Archives: ஜனவரி 2021

மன்னிப்புடன் ஒரு எதிர்காலம்

1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி அமைப்பிலிருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “No Future Without Forgiveness” (மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை ) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனா தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.

அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையின் எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.

ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின்தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் இல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).

தைரியத்தை உடுத்திக்கொள்

சுவிசேஷம் தடை செய்யப்பட்ட தேசத்தில் ஆண்ட்ரூ வாழ்ந்து வந்தார். உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக காத்து வருகிறீர்கள் என்று நான் கேட்டபோது, அவர் அதை ரகசியமாக வைப்பதில்லை என்று கூறினார். அவர் சபையின் முத்திரையை எப்போதும் தனது சட்டையின்மேல் அணிந்து தான் வெளியே செல்லுவார். அவர் கைது செய்யப்படும் நேரங்களில் கூட காவலர்களிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை” துன்று கூறுவார். அவர் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று ஆண்ட்ரு அறிந்திருந்ததால் அவர் தைரியமாக இருந்தார்.

தன்னை கைது செய்யும்படி 50 காவலர்களை இஸ்ரவேலின் ராஜா அனுப்பின போதும் எலியா அச்சுறத்தப்படவில்லை (2 இரா 1:9). தேவன் யார் பக்கம் இருக்கிறார் என்று அவர் அறிந்து அந்த 50 காவலாளிகளை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணினார். ராஜா மறுபடியும் அதிக காவலாளிகளை அனுப்பினான், எலியா மறுபடியும் அதையே செய்தார். மூன்றாவது முறையாக வந்த காவலாளிகள் தலைவன் தங்களை விட்டுவிடும்படி எலியாவை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான். எலியா அவர்களை பார்த்து பயந்ததை விட அவர்கள் எலியாவை பார்த்து பயந்தது தான் அதிகம் எனவே தேவதூதன் எலியாவை அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்று கூறினான். (வச 13-15)

நமது எதிராளிகள் மீது அக்கினியை வரவழைக்க இயேசு விரும்புவதில்லை. அவரது சீஷர்கள் ஒரு சமாரிய கிராமத்தின் மேல் தாங்கள் அக்கினி வரவழைக்கிறோம் என்று கேட்டபோது, இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9:51-55). நாம் வேறு ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் எலியாவை போன்று தைரியம் உள்ளவர்களாய் - எல்லா மக்களுக்காக மரித்த இரட்சகரை பற்றி கூற தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அது ஒரு தனி நபராக நாம் 50 பேருக்கு சமமாக நிற்பது போன்று இருக்கும் ஆனால் உண்மையில் அது ஒருவரான தேவனே நிற்பது. மற்றவர்களிடம் தைரியமாக அன்பு காட்ட இயேசு தருகிறார்.

மூச்சுத் திணறல்

எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்கள் ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தவும் அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.

இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.

தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழுநாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும் யாரும் இருக்க கூடாது.

எந்நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.

வல்லமையான ஓடை

வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால்
ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நாம் தீர்மானித்திருக்கிறேன்”.. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனா உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.

அணைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.

தேவனின் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நம் இதயங்கள் நாடுவது நீதியை நேசிக்கும் இடத்தில் இருந்தும் வருவதாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.