ஓர் ஈரப்பதமூட்டியை வாங்குவதற்கு கடைக்குச் சென்ற போது, ஒரு மூதாட்டி நடைபகுதியில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒரு வேளை அவளும் ஈரப்பதமூட்டியைத்தான் வாங்க வந்திருப்பாளோ என வியந்தேன். எனவே நான் நகர்ந்து அவள் அருகே வருவதற்கு இடங்கொடுத்தேன். சற்று நேரத்தில், நாங்கள் எங்கள் பகுதியில் பரவி வருகின்ற வைரஸ் காய்ச்சலைப் பற்றி பேசிக் கொண்டோம். அது அவளுக்குத் தொடர்ந்து இருமலையும், தலைவலியையும் தந்து கொண்டிருப்பதாகக் கூறினாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் ஒரு கசப்பான செய்திக்குள் சென்றாள். அந்த வைரஸின் தோற்றம் பற்றிய கொள்கைகளை விளக்க ஆரம்பித்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் கவனித்தேன். சீக்கிரத்தில் அவள் அந்த கடையை விட்டு கோபத்துடனும், விரக்தியுடனும் வெளியேறினாள். அவளுடைய விரக்தியை வெளிக்காட்டியும், அவளுடைய அந்த வேதனையை எடுத்துப் போட என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தாவீது இஸ்ரவேலின் இரண்டாவது அரசன். அவன் தன்னுடைய விரக்தியையும் கோபத்தையும் தேவனிடம் தெரிவிக்கும்படி சங்கீதங்களை எழுதினான். ஆனால் தேவன் அவனுடைய வேதனையை கவனிப்பதோடு மட்டுமல்ல, அவனுடைய வலியையும் போக்க அவரால் ஏதாவது செய்ய முடியும் என்பது தாவீதுக்குத் தெரியும். சங்கீதம் 61ல் அவர் எழுதுகிறார். என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்திரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2). தேவனே அவனுடைய அடைக்கலம் (வ.3) தாவீது ஓடி வந்தடையத்தக்க கன்மலை, தேவன்.

நாம் வேதனையில் இருக்கும்போது, அல்லது வேதனையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும் போது, தாவீதுடைய அனுபவம் நாம் பின்பற்றக் கூடிய ஒரு வழியைக் காட்டுகிறது. நாம் ‘‘உயரமான கன்மலையை” நோக்குவோம். அல்லது யாரையாகிலும் அக்கன்மலையிடம் வழி நடத்துவோம். நான் தேவனைப் பற்றி அந்த மூதாட்டியிடம் சொல்லியிருக்க வேண்டுமென நினைத்தேன். தேவன் நம் வேதனை அத்தனையும் எடுத்து விடுபவரல்ல. மாறாக, நாம் அவர் தரும் சமாதானத்தில் அமர்ந்திருந்து, நம் கூப்பிடுதலை அவர் கேட்கிறார் என்ற உறுதியைப் பெற்றுக் கொள்வோம்.