எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக, நான் என் வாழ்வின் சூழ்நிலைகள் எப்படி முடியும் என்பதைக் குறித்து எதிர்மறையான முடிவையே எடுப்பேன். என்னுடைய ஒரு வேலையில் நான் எடுக்கும் முயற்சி தோல்வியைச் சந்திக்கும் போது, நான் மிக எளிதில், நான் மேற்கொள்ளும் மற்றெந்த வேலையும் வெற்றி பெறாது என்ற முடிவுக்கு வந்து விடுவேன். நான் தோல்வியைக் கண்ட வேலைக்கும் மற்ற வேலைகளுக்கும் தொடர்பேயில்லாதிருந்தும், நான் என் முடிவுகளை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறினேன். ஐயோ! நான் பரிதாபத்துக்குரிய ஒரு தாய். என்னால் எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை. ஓர் இடத்தில் நான் சந்திக்கும் தோல்வி, தேவையில்லாமல் என்னுடைய மற்றெல்லா உணர்வுகளையும் பாதிக்கிறது.

எனக்கு எளிதாக ஆபகூக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேவன் அவருக்குக் காட்டியவற்றில் அவருடைய எண்ணம் எவ்வாறிருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு வரும் துன்பங்களைப் பார்த்து அவர் எத்தனை விரக்தியடைந்திருப்பார். நீண்ட வருடங்களாக, அவர்கள் துன்பத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. காரியங்கள் மிக மோசமாக நடந்தது. மரங்களில் கனியில்லை, சாப்பிட மாமிசமில்லை, உயிர் வாழ ஒரு சுகமுமில்லை. எல்லாவற்றிலும் மோசமான விளைவுகளையே எதிர்நோக்கி அவநம்பிக்கையில் வாழும் எனக்குள், அவருடைய நான்கெழுத்து வார்த்தை ‘‘ஆனாலும்” என்னை விழிக்கச் செய்தது. ‘‘ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்” (ஆப. 3:17-18) ஆபகூக் தேவன் எத்தகையவர் என்பதைக் கண்டு கொண்டதால், எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்கினாலும் அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது.

ஒரு வேளை நாம் நம்முடைய பிரச்சனைகளைப் பெரியதாகப் பார்க்கத் தூண்டப்படலாம். ஆனால் ஆபகூக் மிக அதிகமான கஷ்டங்களையே சந்தித்தார். அந்த நேரத்திலும் அவரால் தேவனை மகிமைப்படுத்த முடியும் போது, நம்மாலும் முடியும். நாம் நம்பிக்கையிழந்து துயரத்தின் ஆழத்திலிருந்தாலும் நம்மைத் தூக்கியெடுக்கவல்ல தேவனை நோக்கிப் பார்ப்போம்.