ஒரு வருடத்தில் 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் பணத்தை செலவழித்து தடைகள் நிறைந்த பாதையில் பல மைல்கள் ஓடுகின்றனர். அவ்வழியில் செங்குத்தான சுவர்களின் மேலேறுகின்றனர், சகதிகளின் வழியே கடினப்பட்டு ஓடுகின்றனர். தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான குழாயின் வழியே ஏறுகின்றனர். இவையெல்லாம் ஏன்? சிலர் இவற்றைத் தங்கள் சகிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் சவால்களாகவும், அல்லது அவர்களின் அச்ச உணர்வை நிவிர்த்திக்கும் வழியெனவும் கருதுகின்றனர். வேறு சிலருடைய கவர்ச்சி, அவர்களுடய கூட்டு முயற்சி. அவர்களோடு சேர்ந்த போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவவும், உறுதுணையாகவும் செயல்படுகின்றனர். ஒரு மனிதன் இதனை ‘‘நியாயந் தீர்க்கப்படாத மண்டலம்” என அழைக்கின்றார். ஏனெனில் இனம் தெரியாத நபர்கள் ஒருவருக்கொருவர் உதவி, தங்கள் ஓட்டத்தை முடிக்கச் செய்கின்றனர் (ஸ்டீபனி நோவிட்ஸ், த வாஷிங்டன் போஸ்ட்)

இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வாழ்வில் காட்டும்படி, வேதாகமம் நம்மை குழுவாக வேலை செய்யத் தூண்டுகிறது. ‘‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடி வருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும் (எபி. 10:24-25).

நம்முடைய விசுவாச ஓட்டத்தின் இலக்கு ‘‘முதலாவது முடிப்பது” அல்ல, நம் ஓட்டத்தின் போது பிறருக்கு ஊக்கங்களைக் கொடுத்து, ஒரு முன் மாதிரியாக அமைந்து, உதவிக்கரம் நீட்டி பிறரையும் இலக்கினை அடையச் செய்வதேயாகும்.

நாம் எதிர்பார்க்கும் அந்த நாள், நம் வாழ்வை இவ்வுலகில் முடிக்கும்போது வரும். அதுவரையிலும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தியும், உதவுவதற்கு தயாராகவும், அவர்களையும் நம்மோடு இழுத்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் ஓடுவோம்.