ரோஹன் மற்றும் ரீனா தம்பதியினர் வீட்டைக் காலி செய்து ஐந்து மைல் தூரத்திலிருந்த வேறொரு வீட்டிற்கு குடிபோனார்கள். அவர்களின் அந்த இடமாற்றத்தை விரும்பாத “பகீரா” என்னும் அவர்களின் பூனை திடீரென்று காணாமல் போனது. ஒருநாள் சமூக வலைதளம் ஒன்றில் தங்கள் பழைய வீட்டைக் காணநேர்ந்தது. அதில் பகீரா இருந்ததைக் கண்டனர். 

இந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் போய் அவர்களின் பூனையை மீட்டுக்கொண்டு வந்தனர். பகீரா மீண்டும் ஓடியது. எங்கு போனது என்று தெரியுமா? இந்த முறை அவர்களின் பழைய வீட்டை வாங்கின அந்த குடும்பமே பகீராவை தங்கள் பொறுப்பில் வைத்து பாதுகாத்துக் கொள்வதாக ஒத்துக்கொண்டனர். இது திரும்பிப்போவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. பகீரா எப்போதும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு திரும்பிவிடுகிறது.  

நெகேமியா, சூசாவின் ராஜ அரண்மனையில் வேலை செய்துகொண்டிருந்தான். ஆனால் அவனுடைய இருதயம் அங்கே இல்லை. அவன் தன்னுடைய “பிதாக்களின் கல்லறை” இருக்கும் நகரம் பாழாவதைக் குறித்த செய்தியைக் கேள்விப்படுகிறான் (நெகேமியா 2:3). ஆகையினால் நெகேமியா ஜெபிக்கும்போது, “நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்” (1:8-9) என்று ஜெபிக்கிறான்.

என் வீடு எங்கேயோ என் இருதயமும் அங்கே இருக்கும். நெகேமியா விஷயத்தில் வீட்டிற்காய் ஏங்குவது என்பது புவியியல் அமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு ஏக்கம். ஆம்! தான் அதிகம் நேசிக்கிற தன் தேவனோடுள்ள உறவு. “என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலம்” என்பது எருசலேம் நகரம்.