விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அணியின் புகழைப் பாட விரும்புவர். அவர்கள் லோகோக்களை அணிவதாலும், முகநூலில் தாங்கள் விரும்பும் அணியைக் குறித்து குறிப்புகளைப் பதிப்பதன் மூலம், அல்லது அந்த அணியைப் பற்றி நண்பர்களோடு பேசுவதன் மூலம் தங்களின் உண்மையான விசுவாசம் எவ்வளவிருக்கிறது என்பதைக் காட்டுகின்றனர். என்னுடைய சொந்த டெட்ராய்டு புலி தொப்பிகள், சட்டைகள், மற்றும் கவிதைகள் நானும் இத்தகையவற்றைச் செய்கின்ற ரசிகர் கூட்டத்தில் இருக்கின்றேன் என்பதைக் காட்டுகிறது.

விளையாட்டின் மீதுள்ள விசுவாசம், ஒன்றை நினைவுபடுத்துகிறது. நம்முடைய உண்மையான, மிகப் பெரிய விசுவாசம் தேவனுக்கே செலுத்தப்பட வேண்டியது. இத்தகைய வெட்கப்படாத விசுவாசத்தைக் குறித்து சங்கீதம் 34ல் தாவீது சொல்கின்றார். இப்புவியிலுள்ள எந்த ஒன்றையும் காட்டிலும் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான தேவன் ஒருவருக்கே நாம் உண்மையாயிருக்க வேண்டும்.

தாவீது சொல்கின்றார், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்” (வச. 1). நாம் நம் வாழ்வில், உண்மையின் காரணராயும், ஒளியின் மூலமாயும், இரட்சிப்பின் காரணருமான தேவனைக் கருதாமல் இருந்த நாட்களை நினைக்கும் போது வியப்பாகவுள்ளது. தாவீது,
“அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (வச.1) என்கிறார். நாம் எத்தனை முறை இந்த உலகத்திற்குரியவர்களை நம் தேவனைக் காட்டிலும் அதிகமாகப் புகழ்ந்துள்ளோம். தாவீது சொல்கிறார், “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்” (வச.2). தேவன் நமக்குச் செய்ததை நினையாமல், நம்முடைய சிறிய வெற்றிகளைக் குறித்து நாம் எத்தனை முறை பெருமை பாராட்டியுள்ளோம்.

நம்முடைய அணியையும், நம்முடைய ஆர்வங்களையும், நம்முடைய சாதனைகளையும் குறித்து மகிழ்வதில் தவறில்லை. ஆனால், நம்முடைய மிக உயர்ந்த பாராட்டும் துதியும் தேவனுக்கேயுரியது. ‘‘என்னோடே கூட கர்த்தரைக் மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (வச. 3).