எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

கோபமான இருதயம்

“குயர்நிகா” என்பது பிக்காசோவின் தலைசிறந்த அரசியல் ஓவியம். 1937ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட ஒரு சிறிய ஸ்பானிய பட்டணத்தின் வரைபடம். இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த ஸ்பானிய புரட்சியின்போது, நாசிச ஜெர்மானிய விமானங்கள் தங்கள் குண்டுகளை இந்த பட்டணத்தில் பரிசோதித்துப் பார்க்க ஸ்பானிய அதிகாரிகளினால் அனுமதிக்கப்பட்டனர். இந்த செய்கை பல உயிர்களைப் பலிவாங்கியது. இந்த அநாகரீகமான யுத்த பயிற்சி உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பிக்காசோவின் இந்த ஓவியம், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகத்தைக் கற்பனையாகச் சித்தரித்து, ஒருவர் மற்றவர்களை அழிக்கும் அநாகரீகமான செயல்களைப் பேச்சுப் பொருளாய் மாற்றியது.
அநியாயமாய் இரத்தஞ்சிந்துதல் நடைபெறவில்லை என்று எண்ணுகிறவர்கள், இயேசுவின் வார்த்தைகளை நினைவுகூரவேண்டியுள்ளது. “கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும்... தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்” (மத்தேயு 5:21-22). நிஜத்தில் கொலைசெய்யப்படவில்லை என்றாலும் இருதயத்தில் மற்றவர்களை கொலைசெய்வது சாத்தியம்.
மற்றவர்களை அழிக்கும் அளவிற்கான கோபம் நமக்கு ஏற்படுமானால், நமக்குப் பரிசுத்த ஆவியானவருடைய நிரப்புதலும், கட்டுப்பாடும் அத்தியாவசிய தேவை என்பதை உணரவேண்டும். மாம்சீக எண்ணங்கள் ஆவியின் கனிகளால் மாற்றப்படவேண்டும் (கலாத்தியர் 5:19-23). அதன் பின்பு அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நம்முடைய உறவுகளில் வெளிப்படும்.

வீட்டைக் கட்டுதல்

19 ஆம் நூற்றாண்டில், தனிநபர்குடியிருப்பு கட்டும் இந்தியாவின் பெரிய கனவுத்திட்டம் துவங்கியது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டின் ராஜபரம்பரை வீடாக அந்தத் திட்டம் நிறைவுபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த வடோதராவிலுள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைதான் அந்த வீடு. இந்த அரண்மனைதான் இந்தியாவிலேயே பெரிய தனிநபர் குடியிருப்பாகும். 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் மேலான இடம், 170 அறைகள், பராமரிக்கப்பட்ட மொசைக்கற்கள், அலங்கார தொங்குவிளக்குகள், எலிவேட்டர்கள் என லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக நம்பப்பட்டது. 

இந்த கட்டிடம் ஒரு "கனவுத்திட்டம்" தான், ஆயினும் மத்தேயு 16 இல் இயேசு தமது சீடர்களிடம் கூறிய கட்டிடத்தைக் குறித்த நோக்கோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை. பேதுரு, இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" (வ.16) என்று உறுதிப்படுத்திய பின்னர்; "நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." (வ.18) என்று இயேசு அறிவித்தார். வேதாகம வல்லுநர்கள் அந்தக் "கல்லை" குறித்து பல கருத்துடையவர்களாய் இருந்தாலும், இயேசுவின் நோக்கம் ஒன்றுதான். பூமியின் கடைமுனைமட்டும், அவர் தமது சபையைக் கட்டுவார் (மத்தேயு 28:19–20), உலகெங்கிலும் உள்ள அனைத்து நாட்டவரும், இனத்தவரும் இதில் அடங்குவர் (வெளிப்படுத்தின விசேஷம் 5:9).

இந்த கட்டுமான பணிக்கான விலை? சிலுவையில் இயேசு பலியாகிச் சிந்திய இரத்தமே (அப்போஸ்தலர் 20:28). அவருடைய கட்டிடத்தின் உறுப்பினர்களாக (எபேசியர் 2:21) இம்மாபெரும் விலைக்கிரயத்தால் வாங்கப்பட்ட நாம் அவருடைய அன்பின் தியாகத்தால் பூரித்து இந்த மாபெரும் திட்டத்தில் அவரோடு இணைவோம்.

இறங்குமிடம்

மான் குடும்பத்தை சேர்ந்த, இம்பாலா என்று அழைக்கப்படும் ஒருவகையான மான் இனம், பத்து அடி உயரம், முப்பது அடி நீளம் வரை தாவக்கூடியது. அது வாழும் ஆப்பிரிக்க காடுகளில், இந்த சுபாவம் அதற்கு தேவைதான். ஆனால் மிருகக்காட்சிசாலைகளில் இவ்வகை இம்பாலா மான்களை அடைத்து வைத்திருக்கும் இடத்தின் மதிற்சுவர்களின் உயரம் வெறும் மூன்று அடிதான் இருக்குமாம். இந்த அளவிற்கு உயரம் தாண்டக்கூடிய மான்களை குறுகிய சுவருக்குள் எப்படி அடைத்து வைக்கமுடியும்? இது எப்படி சாத்தியமாகிறது என்றால், இம்பாலா மான்கள் தரையிரங்கும் இடத்தை பார்க்க இயலாவிடில், அது தாவ முயற்சிக்காதாம். மூன்று அடி உயரமுள்ள சுவர்கள், தூரத்தை பார்க்கவிடாமல் அதின் பார்வையை மறைப்பதால், அந்த சுவரின் மறுபக்கத்தில் இருப்பதென்ன என்பது அதற்குத் தெரியாது, அதினால் அது தாவ முயற்சிக்காதாம்.

மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. நாம் அடுத்த அடி எடுத்து வைக்குமுன்னரே விளைவு என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். விசுவாச வாழ்க்கையும் சிலவேளைகளில் அப்படியிருக்கிறது. கொரிந்து சபைக்கு பவுல் எழுதும்போது, “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:7) என்று நினைவூட்டுகிறார்.

“உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10) என்று ஜெபிக்கும்படிக்கு இயேசு நமக்கு கற்றுக் கொடுத்தார். அதற்காக அதின் விளைவை நாம் முன்கூட்டியே அறியமுடியும் என்று அர்த்தமல்ல. விசுவாசத்தில் வாழ்வதென்பது, தேவனுடைய சித்தத்தை நாம் அறியமுடியாவிட்டாலும், அவருடைய நன்மையான நோக்கத்தை நம்பி நடப்பதென்பதுதான். வாழ்க்கை கேள்விக்குறியாய் மாறும்வேளைகளில் அவருடைய மாறாத அன்பின் மீது நாம் நம்பிக்கை வைக்கமுடியும். வாழ்க்கை நம்மை எங்கு தூக்கி எறிந்தாலும் “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க” நாடுவோம் (2 கொரிந்தியர் 5:9).

மெய்யான சுதந்திரம்

ஜானகி, கோவையில் உள்ள கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். பல ஆண்டுகளுக்கு முன், 14 வயதில் திருமணமான கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்து, பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைகளைக் குறித்த பாகுபாடு காரணமாக, அவரது குடும்பத்தினர் குழந்தையை அருகிலுள்ள ஆற்றில் போட்டுவிட விரும்பினர். குடும்பத்தாரின் கொடூர எண்ணத்தை அறிந்த ஜானகி, குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, மறைமுகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார். தாய்க்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் வேலைகளை தனது சொந்த வீட்டில் ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களும் ஜானகியின் குடும்பத்தில் ஒரு அங்கமாய் மாறிவிட்டனர். ஜானகி அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது மட்டுமின்றி, அதின் எதிர்காலத்தில் அது ஒரு மருத்துவராய் மாறுவதற்கும் உதவினார். 

ஒருவருக்கொருவர் இரக்கம் செய்யும்படிக்கு, வேதம் அவ்வப்போது நமக்கு அறிவுறுத்தினாலும், சில சமயங்களில் நம்முடைய சொந்த கவலைகளை கடந்து செல்வது கடினம். தேவனை ஆராதிக்காமலும் பிறருக்கு சேவை செய்யாமலும், புசித்து குடித்து மகிழ்ந்திருந்த (சகரியா 7:6) இஸ்ரவேலை, சகரியா தீர்க்கதரிசி கண்டித்தார். தங்களுடைய உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதை புறக்கணித்து, மற்றவர்களுடைய தேவையை பொருட்படுத்த தவறினர். சகரியா, “நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும்,” (வச. 9-10) இருங்கள் என்று அறிவுறுத்துகிறார். 

நம் சொந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது இயல்பு என்றாலும், மற்றவர்களின் தேவைகளை பொருட்படுத்தும்படிக்கு நம்முடைய விசுவாசம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. தேவனிடத்தில் அநேக ஆஸ்திகள் இருக்கிறது. அந்த நிறைவில் சிலவற்றை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைப் பயன்படுத்துகிறார்.

 

பிரித்தெடுத்தல்

1742ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில், சார்லஸ் வெஸ்லி பிரசங்கித்த நற்செய்திக்கு எதிராக ஒரு கலவரம் வெடித்தது. சார்லஸ_ம் அவரது சகோதரரான ஜானும், பாரம்பரிய திருச்சபை வழக்கங்களை மாற்ற முயற்சித்ததினால், நகர வாசிகளுக்கு அது தவறாய் தெரிந்தது.

ஜான் வெஸ்லி கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவர் தனது சகோதரருக்கு உதவ ஸ்டாஃபோர்ட்ஷையருக்கு விரைந்தார். கட்டுக்கடங்காத கூட்டம் ஜான் தங்கியிருந்த இடத்தை சூழ்ந்தது. அக்கூட்டத்தின் தலைவர்களை ஜான் நேருக்கு நேர் சந்தித்தார். அவர்களுடன் பட்சமாய் பேசினார். அவர்கள் ஒவ்வொருவரின் கோபமும் தணிந்தது.

ஜான் வெஸ்லியின் சாந்தமான மற்றும் அமைதியான அணுகுமுறை ஒரு முரட்டுத்தனமான கும்பலை அமைதிப்படுத்தியது. ஆனால் அது இவருக்குள் இயல்பாய் ஏற்பட்ட சாந்தம் அல்ல; மாறாக, வெஸ்லி பின்பற்றிய இரட்சகரின் இருதயம் இது. இயேசு, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (மத்தேயு 11:29) என்கிறார். இந்த மென்மையான அணுகுமுறை “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (எபேசியர் 4:2)

இருங்கள் என்று பவுல் அப்போஸ்தலர் நமக்கு விடுத்த சவாலுக்குப் பின்னால் உள்ள மெய்யான சக்தியாக மாறுகிறது. அத்தகைய பொறுமை நமக்கு சாத்தியமற்றதாய் தெரிகிறது. ஆனால் நம்மில் இருக்கும் ஆவியின் கனிகளும், கிறிஸ்துவின் இருதயத்தின் மென்மையும் நம்மை வேறுபிரித்து, இந்த பகைமையான உலகத்தை மேற்கொள்ள நமக்கு உதவுகிறது. நாம் அவ்வாறு செய்யும்போது, “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்ற பவுலின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறோம்.

நம் தேவன் எவ்வளவு பெரியவர்!

மக்களை அடையாளம் காணுவதற்கு அவர்களின் கைரேகையை பயன்படுத்தும் வழக்கம் வெகுகாலமாய் வழக்கத்திலுள்ளது. ஆனால் அதையும் ஏமாற்றக்கூடும். அதேபோன்று மனித கண்களிலிருக்கும் கருவிழியின் வடிவத்தையும் அங்கீகார அடையாளமாய் பயன்படுத்துகின்றனர். ஆனால் கான்டாக்ட் லென்ஸின் மூலம் அந்த அடையாளத்தையும் மாற்ற முடியும். இதுபோன்ற அங்க அடையாள தொழிநுட்பத்தை எளிதில் ஏமாற்றிவிடலாம். எது பிரத்யேகமான தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது? ஒவ்வொரு மனிதனின் இரத்தநாளங்களின் அமைப்புகளை மாற்றியமைக்கவே முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூமியில் வசிக்கும் எல்லோரைக் காட்டிலும் உங்களுடைய பிரத்யேகமான இரத்தநாள அமைப்பு உங்களை வித்தியாசமான நபராய் அடையாளம் காட்டுகிறது.
நம்மிலிருக்கும் இந்த ஆச்சரியமான வித்தியாசங்களை கருதுகையில், நம் சிருஷ்டிகரை ஆராதிக்கவேண்டும் எனும் வியப்புணர்வே மேலோங்குகிறது. நாம் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்” உண்டாக்கப்பட்டவர்கள் (சங்கீதம் 139:14) என்று தாவீது நமக்கு நினைப்பூட்டுகிறார். அது அக்களிப்பான ஓர் அங்கீகாரம். சங்கீதம் 111:2, “கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது” என்றும் நம்மை நினைப்பூட்டுகிறது.
அந்த தெய்வீக சிருஷ்டிகரே நம் மொத்த கவனத்திற்கும் பாத்திரர். தேவனுடைய கிரியைகளில் மகிழ்கையில், நாம் அவரிலும் மகிழ வேண்டும். அவர் கிரியைகள் பெரியவை, அவரோ அதைக்காட்டிலும் மகத்துவமானவர். அந்த உணர்வே சங்கீதக்காரனை, “தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (சங்கீதம் 86:10) என்று துதிக்கத் தூண்டுகிறது.

ஜெபத்தின் சாரம்சம்

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானபோது, அவர் உடைக்கப்பட்டிருந்த தேசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. லிங்கன், ஒரு புத்திசாலித்தனமான தலைவராகவும், உயர்ந்த நற்குணங்கள் கொண்ட மனிதனாகவும், தன்னுடைய நன்மதிப்பை ஸ்தாபித்திருந்தாலும், அவருடைய மற்றுமொரு தகுதியே அவருடைய எல்லா செயல்களுக்கும் அஸ்திபாரமாய் திகழ்ந்தது. தன்னிடத்தில் ஒப்பிவிக்கப்பட்ட பொறுப்பை செயல்படுத்துவதற்கு அவர் தகுதியுள்ளவர் அல்ல என்னும் அவருடைய நம்பிக்கையே அந்த தகுதி. தன்னுடைய இயலாமைக்கான அவருடைய பதில், லிங்கன் சொல்லுகிறார்: “எனக்கு எங்கும் செல்லுவதற்கு வழியில்லை என்ற நிலைமையினால் நான் பலமுறை முழங்காலில் நிற்க உந்தப்பட்டேன். அந்த குறிப்பிட்ட நாளை சந்திப்பதற்கு என்னுடைய ஞானம் போதுமானதாக இல்லை.” 

வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்போது, நம்முடைய குறைவான ஞானத்தையும், அறிவையும், பெலத்தையும் கொண்டு லிங்கனைப் போன்று எதிர்த்து போராட முனையாமல், வரையறையில்லாத கிறிஸ்துவை பூரணமாய் சார்ந்துகொள்ள முற்படுவோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று பேதுரு இந்த சார்ந்துகொள்ளுதலை நினைவுபடுத்துகிறார். 

தன்னுடைய பிள்ளைகளின் மீது தேவன் வைத்திருக்கிற அன்போடு, அவருடைய வல்லமையும் இணைந்து, நம்முடைய பெலவீனங்களில் அவரை சார்ந்துகொள்வதற்கு ஏற்ற ஒரு நபராய் அவரை நம்முன் நிறுத்துகிறது. அதுவே ஜெபத்தின் சாரம்சம். நம் இயலாமையை உணர்ந்தும், அவரே நித்தியத்திற்கும் போதுமானவர் என்பதையும் அறிக்கையிட்டு இயேசுவிடம் சேருவோம்.. “எங்கு போவதென்று தெரியவில்லை” என்று லிங்கன் சொன்னார். ஆனால், தேவன் நம்மீது மிகுந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று தெரிந்துகொள்வதே நற்செய்தி. அவரிடத்திற்கு நாம் போகலாம்! 

மறக்கப்படவில்லை

நாம் சரித்திர சிறப்புமிக்க, நவீன சிந்தனையாளர்களாய் இருந்த அருட்பணியாளர்களை  நினைக்கும்போது, சார்லஸ் இரேனியஸ் (1790-1838) என்ற பெயர் நம்முடைய நினைவுக்கு வருவதில்லை. ஆனால் நிச்சயம் அது வந்தாகவேண்டும். ஜெர்மானிய தேசத்தில் பிறந்த இரேனியஸ், தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலிக்கு அந்தப் பகுதியின்  முதல் அருட்பணியாளர்களின் வரிசையில் வந்தார். குறுகிய காலகட்டத்திலே 90 கிராமங்களுக்கு இயேசுவின் சுவிசேஷத்தை கொண்டுபோய் சேர்த்து, மூன்றாயிரம் ஆத்துமாக்களை சம்பாதித்தார். அவர் எழுத்தாளராகவும், வேதாகமத்தை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பவராகவும் பணியாற்றினார். மேலும் அவர் "திருநெல்வேலியின் அப்போஸ்தலன்" என்று பரவலாக அறியப்பட்டிருக்கிறார், தென்னிந்திய திருச்சபையை நிறுவிய அருட்தந்தைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்கு ஏற்ற இரேனியஸின் வியத்தகு வாழ்வை சிலர் மறந்திருக்கலாம் ஆனால் அவருடைய ஆவிக்குரிய சேவையை தேவன் ஒருபோதும் மறக்க மாட்டார். தேவனுக்கென்று நீங்கள் செய்வதையும் அவர் மறக்கமாட்டார். எபிரெயருக்கு எழுதின நிருபம் இப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மை ஊக்குவிக்கிறது, " உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே" (6:10). தேவனுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது, ஏனெனில் அவர் தம்முடைய நாமத்தினாலே செய்யப்பட்ட அனைத்தையும் மெய்யாய் அறிந்திருக்கிறார், அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளார். அவ்வாறே எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம், "வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து" (வ.11) என்று நம்மை ஊக்குவிக்கிறது.

நாம் யாரும் அறியாவண்ணம் நம் சபையிலும், சமுதாயத்திலும் சேவை செய்கையில் நம்முடைய கடுமையான பணி ஒருவராலும் பாராட்டப் படவில்லை என்று நாம் உணர்வது இயல்புதான். மனம் தளராதீர்கள், நம்மை சுற்றியுள்ள ஜனங்கள் நமது சேவைகளை அங்கீகரிக்கிறார்களோ, வெகுமதி அளிக்கிறார்களோ இல்லையோ, தேவன் உண்மையுள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை.

அழகாய் உடைக்கப்பட்டது

நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த, இஸ்ரவேல் தேசத்தில் எங்களின் அகழ்வாராய்ச்சி பணி நடந்துகொண்டிருந்த அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கடைசியாய் எங்கள் பஸ் வந்து சேர்ந்தது. அந்த இடத்தின் மேற்பார்வையாளர், அந்த ஸ்தலத்தில் நாம் எதைக் கண்டறிந்தாலும் அவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு யார் கையும் படாமல் இருந்தவைகள் என்று எங்களுக்குச் சொன்னார். அங்கு கண்டெடுக்கப்பட்ட உடைந்த மண்பாண்டங்களைப் பார்க்கும்போது நாங்கள் சரித்திரத்தை கையில் தொடுவதுபோல் உணர்ந்தோம். அதன் பின்பு அந்த உடைந்த மண்பாண்டங்களை, பணி செய்யும் இடத்திற்கு கொண்டுபோய் அவைகளை ஒன்றிணைக்க முயற்சித்தோம். 

அவர்களின் பணி மிகத் தெளிவான ஒன்று. அந்த பணியாளர்கள் ஒருங்கமைத்த அந்த உடைந்த மண்பாண்டங்கள், உடைந்துபோனதை நேர்த்தியாய் ஒன்றுசேர்க்க விரும்பும் தேவனுடைய சிந்தையை அழகாய் பிரதிபலித்தது. சங்கீதம் 31:12ல் தாவீது, “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்கிறார். இந்த சங்கீதத்தை அவர் எந்த சூழ்நிலையில் எழுதினார் என்னும் தகவல் இல்லையென்றாலும், அவர் புலம்புவதை வைத்து அவருடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறியமுடிகிறது. இந்த சங்கீதம், தாவீது மேற்கொண்ட அபாயம், சத்துருக்கள் மற்றும் விரக்தியினால் முற்றிலும் உடைக்கப்பட்டதை விவரிக்கிறது. 

அவர் எங்கு உதவிக்காக நாடினார்? 16ஆம் வசனத்தில் தாவீது தேவனிடத்தில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்று கதறுகிறார்.

அந்த சூழ்நிலையில் தாவீதின் நம்பிக்கையாய் நின்ற தேவன், இன்றும் உடைந்துபோனவைகளை ஒன்றிணைக்க போதுமானவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடவும், அவரை முழுமையாய் நம்பவும் வேண்டும் என்பதையே அவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.