நாங்கள் குடியேறியுள்ள புதிய பட்டணத்தை, அநேக இடியோடு கூடிய புயல்கள் தாக்கியதால் காற்றின் ஈரப்பதம் உயர்ந்தது, காலைப் பொழுதில் வானம் கருமேகங்களால் சூழ்ந்திருந்தது.  மாலையில் நான் என்னுடைய நாய் ஜிம்மியை நடக்க அழைத்துச் சென்றேன். என் நாட்டின் வேறொரு பகுதிக்கு, என்னுடைய குடும்பம் நகர்ந்துள்ளதால், சந்திக்க வேண்டிய அநேக சவால்கள் என்னுடைய மனதை அழுத்திக் கொண்டிருந்தன. எங்களுடைய உயர்ந்த நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்புக்கும் வெகுதொலைவில் அநேக காரியங்கள் போய் கொண்டிருந்ததால், ஏமாற்றம் ஒரு புறமிருக்க, நான் என்னுடைய நாயை மெதுவாக நடத்திச் சென்று, அங்குள்ள புற்களை முகர்ந்து கொள்ளச் செய்தேன். எங்கள் வீட்டின் அருகில் ஓடிய ஓடையின் ஒலியைக் கேட்டேன். சிறிய வெளிச்சம் விட்டு விட்டு வந்தது, ஓடையின் அருகிலுள்ள கொடிகளில் மலர்ந்துள்ள கொத்துக் கொத்தான காட்டு மலர்களைச் சுற்றி வெளிச்சம் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவை மின்மினிப் பூச்சிகள்!

இருளைக் கிழித்துக் கொண்டு வந்த அந்த மின்னும் ஒளியைப் பார்த்த என்னை தேவன் சமாதானத்தால் நிரப்பினார். நான் சங்கீதக்காரனின் பாடலை நினைத்துப் பார்த்தேன். “தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்” (சங். 18:28). தேவன் அவருடைய இருளை வெளிச்சமாக்குவார் என உறுதியாகக் கூறிய தாவீது, தேவன் அவருடைய தேவைகளையெல்லாம் பார்த்துக் கொள்வார், அவரே தன்னைப் பாதுகாக்கிறவர் (வ.29-30) என்று கூறுகின்றார். தேவன் தரும் பெலத்தால், அவருடைய பாதையில் வரும் எத்தகைய எதிரியையும் மேற்கொள்ளுவேன் (வ.32-35) என்கின்றார். ஜீவனுள்ள தேவன் எல்லா சூழ் நிலைகளிலும் அவரோடிருக்கிறார் என்ற நம்பிக்கை கொண்ட தாவீது, எல்லா ஜாதிகளுக்குள்ளும் கர்த்தரைத் துதித்து, பாடல்களால் அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப் படுத்துகின்றார் (வ.36-49).

வாழ்க்கையில் எதிர்பாராத புயல்களின் வழியே நாம் கடந்து கொண்டிருந்தாலும், மழை நின்ற பின்னுள்ள அமைதியை         அநுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி, தேவனுடைய பிரசன்னத்தின் சமாதானம், இருளை அகற்றி, நம் பாதைக்கு வெளிச்சம் தருகின்றது. நம்முடைய ஜீவனுள்ள தேவனே நமக்கு பெலனும், அடைக்கலமும், நம்மைக் காப்பவரும், விடுவிக்கிறவருமாய் இருக்கிறார்.