Archives: மார்ச் 2019

அநியாயத்தின் பாரத்தை சுமத்தல்

குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, 38 வருடங்களுக்குப் பின், 2018 ஜனவரி 30 ஆம் நாள் மால்கம் அலெக்சாண்டர் சிறைச்சாலையை விட்டு சுதந்திர மனிதனாக வெளியே நடந்தார். டி.என்.எ சாட்சிகள் அலெக்சாண்டரை குற்றவாளியல்லவென்று காண்பிக்க, தொடர்ந்து தான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டரின் வாக்குகளின் மத்தியில் வெளியான அனைத்து நீதிமன்ற செயல்களும் அவருக்கு எதிராக அநீதியாக தீர்ப்பிட்டன. குற்றவாளியின் சார்பாக செயல்பட்ட திறமையற்ற அரசு வழக்கறிஞர்கள், ஜோடிக்கப்பட்ட சாட்சிகள், சந்தேகத்தைக் கொண்டுவரும் விசாரனை யுக்திகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதனை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் சிறையிலடைத்தது. கடைசியாக விடுதலைப்பெற்று வெளிவந்த போது, அலெக்சாண்டர் அளவிடமுடியாத கருணையைக் காண்பித்தார். 'நீ கோபத்தோடிருக்கக்கூடாது. இன்னும் கோபத்தோடிருக்க போதிய காலமில்லை" என கூறிக்கொண்டார்.

அலெக்சாண்டரின் வார்த்தைகள் ஆழ்ந்த கருணையின் வார்த்தைகள். அநீதி அவருடைய முப்பதெட்டு ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டது. அவருடைய பாரம்பரியத்தை கொன்றுவிட்டது. அப்படியாயின் நாம் கோபத்தோடும், வெறியோடுமல்லவா இருக்கவேண்டும். அலெக்சாண்டர் தன்மீது திணிக்கப்பட்ட குற்றங்களை சுமந்து, உள்ளம் உடைக்கப்பட்டவராக அநேக ஆண்டுகளைக் கழிக்க நேரிட்ட போதிலும், அவர் தீமையினால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய முழு பெலத்தையும் பழிவாங்கும்படி செலவிடாமல், பேதுரு கூறிய நிலையை வெளிப்படுத்துகின்றார். 'தீமைக்கு தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்" என்பதை செயலில் காட்டினார் (1 பேது. 3:9).

வேதாகமம் இன்னும் ஒருபடி மேலேயே கூறுகின்றது. பழிவாங்கலுக்குப் பதிலாக ஆசீர்வதியுங்கள் (வச. 9) எனக் கூறுகின்றது. நமக்கு அநீதியாக தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பையும், நல்வாழ்விற்கான நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் தீய செயல்களை காரணம் காட்டாமல், நம்முடைய குற்றங்களை இயேசு சிலுவையில் சுமந்ததாலேயே நாம் தேவ இரக்கத்தைப் பெற்றுள்ளோம். நாமும் அந்த இரக்கத்தைப் பிறருக்குக் காட்டுவோம். நமக்கு அநீதியிழைத்தவருக்கும் காட்டுவோம்.

என்னுடைய கரத்தால், உனக்காக செய்யப்பட்டது

என்னுடைய பாட்டியம்மா ஒரு மிகச்சிறந்த தையல்காரி. அவளுடைய சொந்த இடமான டெக்ஸாஸில் அநேக போட்டிகளில் வெற்றி பெற்றவர். அநேக முக்கிய கொண்டாட்டங்களின் போது தன்னுடைய கையால் தைக்கப்பட்ட உடைகளைப் பரிசாக வழங்குவது அவர்களது வழக்கம். என்னுடைய உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பின் போது, சிவப்பு நிற, உயர்ரக கம்பளி நூலால் தைக்கப்பட்ட குளிர்கால ஆடையை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். நீலம் கலந்த பச்சை நிற மெத்தையை என் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கலை அம்சமிக்க பகுதியிலும் அவளுடைய பெயர் பொறிக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருப்பதைக் காண்பேன் 'உனக்காக, என் கரத்தால் செய்யப்பட்டது - முன்னா" என்று எழுதப்பட்டிருக்கும். தையலால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் பாட்டியம்மா என்மீது வைத்திருக்கும் அன்பினைக் காட்டும். மேலும் அவள் என்னுடைய எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டும் வல்லமையுள்ள வார்த்தைகளாக இருக்கும்.

எபேசு சபை மக்களுக்கு பவுல் எழுதும்போது, நாம் இவ்வுலகில் வாழும் நோக்கம் என்னவெனில், 'இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு நற்கிரியைகளைச் செய்கிறதற்கு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்" என்கின்றார் (2:10). இங்கு செய்கை என்பது ஒரு கலைஞனின் கைவினை அல்லது மிகச்சிறந்த படைப்பு என குறிப்பிடப்படுகிறது. பவுல் இதனை விளக்கும்போது, தேவன் நம்மை அவருடைய கைவினையாகப் படைத்து, நாமும் நற்கிரியைகளைச் செய்து, இயேசுவோடு நமக்குள்ள மீட்கப்பட்ட உறவின் வெளிப்பாடாகத் திகழவேண்டும் என்கின்றார். இந்த உலகில் நாம் அவருடைய மகிமைக்கென உருவாக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சொந்த நற்கிரியைகளால் நம்மை இரட்சிக்க முடியாது. ஆனால், தேவனுடைய கரம், அவருடைய நோக்கத்திற்காக நம்மை உருவாக்கியுள்ளதால் நாமும் பிறரை தேவனுடைய பெரிய அன்பண்டை கொண்டுவர, அவர் நம்மை பயன்படுத்த முடியும்.

என்னுடைய முன்னா தையல் வேலையில் முனைந்து, அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினையும் அதன் தீவிரத்தையும் எனக்குக் காட்டியபோது, நானும் இவ்வுலகில் எனக்குரிய நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. தேவனுடைய விரல்கள் என் நாட்களின் அழகினை சரிப்படுத்தி உருவாக்கினபோது தேவனுடைய கரம், அவருடைய அன்பையும், நோக்கத்தையும் என் இருதயத்தில் தைத்து வைத்தார். எனவே, நான் அவருடைய அன்பை அறிந்துகொள்ளவும் முடிகிறது. அவருடைய கைவினையை பிறருக்குக் காட்டவும் முடிகிறது.

புலம்பலிலிருந்து ஆராதனைக்கு

கிம், 2013ல் மார்பகப் புற்றுநோயோடு போராடத் தொடங்கினாள். அவளுடைய சிகிச்சை முடிந்து நான்கு நாட்கள் கழித்து மருத்துவர்கள், நுரையீரலிலும் வியாதியிருப்பதைக் கண்டறிந்தனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளே அவளால் வாழமுடியும் எனவும் தெரிவித்தனர். முதல் ஆண்டு முழுவதும் அவள் வேதனைப்பட்டாள். தன்னுடைய உணர்வுகளை தேவனுக்குத் தெரியப்படுத்தி, ஜெபத்தில் அழுதாள். 2015ல் நான் கிம்மைச் சந்தித்தபோது அவள் தன் வாழ்வை தேவனுடைய கரத்தில் விட்டிருந்தாள். அவளிடமிருந்து மகிழ்ச்சியும், சமாதானமும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. கடினமான நாட்களை அவள் கடந்தபோதிலும், தேவன் அவளுடைய இருதயத்தை உடையச் செய்யும் வேதனைகளை அழகிய, நம்பிக்கையோடு கூடிய துதிகளைக் கொண்ட சாட்சியாக மாற்றியிருந்தார். அவள் மற்றவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுப்பவளாக மாறியிருந்தாள்.

நாம் பயங்கரமான சூழலிலிருந்தாலும் தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த நடனமாக மாற்றக் கூடியவர். அவருடைய குணமாக்கல், நாம் எதிர்பார்க்கின்ற அல்லது நாம் நம்புகின்றபடி இல்லையெனினும் தேவனுடைய வழிகளின் மீது நாம் உறுதியாயிருக்கலாம் (சங். 30:1-3). நம்முடைய பாதையில் எவ்வளவு கண்ணீர் சிந்தப்பட்டிருந்தாலும் நாம் அவரைப் போற்றுவதற்கு எண்ணிலடங்காத நன்மைகளைப் பெற்றுள்ளோம் (வச. 4). அவர் நம்முடைய உறுதியான நம்பிக்கையைக் காத்துக் கொண்டபடியால் அவரில் மகிழ்ந்திருப்போம் (வச. 5-7). அவருடைய இரக்கத்திற்காக கதறுவோம் (வச. 8-10). என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக எங்களுடைய அழுகையை நீக்கி மகிழ்ச்சியினால் நிறையப் பண்ணினீர். நான் எத்தகைய சூழலிலிருந்தாலும் தேவனாகிய கர்த்தரே என் அழுகையை களிப்பாக மாற்ற வல்லவர் (வச. 11-12).

நம்முடைய இரக்கத்தின் தேவன் நம்முடைய துயரத்தில் ஆறுதல் தந்து, நம்மைச் சமாதானத்தால் மூடி, நம்மை இரக்கத்தால் நிறைத்து மற்றவர்களுக்கு இரக்கத்தைக் கொடுக்கும்படி நம்மை மாற்றுவார். நம்மீது அன்புள்ள நம்முடைய உண்மை தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த களிப்பாகவும், உள்ளம் நிறைந்த நம்பிக்கையையும், துதியையும் கொண்ட மகிழ்ச்சியோடு கூடிய நடனமாகவும் மாற்றுகின்றவர்.

மம்மா என்று அறியப்பட்டவர்

அவளுடைய பெயரும் நீண்டது அவளுடைய வாழ்நாட்களும் நீண்டவை. மேட்லின் ஹரியட் வோர்ஜாக்ஸன் வில்லியம்ஸ் 101 ஆண்டுகள் வரை வாழ்ந்தாள். அவள் இரண்டு கணவன்களோடு வாழ்ந்தாள். இருவருமே போதகர்கள். மேட்லின் என்னுடைய பாட்டி. நாங்கள் அவர்களை மம்மா என்றே அழைப்போம். என் உடன் பிறந்தோரும், நானும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுடைய இரண்டாவது கணவன் அவரை விரட்டிவிடும்வரை நாங்கள் அவர்களுடைய வீட்டில் தான் வளர்ந்தோம். அதற்குப் பின்னரும் எங்கள் அருகில் சுமார் ஐம்பது மைல்களுக்கப்பால்தான் வாழ்ந்து வந்தார்கள். எங்களுடைய பாட்டி பாமாலைகளை நன்கு பாடுபவர், வேத வசனங்களைச் சொல்லுபவர், பியானோ வாசிப்பவர், தேவனுக்கு பயந்து நடக்கும் ஒரு பெண். நானும், என்

உடன்பிறந்தோரும் அவருடைய விசுவாசத்தால் கவரப்பட்டவர்கள்.

2 தீமோத்தேயு 1:3-7ல் காண்கின்ற படி தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாளும், அவனுடைய தாயாகிய ஐனிக்கேயாளும் தீமோத்தேயுவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களுடைய வாழ்வும் போதனைகளும், வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன (வச. 5, 2 தீமோ. 3:14-16). அவர்களுடைய விசுவாசம் தீமோத்தேயுவின் இருதயத்திலும் மலர்ந்தது. வேதாகமத்தின் அடிப்படையில் அவர் வளர்க்கப்பட்டார். அதுவே அவன் தேவனோடு உள்ள உறவில் வளர அடித்தளமாக அமைந்தது. அது அவனை தேவனுக்கு ஊழியம் செய்யும்படி உருவாக்கியது (1:6-7).

இன்றைக்கும், தீமோத்தேயுவின் காலத்திலும் தேவன் உண்மையுள்ள ஆண்களையும், பெண்களையும் எதிர்கால சந்ததியினரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த பயன்படுத்துகின்றார். நம்முடைய ஜெபமும், வார்த்தைகளும், செயலும், சேவையும் நாம் வாழும்போதும் அதற்குப் பின்னரும் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும். அதனால் தான், நானும் என் உடன்பிறப்புகளும் எங்களுடைய மம்மாவினால் கற்றுக்கொடுக்கப்பட்ட செயல்களை நடப்பித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய  ஜெபமெல்லாம், என்னுடைய மம்மாவின் பாரம்பரியம் எங்களோடு நின்று விடக்கூடாது என்பதே.