவதன் மூலம் தங்களின் உண்மையான விசுவாசம் எவ்வளவிருக்கிறது என்பதைக் காட்டுகின்றனர். என்னுடைய சொந்த டெட்ராய்டு புலி தொப்பிகள், சட்டைகள், மற்றும் கவிதைகள் நானும் இத்தகையவற்றைச் செய்கின்ற ரசிகர் கூட்டத்தில் இருக்கின்றேன் என்பதைக் காட்டுகிறது.

விளையாட்டின் மீதுள்ள விசுவாசம், ஒன்றை நினைவுபடுத்துகிறது. நம்முடைய உண்மையான, மிகப் பெரிய விசுவாசம் தேவனுக்கே செலுத்தப்பட வேண்டியது. இத்தகைய வெட்கப்படாத விசுவாசத்தைக் குறித்து சங்கீதம் 34ல் தாவீது சொல்கின்றார். இப்புவியிலுள்ள எந்த ஒன்றையும் காட்டிலும் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான தேவன் ஒருவருக்கே நாம் உண்மையாயிருக்க வேண்டும்.

தாவீது சொல்கின்றார், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்” (வச. 1). நாம் நம் வாழ்வில், உண்மையின் காரணராயும், ஒளியின் மூலமாயும், இரட்சிப்பின் காரணருமான தேவனைக் கருதாமல் இருந்த நாட்களை நினைக்கும் போது வியப்பாகவுள்ளது. தாவீது,
“அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (வச.1) என்கிறார். நாம் எத்தனை முறை இந்த உலகத்திற்குரியவர்களை நம் தேவனைக் காட்டிலும் அதிகமாகப் புகழ்ந்துள்ளோம். தாவீது சொல்கிறார், “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்” (வச.2). தேவன் நமக்குச் செய்ததை நினையாமல், நம்முடைய சிறிய வெற்றிகளைக் குறித்து நாம் எத்தனை முறை பெருமை பாராட்டியுள்ளோம்.

நம்முடைய அணியையும், நம்முடைய ஆர்வங்களையும், நம்முடைய சாதனைகளையும் குறித்து மகிழ்வதில் தவறில்லை. ஆனால், நம்முடைய மிக உயர்ந்த பாராட்டும் துதியும் தேவனுக்கேயுரியது. ‘‘என்னோடே கூட கர்த்தரைக் மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (வச. 3).

எங்கும் ஆனால் எங்குமேயில்லை

என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர், எங்களைப் போன்று, தங்களுடைய வாலிபப் பெண்ணை ஒரு கார் விபத்தில் இழந்தார். ஒரு நாளேட்டில் தன்னுடைய மகள் லின்ட்சேயுக்கு அஞ்சலி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், அவளுடைய நினைவாக நிறைய படங்களை அவருடைய வீட்டினைச் சுற்றி வைத்திருப்பதைக் குறிப்பிட்டிருந்ததோடு, இந்த வலிமை வாய்ந்த வாசகத்தையும் எழுதியிருந்தார். அது, அவள் எங்கும் இருக்கின்றாள். ஆனால் எங்குமே இல்லை என்பது.

எங்களுடைய பெண் பிள்ளைகள் இன்னமும் படத்திலிருந்து, எங்களைப் பார்த்து சிரிப்பது போல இருந்தும், அந்த உயிரோட்டமான நபர்கள், அந்தச் சிரிப்பைத் தருபவர்கள் எங்கேயுமே காணப்படவில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் - எங்கள் இருதயத்தில், எங்கள் எண்ணங்களில், அந்த படங்களில் இருந்தாலும், அவர்கள் எங்கேயுமேயில்லை.

ஆனால் வேதாகமம் குறிப்பிடுவது, கிறிஸ்துவுக்குள் லின்ட்சேயும், மெலிசாவும் உண்மையில்; எங்குமேயில்லாமல் போய் விடவில்லை. அவர்கள் இயேசுவின் பிரசன்னத்தில் இருக்கிறார்கள். தேவனோடு இருக்கிறார்கள் (2 கொரி. 5:8). அவர்கள் உண்மையில் எங்குமிருக்கிற, ஆனால் எங்கும் காணப்படாதவரோடு இருக்கிறார்கள். நாம் தேவனை உடல் வடிவில் காண முடியவில்லை. தேவன் சிரிப்பதைப் போன்ற படங்கள் நம் வீட்டில் இல்லை. உன் வீட்டைச் சுற்றி தேடிப் பார்த்தாலும் அவர் எங்குமேயில்லை. ஆனால் இதற்கு மாறானது தான் உண்மை. அவர் எங்குமிருக்கிறார்.

இந்த புவியில் நாம் எங்கு சென்றாலும் தேவன் அங்கு இருக்கிறார். அவர் எல்லாவிடத்திலும் நம்மை வழி நடத்தவும் பெலப்படுத்தவும், தேற்றவும் இருக்கின்றார். அவரில்லாத இடத்திற்கு நம்மால் செல்ல முடியாது. நாம் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் எவ்விடத்திலும் இருக்கிறார். நாம் எதிர் நோக்கும் ஒவ்வொரு சோதனையின் போதும் இது நமக்கு ஒரு சிறந்த செய்தியாக உள்ளது.

இது வியப்பைத் தருவது

இயேசு தேவனுடைய மகிமையின் பிரகாசம் (எபிரெயர் 1:3). அவரை அறிந்தவர்கள் அவருடைய மகிமையைக் கண்டார்கள் (யோவான் 1:14).

பழைய ஏற்பாட்டில், கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. (யாத்திராகமம் 40:34-35). இஸ்ரவேல் புத்திரர் இந்த மகிமையால் வழி நடத்தப்பட்டனர்.

முடிவு காலத்தில், நகரத்திற்கு வெளிச்சங் கொடுக்கச் சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. (வெளிப்படுத்தல் 21:23) என தேவன் வாக்களித்துள்ளார். மேலே குறிப்பிட்டுள்ள தேவனுடைய மகிமையானது மிகவும் வியப்பைத் தருவதுதாகும்.

தேவன் படைத்த இப்புவியில் நாம் வாழும் போது அவருடைய மகிமையினை நாம் அவ்வப்போது காண முடியும் என வேதாகமம் முழுமையிலும் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்துவதே அவருடைய மகிமை. நாம் தேவனை காண முடியாது. ஆனால் தேவனுடைய பிரசன்னத்தை அவருடைய படைப்பாகிய இந்த பிரமாண்டமான அண்டத்திலும், நம்முடைய பெரிய இரட்சிப்பிலும், நம்முடைய வாழ்வில் அவருடைய பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தாலும் உணர முடிகிறது.

இன்றும் அவருடைய வல்லமையின் ஆதாரங்களையும், அவருடைய மகிமையையும் இயற்கையின் அழகிலும், ஒரு குழுந்தையின் சிரிப்பிலும், பிறர் நம்மீது காட்டும் அன்பிலும் காணலாம். தேவன் இப்பொழுதும் இப்பூமியை அவருடைய மகிமையால் நிரப்புகிறார்.

அன்பினால் ஒரு “ஆம்”

2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 21ஆம் நாள் லூசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைப் பற்றிய படங்களை, கிரிஸா சமூக ஊடகங்களில் பதித்தாள். மறுநாள் காலை, வெள்ளப்பகுயிலிருந்து ஒருவர் உதவிக்காக வேண்டிய குறிப்பையும் அதில் சேர்த்தார். 5 மணி நேரம் கழித்து, அவளும் அவளுடைய கணவன் பர்பியும் உதவி செய்வதற்காக தாங்கள் செய்யவிருக்கும் 1000 மைல் பயணத்தில், தங்களோடு சேரும்படி மற்றவர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தனர். 24 மணி நேரத்திற்குள், தங்கள் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி 13 நபர்கள் அவர்களோடு இணைந்து கொண்டனர்.

தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு, 17 மணி நேரம் பிரயாணம் பண்ணி, உபகரணங்களை நகர்த்தி, இடிபாடுகளை அகற்றும் வேலையைச் செய்யும்படி, இதற்கு முன்னர் சென்றிராத ஓர் இடத்திலுள்ளவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமாறு செல்லும்படி, எது அம்மக்களைத் தூண்டியது? அதுதான் அன்பு.

அவள் உதவிக்காக அழைப்பு விடுத்தபோது அதனோடு இணைத்திருந்த வசனத்தை நினைத்துப் பார்த்தால், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5). உதவி செய்யும்படி தேவன் விடுத்த அழைப்பை ஏற்போமாகில் இந்த வார்த்தைகள் உண்மையென விளங்கும். அப்போஸ்தலனாகிய யோவான், “ஒருவன்… தன் சகோதரனுக்குத் குறைச்சலுண்டு என்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (யோவா. 3:17) அது ஒருவேளை கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், “தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்கிறபடியால்” (வச. 22) தேவன் வாக்களித்த உதவியைச் செய்வார்.

ஒரு தேவை வரும்போது, தேவன் நம்மை பிறருக்கு உதவும்படி அழைக்கிறார் என்று உணர்ந்து, அன்போடும், விருப்பத்தோடும் “ஆம்” என முன்வருவதே தேவனை கனப்படுத்துவதாகும்.

பிரமிக்க செய்யும் மகிமை

ஐரோப்பா பயணத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்தது எதுவென்றால், ஆங்காங்கே அமைந்துள்ள சிறப்புமிக்க பேராலயங்களைப் பார்வையிட்டதாகும். அவற்றின் பிரமிக்கச் செய்யும் அழகு “பரலோகத்திலிருப்பதைப் போல உணரச் செய்தது. அவற்றின் கட்டடக்கலை, கலை நுணுக்கம் மற்றும் எவற்றின் அடையாளமாக இந்த வியக்கச் செய்யும் கட்டடங்கள் எழுப்பப்பட்டனவோ அவை வார்த்தையால் விவரிக்க முடியாத, ஆச்சரியமான சிறப்புமிக்க அனுபவத்தைக் கொடுத்தது.

தேவனுடைய தனிச்சிறப்பையும், எல்லாவற்றையும் கடந்த அவருடைய மகிமையையும் குறித்து நாம் நினைவுகூறும்படியாக இந்த கட்டட அமைப்புகள் எழுப்பப்பட்டன என்ற உண்மையை நான் நினைக்கும் போது, நம் சிந்தனைகளிலும் இருதயத்திலும் தேவனுடைய மகத்துவத்தையும், மாட்சிமையையும் மீண்டும் நம் நினைவில் கொண்டு வருகின்றன என வியந்தேன், நாம் செய்ய வேண்டியதென்னவெனில் மனிதனின் சிறப்பான வானளாவிய கட்டட அமைப்புகளையும் தாண்டி, தேவன் உருவாக்கியவற்றின் மாட்சிமையைக் காண்பதேயேயாகும். வீண்மீன்கள் நிறைந்த இரவு வானத்தைப் பார்! அவருடைய வார்த்தையால் உருவாகியிருக்கும் இந்த அண்டத்தையும் பார்த்து, அவருடைய  வல்லமையை நினைத்துக்கொள். புதிதாகப் பிறந்த குழந்தையொன்றைக் கையிலெடுத்து தேவன் கொடுத்த அற்புதமான ஜீவனுக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். பனிபடர்ந்த அலாஸ்கா மலைத் தொடரையும், அல்லது லட்சக்கணக்கான தேவன் படைத்த உயிரினங்கள் அடங்கிய அட்லாண்டிக் சமுத்திரத்தையும், இத்தனை சுற்றுச் சூழலையும் இயக்குகின்ற அவருடைய வல்லமையையும் நினைத்துப் பார்.

மனிதன் வானளாவிய கட்டடங்களை உருவாக்கியதில் தவறில்லை. ஆனால், அவை நம்மை தேவனை நோக்கிப் பார்க்கத் தூண்ட வேண்டும். நம்முடைய உண்மையான புகழ்ச்சி தேவன் ஒருவருக்கே சொந்தம் என்பதால், “கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும்; மகத்துவமும் உம்முடையவைகள்” (1 நாளா. 29:11) என்று நாம் சொல்லுவோம்.

கிறிஸ்துமஸும் பாரம்பரியங்களும்

குடைக் கைப்பிடிபோல் வளைந்த மூங்கிலில் சிவப்பும் வெள்ளையும் கலந்த மிட்டாயை சுவைக்கும் பொழுது ஜெர்மானியர்களுக்கு ‘நன்றி சொல்லுங்கள்’ (Danke Schon).  ஏனென்றால், அது ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில்தான் முதலில் செய்யப்பட்டது. பாய்ன்செட்டியா செடியை ரசிக்கும் பொழுது மெக்சிக்கோவுக்கு “கிரேசியாஸ்: (GRACIAS) சொல்லுங்கள். அங்குதான் அது முதலில் வளர்ந்தது. “நோயெல்” என்ற வார்த்தையை பிரான்சு நாட்டிற்கு (merci beaucoup) மெர்சி பியூகேப் என்று சொல்லுங்கள். MISTILETOE இங்கிலாந்து நாட்டிற்கு கூரியதால் “சியர்ஸ்” என்றும் சொல்லூங்கள்.

உலகின் பல பாகங்களிலிருந்தும் சேர்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் பாரம்பரியங்களைக் கிறிஸ்துமஸ் காலங்களில் கொண்டாடும்பொழுது, நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை நம்முடைய நல்ல, இரக்கமுள்ள அன்பான தேவனுக்கு உண்மை மனதுடனே செலுத்த வேண்டும். அவர்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குக் காரணகர்த்தா.  ஏனென்றால், அவர்தான் பெத்லகேம் பாலகன் 2000 வருடங்களுக்கு முன் யூதேயாவிலுள்ள முன்னணையில் பிறந்தார். இந்த தெய்வீக ஈவை அறிவித்த தூதர்கள் “இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன். உங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்” (லூக். 2:10-11) என்றனர்.

மின்னிடும் கிறிஸ்துமஸ் மர விளக்குகளிலல்ல, பிரிக்கப்பட்ட பரிசுகளிலுமல்ல, தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிக்க வந்த இயேசு பாலனை (மத். 1:21) பார்க்கும் பொழுது மட்டுமே கிறிஸ்துமஸின் உண்மையான மகிழ்ச்சி உண்டாகும். அவருடைய பிறப்பு பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்டது. சொல்லிமுடியாத இந்த கிறிஸ்மஸ் பரிசிற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். நன்றி சொல்வதே கிறிஸ்துமஸின் உண்மையான மையக் கருபொருள்.

அறுவடையும் பலி செலுத்துதலும்

அநேக ஆயிர ஆண்டுகளுக்குமுன், தேவன் மோசேயோடு நேரடியாகப் பேசி, தமது ஜனங்களுக்கு புதிதான  ஓர்பண்டிகையையை நியமித்தார் (யாத். 23:16). மோசே குறிப்பிட்டுள்ளபடி நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைக் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையை ஆசரிப்பாயாக என்றார்.

இன்று உலகத்தின் பல நாடுகளில் அறுப்பின் பண்டிகைக்கொத்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கானா நாட்டில் அறுப்பின் பண்டிகையை “யாம் YAM” பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். பிரேசிலில், ஆகாரத்திற்குத் தேவையான விளைச்சல் கிடைத்ததற்காக “Dia de Acao de Gracas” பண்டிகையை ஆசரிக்கிறார்கள். சீனாவில், இலையுதிர் காலத்தின் மத்தியில் “Mid Autumn-(Moon)” திருவிழா உண்டு. அமெரிக்காவிலும், கானடாவிலும் அறுப்பின் பண்டிகை, நன்றி சொல்லும் (Thanksgiving) நாளாகக் கொண்டாடப்படும்.

வெள்ளத்திற்குப்பின், நோவாவிற்கும் அவன் குடும்பத்திற்கும், நமக்கும், வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பூமியில் தாம் வைத்திருப்பதை நினைவுபடுத்தினார். இதுவே அறுப்பின் பண்டிகைகளின் இலக்காகும். பூமியுள்ளள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார் (ஆதி. 8:22). அறுவடைக்கான நன்றி நம்மைத்தாங்குகிற தேவனுக்கு மட்டுமே.

நீங்கள் எங்கே வசித்தாலும், நிலத்தின் அறுவடையை எப்படிக் கொண்டாடினாலும், இன்றைக்கு நேரமெடுத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனென்றால், தேவனுடைய சிருஷ்டிக்கும் ஞானமில்லாமல் நமக்கு அறுவடையுமிராது, கொண்டாட்டமுமிராது.

அந்த பிரசித்திபெற்ற மாயப்புன்னகை

எனக்கும் என் மனைவிக்கும் பாரீஸிலுள்ள (லூவருக்குச் செல்ல வாய்ப்பு) கிடைத்தது. என் பதினொரு வயது பேத்தியை போனில் அழைத்து மிகப்பிரபலமான மோனலீசா படத்தைப் பார்த்ததைச் சொன்னேன். உடனே  “அவள் புன்னகைகிக்கிறாளா?” என்று கேட்டாள்.

இந்தப் படத்தைக் குறித்த மிகப்பெரிய கேள்வியே அதுதானே? லியோனார்டோ டாவின்சி சுமார் 600 வருடங்களுக்கு முன்னே இச்சித்திரத்தை வர்ணந்தீட்டியிருந்தாலும். அந்தப்பெண் சிரிக்கிறாளா, இல்லையா என்பது இன்றும் ஒரு தீராத புதிராகவே இருக்கிறது. அந்தச் சித்திரத்தின் அழகில் மயங்கினாலும், மோனலீஸா என்ன செய்கிறாள் என்று யாராலும் சொல்லவே முடியவில்லை.

அந்தச் சித்திரத்தின் புதிரில் “புன்னகை” ஒரு பகுதி. ஆனால், அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது? புன்னகையைக் குறித்து வேதாகமத்தில் ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? உண்மையில் வேதாகமத்தில் ஐந்திற்கும் குறைவாகவே இவ்வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால், நாம் அதைச் செய்ய வேண்டுமென்பதுபோலக் குறிப்பிடப்படவேயில்லை. ஆனால், நகைப்பிற்கு வழிநடத்தும் மனப்பான்மையைக் குறித்துச் சொல்லுகிறது. அதுவே மனமகிழ்ச்சி எனும் வார்த்தை, கிட்டத்தட்ட 250 தடவைகள் வருகிறது. தேவனை நினைக்கும் பொழுது என் இருதயம் களிகூறுகிறது (சங். 28:7), நீதிமான்களே கர்த்தருக்குள் களிகூருங்கள் (சங். 33:1). உம்முடைய சாட்சிகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி (சங். 119:111); கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம் (சங். 126:3).

கர்த்தர் நமக்காக யாவற்றையும் செய்து முடிப்பதன் மூலம் கொடுக்கும் மகிழ்ச்சி, நமது முகத்தில் புன்னகையை வருவிக்குகிறது.

ரூத்தின் கதை

ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.