எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

அன்பான தேவன்

ஒரு பேராசிரியர் வழக்கமாக தன் ஆன்லைன் வகுப்பு இரண்டு விதமாக நிறைவுசெய்வார். அவர், “அடுத்தமுறை சந்திப்போம்” அல்லது “ஒரு நல்ல வாரயிறுதியை அனுபவியுங்கள்” என்று நிறைவுசெய்வார். சில மாணவர்கள், “நீங்களும் அவ்வாறே செய்யுங்கள், நன்றி!" என்று வாழ்த்துவார்கள். ஒருநாள் ஒரு மாணவர் பதிலுக்கு, “நான் உம்மை நேசிக்கிறேன்” என்றானாம். அவர் ஆச்சரியத்துடன், “நானும் உம்மை நேசிக்கிறேன்!” என்று பதிலளித்தாராம். அவனோடு கூட படிக்கும் மாணவர்கள் அனைவரும், அடுத்த ஆன்லைன் வகுப்பு நிறைவுறும்போது அவ்வாறே சொல்லுவதற்கு தீர்மானித்தனர். சில நாட்களுக்கு பிறகு அவர் பாடம் நடத்திய பின் ஒவ்வொரு மாணவர்களும் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று வாழ்த்தினார்களாம். மாதக்கணக்காய் இந்த வழக்கத்தை அவர்கள் கடைபிடித்தனராம். ஆசிரியர் இந்த “நான் உம்மை நேசிக்கிறேன் சங்கிலி” ஒரு பலமான பிணைப்பை அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையே உருவாக்கியதால், அவர் அந்த வகுப்பை தன்னுடைய குடும்பமாய் கருதுகிறார். 

1 யோவான் 4:10-21ல், நாம் தேவனுடைய குடும்பமாய் இருப்பதால், அவரிடம் “நான் உம்மை நேசிக்கிறேன்” என்று சொல்ல பல காரணங்கள் இருக்கின்றன: அவர் தம்முடைய குமாரனை நம் பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார் (வச. 10). அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை நம்முள்ளே வாசம்பண்ண அனுமதித்திருக்கிறார் (வச. 13, 15). அவருடைய அன்பு நம்பகமானது (வச. 16). நாம் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை (வச. 17). “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால்” (வச. 19) அவரையும் மற்றவர்களையும் நேசிக்க உதவுகிறார். 

அடுத்த முறை தேவ ஜனத்தோடு கூடும்போது நீங்கள் ஏன் தேவனை நேசிக்கிறீர்கள் என்ற காரணங்களை பகிர்வதற்கு நேரம் செலவழியுங்கள். “நான் உம்மை நேசிக்கிறேன்” என்ற சங்கிலியை தேவனுக்காய் உருவாக்கி, தேவனை துதியுங்கள்; தேவனோடு இன்னும் கிட்டிச் சேருங்கள். 

பயப்படாதிருங்கள்

மிதுன் தன்னுடைய டெட்டி பொம்மையை எப்போதும் கட்டிப்பிடித்து தூங்கும் ஒரு சிறு பிள்ளை. அவன் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வான். அவனுக்கு அது தேவையான ஆறுதலாயிருந்தது. அவனுடைய சகோதரி மேகாவிற்கு அது பிடிக்கவில்லை. ஆகையால் அவனுடைய அந்த பொம்மையை அவள் அடிக்கடி ஒளித்துவைத்துவிடுவாள். அந்த பொம்மையை சார்ந்து வாழுவது தவறு என்பது மிதுனுக்கு தெரிந்தாலும், அவன் அதை எப்போதும் தன்னோடே வைத்து பழகிவிட்டான். 

“கிறிஸ்மஸ் என்றால் என்ன?” என்ற தலைப்பில் திருச்சபையில் சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மிதுன் ஒரு காட்சியில் முன்வந்து, லூக்கா 2:8-14ஐ மனப்பாடமாய் சொல்லவேண்டும். அதிலும் “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தையை சொல்லும்போது, அவன் பயப்படும்போதெல்லாம் தன்னோடு வைத்திருந்த அந்த டெட்டி பொம்மையை கீழே வைத்துவிட்டு வந்து சொன்னான். 

நாம் பயப்படத்தேவையில்லை என்பதை கிறிஸ்மஸின் எந்த நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகிறது? மேய்ப்பர்களுக்கு தரிசனமான தூதன், “பயப்படாதிருங்கள்... இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11) என்று கூறுகிறார். 

இயேசுவே நம்மோடிருக்கும் தேவன் (மத்தேயு 1:23). மெய்யான தேற்றரவாளனாகிய ஆவியானவர் மூலமாய் அவர் நமக்கு பிரசன்னமாகியிருக்கிறார் (யோவான் 14:16). ஆகையால் நாம் பயப்படத் தேவையில்லை. நம்முடைய பாதுகாப்பு கம்பளங்களை உதறிவிட்டு, அவர் மீது நம்பிக்கையாயிருப்போம். 

தேவன் காயங்கட்டுகிறார்

அதீத்தும் அவருடைய மனைவி ரேஷ்மாவும் கலைப்பொருள் அங்காடிக்கு சென்று தன் வீட்டில் மாட்டுவதற்கு ஒரு ஓவியத்தைத் தேடினர். அதீத் ஒரு சரியான ஓவியத்தை தேர்ந்தெடுத்து, ரேஷ்மாவை பார்க்கும்படிக்கு அழைத்தார். அந்த செராமிக் ஓவியத்தின் வலதுபுறத்தில் கிருபை என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதின் இடதுபுறத்தில் இரண்டு விரிசல்கள் ஏற்பட்டிருந்ததால், அது உடைந்திருக்கிறது என்று ரேஷ்மா அதேபோன்ற வேறொரு உடையாத ஓவியத்தைத் தேடினாள். ஆனால் அதீத் “இல்லை,” “அதில் தான் செய்தியே இருக்கிறது” என்றார். “நாம் உடைக்கப்பட்டவர்களாய் இருக்கும் தருணத்தில் தான் கிருபை நம்மை தேடிவருகிறது” என்றார். எனவே அந்த விரிசல் உள்ள ஓவியத்தையே அவர்கள் வாங்க தீர்மானித்தனர். அதற்கான தொகையை செலுத்த முயலும்போது, அந்த கடைக்காரர், “ஓ, இது உடைந்திருக்கிறது” என்று சொல்ல, ரேஷ்மா, “நாங்களும் தான்” என்று மெல்லமாய் சொன்னாள். 

“உடைக்கப்பட்டவர்கள்” என்றால் என்ன? ஒருவர் இவ்விதமாய் பதிலளிக்கிறார்: “நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், வாழ்க்கை வளமாவதற்கு பதிலாக, சரிவடைந்துகொண்டே தான் இருக்கிறது.” அது தேவன் நம்முடைய வாழ்க்கையின் தேவை என்பதையும் அவருடைய இடைபாடு நம்முடைய வாழ்க்கையில் அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

“அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை” என்று பவுல் அப்போஸ்தலர் நம்முடைய உடைக்கப்படுதலை விவரிக்கிறார் (எபேசியர் 2:1). மன்னிக்கப்படுதலுக்கும் மாற்றத்திற்குமான நம்முடைய தேவைக்கு 4 மற்றும் 5ஆம் வசனம் பதிலளிக்கிறது: தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே... நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.”

“நான் உடைக்கப்பட்டவன்” என்று அவரிடம் ஒத்துக்கொள்ளும்போது அவருடைய கிருபையினாலே நம்மை சுகமாக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார். 

ஒருவருக்கொருவர் உதவுதல்

சக் தே! இன்டியா! என்னும் பாலிவுட் (இந்தி) கற்பனைத் திரைப்படம் 2002ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டில் பங்குபெற்ற பெண்கள் ஹாக்கி குழுவினரின் வெற்றியைக் குறித்து இயக்கப்பட்டுள்ளது. அதின் ஒரு காட்சியில் அக்குழுவின் பயிற்சியாளராகிய ஷாருக்கான், அக்குழுவில் நட்பு மற்றும் குழுவாய் செயல்படுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார். துவக்கத்தில் அக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் தங்கள் பெயரையும் தங்களுடைய மாநிலத்தையும் அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அவர்கள் அனைவரும் இந்தியா என்னும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவார். இந்த மனநிலை உலக அரங்கில் அவர்களை ஒரு வெற்றிக் குழுவாய் மாற்றும். 

தேவனும் தன்னுடைய ஜனங்கள் குழுவாய் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று தெசலோனிக்கேயர்களுக்கு அறிவுறுத்துகிறார். நம் வாழ்க்கைக்கு ஓர் ஆதரவைக் கொடுக்கும் பொருட்டே தேவன் நம்மை தேவ ஜனத்தின் குழுவில் இணைத்துள்ளார். நாம் ஒருவரையொருவர் ஆதரித்து, கிறிஸ்துவின் பாதையில் நம் ஜீவியத்தை நகர்த்தவேண்டும். அது சில வேளைகளில், கடினமான பாதையில் பயணிக்கும் நபர்களின் வேதனையை செவிகொடுத்து கேட்பதாக இருக்கலாம்; மற்றவர்களின் தேவையை சந்திப்பதாக இருக்கலாம், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நாம் வெற்றியைக் கொண்டாடி, ஒருவருக்காக ஒருவர் வேண்டுதல் பண்ணி, ஒருவரையொருவர் விசுவாசத்தில் வளர உதவவேண்டும். எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் “எப்பொழுதும் நன்மை செய்ய” நாடவேண்டும் (வச.15).

தேவனைத் தொடர்ந்து விசுவாசிக்க, விசுவாசிகளாகிய நாம் எந்த நட்புறவை நடைமுறைப்படுத்துகிறோம்! 

தவறான புரிந்துகொள்ளுதல் இல்லை

நம்முடைய வீடுகளில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவி கருவிகள் சில நேரங்களில் நாம் சொல்வதை தவறாக புரிந்துக்கொள்ளுகிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை தன் குடும்பத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்தக் கருவியிடம் குக்கிஸ்களைப் பற்றியும் பொம்மை வீட்டைப் பற்றியும் பேசினாள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஏழு பவுண்ட் குக்கிஸ்களும், 170 டாலர் மதிப்புக்கொண்ட பொம்மை வீடும் தங்கள் வீடு நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவள் தாய்க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. லண்டனில் ஒரு பேசும் கிளி, தன்னுடைய உரிமையாளர் ஆன்லைனில் எதுவும் வாங்கவில்லை என்றாலும், அவருக்குத் தெரியாமல், தங்கப்பரிசுகள் உள்ள டப்பாக்களின் ஒரு பொட்டலத்தை ஆர்டர் செய்திருந்தது. ஒரு நபர் இந்தக் கருவியிடம் “வாழும் அரையின் விளக்குகளை இயக்க” சொன்னபோது “புட்டிங் அரை இங்கு இல்லை” என்று பதிலளித்தது.

தேவனிடம் நாம் பேசும்போது அத்தகைய தவறான புரிதல் அவரிடமில்லை. நாம் செய்யும் செயலைவிட நம்முடைய இருதயத்தை அவர் நன்கு அறிந்தபடியால் அவர் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்த்து, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார். தேவன் நம்மை முதிர்ச்சியுள்ளவர்களாக்குவதற்கும், அவருடைய குமாரனைப் போல நாம் மாறுவதற்கும், தமது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாவிலுள்ள தேவாலயங்களுக்கு கூறினார் (ரோமர் 8:28). ஆவியானவரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (வச. 26-27).

உங்களை தேவனிடம் வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கிறதா? என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று புரியவில்லையா? இருதயத்தில் இருந்து முடிந்ததைச் சொல்லுங்கள். ஆவியானவர் உங்களைப் புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்.

தவறான புரிந்துகொள்ளுதல் இல்லை

நம்முடைய வீடுகளில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் அலெக்ஸா மற்றும் சிரி போன்ற குரல் உதவி கருவிகள் சில நேரங்களில் நாம் சொல்வதை தவறாக புரிந்துக்கொள்ளுகிறது. ஒரு ஆறு வயதுக் குழந்தை தன் குடும்பத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்தக் கருவியிடம் குக்கிஸ்களைப் பற்றியும் பொம்மை வீட்டைப் பற்றியும் பேசினாள். சற்று நேரத்திற்குப் பிறகு, ஏழு பவுண்ட் குக்கிஸ்களும், 170 டாலர் மதிப்புக்கொண்ட பொம்மை வீடும் தங்கள் வீடு நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக அவள் தாய்க்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. லண்டனில் ஒரு பேசும் கிளி, தன்னுடைய உரிமையாளர் ஆன்லைனில் எதுவும் வாங்கவில்லை என்றாலும், அவருக்குத் தெரியாமல், தங்கப்பரிசுகள் உள்ள டப்பாக்களின் ஒரு பொட்டலத்தை ஆர்டர் செய்திருந்தது. ஒரு நபர் இந்தக் கருவியிடம் “வாழும் அரையின் விளக்குகளை இயக்க” சொன்னபோது “புட்டிங் அரை இங்கு இல்லை” என்று பதிலளித்தது.

தேவனிடம் நாம் பேசும்போது அத்தகைய தவறான புரிதல் அவரிடமில்லை. நாம் செய்யும் செயலைவிட நம்முடைய இருதயத்தை அவர் நன்கு அறிந்தபடியால் அவர் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. ஆவியானவர் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்துப்பார்த்து, தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளுகிறார். தேவன் நம்மை முதிர்ச்சியுள்ளவர்களாக்குவதற்கும், அவருடைய குமாரனைப் போல நாம் மாறுவதற்கும், தமது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாவிலுள்ள தேவாலயங்களுக்கு கூறினார் (ரோமர் 8:28). ஆவியானவரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்வது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் (வச. 26-27).

உங்களை தேவனிடம் வெளிப்படுத்துவதற்கு சங்கடமாக இருக்கிறதா? என்ன, எப்படி ஜெபிக்க வேண்டும் என்று புரியவில்லையா? இருதயத்தில் இருந்து முடிந்ததைச் சொல்லுங்கள். ஆவியானவர் உங்களைப் புரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்.

மெய்யான அன்பு

பேரிடரின்போது, ஜெர்ரி தன்னுடைய உடற்பயிற்சி மையத்தையும் மூட வேண்டியிருந்தது. அதினால் மாதக்கணக்காய் வருமானமின்றி தவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு நாள் அவனுடைய நண்பனிடத்திலிருந்து ஒரு செய்தி வந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சரியாய் மாலை 6:00 மணிக்கு வரும்படிக்கு சொல்லியிருந்தது. ஜெர்ரிக்கு அது ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் குறித்த நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். திடீரென்று பல கார்கள் அணிவகுக்கத் துவங்கியது. அதில் முதல் காரில் வந்தவர் ஒரு கூடையை அந்த கட்டடத்தின் அருகாமையில் வைத்துவிட்டுபோக, தொடர்ந்து வந்த ஏறத்தாழ 50 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்து ஜெர்ரியைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தி, அந்தக் கூடையின் அருகாமையில் நிறுத்தி, அதில் வாழ்த்து அட்டைகளையும் பணத்தையும் வைத்துவிட்டு சென்றனர். அதின் மூலமாக ஜெர்ரியை உற்சாகப்படுத்தினர். 

பவுல் அப்போஸ்தலரைப் பொருத்தவரையில், தியாகமே அன்பின் நிஜமான தன்மை. கொரிந்திய சபையை சேர்ந்தவர்களுக்கு, மக்கதோனியா சபையை சேர்ந்தவர்கள் “தங்கள் திரணிக்கு மிஞ்சி” கொடுத்து அப்போஸ்தலர்களின் தேவையை சந்தித்தார்கள் என்று பவுல் கூறுகிறார் (2 கொரி. 8:3). பவுலுக்கும் தேவ ஜனத்திற்கும் கொடுக்கும் வாய்ப்புக்காய் “அவர்கள் மிகவும் வேண்டிக்கொண்டார்கள்” என்றும் கூறுகிறார். இயேசுவின் தியாகமான இருதயமே அவர்களைக் கொடுக்கத் தூண்டியது. அவர் பரலோகத்தின் மேன்மையை துறந்து, தன் ஜீவனைக் கொடுக்கும்பொருட்டு பூமிக்கு வந்து அடிமையின் ரூபமெடுத்தார். “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும்... உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (வச. 9).

மற்றவர்களுடைய தேவையை அன்போடு சந்திக்க, இந்த தருமக் காரியத்தில் பெருக நாமும் தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளலாமே (வச. 7). 

கேள்! கற்றுக்கொள்!

வீதியின் ஒருபுறத்திலிருந்த வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் கொடியைப் பறக்கவிட்டிருந்தார். அந்த பாதையில் கனரக வாகனம் ஒன்றின் ஜன்னல் கதவிலும் வரையப்பட்ட கொடி ஒன்றும் அதின் முன்பகுதியில் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒட்டுக்காதிதங்களும் ஒட்டப்பட்டிருந்தது. அதே வீதியின் இன்னொரு வீட்டின் முற்றத்தில் சமூக அநீதியை எதிர்க்கும் புரட்சி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. 

இந்த வீடுகளில் இருக்கும் மக்கள் விரோதிகளா? அல்லது நண்பர்களா? என்று நாம் ஆச்சரியப்படலாம். அந்த இரு வீடுகளிலும் இருப்பவர்கள் இயேசுவின் விசுவாசிகளாய் இருக்க முடியுமா? யாக்கோபு 1:19ன் படி வாழுவதற்கு தேவன் நம்மை அழைத்திருக்கிறார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” பெரும்பாலான நேரத்தில் மற்றவர்களின் கருத்துக்கு செவிகொடுக்காமல், நம்முடைய கருத்தையே பிடிவாதமாய் நாம் முன்வைப்பதுண்டு. மேத்யூ ஹென்றி விளக்கவுரையில் இந்த வாக்கியம் சற்று வித்தியாசமாய் இடம்பெற்றுள்ளது: “காரணத்தையும், எல்லா தரப்பு நியாயத்தையும் கேட்கிறதற்கு யாவரும் தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும்... அப்படி பேசும்போது கோபப்படாத வகையிலும் பேசவேண்டும்.”    

“கற்றுக்கொள்வதற்கு கேட்பது மிகவும் அவசியம்” என்று ஒருவர் சொல்லுகிறார். தேவனுடைய அன்பின் ஆவியினால் நிரப்பப்படுவதினாலும், மற்றவர்களைக் கனப்படுத்த பழகும்போதுமே யாக்கோபு நிருபத்தில் சொல்லப்பட்டுள்ள யதார்த்தமான வார்த்தைகள் சாத்தியமாகும். நம்முடைய இருதயத்திலும் சிந்தையிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் உதவியைச் செய்ய அவர் வாஞ்சையாயிருக்கிறார். நாம் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமா?

தேவனுடைய வல்லமை

ரெபேக்கா மற்றும் ரஸ்ஸல் தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதற்கு இனி வாய்ப்பில்லை என்று அவர்களுடைய மருத்துவர் கூறிவிட்டார். ஆனால் தேவனுடைய சித்தம் வேறு. பத்து ஆண்டுகள் கழித்து ரெபேக்கா கர்ப்பந்தரித்தாள். கர்ப்பகாலம் ஆரோக்கியமாகவே இருந்தது. பிரசவவலி துவங்கியதும் மருத்துமனைக்கு விரைந்தனர். பிரசவ வலி தீவிரமாய் அதிகரித்தது. ஆனால் குழந்தைபெற்றெடுக்கும் அளவிற்கு அவளுடைய சரீரம் இன்னும் ஒத்துழைக்கவில்லை. கடைசியில், அறுவைசிகிச்சை மூலமாய் குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர். ரெபேக்கா தன் குழந்தையைக் குறித்தும் தன்னைக் குறித்தும் துக்கமடைந்திருந்தாள். அவளிடம் உறுதியளித்த மருத்துவர், “என்னால் இயன்றதைச் செய்கிறேன்; மற்றபடி, நாங்கள் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம், அவரால் இன்னும் அதிகமாய் செய்யமுடியும்” என்று கூறினார். மருத்துவர் ரெபேக்காவோடு சேர்ந்து ஜெபித்தார். பதினைந்தே நிமிடங்களில், ப்ரூஸ் என்னும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. 

அவள் தேவனையும் அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்பதை மருத்துவர் அறிந்திருந்தார். அறுவைசிகிச்சை செய்ய தேவையான அறிவும் திறமையும் மருத்துவரிடத்தில் இருந்தாலும், அவர் தேவ ஞானத்தையும், பெலத்தையும், தன் கைகளை இயக்கும் உதவியையும் தேவனிடத்தில் கேட்டார் (சங். 121:1-2).       

மிகவும் திறமையான நபர்கள் தேவனுடைய உதவியை நாடுவதை கேள்விப்படும்போது நாம் உற்சாகமடைகிறோம். ஏனெனில், நமக்கும் அது நிச்சயமாய் தேவை. நாம் அல்ல, அவரே தேவன். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய்” (எபேசியர் 3:20) நம்மில் கிரியை செய்ய அவரால் மட்டுமே முடியும். அவரிடத்தில் கற்றுக்கொள்ள நம்முடைய இருதயத்தை தாழ்த்தி, ஜெபத்தில் நம் விசுவாசத்தை பிரதிபலிப்போம். ஏனெனில் நாமெல்லோரைக் காட்டிலும் அவரால் அதிகம் செய்யமுடியும்.