Archives: டிசம்பர் 2018

மிக உயரமான இடம்

என்னுடைய கணவர் ஒரு நண்பனை ஆலயத்திற்கு அழைத்துவந்தார். ஆராதனை முடிந்தபோது அந்த நண்பர், “நான் பாடல்களை விரும்புகிறேன், அதன் சூழ்நிலையையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. ஆனால், ஒன்று மட்டும் புரியவில்லை. மரியாதையில் இத்தனை உயரமான இடத்தை ஏன் நீங்கள் இயேசுவுக்குக் கொடுக்கிறீர்கள்? எனக் கேட்டார். பின்னர் என் கணவர் அவரிடம், கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவோடுள்ள உறவு. அவரில்லாமல் கிறிஸ்தவத்திற்கு அர்த்தமேயில்லை. இயேசு எங்கள் வாழ்வில் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் நாங்கள் இங்கு ஒன்று கூடி அவரைப் போற்றுகின்றோம் என விளக்கினார்.

இயேசு யார்? அவர் நமக்கு என்ன  செய்துள்ளார்? இந்த கேள்;விகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல்  கொலோசெயர் முதலாம் அதிகாரத்தில் பதிலளித்துள்ளார். தேவனை யாரும் கண்டதில்லை. இயேசு, தேவனின் தற்சுரூபமாக வந்து அவரைப் பிரதிபலித்தார் (வச. 15). இயேசு, தேவக் குமாரன். நமக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கும்படி வந்தார். நம்மை பாவத்திலிருந்து விடுதலை செய்ய வந்தார். பாவம் நம்மை பரிசுத்த தேவனிடமிருந்து பிரித்துவிட்டது. எனவே பாவமில்லாத ஒருவர் தான் தேவ சமாதானத்தை கொடுக்க முடியும். அதுதான் இயேசுகிறிஸ்து (வச. 14,20) வேறு வகையாகச் சொல்வோமானால் நாம் தேவனிடமும், வாழ்வுக்குள்ளும் செல்லும் வழியை, வேறொருவராலும் செய்யமுடியாததை இயேசு நமக்காகத் திறந்து கொடுத்தார்
(யோவா. 17:2).

ஏன் இயேசு அத்தகைய உயர்வான இடத்தைப் பெற பாத்திரராயிருக்கிறார்? அவர் சாவை மேற்கொண்டார். அவருடைய அன்பினாலும், தியாகத்தாலும் நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்தார். அவரே நமக்கெல்லாமுமாயிருக்கின்றார்.

நாம் அவருக்கு மகிமையைச் செலுத்துகின்றோம், ஏனெனில் அவரே அதற்குத் தகுந்தவர். நாம் அவரை உயர்த்துகின்றோம், ஏனெனில், அதுவே அவருடைய இடம். நாம் நம் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்.

ஏதோ ஒருநாளல்ல!

“ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்” என்ற புத்தகத்தில் வில்லியம் டீன் ஹோவெல்ஸ் என்பவர் தன்னிடம் வாழ்த்துப் பெறுகின்ற ஒரு சிறு பெண்ணைப் பற்றி சொல்லுகின்றார். ஒரு நீண்ட கொடுமையான ஆண்டின் “ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ்” கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்குப் பின் மூன்றாவது நாளே யூல்மரத்தடிகளில் அனல்மூட்டி அநுபவித்த மகிழ்ச்சி மெலியத் துவங்கிவிட்டது. மிட்டாய்களை யாரும் விரும்பவில்லை. வான்கோழிகள் மிகவும் அரிதானவையாகிவிட்டது. அவற்றின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. பரிசுப் பொருட்கள் எங்கும் குவிந்துகிடப்பதால் அதனை யாரும் நன்றியோடு ஏற்பதில்லை. ஜனங்கள் கோபத்துடன் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிகின்றனர்.

நல்லவேளை, ஹோவெல்ஸின் கதை வெறும் கற்பனையில் தோன்றிய கதை. வேதாகமம் ழுழுவதிலும் தாம் கிறிஸ்துவைப் பற்றி பார்க்கின்றபோதும், கிறிஸ்மஸின் நோக்கம் ஒரு நம்பமுடியாத ஆசீர்வாதம், அது நம்மைச் சோர்வடையச் செய்வதேயில்லை.

இயேசுகிறிஸ்து பிதாவினிடத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, அப்போஸ்தலனாகிய பேதுரு எருசலேம் தேவாலயத்திலுள்ள ஒரு கூட்டத்தினரிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்” (அப். 3:22, உபா. 18:18) என்று மோசே முன்னறிவித்தார் எனவும் தேவன் ஆபிரகாமிடம், “உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வசம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என வாக்களித்தார், இவையெல்லாம் இயேசுவையே குறிப்பிடுகின்றன எனவும் எடுத்துரைத்தார் (அப். 3:25, ஆதி. 22:18) மேலும் பேதுரு, “சாமுவேல் முதற்கொண்டு எத்தனை பேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ அத்தனை பேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். அதாவது மேசியாவின் வருகையைக் குறித்து முன்னறிவித்தார்கள் (அப். 3:24) எனவும் கூறினார்.

நாமும் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் முடிந்த பின்னரும் அந்த மகிழ்ச்சியை அந்த வருடம் முழுவதும் காத்துக் கொள்வோம். கிறிஸ்துவை நாம் வேதாகமம் முழுவதிலும் காண்கிறதால் ஏதோ ஒரு நாளைப் போன்றல்லாமல் கிறிஸ்மஸ் எத்தனை முக்கியமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

குளிர்காலப் பனி

குளிர்காலத்தில் நான் அடிக்கடி காலையில் விழித்து இந்த பூமி அதிகாலைப் பனியினால் (ளுழெற) மூடப்பட்டு அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கின்றதைக் கண்டு வியப்பதுண்டு. வசந்தகால இடியோடு கூடிய புயலின் ஓசை இரவிலும் அதன் செயலைத் தெரிவிப்பது போலில்லாமல், பனி அமைதியாக இறங்குகின்றது.

ஆட்ரே ஆசாத் எழுதியுள்ள “குளிர்கால பனி” என்ற பாடலில், இயேசு இப்புவிக்கு சுழல்காற்றின் வல்லமையோடு வந்திருக்கலாம். ஆனால், அவர், என் ஜன்னலுக்கு வெளியே இரவில் மென்மையாக இறங்கியிருக்கும் பனியைப்போல அமைதியாக வந்தார் எனப் பாடியுள்ளார்.

இயேசுவின் வருகை அநேக அமைதியான ஆச்சரியங்களைக் கொண்டுவந்தது. அவர் ஓர் அரண்மனையில் பிறப்பதற்குப் பதிலாக எதிர்பாராத ஓரிடத்தில், பெத்லகேமின் புறப்பகுதியில் தாழ்மையாக வந்துதித்தார். அவர் அங்கிருந்த ஒரே படுக்கையான தீவனத் தொட்டியில் உறங்கினார் (லூக். 2:7). ராஜமரியாதையோடும், அரசு மரியாதையோடும் கவனிக்கப்பட வேண்டியவர் தாழ்மையான மேய்ப்பர்களால் வரவேற்கப்பட்டார் (வச. 15-16). செல்வந்தராய் இருக்க வேண்டியவர், ஆனால், இயேசுவின் பெற்றோர் அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க தேவாலயத்திற்கு எடுத்து வந்த போது, எளிய இரண்டு பறவைகளையே பலியாக அவர்களால் கொடுக்க முடிந்தது (வச. 24).

நாம் நினைக்க முடியாத வகையில் இயேசு இவ்வுலகினுள் வந்தார் என்பது ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்பே உரைக்கப்பட்டது. இரட்சகராகிய அவர் வரும்போது, “ அவர் கூக்குரலிடவுமாட்டார்; தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்” (ஏசா. 42:2). அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும் இருக்கிற தேவன் (வச. 3). அவர் மென்மையாக வந்து நம்மை அவர்பக்கம் இழுக்கும்படியாகவும், தேவன் தரும் சமாதானத்தை நமக்குத் தரும்படியாகவும் வந்தார். நாம் எதிர்பார்த்திராத வகையில் புல்லணையில் வந்துதித்த நமது இரட்சகரை நம்புகிற யாவருக்கும் அவர் தரும் சமாதானம் காத்திருக்கின்றது.

சிந்தனை செய்

லண்டனிலுள்ள ஒரு வேதாகமம் பயிற்சி கல்லூரியில் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் இருந்த நாட்களில் (1911-15) தன்னுடைய விரிவுரைகளின் போது அவர் விளக்குகின்ற பொருட்களைக் காண்பித்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவார். மதிய உணவு நேரத்திற்குப் பின்னரே விவாதத்திற்குரிய நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அந்நேரத்தில் சேம்பர்ஸ் மாணவர்களின் கேள்விகளாலும், எதிர்ப்புகளாலும் அடிக்கடி துளைத்தெடுக்கப்படுவார் என ஒரு பெண்மணி விளக்கினார். மேலும் அவள், ஆஸ்வால்ட் எப்பொழுதும் புன்முறுவலோடு “இதனை இப்பொழுது விட்டு விடு. அது உனக்குப் பின்னர் தெரியவரும்” எனச் செல்வார் அவர் மாணவர்களை அதனைக் குறித்து மீண்டும் சிந்தனை செய்ய ஊக்குவிப்பார். ஏனெனில் தேவனே தன்னுடைய உண்மையை அவர்களுக்கு விளங்கச் செய்வார்.

ஓன்றினைக் குறித்து மீண்டும் சிந்திப்பது என்பது, அக்காரியத்தின் மீது கவனம் செலுத்தி, அதனைக் குறித்து ஆழ்ந்து யோசிப்பதாகும். இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன் நடந்த நிகழ்வுகளையும், தேவதூதனின் காட்சியையும், மேசியாவைக் காண மேய்ப்பர்கள் வந்ததையும், “ மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்” (லூக். 2:19). புதிய ஏற்பாட்டினைக் கற்றுத் தேர்ந்த று.நு. வைன் என்பவர் “சிந்தனை செய்தல்” என்பது “எல்லாவற்ளையும் ஒன்றிணைத்து, சூழ்நிலைகளோடு ஒவ்வொன்றையும் சேர்த்து ஆராய்வதேயாம்” எனக் கூறுகின்றார்.

நம் வாழ்வில் நடைபெறும் காரியங்களைக் குறித்துக் புரிந்துகொள்ள போராடும் போது தேவனையும், அவருடைய ஞானத்தையும் தேடுவதற்கு மரியாள் ஒரு நல்ல முன்மாதிரியாகவுள்ளார்.

மரியாளைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பின் வழிகாட்டலின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட அநேகப் புதிய காரியங்களை நம் இருதயத்தில் பொக்கிஷமாகச் சேர்த்துவைத்து அதனைக் குறித்து சிந்தனை செய்வோம்.

செழிப்பிலும் உபத்திரவங்களிலும்

ஆன் வோஸ்கேம்ப் எழுதிய “ஓராயிரம் கொடைகள்” என்ற புத்தகத்தில் வாசகர்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களுக்குத் தந்துள்ள நன்மைகளை எண்ணிப் பார்க்குமாறு ஊக்கப்படுத்துவார். அதில் அவள் அநுதினமும் தேவன் அவளுக்குத் தாராளமாகத் தருகின்ற சிறியதும், பெரியதும் - பாத்திரம் கழுவும் தொட்டியில் தோன்றும் வண்ணமிகு நீர்க்குமிழிமுதல் தன்னைப் போன்ற பாவிகளுக்குத் (நமக்கும்!) தரப்பட்ட ஒப்பிடமுடியாத இரட்சிப்புவரையுள்ள வௌ;வேறு கொடைகளைக் குறிப்பிடுகின்றாள். நம் வாழ்வில் மிகவும் கஷ்டம் நிறைந்த நேரத்தில் தேவனைக் காண்பதற்குத் தேவையான திறவுகோல் நன்றியோடுள்ள உள்ளமேயென அவள் குறிப்பிடுகின்றாள்.

நாம் நன்கறிந்த யோபுவின் வாழ்வில் துன்பங்கள் நிறைந்த நேரம் அது. அவனுடைய இழப்புகள் துயரமிகுந்ததாகவும் ஏராளமாகவும் இருந்தன. தனக்கிருந்த எல்லா கால்நடைகளையும், வேலைக்காரரையும் இழந்து நிற்கும் போது, ஒரே நேரத்தில் அவனுடைய பத்து பிள்ளைகளும் மரித்துப்போனார்களென அறிகிறான். யோபுவினுடைய ஆழ்ந்த துயரம் அவனுடைய செயலில் தெரிகிறது. அவன் தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (1:20) அந்த வேதனை நேரத்திலும் அவன் கூறிய வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது. அவன் நன்றியுணர்வை வெளிப்படுத்தினான். அவன் இழந்த யாவற்றையும் தேவன் தனக்குத் தந்தார் என தெரிவிக்கின்றான் (வச. 21) ஒன்றும் செய்ய இயலாத அத்தகைய துயரத்தின் மத்தியில் இவ்வாறன்றி, அவன் வேறே எப்படி தேவனை ஆராதிக்க முடியும்?

இழப்பின் காலத்தில் ஏற்படும் வேதனையின் அளவு, நம்முடைய அனுதின நன்றியறிதலால் ஒருபோதும் குறைக்கப்படுவதில்லை. யோபு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, யோபு கேள்விகளைக் கேட்டுக் கொண்டே துயரத்தினூடே கடந்து சென்றான். நம் வாழ்வின் இருண்ட நேரங்களில் சர்வ வல்ல தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, ஒவ்வொரு சிறிய காரியங்களிலும் தேவன் நமக்குச் செய்த நன்மைகளையெண்ணி, அவரை துதித்துப் போற்ற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வோம்.