சிகிஸ்மன்ட் கெட்ஸி என்ற ஓவியர் “மனிதர்களுள் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்” என்ற ஓவியம் ஒன்றை வரைந்து விக்டோரிய காலத்து இங்கிலாந்து தேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கண்டனம் செய்யப்பட்டு துன்பத்துக்குள்ளான இயேசுவைச் சுற்றி தன்னுடைய தலைமுறையைச் சேர்ந்த மக்கள் நிற்பதைப்போல அந்த ஓவியத்தை வரைந்திருந்தார். வர்த்தகம், காதல், அரசியல் என்று தங்கள் சுய விருப்பங்களிலேயே மூழ்கிப்போயிருந்த அவர்களுக்கு, இயேசுவின் தியாகம் ஒரு பொருட்டாகப்படவில்லை. இயேசுவின் சிலுவை அருகில் இருந்த கலகக் கும்பலைப்போல, இந்த ஓவியத்தில் கிறிஸ்துவைச் சூழ்ந்திருந்த கூட்டத்தாருக்கும் தங்கள் எதை, யாரை இழந்தோம் என்பதே தெரியவில்லை.

இப்போதும்கூட, விசுவாசிகளும், விசுவாசம் இல்லாதவர்களும் நித்தியத்தில் இருந்து எளிதாக திசை திருப்பப்படலாம். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் தேவனின் அன்பு என்ற உண்மையின்மூலம் எப்படி சிதறடிக்கும் பனிமூட்டத்திற்குள்ளாகக் கடந்து செல்ல முடியும்? தேவனின் பிள்ளைகளாக நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதன்மூலம் இதில் முதல் அடி எடுத்துவைக்கலாம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு கூறினார் (யோவான் 13:35).

ஆனால் உண்மையான அன்பு அதோடு நிற்பதில்லை. மக்களை இரட்சகர் பக்கம் ஈர்க்கும் நம்பிக்கையில், நற்செய்தியைப் பகிர்வதன்மூலம் நாம் அந்த அன்பை வெளிப்படுத்துகிறோம். பவுல் சொன்னவிதமாக, “நாம் கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளாய் இருக்கிறோம்” (2 கொரி. 5:20).

இப்படியாக கிறிஸ்துவின் சரீரம், நாம் ஒருவருக்கு ஒருவரும், உலகத்தாருக்காகவும் ஏங்கும் அன்பை, பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்பட்ட நாம் தேவனின் அன்பை இயேசுவில் காண்பதைத் தடுத்து திசை திருப்பும் காரியங்களை விலக்க இந்த இரண்டு முயற்சிகளும் உதவுவதாக.