கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் தங்களுடைய நான்கு பள்ளி செல்லும் குழந்தைகளோடு “நகைச்சுவை இரவு” என்று ஓர் இரவைச் செலவழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஓவ்வொரு குழந்தையும் தாங்கள் வாசித்த, கேள்விப்பட்ட அல்லது தாங்களே உருவாக்கிய நகைச்சுவைகளை இரவு உணவின் போது சொல்லும்படி கொண்டுவருவர். இந்த வழக்கம் மகிழ்ச்சியான நினைவுகளையும் வேடிக்கையையும் அனைவரோடும் பகிர்ந்துகொள்ள வழிவகுத்தது. அவர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுக்கும் சிரிப்பு ஆரோக்கியத்தை கொடுத்ததாகவும், கடினமான நாட்களில் ஆவியில் புத்துணர்ச்சி அளிக்க சிரிப்பு உதவியதாக கிரெக், எலிசபெத் ஆகிய இருவரும் உணர்ந்தனர்.

சாப்பாட்டு மேசையைச் சுற்றியமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொள்வதின் நன்மையை சி.எஸ்.லூவிஸ் “ஒரு வீட்டிலுள்ளவர்கள் சாப்பாட்டு வேளையின் போது சிரித்து மகிழ்வதற்கு இணையாக எந்தவொன்றையும் சூரியன் இப்புவியில் கண்டதில்லை” எனக் குறிப்பிடுகின்றார்.

ஒரு மகிழ்ச்சியான உள்ளத்தைப் பெற்றுக்கொள்வதின் ஞானத்தைக் குறித்து நீதிமொழிகள் 17:22ல் மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப் பண்ணும்” என வாசிக்கின்றோம். இந்த நீதிமொழி சுகத்தையும், ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறது. நாம் நம்முடைய இருதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பிக்கொண்டால் அது மிகப் பெரிய பலனைத் தரக் கூடிய, விலை குறைந்த மருந்து என்கின்றார்.

நம்மனைவருக்கும் வேதாகமம் கூறுகின்ற இந்த மருந்து அவசியம். நாம் நம்முடைய உரையாடல்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவோமேயாயின் அது நம் உரையாடல்களில் வரும் விவாதங்களைத் தவிர்த்துவிடும். பள்ளியில் மன அழுத்தத்தைத் தரும் தேர்வுக்குப் பின்னரும், ஒரு நாளின் கடின வேலைக்குப் பின்னரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும் இது உதவுகின்றது. குடும்ப நபர்களுக்கிடையேயும், நண்பர்களுக்கிடையேயும் சிரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்போது. அந்த இடம் நாம் இங்கு நேசிக்கப்படுகின்றோம் என்று உணரக் கூடிய பாதுகாப்பான இடமாக மாறுகிறது.

உன்னுடைய வாழ்விலும் அதிக சிரிப்பை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உன்னுடைய ஆன்மாவிற்கு “நல்ல மருந்தைக்” கொடுக்க விரும்புகின்றாயா? ஒரு மகிழ்ச்சியான இருதயத்தை உருவாக்கிக் கொள்ளும்படி வேதாகமம் உன்னை ஊக்கப்படுத்துகின்றது என்பதை நினைவில் கொள்.