ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியானபோது, அவர் உடைக்கப்பட்டிருந்த தேசத்தை உருவாக்க வேண்டியிருந்தது. லிங்கன், ஒரு புத்திசாலித்தனமான தலைவராகவும், உயர்ந்த நற்குணங்கள் கொண்ட மனிதனாகவும், தன்னுடைய நன்மதிப்பை ஸ்தாபித்திருந்தாலும், அவருடைய மற்றுமொரு தகுதியே அவருடைய எல்லா செயல்களுக்கும் அஸ்திபாரமாய் திகழ்ந்தது. தன்னிடத்தில் ஒப்பிவிக்கப்பட்ட பொறுப்பை செயல்படுத்துவதற்கு அவர் தகுதியுள்ளவர் அல்ல என்னும் அவருடைய நம்பிக்கையே அந்த தகுதி. தன்னுடைய இயலாமைக்கான அவருடைய பதில், லிங்கன் சொல்லுகிறார்: “எனக்கு எங்கும் செல்லுவதற்கு வழியில்லை என்ற நிலைமையினால் நான் பலமுறை முழங்காலில் நிற்க உந்தப்பட்டேன். அந்த குறிப்பிட்ட நாளை சந்திப்பதற்கு என்னுடைய ஞானம் போதுமானதாக இல்லை.” 

வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்போது, நம்முடைய குறைவான ஞானத்தையும், அறிவையும், பெலத்தையும் கொண்டு லிங்கனைப் போன்று எதிர்த்து போராட முனையாமல், வரையறையில்லாத கிறிஸ்துவை பூரணமாய் சார்ந்துகொள்ள முற்படுவோம். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேதுரு 5:7) என்று பேதுரு இந்த சார்ந்துகொள்ளுதலை நினைவுபடுத்துகிறார். 

தன்னுடைய பிள்ளைகளின் மீது தேவன் வைத்திருக்கிற அன்போடு, அவருடைய வல்லமையும் இணைந்து, நம்முடைய பெலவீனங்களில் அவரை சார்ந்துகொள்வதற்கு ஏற்ற ஒரு நபராய் அவரை நம்முன் நிறுத்துகிறது. அதுவே ஜெபத்தின் சாரம்சம். நம் இயலாமையை உணர்ந்தும், அவரே நித்தியத்திற்கும் போதுமானவர் என்பதையும் அறிக்கையிட்டு இயேசுவிடம் சேருவோம்.. “எங்கு போவதென்று தெரியவில்லை” என்று லிங்கன் சொன்னார். ஆனால், தேவன் நம்மீது மிகுந்த அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று தெரிந்துகொள்வதே நற்செய்தி. அவரிடத்திற்கு நாம் போகலாம்!