லண்டனில் உள்ள தூய பவுல் தேவாலயத்தின் உயர்ந்த கோபுரத்தில், பார்வையாளர்கள் 259 படிகள் ஏறி மெல்லப் பேசும் கலைக்காட்சி கூடத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து நீங்கள் மெல்லப்பேசும்போது அங்கிருக்கும் வட்ட நடைபாதையில் இருப்பவர்கள் மட்டுமல்ல நூறு அடி தூரத்தில் இருக்கும் மகத்தான படுகுழியிலிருப்பவர்களும் கேட்கலாம்,  இந்த ஒழுங்கின்மைக்கு காரணம் கோள வடிவமுள்ள கோபுரம் மற்றும் குறைந்த தீவிரத்தன்மைக் கொண்ட ஒலி அலைகளின் விளைவே என்று பொறியாளர்கள் விளக்குகின்றனர்.

நம்முடைய வேதனையான மெல்லியப்பேச்சுகளை தேவன் கேட்கிறார் என்று எவ்வளவாய் நம்புகிறோம்! தேவன் நம்முடைய கண்ணீரையும், ஜெபத்தையும், மெல்லியப்பேச்சுகளை  கிசுகிசுப்புகளையும் கேட்கிறார் என்ற சாட்சிகள் சங்கீதங்களில் நிறைந்திருக்கிறது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன். என் தேவனை நோக்கி அபயமிட்டேன். (சங். 18:6) என்று தாவீது எழுதுகிறார். தாவீதும் மற்ற சங்கீதக்காரர்களும் தொடர்ந்து “என் ஜெபத்தை (4:1), என் சத்தத்தை (5:3), என் பெருமூச்சைக் (102:20) கேளும் என்று கெஞ்சுகின்றனர். சில நேரங்களில் “என்னைக் கேட்டருளும்” (77:1), என்று இருதயத்தில் தியானத்தோடும் ஆவியில் ஆராய்ச்சியோடும் வெளிப்படுகிறது (77:6).

இந்த வேண்டுதல்களுக்கெல்லாம் பதில், சங்கீதக்காரர்கள் – தாவீதைப்போல சங்கீதம்18:6 – தேவன் கவனித்துக்கொண்டிருக்கிறதை வெளிப்படுத்துகின்றனர்.

“தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார். என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவர் செவிகளில் ஏறிற்று”. தேவாலயம் இன்னும் கட்டப்படாததால் தேவன் தம்முடைய பரலோக வாசஸ்தலத்தலிருந்து கவனிக்கிறார் என்று தாவீது குறிப்பிடுகிறார்.

பூமிக்கு மேலாக இருக்கும் தமக்கு சொந்தமான வானங்களின் கோபுரத்திலிருக்கிற முணுமுணுப்புகளையும் கூடத்திலிருந்து நம்முடைய ஆழ்ந்த முறுமுறுப்புகளையும், நம்முடைய மெல்லியப்பேச்சுகளை தேவன் கவனிக்கிறார்.