காரை வடிவமைக்கும் பிரிவில் வேலை செய்துகொண்டிருந்த அசோக், தவறு ஏதும் செய்யாதபோதிலும் அவனுடைய வேலையை இழக்க நேரிட்டது. மற்ற துறையில் செய்யப்பட்ட தவறினால், இவர்கள் வடிவமைத்த கார்களில் பிரச்சனை ஏற்பட்டது. பல விபத்துகளைச் சந்தித்த அவர்களுடைய வாகனங்களைக் குறித்து வெளியான செய்திகளினால், அவர்களுடைய கார்களை வாங்குவதை மக்கள் தவிர்த்தனர். அதினால், கம்பெனி நிர்வாகம் அசோக்கை வேலையை விட்டு நிறுத்தியது. அது அவனுக்கு ஏற்பட்ட நியாயமில்லாத சேதாரம். அது எப்போதுமே நியாயமற்றது. 

வரலாற்றின் முதல் சேதாரம், முதன்முதலில் மனிதன் பாவம் செய்தவுடனேயே நிகழ்ந்தது. தங்கள் நிர்வாணத்தைக் குறித்து ஆதாமும் ஏவாளும் வெட்கப்பட்டதினால், தேவன் அவர்களுக்கு “தோல் உடைகளை” உண்டாக்கிக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:21). இதை கற்பனை செய்வது சற்றுக் கடினம். ஆனால் அதற்காக, தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட விலங்குகள் அடிக்கப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்க வேண்டும். 

அத்துடன் அது நிற்கவில்லை. தேவன் இஸ்ரவேலைப் பார்த்து, “தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும்” (எசேக்கியேல் 46:13) என்று கட்டளையிட்டார். “தினந்தோறும்” அதை செய்யவேண்டுமாம். மனுஷர்களுடைய பாவங்களினால் எத்தனை ஆயிரம் விலங்குகள் இதுவரை பலியிடப்பட்டுள்ளது? 

தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்து வந்து அதை மாற்றும்வரை நம்முடைய பாவங்களை கழுவுவதற்கு விலங்குகள் பலியிடப்படவேண்டியிருந்தது (யோவான் 1:29). இதனை “சீரமைக்கப்பட்ட சேதாரம்” எனலாம். ஆதாமின் பாவம் நம்மை கொன்றதுபோல, கடைசி ஆதாமாகிய இயேசுவின் கீழ்ப்படிதல் அவரை விசுவாசிப்பவர்களின் வாழ்க்கையை சீரமைக்கிறது (ரோமர் 5:17-19). “சீரமைக்கும் சேதாரமும்” நியாயமானது அல்ல – அது இயேசுவின் ஜீவனை இழக்கச்செய்தது –ஆனால் அது இலவசமானது. இயேசுவை விசுவாசித்து, அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டால், அவருடைய நீதி நம் வாழக்கையில் செயல்படும்.